காதோடுதான் நான் பாடுவேன்-13



அத்தியாயம்-13 

ன்று திங்கள்கிழமை...நாட்களில் அனைவருக்குமே பிடிக்காத நாள் திங்கள்கிழமை.. வேலைக்கு செல்பவர்கள் மட்டும் அல்லாமல், பள்ளிக்கு செல்லும் மாணவர்களுக்கும், அவர்களை காலையிலயே போராடி எழுப்பி பள்ளிக்கு அனுப்பி வைக்கும் தாய்மார்கள் என்று அனைவருக்குமே இந்த திங்கள்கிழமை மட்டும் ஏன் தான் வருகிறதோ என்று இருக்கும்...

அதுவும் வார விடுமுறை கொண்டாட்டத்தில் முதல் நாள் இரவு நீண்டநேரம் ஆடியவர்களுக்கு அவர்கள் படுக்கைக்கு சென்ற சில மணி நேரத்திலயே அவர்கள் வைத்த அலாரம் நாராசமாக ஒலிக்க அவ்வளவு கடுப்பாக வரும் நாள் இந்த திங்கள்கிழமை....

அந்த மாதிரி அனைவரும் வெறுக்கும் அந்த நாளில் ,வழக்கம் போல 6 மணிக்கு அலாரம் ஒலிக்க, அதை படுக்கையில் இருந்து கொண்டே கை நீட்டி அனைத்தான் ஜெயந்த்...

இன்னும் கொஞ்ச நேரம் படுக்கையிலயே கிடக்க சொல்லி கெஞ்சிய தன் மனதையும் உடலையும் அடக்கியவன் எழுந்து குளியல்அறைக்குள் சென்றான்....

முகம் கழுவி பிரஸ்ஸில் பேஸ்ட்டை போட்டவன் கண்ணாடியில் தன் உருவத்தை பார்த்து கொண்டே பல் துலக்கி கொண்டிருந்தவன் அன்று என்ன நாள் என்று மனதில் எண்ணி பார்த்தான்...

வாரம் ஏழு நாட்களுமே அவனுக்கு வகுப்புகள் இருப்பதால் என்றும் ஓய்வு எடுத்ததில்லை.. ஏதாவது வெளி வேலை இருந்தாலோ, உடல் சோர்வாக இருந்தாலோ ஒரு அரை நாள் விடுப்பு எடுத்துக் கொள்வான்..

அதனால் அவனுக்கு எல்லா நாளும் ஒரே நாள் தான்...

என்ன நாள் என்று கணக்கிட்டு பார்த்தவன் அன்று திங்கள்கிழமை என்று உணர்ந்ததும் மனதில் இனம் புரியாத பரவசம் தோன்றியது...

ஆனால் ஏன் எதுக்கு என்றுதான் புரியவில்லை... அதே பீலிங்க்சில் குளியலறையை விட்டு வெளியில் வந்தவன் ட்ராக் சூட்டை மாட்டி கொண்டு தன் காலை ஓட்டத்தை தொடர்ந்தான்...

அந்த அதிகாலை சில்லென்ற காற்றில் ஓடுவது அவனுக்கு ரொம்பபிடிக்கும்.. இரவு எவ்வளவு வேலை இருந்து தாமதமாக உறங்கினாலும் இந்த காலை ஓட்டத்தை நிறுத்த மாட்டான்...

அருகில் இருந்த பார்க்கிற்கு சென்று தன் ஓட்டத்தை தொடர, அன்று ஏனோ எல்லாமே வித்தியாசமாக இருப்பதாக தோன்றியது.. வழக்கமாக பூத்திருக்கும் சிறு சிறு மலர்களும் ஏனோ அவனுக்கு புதியதாக தோன்றியது..

உதட்டில் என்றுமில்லாத புன்னகை தானாக ஒட்டிகொள்ள வழியில் சந்திப்பவர்கள் அனைவரையும் கண்டு புன்னகைத்து தலை அசைத்தவாறெ ஓடி கொண்டிருந்தான் ...

அவனை நினைத்து அவனுக்கே சிரிப்பாக இருந்தது..

“என்னாச்சு எனக்கு இன்று?? தன் தலையை தட்டியவாறே ஓடி கொண்டிருந்தான்...பின் தன் ஓட்டத்தை முடித்து புதிதாக வாங்கியிருந்த ப்ளாட்டிற்கு வந்தவன் ஏதோ ஒரு பாட்டை ஹம் பண்ணியவாறு குளியலறைக்குள் சென்று ஷவரை திறந்து அதன் அடியில் நின்றான்...

இந்த கோடை காலத்தின் சென்னை வெப்பத்திற்கு அந்த குளிர்ந்த நீர் சில்லென்று பட்டு தெறிக்க அது தந்த சிலிர்ப்பை விட அவன் உள்ளே சிலிர்த்தது காலையில் இருந்த பரவசம் மீண்டும் அவன் மனதில் பரவியது...

அதே உற்சாக்த்தில் தன் குளியலை முடித்தவன் தலையை துவட்டியவாறு வெளியில் வந்து சமையல் அறைக்குள் சென்று அவனுக்கு பிடித்த இன்ஸ்டன்ட் காபியை கலந்து எடுத்து கொண்டு வந்தவன் ஹாலில் அமர்ந்து கொண்டு அன்றைய தினசரியை புரட்டினான்....

சிறிது நேரத்தில் அருகில் இருந்த அவன் அலைபேசி ஒலிக்க, அதை எடுத்தவன் திரையில் தெரிந்த பெயரை கண்டு உதட்டில் புன்னகை அரும்ப அதை அட்டென்ட் பண்ணி காதில் வைத்தவன்

“ஹ்ம்ம்ம்ம் சொல்லுங்க மா... எப்படி இருக்கீங்க?? அப்பா நல்லா இருக்காரா?? “என்றான் அதே புன்னகை மாறாமல்..

“ஹ்ம்ம்ம் நாங்க எல்லாம் இங்க நல்லா இருக்கோம் கண்ணா... நீ எப்படி இருக்க?? நேற்று போன் பண்ணப்போ ஏன் எடுக்கலை?? “ என்று அக்கறையாக விசாரித்தார் ஜெயந்த் ன் அம்மா....

“நேற்று கொஞ்சம் பிசிமா... அதான் பேச நேரம் இல்லை... “

“ஹ்ம்ம்ம் என்னமோ போடா.. வேலை வேலை னு எதுக்குதான் இப்படி ஓடறியோ?? “ என்று சலித்துக்கொண்டார்...

“இந்த வயசுல ஓடாமா பின்ன எப்ப ஓடறதாம்?? இப்ப ஓடி உழைச்சாதான் பின்னாடி உட்கார்ந்து ரெஸ்ட் எடுக்கலாம்... “ என்று சிரித்தான்...

“ஹ்ம்ம்ம்ம் அதுக்குனு நேரம் காலம் இல்லாமயா ஓடுவாங்க... சரி அத விடு... நான் சொன்னதை பத்தி யோசிச்சியா?? என்ன முடிவு எடுத்திருக்க?? “ என்றார் ஆர்வமாக..

அவர் குரலில் இருந்த ஆர்வத்தை புரிந்து கொண்டவன்,

“எத பத்திமா?? “ என்று வேண்டுமென்றே டெரியாதவனை போல் கேட்டான் உள்ளுக்குள் சிரித்துகொண்டு...

“ம்ம்ம்ம் இந்த வயசுல நான் எதபத்தி பேச போறேன்... எல்லாம் உன் கல்யாணத்தை பத்திதான்..

நம்ம தூரத்து சொந்தத்துல இருந்து ஒரு பொண்ணு ஜாதகம் வந்திருக்கு.. பொண்ணும் நல்லா படிச்சிருக்கா.. பாக்க லட்சணமா இருக்கா.. உனக்கு பொருத்தமா இருப்பானு சொல்லி ஒரு போட்டோ கூட உன் போனுக்கு அனுப்பி வச்சேனே... அத பத்திதான்..

போட்டோ பாத்தியா?? பிடிச்சிருக்கா?? “ என்றார் மீண்டும் அதே ஆர்வம் கலந்த குரலில்...

அப்பொழுது தான் நினைவு வந்தது.. அந்த போட்டோ வந்த மெசேஜை அவன் திறக்கவே இல்லை என்று...

“மா... நான்தான் எனக்கு இப்ப கல்யாணம் வேண்டாம்.. இன்னும் கொஞ்சநாள் போகட்டும்... நான் என் இன்ஸ்டிடூயூட்டை இன்னும் நல்ல நிலைக்கு கொண்டு வரணும்.. அதுக்கப்புறம் தான் மத்ததெல்லாம்.. “ என்று பேசிக்கொண்டெ மணியை பார்த்தவன் நேரம் ஆவதை உணர்ந்து தன் காதில் கெட்போனை மாட்டிகொண்டு சமையல் அறைக்குள் சென்று காலை உணவை தயாரிக்க ஆரம்பித்தான்...

தன் மகன் தான் அனுப்பி வைத்த போட்டோவை பார்த்து ஏதாவது நல்ல செய்தி சொல்லுவான் என்று எதிர்பார்த்திருந்த அந்த தாய் அவன் பதிலால் உற்சாகம் வடிந்து போக

“டேய் கண்ணா... இதையே தான் இரண்டு வருசம் முன்னாடி சொன்ன.. இப்பதான் உன் இன்ஸ்டிடூயூட் நல்லா போய்கிட்டிருக்கு இல்ல.. அதோட சொந்தமா வீடு, கார் எல்லாம் கூட வாங்கிட்ட..

அப்புறம் இன்னும் என்னடா நல்ல நிலைக்கு வரணும்?? உன் வயசு நம்ம ஊர் பசங்க எல்லாம் 25 வயசுலயே கல்யாணம் முடிச்சு அவன் அவன் ஒரு புள்ளைக்கு அப்பனும் ஆகிட்டானுங்க... நீ மட்டும்தான் இப்படி தள்ளி போட்டுகிட்டே போற..

அது அது காலா காலத்துல நடக்கணும் கண்ணா... நீ கல்யாணத்தை பண்ணிகிட்டு அப்புறம் இன்னும் உன் இன்ஸ்டிடூயூட்டை நல்லநிலைக்கு கொணடுவாயேன்... இப்பயே உனக்கு 28 முடிய போகுது... இதுவே லேட் தான்.. இனிமேலும் தள்ளி போடாத கண்ணா... “ என்று புலம்பி தீர்த்தார்..

பின் ஏதோ நினைவு வந்தவராக

“ஜெயந்த்... உனக்கு யாரையாவது பிடிச்சிருக்கா?? உன் மனசுல யாராவது இருந்தாலும் சொல்லுப்பா.. எங்களுக்கு ஒன்னும் பிரச்சனை இல்ல.. அந்த பொண்ணையே கல்யாணம் பண்ணி வச்சுடறோம்.. வேற ஜாதியா இருந்தா கூட பரவாயில்லை... “ என்றார் மீண்டும் ஆர்வமாக...

தன் அன்னை சொன்னதை கேட்டவன் அவனை அறியாமலயே கண் முன்னெ வந்தது அவளின் முகம்...

மனதில் அதே இனம் புரியாத பரவசம் நீண்டும்... காலையில் இருந்தே எதற்காக இந்த பீல் என்று தெரியாமல் குழம்பி வந்தவனுக்கு மீண்டும் அவளின் முகத்தை எண்ணியதும் அதே பரவசம் பரவ இப்பொழுது அவன் குழப்பத்திற்கு விடை கிடைத்தது...

அவன் முகத்தில் இலேசாக வெக்கம் படற உதட்டில் புன்னகை அரும்பியது...

தான் கேட்டதற்கு தன் மகனிடம் இருந்து பதில் இல்லாமல் போக, இன்னும் பரபரப்பாகி

“சொல்லுப்பா... அப்படிதானா?? “ என்றார் உற்சாகம் ஆர்வம் கலந்த குரலில்..

அதற்குள் தன்னை சமாளித்து கொண்டவன்

“ஹா ஹா ஹா.. அதெல்லாம் ஒன்னும் இல்ல மா... அப்படி உங்க மருமகளை பார்த்தா முதல்ல உங்க கிட்ட தான் சொல்லுவேன்... “ என்று சிரித்து சமாளித்தான்..

“அட போடா... நீ அமைதியா இருக்கிறத பார்த்து எங்க நல்ல செய்திதான் சொல்ல போறியோனு சந்தோசபட்டேன்.. அதுக்குள்ள கவுத்திட்டியே கண்ணா...” என்றார் குரல் இறங்கி...

“டோன்ட் வொர்ரி மா... அப்படி சீக்கிரம் ஆகனும்னு இருந்தா சீக்கிரம் நடக்கும்.. “என்று பொடிவைத்து சொன்னான்..

“ஹ்ம்ம்ம் சீக்கிரம் என் மருமகள காட்டுடா... நீயும் இப்படி அடுப்படியில நிக்க வேண்டாம் பார்... “ என்றார்..

“மா... நான் கிச்சன் ல இருக்கிறது உங்களுக்கு எப்படி தெரிஞ்சது?? எனக்கு தெரியாமல் கேமரா எதுவும் வச்சிருக்கீங்களா?? “ என்றான் கிண்டலாக சிரித்தவாறு...

“ஆமா... உன்னை கண்கானிக்க அது எதுக்கு? தாய்ப்க்கு தெரியும் டா புள்ள என்ன பண்ணுவானு?? “ என்று சிரித்தவர்

“நீ அங்க அடுப்படியில் உருட்டறது திருநெல்வேலி தாண்டி இருக்கிற எனக்கு தெளிவா கேக்குது கண்ணா... “ என்று சிரித்தார்...

“ஹீ ஹீ ஹீ நீ ரொம்பவும் ஸ்மார்ட் அம்மாதான் என்னை மாதிரி... “ என்று வாரியவன் பின் சிறிது நேரம் பேசிவிட்டு பின் அலைபேசியைஅனைத்தான்...

அவர் குரலில் வந்து வந்து போன ஆர்வமும் ஏமாற்றத்தையும் கண்டவன்

“சீக்கிரம் உங்களுக்கு ஒரு நல்ல செய்தி சொல்வேனு நினைக்கிறேன் மா.... “ என்றான் அதே புன்னகையுடன்...

பின் அவசரமாக காலை உணவை முடித்து கிளம்பி வீட்டை பூட்டியவன் பார்க்கிங் வந்து தன் காரை எடுத்து கிளப்பினான்...

சிறிது தூரம் சென்றதும் அவன் உதடுகள் அதே பாட்டை முனுமுனுக்க,, ஸ்டியரிங் ல் தாளமிட்டவாறு எப் எம் ஐ ஆன் பண்ணினான்...

அதில் ஒலித்த பாடலை கேட்டதும் சாக் ஆகி நின்றான்..

காலையில் இருந்து அவன் வாயில் ஒலித்துக் கொண்டிருந்த அதே பாடல் அந்த ரேடியோவிலும் ஒலிக்க, மீண்டும் சிரித்து கொண்டே அந்த பாடலை வாய் விட்டு பாடினான்...

அவள் வருவாளா ?? அவள் வருவாளா ??
என் உடைந்துபோன நெஞ்சை ஒட்டவைக்க அவள் வருவாளா
என் பள்ளமான உள்ளம் வெள்ளமாக அவள் வருவாளா
கண்ணோடு நான் கண்ட வண்ணங்கள் போக
சுடிதாரில் மூடாத பாகங்கள் வாழ்க…

என்று அந்த பாடலை ரசித்து பாடி கொண்டிருந்தவன் கண் முன்னே மீண்டும் அவள் முகம் வந்தது...அவன் மனம் தானாக அவளை சந்தித்த தருணத்தை நினைவு கூர்ந்தது...

அன்று காலை தன் முதல் வகுப்பை முடித்து வெளியில் வந்தவன் வெளிறிய குழந்தைதனமான முகத்துடன் கண்களில் மின்னும் பயத்துடன் ஒரு சிறுபெண் வரவேற்பறையில் அமர்ந்து இருப்படதை கண்டான்...

அவள் முகத்தை பார்க்கவும் ஏனோ முதல் பார்வையிலயே அவன் மனதில் பதிந்தது..

நிமிர்ந்த நடையும் நேர் கொண்ட பார்வையும் மின்ன வலம் வரும் இன்றைய நாகரீக பெண்களின் நடுவில் அவள் கொஞ்சம் வித்தியாசமாக தெரிந்தாள்..

ரிசப்னிடம் சென்று அவள்பற்றி விசாரிக்க அவள் எழுதியிருந்த அந்த பார்ம் ஐ காட்டினால் அந்த வரவேற்பு பெண்..

பெயரை படித்ததும் அதுவும் வித்தியாசமாக இருக்க தன் மனதுக்குள் சொல்லி பார்த்தான்... மதுவந்தினி...

ஏனோ அந்த பெயரை சொல்லும் பொழுதெ அவனுக்கு இனித்தது...

அவசரமாக அவள் பெயருக்கு முன்னால் பார்க்க, Miss என்று எழுதி அவள் தந்தையின் பெயரை பெற்றோர் காலத்தில் எழுதியிருந்தாள்...

தனக்கு திருமணத்தை மனதளவில் ஏற்றுக் கொள்ளாததால் மதுவிற்கு திருமணம் ஆனதே நினைவில் இல்லை.. அந்த விண்ணப்பத்தை பூர்த்தி செய்யும் பொழுது எப்பவும் எழுதுவதைப் போல அவள் பெயரையும் அவள் தந்தையின் பெயரையும் எழுதி இருந்தாள்...

அவள் தந்தையின் பெயரை கண்டதும் மகிழ்ந்தவன் பின் அவனே அவளுக்கு உதவுவதாக சொல்லி அவளை அழைத்து சென்றான்..

அவனை கண்டு அவள் பயந்தது அவளின் முகத்தில் தெரிய அவன் உள்ளே சிரிப்பு பரவியது... ஏனோ அவளுடன் குறும்பாக பேச தோண்ற, அறையின் உள்ளே வந்ததும் ஒருமையில் அழைத்தான்...

பின் தன்னை கட்டுபடுத்தி கொண்டு அவள் கேட்ட விளக்கத்தை கொடுத்தான்... அவள் கிளம்பி சென்றதும் அவள் முகம் மட்டும் ஏநோ அவன் மனதை விட்டு நீங்காமல் இருந்தது....

எத்தனையோ பேருக்கு கவுன்சிலிங் கொடுத்திருக்கான்.. ஆனால் அவர்கள் முகம் அடுத்த நிமிடம் மறந்து விடும்.. ஆனால் இவள் முகம் மட்டும் அவன் நினைவுகளில் அடிக்கடி வந்து போனது...

ஏன் என்று அதிகம் யோசிக்க நேரமில்லை அவனுக்கு...

ஆனால் அவள் முகத்தை நினைக்கும் பொழுது அவன் உள்ளே ஒரு புது வித சுகம் பரவுவது மட்டும் தெரிந்தது.. அந்த சுகம் பிடித்திருக்க, ஓய்வு நேரங் களில் அவள் முகத்தை திரும்ப எண்ணி பார்த்து மகிழ்ந்தான் உள்ளுக்குள்...

சென்ற வாரம் விளக்கம் கேட்டு சென்றவள் வகுப்பில் சேருவதாக இருந்தால் இன்றைக்கு தான் வருவாள்.. ஒவ்வொரு புது பேட்ச் ம் திங்கள்கிழமையில் இருந்து ஆரம்பிப்பது வழக்கம்...

அன்று திங்கள் கிழமை...

எப்படியும் அவள் இன்று வருவாள் என்று அறிந்ததுல அதான் காலையில் இருந்தே அவன் மனதுல் அந்த பரவசம் பரவியது...

மீண்டும் அந்த பாடலை பாடியவன்

“அவள் வருவாளா?? வகுப்பில் சேர்ந்திருபபாளா?? “ என்ற கேள்வி வந்தது... அவள் அப்படி சேராமல் இருந்தால் மீண்டும் சந்திக்க வாய்ப்பு கிடைக்காதே?? இல்லை அவள் வருவாள்... கட்டாயம் வருவாள்... “ என்று சொல்லிகொண்டே தன் மனதிற்கு ஆறுதல் அழித்தான்....

அதற்குள் அவன் இன்ஸ்டியூட் அடைந்த்தவன் தன் காரை பார்க் பண்ணிவிட்டு மெல்ல விசில் அடிததபடி கார் சாவியை சுழற்றியவாறு துள்ளல் நடையுடன் பயிற்சி மையத்தின் உள்ளே சென்றான்..

அங்கு இருந்த ஸ்டாப் எழுந்து வணக்கம் தெரிவிக்க, அவனும் புன்னகைத்தவாறு அதை ஏற்று கொண்டு பதில் வணக்கம் சொல்லியவாறு தன் கேபினை அடைந்தான்...

அவன் நடையில் தெரிந்த துள்ளலும் முகத்தில் தெரிந்த வித்தியாசத்தையும் கண்டு ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர் அங் குஇருந்தவர்கள்....

தன் கேபினை அடிந்தவன் தன் மடிக் கணிணியை உயிர்பித்து அன்றைய மெயில்களை ஆர்வையிட்டான்.. சில மெயில்களுக்கு பதில் அனுப்பி பின் அன்றைய முதல் வகுப்பிற்கு சேர்ந்திருந்தவர்களின் பெயர் பட்டியல் இருந்த மெயிலை திறந்தான்...

அந்த பைலை ஓப்பன் பண்ண அவன் இதயம் எகிறி குதித்தது..

“அவள் பெயர் இதில் இருக்கவேண்டும்.. “ என்று வேண்டிக் கொண்டேஅந்த பெயர் வரிசையில் நேராக எம் வரிசைக்கு தாவியது அவன் கண்கள்...

அதில் எம் ல் ஆர்ம்பிக்கும் பெயர்களை அவசரமாக பார்த்தவன் உள்ளுக்குள் அதிர்ந்து போனான்.. அதில் மதுவந்தினியின் பெயர் இல்லை..

ஒரு வேளை வேற ஏதாவது பெயரா இருக்குமோ என்று எல்லா பெயர்களையும் பார்வையிட்டவன் அவள் பெயர் தொடர்புடைய எந்த பெயரும் அதில் இல்லை...

அதுவரை இருந்த உற்சாகம் துள்ளல் எல்லாம் குழந்தை கையில் இருக்கும் பெரிய பலூன் சிறு குண்டூசி பட்டு புஸ் என்று ஆவதை போல அப்படியே வடிந்து போனது...

தலையில் கை வைத்து அமர்ந்தான் சிறிது நேறம்.. பின் தன் வகுப்பிற்கு நேரமாவதை உணர்ந்து தன் தலையை உலுக்கி கொண்டு எழுந்து நடந்தான்...

Induction class என இருந்த அறையை நோக்கி நடந்தவன் உள்ளே செல்ல, அனைவரும் எழுந்து அவனுக்கு வணக்கம் செலுத்தினர்..

அவனும் அவர்களுக்கு வணக்கத்தை செலுத்தியவன் மெல்ல அருகில் இருந்த மேஜயில் சாய்ந்து கொண்டு அங்கிருந்த மாணார்களை பார்வையிட்டான்....

மூன்றாவது வரிசையிக்கு வந்ததும் அவன் கண்கள் விரிந்தன…

காற்றுபோன பலூனை யாராவது ஊதி குழந்தையின் கையில் கொடுத்தால் எப்படி மகிழுமோ அதே மாதிரி அவன் உள்ளம் எகிறி குதித்தது இப்பொழுது..

முகத்தில் தானாக புன்னகை அரும்ப, தன்னை அறிமுக படுத்தி கொண்டு அந்த வகுப்பை ஆர்வத்துடன் ஆரம்பித்தான்...

எப்பவும் எடுக்கும் வகுப்புதான் என்றாலும் இன்று தனியாக ஸ்பெஷலாக உணர்ந்தான்...

அரசு வேலை கிடைக்க எப்படி தயாராக வேண்டும், ஒவ்வொரு வேலைக்கும் எப்படி தயார் பண்ணனும் என்று பல வழிகளை விளக்கினான்..

அவனுடைய motivation speech ஆல் இதுவரை அரசுவேலைக்கும்உயற்சிக்கலாமா?? வேண்டாமா? என்று குழப்பத்தில் இருந்தவர்களுக்கு ஓரளவு தெளிவு கிடைத்தது..

ஒவ்வொருவர் முகத்திலும் ஒரு உற்சாகமும் புத்துணர்ச்சியும் மிளிர்ந்தது... மீண்டும் அனைவரையும் பார்வையிட்டவன் கண்கள் தானாக மது இருந்த இருக்கைக்கு செல்ல, அவளுமே கண்கள் பளபளக்க, ஒரு ஆர்வத்துடன் அமர்ந்திருந்தாள்....

அவன் அவளுக்காகவே சொன்ன பல வழிகள் அவளை மகிழ்ச்சியூட்டியதை எண்ணி அவன் மனம் மகிழ்ந்தது...

ஒரு வழியாக அந்த வகுப்பு முடியவும் ஒவ்வொருவரும் அவர்களுடை ய பிரிவு படி அடுத்து எங்கு வகுப்புகள் நடக்கும் என்று அறிவித்து உணவு இடைவேளைக்கு பிறகு அவர்களை தனியாக பிரிந்து செல்ல விளக்கினான்...

அத்துடன் அந்த வகுப்பு முடிய, மீண்டும் அனைவருக்கும் All the best சொல்லி, அனைவரையும் ஒரு முறை பார்த்து புன்னகைத்து வெளியேறினான்....

மதுவின் மீது மட்டும் ஒரு சில விநாடிகள் அதிகமாக அவன் பார்வை படிந்ததை அவனே அறியவில்லை...

அன்று தன் மதிய உணவை முடித்து மற்ற வகுப்புகளை பார்வையிட்டவாறே நடந்து வந்தவன் ஒரு அறையை கடக்க, அவன் கண்கள் உள்ளே இருந்தவளை கண்டதும் கால்கள் தானாக நின்றன...

அந்த வகுப்பின் உள்ளே மது முன்னால் இருந்த இருக்கையில் அமர்ந்து தன் டிபன் பாக்சை திறந்து அதில் இருந்த உணவை எடுத்து சாப்பிட்டு கொண்டிருந்தாள்...

அவளை கண்டவன் சின்ன முறுவலுடன் உள்ளே சென்றான்..

“ஹாய்.. மது.. எப்படி இருக்க??.... என்று சொல்ல வந்து. இருக்கீங்க?? “ என்று உடனே மாற்றிக் கொண்டான்..

திடீரென்று கேட்ட குரலால் அதிர்ந்துவள் நிமிர்ந்து பார்க்க அங்க ஜெயந்த் ஐ கண்டதும் ஆசிரியரை கண்ட மாணவியை போல வேகமாக எழுந்து நின்றவள்

“I’m fine சார்.. “ என்றாள் வெளிறிய முகத்துடன்...

அதை கண்டவன்

“அட்டா... எதுக்கு இப்படி பயந்துக்கறீங்க?? ... முதல் நாள் என்னை பார்த்து பயந்தது போல அந்த பயம் இன்னும் போகலை போல.. ” என்று குறும்பாக சிரித்தான்...

அதை கேட்டு அசடு வழிந்தவள்

“சாரி சார்... அன்னைக்கு நீங்க யார்னு தெரியாம... “ என்று ஏதோ சொல்ல வர

“இட்ஸ் ஓகே...பெண்கள் விழிப்புடன் கவனமாக இருப்பது நல்லது தான்.. அதுக்காக எதுக்கெடுத்தாலும் இப்படி நீங்க பயப்பட வேண்டாம்... ஆமா முதல் நாள் வகுப்பு எப்படி இருந்தது?? “ என்றான் ஆர்வமாக

“ஹ்ம்ம்ம் சூப்பரா இருந்தது சார்... உங்களோட மோட்டிவேசனல் ஸ்பீச் சூப்பர்... எனக்கே என்னால பாஸ் பண்ண முடியுமா?? முடியாதா?? னு குழப்பத்தில இருந்தேன்.. உங்க பேச்சைக் கேட்டதும், என்னாலயும் முடியும் னு நம்பிக்கை வந்திருச்சு... “ என்று கன்னம் குழிய மெல்ல புன்னகைத்தாள்...

அவளின் அந்த விரிந்த இதழ்களின் அவன் பார்வை படர, அப்படியே மெய் மறந்து ரசித்திருந்தான் சில விநாடிகள்..

பின் தன்னை சுதாரித்து கொண்டு

“ஹ்ம்ம்ம் குட்... உங்களோட தன்னம்பிக்கையும் கடின உழைப்பும் இருந்தால் கன்டிப்பா க்ராக் பண்ணிடலாம்... All the best..ஆமா உங்க பேர் இன்னைக்கு சேர்ந்தவங்க லிஸ்ட் ல இல்லையே... “ என்றான் குழப்பமாக....

“அது வந்து சார்... நான் இன்னைக்கு காலையில தான் ஜாயின் பண்ண வந்தேன்.. அப்ப நேரம் ஆகியிருந்ததால் என்னை நேரா க்ளாஸ்க்கு அனுப்பிட்டாங்க.... அப்புறம் தான் பார்மாலிட்டிஸ் முடிச்சேன்... “ என்று புன்னகைத்தாள்...

“ஓ.. ஒகே.. எனிவே நல்லா பிரிப்பேர் பண்ணுங்க.. எந்த சந்தேகம்னாலும் என்கிட்ட தயங்காம கேளுங்க...கேரி ஆன் “ என்று புன்னகைத்து அதற்கு மேல் அங்கு நின்றால் நன்றாக இருக்காது என்று உணர்ந்து மனமே இல்லாமல் வெளியேறினான்...

மதுவும் தன் பதட்டம் குறைந்து தன் மீதி உணவை முடித்தாள்...

மறுநாள் காலை எழுந்ததில் இருந்தே பதட்டமாக இருந்தாள் அகிலா...பள்ளிக்கு கிளம்பி தன் காலை உணவை முடித்தவள் கையில் ஒரு பேப்பரை வைத்து கொண்டு திருப்பி திருப்பி அதை பார்ப்பதும் பின் வாசலை பார்ப்பதுமாக நின்று கொண்டிருந்தாள்..

மது தன் மாமியார்க்கு சமையல் அறையில் உதவி கொண்டே அகிலாவை பார்க்க, அவள் இன்னும் வாயிலையே பார்த்துக் கொண்டிருந்தாள் பயந்தவாறு..

அவளின் டென்சனை கண்ட மது அகிலாவின் அருகில் வந்து

“என்னாச்சு அகி.. ஏன் ஒரே டென்ஷனா இருக்க?? “என்றாள் அக்கறையுடன்....

“இதுதான் அண்ணி.. “ என்று தன் புராக்ரஸ் ரிப்போர்ட் ஐ காண்பித்தவள்

“ஹ்ம்ம்ம் எல்லா சப்ஜெக்ட் லயும் நல்ல மார்க் தான் அண்ணி.. ஆனால் இந்த பாழாய்போன மேக்ஷ் மட்டும் வரவே மாட்டேங்குது... நானும் எத்தனை பிராப்ளத்தைத் தான் சால்வ் பண்றது??

எப்பவும் இதில் மட்டும் மார்க் வரவே மாட்டேங்குது...கிட்ட தட்ட பாஸ் மார்க் தான் வந்திருக்கு...

அந்த மங்கி மகி இருக்கிற வரைக்கும் அவன் கிட்ட எப்படியாவது தாஜா பண்ணி கையெழுத்து வாங்கிடுவேன்.. இப்பதான் அந்த மங்கி எங்கயோ ஓடி போய்ட்டானே.. இந்த முறை அந்த சிங்கத்துகிட்ட தான் போய் நிக்கனும்...

நான் வாங்கின மார்க்கை பார்த்துட்டு எப்படி கடிக்க போகுதோ?? அதான் பயமா இருக்கு... “ என்று புலம்பி கொண்டிருக்கையில் தன் காலை ஓட்டத்தை முடித்து நிகிலன் திரும்பி வந்திருந்தான்....

வழக்கம் போல வரவேற்பறையில் அமர்ந்து செய்திதாளை புரட்ட, அகிலா பயந்தவாறே அங்கு சென்றாள்..

அவளை கண்டதும் “என்ன அகிலா?? ஸ்கூலுக்க்கு கிளம்பல?? லேட் ஆகுது பார்.. “ என்றான் கொஞ்சம் கடினமான குரலில்..

“இதோ கிளம்பிட்டேன் னா .. ஆனா ஒரு சின்ன ஹெல்ப் பண்ணனும்ம்... “ என்று இழுத்தாள்...

“என்ன வேணும்?? “ என்று தன் புருவங்களை உயர்த்தினான்....

“வந்து இதில ஒரு கையெழுத்து போடனும்... “ என்று அந்த ரிப்போட் கார்டை நீட்டினாள் அவன் முன்னே..

அதை வாங்கியவன் அதில் பார்வையிட, மேத்ஸ் ல் மட்டும் ரொம்பவும் குறைவாக வாங்கியிருந்ததை கண்டு தன் வழக்கமான அர்ச்சனை மற்றும் லெக்சரை ஆரம்பித்தான்...

இதை ஏற்கனவே எதிர் பார்த்திருந்த அகிலா, கொஞ்ச நேரம் அவன் திட்டுவதைகேட்டு வருந்தியவள் பின் தன் ட்ரிக்கை பாலோ பண்ணி, காதை மூடி கொண்டாள்...

ஆனா அது தெரியாதவாறு இருக்க , தலையை குனிந்து கொண்டாள்...

நிகிலன் ஒரு வழியாக அவளை திட்டி முடித்து,

“அடுத்த டெஸ்ட் ல நல்லா பண்ணலைனா தொலச்சுடுவேன்.. “ என்று முறைத்தவாறு கையெழுத்திட்டு கொடுத்தான்....

“அப்படா... “ என்று நிம்மதி மூச்சு விட்டவள் சிரித்து கொண்டே சமையல் அறைக்குள் செல்ல, மதுவோ அவள் அண்ணன் திட்டியதுக்கு இவள் எப்படி அழுது கொண்டே வரப் போகிறாளோ என்று கவலையாக எதிர்பார்த்து அவள் முகத்தை பார்க்க, அகிலாவோ சிரித்து கொண்டே வந்தாள்...

அப்பொழுதுதான் அவள் சொன்ன டெக்னிக் ஞாபகம் வந்தது மதுவுக்கு...

“”ஹோய்... திருடி... என்ன காதில பஞ்ச வச்சிகிட்டியா?? அதான் அவர் இவ்வளவு திட்டியும் கொஞ்சம் கூட பீல் பண்ணாம ஜாலியா ஆடிகிட்டே வர்ற?? “ என்று சிரித்தாள் மது..

“ஹீ ஹீ ஹீ.. இந்த அகிலா கூட சேர்ந்து நீங்களும் வர வர ஸ்மார்ட் ஆகிட்டு வர்ரீக்க அண்ணி.. என் ட்ரிக்கை கரெக்டா கண்டு பிடிச்சுட்டீங்களே..சூப்பர் தான் “ என்று கண்ணடித்தாள்...

“அடிப்பாவி...அவர் உன் நல்லதுக்குனு சொல்லி எவ்வளவு தூரம் அட்வைஸ் பண்ணிகிட்டிருக்கார்... நீ அதை காதுலயே வாங்கலையே... சரி ஏன் கணக்குல மட்டும் மார்க் கம்மியா வாங்கற?? நல்லா படிக்கலாம் இல்ல..” என்று அக்கறையாக தன் நாத்தனாருக்கு அறிவுரை சொன்னாள் மது ...

“”ஹ்ம்ம்ம்ம் அது ஏனோ இந்த கணக்கு மட்டும் மண்டையில ஏறவே மாட்டேங்குது அண்ணி.. “ என்றாள் முகத்தை பாவமாக வைத்துகொண்டு

“சரி விடு.. நான் உனக்கு சொல்லி தர்ரேன்.. சீக்கிரம் உனக்கு புரியும்.. “

“வாட்?? காமெடி பண்ணாதிங்க அண்ணி… இது நீங்க நினைக்கிற மாதிரி கூட்டல்,கழித்தல், பெறுக்கல் இல்லை.. இப்ப இருக்கிற மேத்ஸ் எவ்ளோ கஷ்டமானது தெரியுமா??..

நீங்க படிச்சதே B.A History.. உங்களுக்கு எப்படி அவ்வளவு பெரிய சம் எல்லாம் தெரியுமாம்?? “ என்றாள் நக்கலாக

அதை கேட்டு அவளை முறைத்த மது

“ஹோய்... நான் +2 ல மேத்ஸ் ல சென்டம் ஆக்கும்... “என்றாள் பெருமையாக...

“ஹா ஹா ஹா இந்த இருநூறுக்கு நூறா ?? அண்ணி.. “ என்றாள் குறும்பாக...

அவளை மீண்டும் முறைத்தவள் சென்டம் னா இருநூறுக்கு இருநூறு னு அர்த்தம்.. “என்று அவள் காதை பிடித்து திருகினாள்.. அதை கேட்டு

“ஆங்...” என்று வாயை பிளந்தவள்

“அப்புறம் ஏன் History எடுத்து படிச்சீங்க அண்ணி.. பேசாம எஞ்ஜினியரிங் சேர்ந்திருக்கலாம் இல்ல.. “ என்றாள் ஆச்சர்யமாக

“ஹ்ம்ம்ம் எனக்கு கலெக்டர் ஆகணும்னு ஆசை... அதான் அதுக்கு தகுந்த மாதிரி யூஸ்புல்லா இருக்கணும்னு ஹிஸ்டரி எடுத்தேன்...ஆனா எனக்கு மேத்ஸ் னா ரொம்ப பிடிக்கும்.. சரி.. இப்பயாவது நான் சொல்லி தரவா?? இன்னைக்கு நைட் உட்கார்ந்து படிக்கலாம்.. இப்ப உனக்கு ஸ்கூல்க்கு டைம் ஆச்சு.. கிளம்பு.. “ என்றாள் சிரித்தவாறு

“வாவ் சூப்பர்அண்ணி.. அப்ப நான் அடுத்த முறை கலக்கிடுவேனனாக்கும்... தேங்க்ஸ் அண்ணி.. “ என்று குதித்து கொண்டே தன் ஸ்கூல் பேக்கை எடுத்துக் கொண்டு தன் அன்னையிடமும் மதுவிடமும் பை சொல்லி ஓடினாள்...

அவர்கள் இருவரின் பேச்சை கேட்டு கொண்டிருந்த சிவகாமிக்கு தன் மருமகளை நினைத்து பெருமையாக இருந்தது... மூத்த மருமகளாக, தன் நாத்தனாரின் மே;ல் அக்கரையுடன் தன் மருமகள் பேசியது அவருக்கு சந்தோசமாக இருந்தது...

அந்த முருகன் நல்ல மருமகளாதான் அனுப்பி வச்சிருக்கான்.. இனிமேல் அகிலாவை பற்றியும் கவலை இல்ல.. தனக்கு பின்னால் மருமக பார்த்துக்குவா.. “ என்று மனதுக்குள் சிரித்தவர் பின் தன் மருமகளுடன் கதை அடித்தவாறெ மற்ற வேலைகளை முடித்தார்...

அன்று இரவு தன் வேலை முடித்து வீடு திரும்பிய நிகிலன் தன் அறைக்கு செல்ல முயல, அப்பொழுது அகிலாவின் அறையில் இருந்து இரு பெண்களும் பேசும் சத்தம் கேட்க அப்படியே நின்றான்..

அகிலாவின் அறையில் மது அவளுக்கு கணக்கு பாடத்தில் அவள் சந்தேகங்களை விளக்கி கொண்டிருந்தாள்..

அவளின் விளக்கத்தை கண்டுஅகிலா வாயை பிளந்தாள்.. இதுவரை தன் மண்டையில் ஏறாத சில பாடங்கள் எளிதாக புரிய, தன் அண்ணியை பாராட்டி கொண்டே கவனமாக கேட்டு கொண்டிருந்தாள்..

அவர்கள் இருவர் இடையிலும் நல்ல நட்பு உருவாகியிருந்தது..

அவர்கள் இருவரின் கொஞ்சலையும் அவர்கள் பழகும் விதத்தையும் நிகிலனும் கவனித்து கொண்டிருந்தான்...

அவன் கேள்வி பட்டவரை வீட்டிற்கு வந்த மருமகள் கணவனின் உடன் பிறந்தவர்களுடன் அவ்வளவு எளிதாக நட்பு பாராட்டுவதில்லை.. மாறாக அவர்களுக்குள் எப்பயும் புகைந்து கொண்டே இருக்கும்.. மேலும் இதை வைத்தே நிறைய பிரச்சனை வரும் என்பதுதான்..

அவனே கண் கூடாக பார்த்திருக்கிறான் அவன் இன்னொரு நண்பன் குடும்பத்தில்.... ஆனால் இங்கு தன் வீட்டிற்கு வந்தவள் அப்படி எதுவும் முயற்சி செய்யாமல் தன் அன்னையிடமும் தங்கையிடமும் நட்பாக இருப்பதை கண்டு கொஞ்சம் வியந்தான்...

சில விநாடிகள் நின்று அவர்கள் பேசி சிரிப்பதை கேட்டவன் முகத்தில் இலேசாக புன்னகை அரும்ப தன் அறைக்குள்ளே சென்றான்.. பின் குளித்து முடித்தவன் தனக்கான பாலை குடித்து முடித்து படுக்கையில் விழ, மீண்டும் அவன் மனதில் மது வந்து நின்றாள்..

அவளின் பயந்த வெளிறிய குழந்தைதனமான முகமும் குறுகிய காலத்தில் தன் குடும்பத்துடன் அவள் பொருந்தியிருப்பதையும் உணர்ந்தவன்

“ஒரு வேளை இவள் உண்மையிலயே கொஞ்சம் வித்தியாசமானவளோ?? “ என்று தனக்குள் கேட்டுகொண்டவன் மனதில் மெல்ல தன் மனைவியை பற்றி சாப்ட் கார்னர் உருவாக ஆரம்பித்தது...

Comments

Post a Comment

Popular Posts

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே

என் மடியில் பூத்த மலரே

அனைவருக்கும் வணக்கம்!!!

காதோடுதான் நான் பாடுவேன்

நிலவே என்னிடம் நெருங்காதே!!

வராமல் வந்த தேவதை

பூங்கதவே தாழ் திறவாய்

தாழம்பூவே வாசம் வீசு!!!

தவமின்றி கிடைத்த வரமே

அழகான ராட்சசியே!!!