என் மடியில் பூத்த மலரே-25



அத்தியாயம்-25

மாலை பாரதி தயாராகி ஆதிக்காக காத்திருந்தாள்... இன்று ஸ்கேன் பண்ணனும் என்பதால் புடவை அணிந்து கூந்தலை தளர பிண்ணி கொஞமாக மல்லிகை பூவை வைத்திருந்தாள்..

ஆதி ஆறு மணிக்கே வரவும், சீக்கிரம் ரிப்ரெஸ் ஆகிட்டு பாரதி எடுத்து வைத்த சிற்றுண்டியை சாப்பிட்டு முடித்து எழுந்து நடந்தான்..

பாரதியும் மாரியிடம் சொல்லிக்கொண்டு அவனுடன் இணைந்து நடந்தாள்.. சிறிது துரம் சென்றதும் அவன் பார்வை அவள் வயிற்றை தடவியது.. பாரதி புடவையை நன்றாக இழுத்து மேலே விட்டிருந்ததால் அவளின் இடை வழியாக அவளின் வயிற்றை பார்க்க முயன்றவனுக்கு ஏமாற்றமே... ஆனால் புடவையும் மீறி லேசாக மேடிட்டிருந்த அவள் வயிறு தெரிந்தது.. அதை கண்டதும் ஏதோ இனம் புரியாத பரவசம் அவன் உள்ளே...

“என் பிரின்ஸஸ் வளர்ந்திருப்பாளோ?? எவ்வளவு பெருசா இருப்பா இந்நேரம்??.. அவளை இன்னைக்கு பார்க்க போறேன்... “ என்று குதூகாலித்தான்.. இதுவரை அழுத்தி வந்த பாரம் மறைந்து உற்சாகம் பரவியது... அவளை ஓரக்கண்ணால் பார்த்துக் கொண்டே நடந்தான்...

அவனின் ஓரப் பார்வையை கண்டுகொண்ட பாரதி,

“இவன் ஏன் அடிக்கடி ஒரு மாதிரி பார்க்கிறான்... அவன் பார்வையில் ஒரு ஆர்வம், ஏக்கம், ஏமாற்றம் எல்லாம் கலந்து இருப்பதாக தோன்றியது... ஆனால் என்ன அது என்று அவளுக்கு புரியவில்லை...

காரை அடைந்து இருவரும் உள்ளே அமர காரை கிளப்பினான் ஆதி ...

கொஞ்ச நேரம் அமைதியாக வந்தனர் இருவரும்.. பின் அவளை பார்த்து

“தேங்க்ஷ்... “ என்றான்..

"எதுக்கு?? .." என்றாள் புரியாதவளாக

"ஹ்ம்ம்ம் எல்லாத்துக்கும்... முக்கியமா உன் அத்தை கிட்ட என்னை மாட்டி விடாமல் இருந்ததுக்கு... " என்றான் குறும்பாக...

"ஹ்ம்ம்ம்ம் முதல் தடவைங்கிறதால போனா போகுது பொழச்சு போங்கனு விட்டுட்டேன்.. திரும்பவும் இது மாதிரி தண்ணி அடிச்சிட்டு வந்தீங்க, அவ்வளவு தான்.. ஜாக்கிரதை.. “ என்று விரலை நீட்டி மிரட்டினாள்...

"ஏய்... நானும் போனா போகுதுனு ஒரு தேங்க்ஷ் சொன்னா, என்னவோ என் பொண்டாட்டி மாதிரி இப்படி மிரட்டற... நான் தண்ணிய போட்டுட்டு வந்து உன் கைய பிடிச்சு இழுத்தனா?? " என்று முறைத்தான்..

"அடப்பாவி... இழுத்தனா வா?? என் கைய பிடிச்சு இழுத்ததோடு என்னை கட்டி பிடிச்சு என் கூட வேற தூங்கி தொலச்சியே..அதோடு ஐ லவ் யூ னு முத்தம் வேற கொடுத்தியே.. அத எப்படி என் வாயால சொல்லுவேன்.. இது மட்டும் கரெக்டா உனக்கு ஞாபகம் இல்ல.. "என்று மனதுக்குள் திட்டினாள் அவனை முறைத்தவாறு...

பின் இருவரும் ஒருவருகொருவர் வம்பு இழுத்துக் கொண்டே வர மருத்துவமனையை அடைந்தனர்..

அதன் வாயிலில் காரை நிறுத்தி தன் புருவங்களை உயர்த்தினான் கேள்வியாக அவள் கோயிலுக்கு போகணுமா என்று...அதை புரிந்து கொண்டவள்

“வேண்டாம்.. “என்று தலைய மட்டும் இரு பக்கமும் ஆட்டினாள் அவனை புரிந்து கொண்டவளாக.. பின் அவன் தோள்களை குலுக்கி காரை பார்க்கிங்க் ல் நிறுத்தி விட்டு சுசிலாவின் அறையை அடைந்தனர்..

வழக்கம் போல சுசிலா அவர்களை வரவேற்றார் புன்னகையுடன்.. அவரின் அருகில் சென்று அமர்ந்ததும், பாரதியை பரிசோதித்தவர்,

“என்ன பாரதி?? .. என் பேத்தி ரொம்ப படுத்திட்டா போல இருக்கு... நீ சாப்பிட்ட ஐயர்ன் டாபிலட்டை விட நீ சாப்பிட்ட வாமிட் க்கான டாபிலட் தான் அதிகம் போல இருக்கே... “என்று குறும்பாக சிரித்தார்...

“ஹி ஹி ஹி... ஆமா டாக்டர்... அவங்க அப்பா என்னை படுத்திறது பத்தாதுனு அவரோட குட்டி, உங்க பேத்தியும் என்னை படுத்தி எடுத்திட்டா... “ என்று கன்னம் குழிய சிரித்தாள் பாரதி..

“ஏய்.. நான் எப்ப உன்னை படுத்தினேன்?? .. நீ தான் என்னை போட்டு படுத்தின.. இங்க பார்.. நீ கடிச்சு வச்ச தழும்பு கூட இன்னும் போகல. ..” என்று தன் கையை முன்னால் நீட்டி காட்டி சிரித்தான்....

“ஐய.. கடிச்சதோட விட்டேனு சந்தோசப் படுங்க... “ என்று சண்டைக்கு வந்தாள் பாரதி... அவர்கள் இருவரின் வாக்கு வாதத்தையும் ரசித்து பார்த்துக் கொண்டிருந்தார் சுசிலா கொஞ்ச நேரம்... அவர்கள் சண்டையை நிறுத்துவதாக இல்லை என தோன்ற

“சரி சரி.. உங்க சண்டைய அப்புறம் வச்சுக்கங்க... வாங்க இப்ப என் பேத்தி என்ன பண்ணிகிட்டு இருக்கானு பார்க்கலாம்.. “ என்று எழுந்தார் சிரித்தவாறே...

பின் இருவரும் ஒருவருக்கொருவர் முறைத்தவாறு எழுந்தனர்... வழக்கம் போல ஆதி வெளியில் நின்று கொள்ள, பாரதி முன்னால் செல்ல, சுசிலா பேசிக் புரசிஜரை செய்து ஸ்கேன் பண்ண தயாராக வைத்து கொண்டு ஆதியை அழைத்தார்...

அவனும் உள்ளே வந்து அமர்ந்து கொண்டு அந்த மானிட்டரை பார்த்தான் ஆவலுடன்.. சுசிலா அவனின் இளவரசியை காட்டி விளக்கி கொண்டிருந்தார்... முன்ன பார்த்ததுக்கும் இப்ப நன்றாக வளர்ந்து பெரிய உருவமாக தெரிய ஆதிக்கு அதே இனம் புரியாத பரவசம் அவன் உள்ளே...



கையை எடுத்து நெற்றியில் வைத்துக்கொண்டு ஏதோ யோசிப்பதைப் போல இருந்த உருவத்தை பார்க்க பார்க்க திகட்டவில்லை அவனுக்கு

அந்த திரையில் தெரிந்த உருவத்தையே ஆசையாக பார்த்திருந்தான்.. பின் சுசிலாவிடம் திரும்பி

“வாவ்... ரொம்ப சூப்பரா இருக்கா மா... எனக்கு இப்பவே தூக்கனும் போல இருக்கு...” என்று குதூகலித்தான்

“ஹா ஹா ஹா... நீ இன்னும் 130 நாட்கள் காத்திருக்கணுமாக்கும்... “என்று சிரித்தார் சுசிலா ...

“130 நாட்கள் தானா?? இன்னும் 5 மாசம் இல்லையா?? “என்றான் சந்தேகமாக

“இல்ல கண்ணா.. ஒரு குழந்தையின் சராசரி வளர்ச்சி நாள் 280 நாட்கள் தான்... உன் பேபிக்கு அல்ரெடி 150 நாட்கள் முடிஞ்சிருச்சு... சோ இன்னும் 130 நாட்கள் தான்... “என்று சிரித்தார்...

“வாவ்... சூப்பர் மா ... I’m counting the days..“ என்றான் சின்ன வெட்கத்துடன்

பின் அந்த திரையில் தெரிந்த சின்ன உருவத்தை தன் அலைபேசியில் பதிந்து கொண்டான்..அதை கண்ட சுசிலா

“என்னடா கண்ணா இது?? .. எல்லாம் குழந்தை பிறந்த பிறகு போட்டோ எடுப்பாங்க.. நீ என்னடான்னா அவள் வயித்துக்குள்ள இருக்கிறப்பயே போட்டோ எடுக்கிற?? .. என்று சிரித்தார்...

“ஹி ஹ்இ ஹி.. எனக்கு என்னவோ இப்பவே அவ என் கூட இருக்கிற மாதிரி இருக்குமா...I’m so excited… I’m going to see her daily.. “ என்று சிரித்தான்...

“ஹ்ம்ம்ம் என்ஜாய் யுவர் டேஸ் கண்ணா... “ என்று அவனை தட்டி கொடுத்தார்.. கண்ணில் மிகுந்த மகிழ்ச்சியுடன்..ஆதியின் அந்த மலர்ந்த முகத்தை காணும்பொழுது சுசிலாவின் மனது நிறைந்தது...

“எங்க பையன் இப்படியே இருக்கணும்..” என்று வேண்டிக் கொண்டார்... இதுக்கெல்லாம் காரணமான ஜானகியை மெச்சிக் கொண்டார்...

“பரவாலை... ஜானகி சரியான முடிவு தான் எடுத்திருக்கா...எப்படியோ போராடி அவன் முகத்தில் சிரிப்பை கொண்டு வந்திட்டா...இன்னும் அவ திட்டமிட்ட படி எல்லாம் சரியா நடந்திட்டா போதும்... எங்க பையனை யாரும் அசைக்க முடியாது “ என்று நினைத்துக் கொண்டார்...

அதை கேட்ட வேலன்

“யாமிருக்க பயமேன் டாக்டர்..என் பக்தையின் குறையை தீர்க்கவே இந்த ஆட்டத்தை ஆரம்பித்தேன்..விரைவில் ஆட்டத்தில் செக் வைக்க போகிறேன்...சீக்கிரம் நல்லது நடக்கும்... Wait and see.. “ என்று சிரித்துக் கொண்டான்

பின் எல்லா பரிசோதனையும் முடிந்து சுசிலா எழ, அவருடன் கூட எழுந்தவனின் பார்வை பாரதியின் வயிற்றுக்கு சென்றது... அதே நேரம் அவள் தன் சேலையை இழுத்து விட்டுக் கொண்டாள்...

“சே!!! ஜஸ்ட் மிஸ்... இந்த பட்டிகாடு இவ்வளவு நேரம் இழுத்து விடாமல் தான இருந்தா... இப்ப என்னவாம்?? .. கரெக்டா நான் பார்க்கிறப்ப தான் மூடுவாளாக்கும்.. “ என்று திட்டிக் கொண்டே சிறு ஏமாற்றத்துடன் எழுந்து வெளியில் சென்றான்..

பின் இருவரும் சுசிலாவிடம் விடை பெற்று வெளியில் வந்தனர்.. வழக்கம் போல பாரதி அனைவரிடமும் சிரித்து பேசியும் அழகாக புன்னகைத்தும் வந்தாள்...

அதை கண்ட ஆதி இந்த முறை ஏனோ கோபப்பட வில்லை.. மாறாக அவளின் அந்த கள்ளம் கபடமற்ற மலர்ந்த சிரிப்பை ரசித்துக் கொண்டு வந்தான் அவள் அறியாமல்...

ஒருவழியாக அனைவரிடமும் சிரித்து பேசி முடித்து அந்த மருத்துவமனையின் வெளியில் வந்து பார்க்கிங் நோக்கி நடந்தனர் இருவரும்.. திடீரென்று ஆதியின் பின்னால் இருந்து ஒரு குரல் கேட்டது...

“ஹாய்.. ஆதி டார்லிங்... “

அந்த குரலை கேட்டதும் ஆதியின் உடல் விரைத்தது... முகத்தில் கடுப்பேற கைகள் முறுக்கேற அருகில் இருந்த பாரதியின் கையை இறுக பற்றிக் கொண்டான்...

அதற்குள் அருகில் வந்தது அந்த குரல். அவனுக்கு திரும்பாமலே புரிந்தது அந்த குரலையும் அந்த குரலுக்கு சொந்தக்காரியையும்...

மீண்டும் “ஹாய் ஆதி டார்லிங்...எப்படி இருக்க?? “ என்றாள் ஷ்வேதா நக்கலாக சிரித்தவாறு..

நேற்றே பார்ட்டியில் அவனை பழிவாங்க துடித்த ஷ்வேதாவிற்கு அவன் பாதியில் செல்லவும் ஏமாற்றமாக இருந்தது அவனை இன்னும் ரணப் படுத்தி பார்க்க முடியவில்லையே என்று...

மீண்டும் அவனை இங்கு காணவும், அதுவும் அவன் பாரதியை ரசித்துக்கொண்டே வந்ததை கண்டுகொண்டவள் உள்ளம் எரிமலையானது... மீண்டும் அவனை சீண்டஒரு சான்ஸ் கிடைத்தது என்று அவள் மனம் கொக்கரித்தது..

அதனாலயே அவனை கண்டுகொண்டவள் அவனை விடாமல் அவன் பின்னாலயே துரத்தி வந்தாள்...

அவளின் நக்கலான சிரிப்பை கண்டு அவன் எதுவும் பேசாமல் அவளை முறைத்தான்..அவன் பேச ஆரம்பித்தாள் தன் கட்டுபாட்டை இழந்து அவளை ஏதாவது செய்து விடுவோம்..

அதுவும் இந்த பொது இடத்தில் தன் அம்மா வேலை பார்க்கும் இந்த மருத்துவமனையில் வச்சு எதுவும் நடந்திடக்கூடாது என்று பல்லை கடித்துக் கொண்டிருந்தான் பாரதியின் கையை இறுக பற்றியவாறு...

அதற்குள் பாரதிக்கு ஓரளவு புரிந்தது அவள் யாராக இருக்கும் என்று..

நேற்று அவன் பட்ட வேதனை கண் முன்னே வந்தது... அவளுக்குமே கோபம் வந்தது.. இருந்தாலும் தன்னை கட்டு படுத்தி கொண்டவள் அந்த ஷ்வேதாவை உற்று பார்த்தாள்..

நல்ல வெள்ள வெளேரென்று வழுவழுப்பான ஒல்லியான தேகம்.. மேலும் அவள் செய்திருந்த ஒப்பனையில் தங்க சிலையாக ஜொலித்தாள்... மேலும் மாடர்னாக ஆடை அணிந்து பார்க்கும் பெண்கள் அனைவரையும் பொறாமைப் படும் விதத்திலும் ஆண்களை சுண்டி இழுக்கும் விதமாக அணிந்திருந்தாள்...

அவளின் தோற்றத்தை கண்டு மலைத்து நின்றாள் பாரதி...

இப்படி பட்டவளிடம் இவன் மயங்கியது ஒன்னும் அதிசயமில்லை தான்...எனக்கே அவளை பார்க்க ஆசையாக இருக்கு... பாவம் அப்ப இவன் மட்டும் என்ன பண்ணி இருப்பானாம்...பார்க்கவும் நல்ல பொண்ணாதான் இருக்கா... இவன் கூடவே சேர்ந்து இருந்திருக்கலாம்..

இப்படி ஒரு நல்ல வாழ்க்கையை தொலைச்சிட்டாளே.. “ என்று யோசித்தவாறு அவளையே உற் று பார்த்துக் கொண்டிருந்தாள் பாரதி அந்த ஷ்வேதாவின் சுயரூபம் தெரியாமல் ....

ஆனால் அந்த ஷ்வேதாவோ இவள் இருந்த பக்கமே திரும்பாமல் அவனிடமே பேசிக்கொண்டிருந்தாள்..

“வாவ்... மூன்றரை வருசத்துக்கு அப்புறமும் அதே கட்டு கோப்புடன் இருக்க டார்லிங்...” என்றாள்... அப்பொழுதுதான் பாரதியை பார்த்து

“ஒ நீ தான் அவனோட புதுப்பொண்டாட்டியா??

என்ன ஆதி டார்லிங்.. நீ என்ன சின்சியரா லவ் பண்ண.. எனக்கு அப்புறம் நீ யாரையும் கல்யாணம் பண்ணிக்க மாட்டேனு நினைச்சேன்... அதுக்குள்ள இன்னொருத்தியை தேடிகிட்டியே...

ஓ.. உனக்குத்தான் நைட் ஆனா பொண்டாட்டி இல்லாம தூக்கம் வராதே.. அதான் புதுப்பொண்ணா புடிச்சிட்டியா?? ..” என்றவள் பாரதியை மேலும் கீழும் பார்த்து

“ஹ்ம்ம்ம் பொண்ணு என்னை மாதிரி இல்லைனாலும் சுமாராதான் இருக்கா... ஆனால் பார்த்தால் நாட்டு கட்டையா இருக்கா... உனக்கு இவளால் தான் ஈடு கொடுக்க முடியும் ...” என்று கண் சிமிட்டி சிரித்தவள்...



பின் பாரதியை நேராக பார்த்து .

“You are so lucky…எனக்கு அந்த மூன்று மாத இரவுகலும் இன்னும் மறக்க முடியாத இரவுகள் தான்.. “ என்று கண்ணடித்தாள்..

அதை கேட்டதும் பாரதிக்கு கன்னம் சிவந்தது அவள் என்ன சொல்கிறாள் என்று புரிந்து கொண்டு... அதையும் மீறி கோபத்தில் முகம் சிவந்தது பாரதிக்கு.. அவளும் ஆதியை இறுக பிடித்துக்கொண்டாள் எங்கே தான் உணர்ச்சி வசப்பட்டு ஏதாவது செய்து விடுவோமோ என்று..

அந்த ஷ்வேதாவோ மேலும் உளறிக் கொண்டிருந்தாள்..

“ஹ்ம்ம்ம்ம் எப்படி இருக்கா அந்த கிளவி.. அதுக்கு குழந்தைனா உயிராச்சே...” என்றவள் பாரதியின் லேசாக மேடிட்டிருந்த வயிற்றை பார்த்து

“ஓ... வாரிசு ரெடி பண்ணிட்டானா .. அதான பார்த்தேன்.. அந்த கிழவிக்கு அதுதான் பெருசு.. நீ ஏன் அதுக்குள்ள ஒத்து கிட்ட.. .கொஞ்ச நாள் ஜாலியா இருக்க வேண்டியதுதான.. அந்த கிழவி இருக்கா?? இல்ல போயிருச்சா?? அந்த கிழவன் போனப்பவே அதும் போயிருக்கனுமே... “ என்று அவள் பேசி முடிக்கு முன்னே

ஆதியை பிடித்து இருந்த கையை விளக்கி ஓங்கி அவள் கன்னத்தில் அறைந்து இருந்தாள் பாரதி..

“சீ... நீயெல்லாம் ஒரு பொண்ணா?? ... ஒரு பொது இடத்துல எப்படி பேசறதுன்னு அறிவு இல்லை...இப்படித்தான் மோசமா பேசுவியா??

அப்புறம் என்ன கேட்ட?? .. என் அத்தை எப்படி இருக்காங்கனு தான.. ராணி மாதிரி இருக்காங்க.. இன்னும் 4 பேரப் புள்ளையை பார்த்துட்டு அவங்களுக்கு கல்யாணம் ஆகி கொள்ளு பேரன் பேத்தி எடுக்கிற வரைக்கும் ஸ்ட்ராங்கா இருக்காங்க போதுமா... வேணும் னா வந்து ஆசை தீர பார்த்துட்டு போ...

இவ்வளவு பேசறீயே... நீ கலுத்துல தாலி வாங்கிட்டியா இல்லை இன்னும் ராகுலுக்கு வப்பாட்டியாதான் இருக்கியா???

பாத்து மா.. அந்த ராகுல் ஏற்கனவே வேற ஒரு பொண்ண கரெக்ட் பண்ணிட்டதா கேள்வி பட்டேன்.. அவன் அந்த பொண்ணுக்கு தாவறதுக்கு முன்னாடி ஒரு தாலிய கட்டிக்க... அத வச்சாவது அவன் சொத்து கொஞ்சம் உனக்கு கிடைக்கும்.. இல்லனா நடுத்தெருவுல தான் நிக்கனும்..

உன் நிலையே அங்க ஆட்டம் காணறப்போ அடுத்தவங்களுக்கு நீ அட்வைஸ் பண்ண வந்துட்ட... போடி...இனிமேல் ஏதாவது எங்க அத்தைய பத்தி பேசின தொலைச்சிருவேன் “ என்று கை நீட்டி மிரட்டி விட்டு

“நீங்க வாங்க.. இவ கூட எல்லாம் என்ன பேச்சு” என்று அவன் கையை பிடித்து இழுத்து கொண்டு சென்றாள்...

ஷ்வேதாவோ பல்லை கடித்தாள் ஆத்திரத்தில்..

“பார்த்தா பட்டிக்காடு மாதிரி இருக்கா... என்னை போய் கை நீட்டி அடிச்சிட்டாளே... இவளுக்கு இருக்கு... “ என்று பொருமிக் கொண்டே தன் கன்னத்தில் கை வைத்து கொண்டே நகர்ந்தாள்

கொஞ்ச தூரம் சென்றும் இன்னும் ஆதியின் உடல் விரைத்து இருந்தது..கைகள் லேசாக நடுங்க ஆரம்பித்தன அந்த ஷ்வேதாவின் பேச்சால்..

அவன் கையை மெதுவாக அழுத்திய பாரதி

“இவள் எல்லாம் ஒரு மூட்டப்பூச்சி.. இவ பேசறானு நீங்க ஏன் இவ்வளவு டென்ஷன் ஆறிங்க... கூல் டவுன்.. “ என்றாள் கனிந்த குரலில்....

அவளை அப்படியே இழுத்து அணைத்துக் கொண்டான்....

அவனின் பதற்றம் தீர கொஞ்ச நேரம் ஆனது... அதன் பின் அவளை விடுவித்தான்...

அவளும் வேகமாக விளகியவள் கொஞ்சம் தள்ளி நின்று கொண்டாள்.. பின் காருக்குள் வந்தவர்கள் எதுவும் பேசாமல் காரை ஓட்டினான்.. சிறிது தூரம் சென்றதும்

“தேங்க்ஷ்..” என்றான் அவளை பார்த்து

“எதுக்கு?? ... “ என்றாள்

“எல்லாத்துக்கும்.... “

“ஆமா.. உங்க வீராப்பு எல்லாம் என்கிட்ட மட்டும் தான்.. அவ கிட்ட பாய வேண்டியது தான “ என்று முனகினாள்.. சிறிது நேரம் ஏதோ யோசித்தவன் அவளிடம் திரும்பி

“ஆமா.. அது என்ன என்னை அவ கேவலமா பேசறப்போ அமைதியா இருந்த.. ஆனால் கடைசியில் அப்படி காளி அவதாரம் எடுத்த.. நானே பயந்துட்டேன்" என்று சிரித்தான் இயல்புக்கு திரும்பியவன்..

"பின்ன.. அத்தையை பத்தி அவள் அப்படி பேசினா சும்மா இருப்பேனா.. அதான் ரெண்டு வாங்கி விட்டுட்டேன்.. இது பட்டணமா இருக்கிறதால கையில அடிச்சதோட விட்டேன்... இதே எங்க ஊரா இருந்தது, அவ பேசின பேச்சுக்கு விளக்கமாத்தாலயே நாலு வாங்கு வாங்கியிருப்பேன் " என்றாள் இன்னும் அதே கோபத்துடன்...

கோபத்தில் அவள் முகம் இருகியதையும் மூக்கு விடைத்ததையும் ரசித்தவன்

"ஹ்ம்ம்ம்ம் உன் அத்தையை சொன்னா மட்டும் தான் உனக்கு கோவம் வருமா?? . அத்தை பையனை பத்தி தப்பா சொன்னா கோபம் வராதோ??.." என்று சிரித்தான் குறும்பாக

"ஆங்க்.. அத்தை பையனா?? "என்று புரியாமல் முழித்தாள்..

“ஹ்ம்ம் எங்கம்மா உன் அத்தைனா, அந்த அத்தையோட பையன் யாராம் .. “ என்று தன் புருவங்களை உயர்த்தினான்..

“ஹ்ம்ம் சொல்லு... முதலில் அவள் என்னை பற்றி மட்டமா பேசறப்போ ஏன் அமைதியா இருந்த?? “ என்றான் விடாமல்.. பாரதி என்ன சொல்வது என்று சிறிது தயங்கி பின் ..

"வந்து.. வந்து.. அந்த ஷ்வேதா என்னதான் உங்களை பேசினாலும் அவ உங்க மனைவி..ஒரு காலத்துல உங்களோட சேர்ந்து வாழ்ந்து இருக்கா... அவளுக்கு உங்களைப் பற்றி பேச உரிமை இருக்கு.. ஆனால் அத்தையை பற்றி பேச உரிமை இல்லை.. அதான்.. “ என்று அவள் இழுத்து முடிக்கு முன்னே

"ஏய்... அவ ஒன்னும் என் மனைவி இல்ல.. அது எப்பவோ முடிஞ்சு போன சேப்டர்.. இன்னொரு தரம் அவள என் மனைவினு சொல்லாத.. உடம்பெல்லாம் எரியுது" என்று உறுமினான்...

அதற்கு பிறகு அவள் பக்கமே அவன் திரும்ப வில்லை... ஏனோ பாரதி அந்த ஷ்வேதாவை தன் மனைவி என்று சொன்னது அவனுக்கு ஒரு மாதிரி இருந்தது...அவன் மனம் வலித்தது இப்படி ஒரு தப்பானவளை தன் மனைவியாக தேர்ந்தெடுத்து அவ கூட கொஞ்ச நாள் வாழ்ந்ததை நினைத்து.... அவன் கைகள் இறுக பல்லை கடித்துக் கொண்டான்...

பின் இருவரும் அமைதியாக வர, வீட்டை அடைந்தனர்.....

ஏற்கனவே தாமதமாகியதால் நேராக டைனிங் ஹாலுக்கு சென்று கை கழுவி அமர, மாரி தன் சின்ன ஐயாவிற்கு பிடித்ததாக செய்து வைத்திருந்த உணவை இருவருக்கும் பரிமாறினாள்... இருவரும் எதுவும் பேசாமல் சாப்பிட்டு பின் ஆதி எழுந்து தன் அறைக்கு சென்றான்..

பாரதி எல்லாம் எடுத்து வைத்து மாரிக்கு உதவி செய்து பின் பாலை காய்ச்சி குடித்து விட்டு ஆதிக்கு எடுத்துக்கொண்டு அவன் அறைக்கு சென்றாள்...

இரவு உடைக்கு மாறியவன் படுக்கையில் படுத்துக்கொண்டு தன் அலைபேசியில் எடுத்த அவன் இளவரசியை ரசித்து கொண்டிருந்தான்...அந்த குட்டியை பார்க்கையில் அவன் மனம் மிகவும் லேசானது...அந்த குட்டி தேவதையின் பிஞ்சு கரங்கள் தன் கன்னத்தை வருடுவது போல இருக்க அந்த சுகத்தை கண் மூடி அனுபவித்தான்

கதவு திறந்து இருக்க அவனின் அந்த கோலத்தை நின்று சிறிது நேரம் ரசித்தவள் பின் கதவை லேசாக தட்டிய பின் அவன் அருகில் சென்று அவன் முன்னே அந்த பாலை நீட்டினாள்...அதை கண்டு

“எனக்கு ஒன்னும் வேணாம்.. நீ எடுத்துகிட்டு போ.. “என்று முகத்தை திருப்பினான்..

அவளுக்கோ, யாராவது ஏதாவது சொன்னால் கோவிச்சுகிட்டு சிணுங்கும் சிறு பிள்ளை போல இருந்தது அவனின் செயல்...

“ஹ்ம்ம்ம் மீசை வச்ச குழந்தை போல.. “ என்று உள்ளுக்குள் சிரித்துகொண்டவள்

‘ஹ்ம்ம்ம் நீங்க இப்ப குடிக்கலைனா நான் அத்தைக்கு போன் பண்ணுவேன் .. “என்று மிரட்டினாள்...

“ஏய்... இப்ப எதுக்கு அவங்களை இழுக்கிற..” என்றான் பதறியவாறு...” இவ பாட்டுக்கு போன் பண்ணி ஏதாவது உளறி வைக்க போறா.. “ என்ற பதட்டத்துடன்

“ஹ்ம்ம்ம் அந்த பயம் இருக்கட்டும்.. “ என்று மனதுக்குள் நினைத்தவள்

“ஹா ஹா ஹா.. நான் இன்னும் இழுக்கவே இல்லையே... அதுக்குள்ள எதுக்கு அலறீங்க... நீங்க குடிக்கலைனா தான் நான் சொல்லுவேணாம்... நீங்க தான் சமத்தா குடிச்சிடுவீங்களாம்.. அதனால நான் சொல்ல மாட்டேனாம்.. “ என்று சிரித்தாள்...

அவளின் அந்த இழுத்து பேசியதையும் அவளின் சிரிப்பையும் கண்டவன் தனக்கு வந்த சிரிப்பை அடக்கி கொண்டு அவளை மேலும் சீண்ட எண்ணி

“ஏய்.. நீ என்ன மிரட்டினாலும் எனக்கு இன்னைக்கு இந்த பால் வேண்டாம்..நீயே எடுத்துகிட்டு போ “என்று சிடுசிடுத்தான் முகத்தை கடுமையாக வைத்துக்கொண்டு...

கடுமையாக வைத்திருப்பதாக நடித்துக்கொண்டு... அவனுக்கு தெரியும் அவன் முகத்தை கோபமாக காட்டினாள் அவள் அடங்கி விடுவாள் என்று...

அதே மாதிரி பாரதியும் அவன் கடுப்பான முகத்தை கண்டு

“போச்சுடா... அந்த சிடுமூஞ்சி அன்னியன் திரும்பவும் வந்திட்டானா.. இனிமேல் என் பேச்சு எடுபடாது... சிடுமூஞ்சி சிடுமூஞ்சி.. “என்று திட்டியவள் வயிற்றில் ஏதோ வித்தியாசமாக உணர்ந்து பயந்து போய்

ஆ வென்று அலறினாள் பாரதி...இதுவரை சிரித்து பேசியவள் திடீரென்று அலறவும்

"ஏய்.. என்னாச்சு?? "என்று பதறி வேகமாக எழுந்து அவள் அருகில் வந்தான் ஆதி ..

அவளோ என்னாச்சு என்று சொல்ல தெரியாமல் முழித்து கொண்டு நின்றாள்..

“ஏய்.. சொல்லித்தொல.. எதுக்கு இப்ப கத்தின.. “என்று அதட்டினான்

“வந்து.. சரியா தெரியலை... ஆனால் வயிற்றில என்னவோ மாதிரி இருந்தது..." என்று முனகினாள்

“ஹ்ம்ம் இப்ப எப்படி இருக்கு?? “ என்றான் கொஞ்சம் பயந்தவாறு

“இப்ப ஒன்னும் தெரியலை.. ஆனால் திடீர்னு என்னவோ போல் இருந்தது.." என்றாள்

அதை கேட்டதும் அவசரமாக தன் அலைபேசியை எடுத்து சுசிலாவை அழைத்தான்.. அவர் அதை ஏற்றதும்.

"மா... இவ என்னவோ மாதிரி இருக்குனு சொல்றா..என்னன்னு கேட்டா இந்த பட்டிகாட்டுக்கு சரியா சொல்லத் தெரியல... எனக்கு பயமா இருக்கு மா “ என்றான் பதற்றத்துடன்

"டேய் கண்ணா.. பயப்படாத.. எதுவும் இருக்காது.. போன பாரதிக்கிட்ட கொடு.. " என்றார்

அவன் போனை ஸ்பீக்கரில் போட்டு அவளிடம் நீட்டினான்...

"என்னாச்சு டா பாரதி?? " என்றார் கனிவாக

“ஹ்ம்ம் தெரியல டாக்டர்.. ஏதோ வித்தியாசமா இருந்தது...வயிற்றில ஏதோ ஓடற மாதிரி இருந்தது" என்றாள் அவளும் பயந்தவாறு

"ஹா ஹா ஹா.. அது ஒன்னும் இருக்காது பாரதி. என் பேத்தி உன் வயிற்றில விளையாட ஆரம்பிச்சிருக்காளா இருக்கும் " என்று சிரித்தார்..

"ஆங்.. விளையடறதா?? " என்று புரியாமல் முழித்தனர் இருவரும்

"ஆமா.. எவ்வளவு நேரம் அவளும் ஒரே இடத்துல உட்கார்ந்து இருப்பாளாம்?? .. நீ நிக்கறையா ஒரு இடத்துல.. அது மாதிரி அவளுக்கும் போர் அடிச்சா இனிமேல் வயிற்றுக்குள்ளயே விளையாடுவா... உன்னை நல்லா உதைக்க போறா பார் "என்று சிரித்தார் பெருமையாக...

"ஆங்க்...ஐயோ.. இந்த குட்டி ஒரு இடத்துல உட்கார்ந்து இருக்கப்பவே அப்படி படுத்தினா என்னை..இனிமேல் விளையாடுவாளா?? இதை எப்படி சமாளிப்பதாம்...பாரதி... இனிமேல் தான் உனக்கு சோதனையா இருக்கும் போல " என்று முனகினாள்..பின் சிறிது யோசித்தவள்

"இப்ப அந்த மாதிரி எதுவும் இல்லையே டாக்டர்.. " என்றாள் சந்தேகமாக ..

"ஹ்ம்ம்ம் அவளுக்கு எப்பல்லாம் தோணுதோ அப்ப எல்லாம் அவ ஆட்டத்தை ஆரம்பிப்பாள்..ஆமா.. எப்ப உனக்கு அது மாதிரி பீல் ஆனது ?? "

"இப்ப தான்.. கொஞ்ச நேரம் முன்னாடி"

"நீ என்ன பண்ணிகிட்டிருந்த??.."

"இவரோட சண்டை போட்டேன் .. “என்று சொல்ல வந்திட்டு பேசிக்கிட்டிருந்தேன் டாக்டர் என்று சமளித்தாள்..

"ஹே... கேடி.. உண்மையை சொல்லு.. பேசினியா.. இலலை என் பையன திட்டினியா??? " என்று அவளை மடக்கினார் சுசிலா

"ஹீ ஹீ ஹீ.. மனசுக்குள்ள திட்டிகிட்டு இருந்தேன் டாக்டர்... " என்று உண்மையை சொன்னாள்

"ஹா ஹா .. பார்த்தியா.. நீ என் புள்ளைய திட்டறது அவன் புள்ளைக்கு பொறுக்கலை.. அதான் உன்னை உதைக்க ஆரம்பிச்சுட்டா... " என்று சிரித்தார்..

"ஆங்க் .. "என்று முழித்தவள்

"இல்லை.. நீங்க ஏமாத்தறீங்க.. அப்படி எல்லாம் ஒன்னும் இல்லை" என்று சிணுங்கினாள்..

"ஹே வாயாடி... நான் ஒரு Gynagoligist டாக்டராக்கும்... 35 வருட சர்விஸ்.. எனக்கு தெரியாதா?? சரி .. டெஸ்ட் பண்ணலாமா.. எங்க நீ திரும்பவும் அவனை முன்ன மாதிரியே திட்டு பார்க்கலாம்... " என்றார் சிரித்துக்கொண்டே

“ஆங்.. அது எப்படி டாக்டர்.?? . ப்ளான் பண்ணி திட்டறது... அதெல்லாம் தானா வரனும்... “என்று சிரித்தாள் பாரதி...

“தானா உனக்கு திட்ட வர்ர வரைக்கும் நாங்க காத்திருக்க முடியாது.. இப்ப நீ திட்ட போறியா?? இல்லை என் பையன வச்சு உன்ன மிரட்ட சொல்லவா?? “ என்று செல்லமாக மிரட்டினார்...

“முருகா... இது என்ன கொடுமை?? ... எல்லாரும் தன் பையனை யாராவது திட்டினா அவங்க கிட்ட சண்டைக்கு போவாங்க... தன் பையனை திட்ட சொல்லி கெஞ்சுற முதல் அம்மா நீங்க தான் டாக்டர்... இதுக்கு ஏதாவது அவார்ட் இருக்கா உங்க பேரை ரெகமண்ட் பண்ண “ .என்று சிரித்தாள்..

“ஹே வாயாடி.. பேச்சை மாத்தாத... சீக்கிரம் திட்டு.. “ என்று அவசர படுத்தினார்

"ஐய... இந்த சிடுமூஞ்சியை என்ன சொல்லி திட்ட... சரியான சிடுமூஞ்சி அய்யனார்... "என்று ஏதோ சொல்லி திட்ட அவள் வயிற்றில் மீண்டும் அதே இனம் புரியாத உணர்வு...

ஆ என்று மீண்டும் கத்தினாள்..

"ஹா ஹா ஹா இப்ப தெரிஞ்சுதா?? என் பையனை திட்டின என் பேத்திக்கு தாங்க முடியாதாக்கும்...உன்னை நல்லா உதைக்க ஆரம்பிச்சிடுவா... ஜாக்கிரதை.. “என்று அவளுடன் விளையாண்டவர்

“அப்புறம் பாரதி... இதுக்காக பயந்துக்காத.. இது மாதிரி இனிமேல் அடிக்கடி ஆகும்.. இந்த மாதிரி மூவ்மென்ட் இருக்கானு வாட்ச் பண்ணு.. நீண்ட நேரம் எந்த மூவ்மென்ட் ம் இல்லைனா எனக்கு உடனே போன் பண்ணு... “ என்று ஒரு மருத்துவரக மீண்டும் சில அறிவுரைகளை கூறி போனை வைத்தார்..

சுசிலா சொன்னதை எல்லாம் கேட்டு கொண்டிருந்த ஆதியோ சந்தோஷத்தில் மிதந்தான்..பின் அவளை பார்த்து

“பார்த்தியா பட்டிக்காடு.. என் பிரின்ஸஸ் எனக்கு சப்போர்ட் பண்ண வந்தாச்சு.. இனிமேல் உன்னால் ஒண்ணும் பண்ண முடியாது.. “ என்று சிரித்தவாறு தன் காலரை துக்கி விட்டுக்கொண்டான் பெருமையாக ...

"ம்ஹூம்... ரொம்பத்தான்.. " என்று தன் முகத்தை நொடித்தாள் பாரதி...

அவன் பார்வையோ அவள் வயிற்றுக்கு தாவியது... அவள் வயிற்றை தொட்டு பார்க்க, தன் குழந்தை அவள் வயிற்றுக்குள் அசைவதை தன் கையால் உணர்ந்து மகிழ அவன் கைகள் துடித்தன..

“ஆனால் எப்படி கேட்பதாம் அவளிடம்?? ... " என்று ஏக்கத்துடன் அவளை பார்த்துக் கொண்டே அவளுக்கு குட் நைட் சொல்லி கதவை மூடி படுக்கையில் விழுந்தான்...

பாரதிக்கோ அவனுடைய பார்வையின் அர்த்தம் புரியவில்லை.. எதுக்கு என் வயிற்றை பார்த்தான்.. "என்று யோசித்துக் கொண்டே தன் அறைக்கு சென்றாள்....

அவளுக்கு தெரியவில்லை அவனின் உணர்ச்சிகள்....பாரதி தன்னை ஒரு வாடகைத் தாயாக எண்ணி இருப்பதால் அவள் வயிற்றில் வளரும் அந்த குழந்தைக்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று இருந்தாள்..

மற்ற தாயை போல தன் குழந்தை உருவானதில் இருந்தே, அதுவும் வயிறு மேடிட ஆரம்பித்ததில் இருந்து அதை தொட்டு தடவி மகிழவில்லை.. அது மாதிரி ஆகக்கூடாது என்று தான் முதலிலயே தன் மனதை கட்டு படுத்திக் கொண்டாள்...

அதுவே வளர்ந்து அவள் அந்த குழந்தையை சுமக்கும் ஒரு வாடகைத் தாயாக மட்டுமே நினைத்தாள்.. அப்பப்ப அந்த குட்டியிடம் பேசும் ஒரு ப்ரெண்ட் போல மட்டுமே தள்ளி நின்றாள்...

இல்லை என்றால் பின்னாலில் அந்த குழந்தையை பிரிய மனம் வராது என்று தோ
ன்றவே முதிலில் இருந்தே அவள் தள்ளி நின்றாள்...

ஒரு தாய்க்கு தோன்றும் அதே உணர்ச்சிகள் அந்த குழந்தை உருவாக காரணமான தந்தைக்கும் இருக்கும் ... அவனுக்கும் தன் குழந்தை வயிற்றில் வளரும் பொழுதே அதை தொட்டு தடவி பார்த்து பூரித்து பெருமை கொள்ளும் உணர்வு இருக்கும் என்று புரியாமல் போனது..

அதனாலயே தன் குழந்தையை தொட்டு பார்க்க தவிக்கும் ஆதியின் உணர்ச்சிகளை அவளால் புரிந்து கொள்ள முடியவில்லை...அப்பப்ப அவன் பார்வை தன்னிடம் வருவதற்கான காரணம் தெரியாமல் குழப்பத்துடன் இருந்தாள்...

Comments

  1. மகள் இப்பவே இப்படியா

    ReplyDelete
  2. Indha ponkozandhele ippdi dhan appanungala vitukudukadhunga

    ReplyDelete

Post a Comment

Popular Posts

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே

என் மடியில் பூத்த மலரே

அனைவருக்கும் வணக்கம்!!!

காதோடுதான் நான் பாடுவேன்

நிலவே என்னிடம் நெருங்காதே!!

வராமல் வந்த தேவதை

பூங்கதவே தாழ் திறவாய்

தவமின்றி கிடைத்த வரமே

தாழம்பூவே வாசம் வீசு!!!

அழகான ராட்சசியே!!!