காதோடுதான் நான் பாடுவேன்-14
அத்தியாயம்-14 தி ருமணம் ஆகி ஒரு மாதம் முடிந்திருந்தது... மதுவந்தினிக்கு இன்னுமே நம்ப முடிய வில்லை அவள் வந்து வேற ஒரு புது இடத்தில் இந்த அளவுக்கு மகிழ்ச்சியாக இருப்பாள் என்று.... தான் கேள்வி பட்ட கதைகளை வைத்து ஒரு பெண்ணின் புகுந்த வீட்டையும் கணவனையும் தப்பு வண்ணம் பூசியிருந்தவள் இங்கு எல்லாம் அவள் எதிர்பார்த்த மாதிரி இல்லாதததால் ஆச்சர்யம் + மகிழ்ச்சி அவளுக்கு... எப்பவும் அவளை செல்லம் கொஞ்சும் மாமியார் ம் கலகலவென்று சிரித்து பேசும் நாத்தனார் ம் அமைந்ததால் அவளுக்கு அந்த வீடு விரைவிலயே பழகியிருந்தது... ஏன் அவள் பிறந்த வீட்டில் கூட மூன்று பேரும் இந்த அளவுக்கு பேசி சிரித்ததில்லை.. சிறிது நேரம் பேசிவிட்டு பின் அவரவர் வேலையை பார்க்க ஆரம்பித்து விடுவர்.. இங்கு மூன்று பெண்கள் இருக்கும் நேரங்களில் முக்கால் வாசி நேரம் அரட்டை அடிப்பதும் கேலி பேசுவதுமாக கழிவதால் மதுவுக்கு அவள் புகுந்த வீடு சீக்கிரமே பிடித்து விட்டது... மற்றவர்களிடம் பிரியாக பேசினாலும், தன் கணவனாகியவனிடம் மட்டும் ஒதுங்கியே இருந்தாள் மது ... ஏனோ அவன் வருவது தெரிந்தாலே தலை தானாக கீழ குனிந்து விடும்... இல்லையென்றால் சமையல் அறைய...