தவமின்றி கிடைத்த வரமே-32
அத்தியாயம்-32 ஓ ர கண்ணால் மித்ரா நின்றிருந்த தோற்றத்தை கண்டதும் மலருக்கு கடுப்பாக இருந்தது.. அவனும் அதை தடுக்காமல் தள்ளி நிற்காமல் இளித்து கொண்டு நிற்பதை கண்டதும் இன்னும் பற்றி கொண்டு வந்தது மலருக்கு.. “ஒரு வேளை அவள் சொன்ன மாதிரி என் அப்பாவை காப்பாற்ற எண்ணி கடமைக்காகத்தான் என்னை மணந்து கொண்டானா?? இவர்கள் இருவரும் தான் ஜோடி பொருத்தம் சரியாக இருக்குமோ? “ என்று மித்ராவை அளவிட்டு பார்க்க, அவளோ பல லட்சங்கள் விலை மிக்க ஒரு டிசைனர் ஸாரியில் அதற்கான ஒப்பனையுடன் பணக்கார மிடுக்குடன் கை ஹீல்ஸ் உடன் நிமிர்ந்து நின்று வசியின் கைபிடித்து கம்பீரமாக நின்றிருந்தாள்.. அவளுடன் தன்னை ஒப்பிட்டு பார்க்க, மித்ரா மடமடவென்று மேல ஏறி போனாள்.. மலர் இருந்த தராசு தடாலென்று கீழ விழுந்தது... அவளின் அந்த மிடுக்கான தோற்றமும் கண்ணில் தெரிந்த ஒரு அலட்சிய பார்வையும் ஒரு பிரமிப்பை கொடுக்க, வசிக்கு இந்த மாதிரி ஒரு மனைவி இருந்தால் தான் அவன் கலந்து கொள்ளும் பல முக்கிய விழாவுக்கு பொருத்தமாக இருக்கும்.. அதை விட்டு பட்டிகாடு மாதிரி இப்படி பட்டு புடவையை சுற்றி கொண்டு நகைகளை அள்ளி பூட்டி கொண்டு நிற்கும் நான் எப்படி பொ...