என் மடியில் பூத்த மலரே-25
அத்தியாயம்-25 மா லை பாரதி தயாராகி ஆதிக்காக காத்திருந்தாள்... இன்று ஸ்கேன் பண்ணனும் என்பதால் புடவை அணிந்து கூந்தலை தளர பிண்ணி கொஞமாக மல்லிகை பூவை வைத்திருந்தாள்.. ஆதி ஆறு மணிக்கே வரவும், சீக்கிரம் ரிப்ரெஸ் ஆகிட்டு பாரதி எடுத்து வைத்த சிற்றுண்டியை சாப்பிட்டு முடித்து எழுந்து நடந்தான்.. பாரதியும் மாரியிடம் சொல்லிக்கொண்டு அவனுடன் இணைந்து நடந்தாள்.. சிறிது துரம் சென்றதும் அவன் பார்வை அவள் வயிற்றை தடவியது.. பாரதி புடவையை நன்றாக இழுத்து மேலே விட்டிருந்ததால் அவளின் இடை வழியாக அவளின் வயிற்றை பார்க்க முயன்றவனுக்கு ஏமாற்றமே... ஆனால் புடவையும் மீறி லேசாக மேடிட்டிருந்த அவள் வயிறு தெரிந்தது.. அதை கண்டதும் ஏதோ இனம் புரியாத பரவசம் அவன் உள்ளே... “என் பிரின்ஸஸ் வளர்ந்திருப்பாளோ?? எவ்வளவு பெருசா இருப்பா இந்நேரம்??.. அவளை இன்னைக்கு பார்க்க போறேன்... “ என்று குதூகாலித்தான்.. இதுவரை அழுத்தி வந்த பாரம் மறைந்து உற்சாகம் பரவியது... அவளை ஓரக்கண்ணால் பார்த்துக் கொண்டே நடந்தான்... அவனின் ஓரப் பார்வையை கண்டுகொண்ட பாரதி, “இவன் ஏன் அடிக்கடி ஒரு மாதிரி பார்க்கிறான்... அவன் பார்வையில் ஒரு ஆர்வம், ஏக்கம், ஏ...