காதோடுதான் நான் பாடுவேன்-44
அத்தியாயம்-44 இ ரண்டு பேர் மட்டும் தனியாக அவ்வளவு பெரிய வீட்டில் இருந்த பொழுது எப்ப வேணும் என்றாலும் கொஞ்சலாம், கட்டி அணைத்து கொள்ளலாம் என்ற பொழுது தன் கணவன் ஆசையாக பார்த்ததோ கட்டி அணைத்ததோ பெரிதா தெரிந்திருக்கவில்லை வசந்திக்கு... இன்று இவ்வளவு பெரிய குடும்பத்தில் எப்பவும் நாலு பேர் கூட இருக்க, தனக்கு தனிமை கிடைக்காதா என்று ஏங்கி தன் மனைவி எப்ப தனியாக மாட்டுவாள் அவளை கொஞ்சலாம் என்று தவிக்கும் இந்த கணவனின் பார்வை புதிதாக இருந்தது வசந்திக்கு .. மாலையில் இருந்தே கௌதம் அவள் பின்னாலயே சுத்தி வருவது அவளுக்கு தெரிந்தது தான்.. அதனால் அவனிடம் தனியாக மாட்டாமல் கும்பலில் போய் இருந்து கொண்டாள்.... அவனும் அவளிடம் பேச, அருகில் வர, அவனிடம் சிக்காமல் நழுவி மறுபக்கம் சென்று விடுவாள்.... திருமணம் முடிந்து ஏழு வருடம் கழித்தும் தன் கணவனின் காதலும் அன்பும் குறையாம்ல் அப்படியே இருப்பதும் அது இன்னும் கூடி இருப்பதை போல இருந்தது வசந்திக்கு.... அவள் அவனுக்கு எவ்வளவு கஷ்டத்தை கொடுத்தாலும் அவளை விலக்காமல் தன்னுடனே வைத்திருந்த தன் கணவனின் காதலை எண்ணி பூரித்து போனாள் வசந்தி......