என் மடியில் பூத்த மலரே-31
அத்தியாயம்-31 ஆ தி தன் இளவரசியிடம் உன் தாத்தா பாட்டி என்று பாரதியின் பெற்றோர்களை அறிமுகப்படுத்த, அதை கேட்டு உறைந்து சிலையாகி நின்றாள் பாரதி இன்ப அதிர்ச்சியில்.. ஆதி இதுவரைக்கும் அவனையும் ஜானகி மற்றும் சுசிலா வை மட்டுமே அவன் குழந்தையிடம் அறிமுகப்படுத்தி இருக்கிறான்... பாரதியை பற்றி எதுவும் சொல்லியதில்லை.. ஏன் இதுவரைக்கும் அவளை அவன் குழந்தைக்கு தாயாக அறிமுக படுத்தியதில்லை... வழக்கமாக ஒரு தாய்தான் தன் குழந்தைக்கு அதன் அப்பாவையும் மற்றும் குடும்பத்தில் உள்ள அனைவரையும் அறிமுகபடுத்துவாள்.. இங்கு அந்த கதையே மாறி இருந்தது.. பாரதி தன்னை ஒரு வாடகைத்தாயாக மட்டுமே எண்ணி இருந்ததால் அவள் தன்னை பற்றி எதுவும் அந்த குழந்தையிடம் சொன்னதில்லை... தன்னை அந்த குழந்தையின் தாயாகவும் நினைத்ததும் இல்லை.. இன்று வரைக்கும் தன் வயிற்றில் இருப்பது ஆதியின் குழந்தை , ஜானகி அத்தை வீட்டு வாரிசு என்று மட்டுமே எண்ணி இருந்தாள்.. ஆரம்பத்தில் இருந்தே அந்த குழந்தைக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று தள்ளி இருந்ததால் அவளும் எதுவும் பெரிதாக எடுத்து கொள்ளவில்லை..திருமணம் முடிந்து அவள் முறைப்படி ஆதியின் மனைவ...