Posts

Showing posts from May, 2021

காந்தமடி நான் உனக்கு!!-37

Image
  அத்தியாயம்-37 இ ருவரும் தங்களை மறந்து வேற ஒரு உலகத்தில் சஞ்சரித்து கொண்டிருக்க , அந்த நேரம் பூஜை வேளை கரடியாய் யாரோ அந்த அறையை நோக்கி வருவது தெரிய , முதலில் சுதாரித்து கொண்டாள் சத்யா. அப்பொழுதுதான் அவர்கள் இருவரும் இருக்கும் கோலம் புரிய ,  உடனே அவன் மடியில் இருந்து துள்ளி குதித்து எழுந்து ,  தள்ளி நின்றவள் அவசரமாய் தன் ஆடையை சரி செய்து கொண்டாள்.. அதே நேரம் கதவை லேசாக தட்டிவிட்டு உள்ளே வந்தான் ராகேஷ். அமுதன் மட்டும் இருப்பான் என்று வந்தவன் உள்ளே சத்யாவும் இருக்க கண்டு ஒரு நொடி ஆச்சர்யத்தில் அவன் புருவம் ஏறி இறங்கியது. அதோடு சத்யா அவசரமாய் தன் புடவையை நீவி விட்டு கொள்ள , அமுதனும் எழுந்து நின்று கொண்டு தன் ப்ளேஸரை நீவி விட்டு கொண்டிருந்தான். இருவர் முகத்திலுமே பிஞ்ச் நிற வெட்கம் படர்ந்து இருக்க , அதை புரிந்து கொண்ட ராகேஷ் “என்ன பாஸ்.. சூப்பரா ரெப்ரெஸ் ஆகிட்டிங்க போல. சற்று முன்னால் உங்கள் முகத்தில் தெரிந்த களைப்பு கொஞ்சம் கூட இல்லையே....” என்று விஷமமாக சிரித்தான். “யெஸ்...யெஸ் ராக்கி. ஐம் பெர்பெக்ட்லி ஆல்ரைட் நௌ. சது ஒரு ஜூஸ் கொடுத்தா... ப்ப்ப்பா என்ன ஒரு எனர்ஜி...” என்று சத்யாவை ப

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே-43

Image
  அத்தியாயம்- 43 த ன் கணவனை பற்றி மனம் நிறைந்த பூரிப்பில் அவனை காணும் ஆவலில் துள்ளி குதித்தபடி மாடி ஏறிய பவித்ரா அறையின் உள்ளே    அவள் கணவன் நந்தினியை அணைத்தவாறு கட்டிலில் மிக நெருக்கமாக இருந்ததை கண்டு அதிர்ந்து கால்கள் நழுவ அப்படியே சுவற்றில் சாய்ந்து கொண்டாள்.... ஒரு வேளை தான் கண்டது கனவோ இல்லை பிரம்மையோ என்று   நம்ப முடியாமல் மீண்டும் ஒரு முறை உள்ளே எட்டி பார்க்க நினைக்கையில் , உள்ளே இருந்து ஏதோ அரவம் கேட்க , தன் எண்ணத்ஹை விடுத்து அப்படியே சுவற்றில் சாய்ந்து கொண்டாள்..... உள்ளே இருந்து “சீ ... போதும் விடுங்க மாமா... யாராவது வந்திட போறாங்க...நான் கீழ   போறேன்...“என்று நந்தினி குழைவது மெலிதாக பவித்ராவின் செவியில் விழுந்தது.. அதை தொடர்ந்து நந்தினி கட்டிலில் இருந்து இறங்கி அறை வாயிலை நோக்கி வருவது தெரியவும் பவித்ரா இன்னும் சுவற்றுடன் ஒட்டி நின்று கொண்டாள்... தன் ஆடையை சரி செய்த படியே வெளியில் வந்த நந்தினி “அப்பா... என்ன ஒரு முரட்டுதனம்... பார்க்கத்தான் டீசன்ட் ஆ இருக்கிற மாதிரி இருக்கார்.. ஆனால் இவ்வளவு முரட்டுதனமா ?? “ என்று முனகியவாறு தன் உதட்டை கையால் வருடியவாறே முகம்

Popular Posts

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே

என் மடியில் பூத்த மலரே

அனைவருக்கும் வணக்கம்!!!

காதோடுதான் நான் பாடுவேன்

நிலவே என்னிடம் நெருங்காதே!!

வராமல் வந்த தேவதை

பூங்கதவே தாழ் திறவாய்

தாழம்பூவே வாசம் வீசு!!!

தவமின்றி கிடைத்த வரமே

அழகான ராட்சசியே!!!