என் மடியில் பூத்த மலரே-26



அத்தியாயம்-26 

றுநாள் காலை எழுந்தவன் வழக்கம் போல காலை உடற்பயிற்சிகளை செய்துவிட்டு அலுவலகம் செல்ல கிளம்பிக் கொண்டிருந்தான்... பார்மல் பேன்ட் ம் முழுக்கை சர்ட் ஐ இன் பண்ணி கையில் இருந்த பட்டனை போட்டு பின் தன் முடியை சீவினான்.. அடர்த்தியான முன்னால் இருந்த முடி அவனுக்கு அடங்காமல் ஆட அதை அடக்கி சீவிக் கொண்டிருந்தான் ஆதி...

அவன் தலை சீவும் அழகையே அறைக்கு வெளியில் நின்று ரசித்துக் கொண்டிருந்தாள் பாரதி... அவன் முன்னால் இருந்த அடர்த்தியான அந்த கற்றை முடியை கலைத்து விட்டு அவனை சீண்ட துடித்தன அவள் கைகள்... தன் எண்ணத்திற்கு ஒரு கொட்டு வைத்து அடக்கியவள் மெதுவாக கதவை தட்டினாள்..

“யெஸ்.. கம் இன்... “ என்றான் கம்பீரமாக வழக்கமான் அலுவலக நினைப்பில்..

மெதுவாக தயங்கியவாறு அவன் அறை உள்ளே வந்தாள் பாரதி..அவளை அந்நேரத்தில் அவன் அறையில் கண்டதும் ஆச்சர்யம் அவனுக்கு... பாரதி எப்பவும் அவன் அறைக்குள் வந்ததில்லை.. இரவு பால் கொடுக்க மட்டுமே சில நேரம் வந்திருக்கிறாள்...

இன்று அவளே அவனை தேடி வரவும் ஆச்சர்யமாக பார்த்தான்.. அதோடு அப்பொழுது தான் குளித்திருந்த புது மலராக நின்றிருந்தவளை காண்கையில் அவன் மனம் எகிறி குதிததது....அவள் மீதிருந்த சோப்பின் வாசம் அவனை இழுக்க

“இவ வேற.. காலங்காத்தால இப்படி கிட்ட வந்து இம்ஷை பண்றாளே... “ என்று புலம்பிகொண்டே

“ஏய்.. என்ன வேணும்? எதுக்கு என்னையே பார்த்துகிட்டு நிக்கற?? .. “ என்று அதட்டினான்...

அப்பொழுது தான் தன் நினைவுக்கு வந்தவள்

“ஐயோ முருகா... நான் பாட்டுக்கு ஏதோ ஒரு தைரியத்துல இவன் ரூமுக்குள்ள வந்திட்டேன்... இப்ப எப்படி சொல்வதாம் என் மனதில் இருப்பதை?? “ என்று மனதுக்குள் புலம்பியபடி பேந்த முழித்துக் கொண்டிருந்தாள்...

அவள் ஒன்றும் சொல்லாமல் முழித்துக் கொண்டு நிற்பதை கண்டவன்

“ஏய்.. சீக்கிரம் சொல்லு.. எனக்கு நேரம் ஆகுது.. “ என்று அவசரப் படுத்தினான்...

“வந்து.. வந்து.. “ என்று இழுத்தாள்..

அவன் அறைக்குள் வருவதற்கு முன்பு இருந்த தைரியம் போய் வார்த்தை வராமல் தந்தி அடித்தது அவளுக்கு

“அதான் வந்திட்ட இல்ல.. அப்புறம் என்ன ?? சொல்லித்தொல.. எவ்வளவு நேரம் நான் உன்னையே பார்த்துகிட்டு நிப்பதாம்..என்னை என்ன உன்னை மாதிரி வெட்டியா இருப்பவன் னு நினைச்சிட்டியா... எனக்கு நிறைய வேலை இருக்கு... சீக்கிரம் சொல்லு “ என்று சிடுசிடுத்தான்...

“ஆமா.. பெரிய ராஜகுமாரன்.. இவனுக்கு நிக்க நேரமில்லையாம்... “ என்று முனகியவள்

“வந்து.. நீங்க ஏன் அந்த ஷ்வேதாவை பார்த்து பயப்படறீக்க?? .. “ என்று மெல்ல இழுத்தாள் ஒரு வழியாக தைரியத்தை வரவழைத்துகொண்டு ..

ஷ்வேதா என்ற பெயரை கேட்டதும் அவன் உடல் விரைத்தது..கைகள் இறுகின

கண்கள் சிவப்பேற

”ஏய்.. அவளை பற்றி பேசாத.. “ என்று கர்ஜித்தான்..

“ஹ்ம்ம்ம் இதுதான்.. இந்த கோபம் தான்.. அவளுக்காக நீங்க ஏன் கோப பட்டு உங்களை வருத்திக்கணும்?? நீங்க தான் அவள் ஒரு முடிஞ்சு போன சேப்டர் னு சொன்னீங்க.. அப்படீனா அவள பத்தி பேசறப்போ உங்களுக்கு எதுக்கு டென்ஷன் ஆகணும்?? அவள் யாரோ னு தள்ளி வச்சு பாருங்க.. உங்களுக்குள் இருக்கிற அந்த நெருப்பை அனைத்து அவளை முழுவதுமா தூக்கி எறிங்க.. அப்பதான் நீங்க நிம்மதியா இருக்க முடியும்.. “ என்று நீளமாக பேசி முடித்தாள்.. பின்

“ஐயோ!! நான் பாட்டுக்கு ஏதோ உளறிட்டேனே... இப்ப என்ன சொல்லப் போறானோ?? ஒருவேளை அடிப்பானோ?? முருகா.. நீதான் என்னை காப்பாற்றனும்... “ என்று அந்த முருகனை துணைக்கு கூப்பிட்டும் பயந்தபடியே அவனை பார்த்தாள்..

அவனோ அவள் சொன்னதையே பொறுமையாக கேட்டிருந்தான்..

”ஹ்ம்ம்ம் நீ சொல்றது கரெக்ட் தான். நானும் எத்தனையோ முறை முயற்சி செய்திருக்கேன்.. ஆனால் என்னால முடியல அவளை தள்ளி நிறுத்த... அவளை நினைக்கும் பொழுது எல்லாம் உடம்பு எரியுது...என்னையே நான் மறந்துடறேன்... ” என்றான் இன்னும் அதே கோபத்துடன்...

அவன் தன் மேல் கோபப்படாமல் இப்படி பொறுமையாக பேசவே ஆச்சர்யமாகி போனாள் பாரதி.... பின் இன்னும் கொஞ்சம் தைரியம் வர

“சரி.. இனிமேல் அவளை நினைக்கிறப்போ எல்லாம் இதை நினைச்சுக்கங்க.. “ என்று அவன் எதிர்பாராத நேரத்தில் எக்கி அவன் கன்னத்தில் முத்தமிட்டாள்..

“அவளை நினைக்கிறப்போ எல்லாம் எங்களை நினைச்சுக்கங்க.. நாங்க இருக்கோம் உங்களுக்காக..” என்றவள் நாக்கை கடித்துக்கொண்டு

“ஐ மீன் உங்க பிரின்ஸஸ் இருக்கா... அவ அப்பா கஷ்டப்படறதை கண்டு தாங்க முடியலையாம் உங்க பிரின்ஸஸ் க்கு .... அவளோட மருந்துதான் இது.. “என்று கன்னம் குழிய சிரித்தாள் பாரதி...

அவளின் இந்த திடீர் செய்கையால் உறைந்து நின்றான் சில விநாடிகள்.. அவள் தந்த முத்தம் தித்திக்க சில்லென்று பனி மழை பெய்தது அவன் உள்ளே..

அந்த சுகத்தை கண் மூடி அனுபவித்தவன்

“ஏய்.. “ என்று அவன் கையை எட்டி பிடிக்க முயன்றான்..அதற்குள் கீழ குனிந்து அவன் கைக்கு எட்டாமல் நழுவி ஓடினாள் பாரதி..

“ஏய்.. பார்த்து.. மெதுவா நட டி.. என் பிரின்ஸஸ்க்கு ஏதாவது ஆகிடப் போகுது.. “ என்று கத்தினான்.. அதற்குள் அவள் மறைந்து தன் அறைக்குள் புகுந்து கொண்டாள்..

தன் அறைக்குள் வந்தவளுக்கு இன்னும் படபடப்பாக இருந்தது...

கடந்த இரண்டு நாட்களாக அந்த ஷ்வேதாவால் ஆதி பட்ட கஷ்டத்தை கண்டவள் அவனை எப்படியாவது அவளுடைய பாதிப்பில் இருந்து வெளியில் கொண்டு வரணும்.. அவன் குழந்தையை காட்டியாவது அவனை அவளை மறக்க வைக்கனும் என்று தான் அவனுடன் பேசுவதற்காக அவன் அறைக்கு சென்றாள்..

ஆனால் அவளே எதிர்பாரமல் திடீரென்று அவன் கன்னத்தில் முத்தமிட்ட பிறகே புரிந்தது அவள் என்ன செய்து வைத்திருக்கிறாள் என்று..

“ஐயோ!! போச்சு.. மானம் போச்சு... என்னை பற்றி என்ன நினைப்பான்?? ... நான் பாட்டுக்கு லூசுதனமா இப்படி பண்ணி வச்சிருக்கேனே..இது நான் போட்ட ப்ளானிலயே இல்லையே.. வெறும் பேச மட்டும் தானெ நினைத்து போனேன்.. அப்புறம் எப்படி எனக்கு அப்படி செய்ய வந்தது?? “என்று கட்டிலில் அமர்ந்து தன் கையால் தன் முகத்தை மூடிக் கொண்டாள்...

“ஹா ஹா ஹா... இதெல்லாம் என் ஆட்டமாக்கும்.... பாவம்... நீ என்ன செய்வ பாரதி... “ என்று சிரித்தான் அந்த வேலன்..

அவள் கொடுத்த முத்தத்தையும் அதில் அவன் கிறங்கி நின்றதையும் நினைக்கும் பொழுது அவளின் கன்னம் சிவந்தது....

ஆதியோ அவளின் அந்த திடீர் முத்தத்தால் மயங்கி நின்றான்... பின் தன் நிலைக்கு வந்தவன் அவளின் அந்த செய்கையை ரசித்துகொண்டே கிளம்பி கீழ வந்தவன் டைனிங் டேபிலுக்கு சென்றான்...

மாரி அவனுக்காக எடுத்து வைத்து கொண்டிருந்தாள்.. அவன் கண்களோ பாரதியை தேடியது... ஆனால் அவளை காணவில்லை..

ஏதோ வேகத்தில் முத்தமிட்டவள் மீண்டும் அவன் முகத்தை பார்க்கும் தைரியம் இல்லாததால் தன் அறையிலயே ஒளிந்து கொண்டாள்..

அதை புரிந்துகொண்டவன் மாரியிடம்

“மாரி.. நீங்க போய் அவளை வரச் சொல்லுங்க..” என்றான்..

மாரியும் சென்று பாரதியை அனுப்ப வேறு வழி இல்லாமல் அங்கு வந்து அவனுக்கு எல்லாம் எடுத்து வைத்தாள் தலையை குனிந்தவாறு..

“ஏய்.. உனக்கு எத்தனை தரம் சொல்றது?? நான் சாப்பிடறப்போ நீ தான் எடுத்து வைக்கனும் என்று.. “ என்று அதட்டினான் அவளை பார்த்து

“ஹ்ம்ம்.” என்று தலையை ஆட்டியவள் மெல்ல நிமிர்ந்து அவனை பார்த்தாள்

அவன் எதுவும் நடக்காத மாதிரி சாப்பிட்டுக்கொண்டிருந்தான்..

அதை கண்டு “ஆங்க்” என்று முழித்தாள்..

“அப்ப நான் கண்டது கனவா?? இல்லையே நான் அவன் ரூமுக்குள்ள போனேனே... நான் முத்தமிட்ட பிறகு அவன் கூட என் கையை பிடிக்க வந்தானே.. இப்ப எப்படி ஒன்னுமே நடக்காத மாதிரி இப்படி இயல்பா இருக்கான்??... அது கனவா இல்லை நனவா?? “ என்று குழம்பிக் கொண்டிருந்தாள்...

அவளின் அந்த குழம்பிய முகத்தை ஓரக் கண்ணால் கண்டவன்

“இப்படியே குழம்பிகிட்டே இரு டீ “ என்று உள்ளுக்குள் சிரித்துக் கொண்டான்..

பின் சாப்பிட்டு முடித்ததும் அலுவலகம் கிளம்பி சென்றான்.. பாரதியும் வாசல் வரை வந்தாள் அவனுடனே.. பின் இருவரும் காரை அடைந்தனர்.. என்ன தோண்றியதோ இதுவரை அமைதியாக இருந்தவன் பாரதியை பார்த்து

“நான் இன்று மாலை அப்படியே அந்த வீட்டுக்கு போய்டுவேன்.. நீ ஜாக்கிரதையா இரு.. எதுனாலும் போன் பண்ணு" என்று மெல்ல முனகினான்..

"ஹ்ம்ம்ம்.." என்று தலையை ஆட்டினாள் பாரதி... அவளுக்கும் ஏனொ அவனை பிரிவது கஷ்டமாக இருந்தது..ஒவ்வொரு முறையும் அவன் வரும்பொழுதும் இதே மாதிரிதான் துவண்டு விடுவது மனதுக்கு கஷ்டமாக இருந்தது...

என்னதான் தன் மனதை கட்டுபடுத்தி வைத்திருந்தாலும் அவன் கிளம்பும் அந்த நொடியில் அவள் மனம் அவள் பேச்சை கேட்பதில்லை... அவளையும் மீறி அவளின் ஏக்கம் அவள் முகத்தில் தெரிந்து விடும்...

அதே மாதிரி இன்றும் அவளுக்கு கஷ்டமாக இருந்தது... ஆதிக்கும் அதே நிலைதான்.. அவளை பார்க்காத வரை தெரியாத கஷ்டம் அவளை கண்ட பிறகு பிரிந்து செல்வது மனதை பிசையும்...

இருவரும் அமைதியாக ஒருவரை ஒருவர் பார்த்த படி இருந்தனர் சில விநாடிகள்...

அவன் பார்வை மீண்டும் அவள் வயிற்றை தொட்டது....அவள் வயிற்றை தொட்டு பார்க்க துடித்தன அவன் கைகள்

காரின் கதவை திறந்தவன் உள்ளே செல்லாமல் சுற்றிலும் பார்த்து விட்டு

திடீரென்று குனிந்து அவளின் வயிற்றின் மேல மெல்ல முத்தமிட்டான்...பின்

“இது என் பிரின்ஸஸ் எனக்கு கொடுத்த மருந்துக்கான பரிசு..தேங்க்ஷ் பார் தட்... பை பிரின்ஸஸ்... " என்று குறும்பாக சிரித்தவாறு வேகமாக காரின் உள்ளே சென்று காரை கிளப்பி சென்றான்..சிறிது தூரம் சென்றதும் வெளியில் தலையை நீட்டி

“பை.. பட்டிக்காடு.. டேக் கேர் மை பிரின்ஸஸ்.. “ என்று கை அசைத்து சென்றான்...

பாரதி இன்னும் அதிர்ச்சியில் இருந்து மீளாமல் அவன் சென்ற காரையே பார்த்து கொண்டிருந்தாள்... அவளின் அந்த திகைத்த சிவந்த முகத்தை கண்ணாடி வழியாக கண்டவன் உல்லாசமாக விசில் அடித்தபடி காரை ஓட்டினான்...

அவனின் அந்த திடீர் முத்தம் அவளுக்குள் பல மாற்றங்களை ஏற்படுத்தியது... விண்ணில் பறப்பது போல இருந்தது..அந்த நிலையை சிறிது நேரம் அனுபவித்தவளுக்கு அப்பொழுது தான் உறைத்தது... “அவன் கொடுத்த முத்தம் அவன் குழந்தைக்கு.. தனக்கு இல்லை “ என்று

“நான் ஒரு வாடகைத் தாய் மட்டுமே.. இந்த குழந்தையை சுமப்பது மட்டுமே என் கடமை.. அதற்கு மேல் எதையும் எதிர்பார்க்க கூடாது” என்று மீண்டும் மீண்டும் சொல்லி கொண்டவள் ஒரு வழியாக தன் மனதை கட்டு படுத்திக்கொண்டாள்....

பின் நேராக தன் அறைக்கு சென்று முகத்தில் நீரை அடித்து கழுவி அந்த முருகனின் திருநீற்றை எடுத்து வைத்துக் கொண்டு கட்டிலில் அமர்ந்து தன் பாட புத்தகத்தை படிக்க ஆரம்பித்தாள்....

இரண்டு நாள் கழித்து இரவு தன் இரவு உணவை முடித்தவள் கட்டிலில் அமர்ந்து படித்துக் கொண்டிருந்தாள் பாரதி... ஆனால் அவள் மனமோ ஆதியிடம் சென்று நின்றது...

அவனின் அருகாமையை தேடியது அவள் மனம்... லேசாக மேடிட்டிருந்த அவள் வயிற்றின் மேல் கை வத்துக்கொண்டு

“ஹே .. குட்டி... என்ன உங்க அப்பா மாசம் ஒரு முறை தான் உன்னை பார்ப்பாரா?? மற்ற நாளெல்லாம் உன் நினைப்பே வராதோ?? ரொம்ப மோசம்.. “என்று புலம்பியவள் அப்பொழுதுதான் அவள் வயிற்றில் அன்று இருந்ததை போல மூவ்மென்ட் இன்று இதுவரையுமே இல்லையே என்று உணர்ந்தாள்..

சுசிலா வேறு அவளை குழந்தையின் அசைவை கவனித்து நீண்ட நேரம் எந்த அசைவும் இல்லைனா போன் பண்ண சொன்னது நினைவு வந்தது...

“ஐயோ!! இதை எப்படி மறந்தேன்?? ... இதுவரை அந்த மாதிரி எதுவும் வித்தியாசமா தெரியலையே... முருகா... அந்த குட்டிக்கு எதுவும் ஆகியிருக்க கூடாது.. “ என்று அவசரமாக வேண்டிக்கொண்டவள் தன் அலைபேசியை தேட ஆரம்பித்தாள்..

அதே நேரம் அதுவும் அடிக்கவும் வேகமாக சென்று எடுத்து பார்த்தாள்.. புது எண்ணாக இருக்கவும் சிறிது நேரம் யோசித்தாள்..

“யாராக இருக்கும்??.. ஜானகி அத்தை மற்றும் சுசிலா டாக்டர் ரை தவிர வேற யாருக்கும் இந்த நம்பர் தெரியாதே... யாரா இருக்கும்?? ” என்று யோசித்து கொண்டே அதன் ஓசை நிற்கும் பொழுதே அதை அட்டென்ட் பண்ணினாள்.

"ஹலோ.. " என்றாள் பயந்தவாறு.. ஒரு வேலை தன் வீட்டில் யாராவது இந்த நம்பரை கண்டு பிடித்து கூப்பிட்டார்களோ என்று

"ஏய்... போனை எடுக்க இவ்வளவு நேரமா?? ... " என்று எரிந்து விழுந்தான் ஆதி மறுமுனையில்...

அவனின் குரலை கேட்டதும் துள்ளி குதித்தாள் பாரதி.. கொஞ்ச நேரம் முன்னாடிதான் அவனை பார்க்கனும் அவன் குரலை கேட்கனும் போல இருந்தது அவளுக்கு.. அதே மாதிரி அவன் போன் பண்ணவும் மகிழ்ந்து போனாள்... அவள் எதுவும் பேசாமல் இருப்பதை கண்டவன்

“ஏய்.. லைன் ல இருக்கியா.. இல்ல தூங்கிட்டியா?? என்று மீண்டும் அதட்டினான்..

“ஹ்ம்ம்ம் இருக்கேன் சொல்லுங்க... “ என்று முனகினாள்

“சரி.. என் பிரின்ஸஸ் சாப்பிட்டாளா?? " என்றான்.. அதை கேட்டு

"ஆங்... " என்று முழித்தாள்..

“குழந்தை இப்ப எப்படி சாப்பிடும்?? "என்று யோசித்தாள்..அதை புரிந்து கொண்டவன்

“ஏய். பட்டிக்காடு...இது கூட புரியலை?? நீ சாப்பிட்டா தான் என் பிரின்ஸஸ் சாப்பிடுவா.. நீ சாப்பிட்டியா இல்லையா" என்றான் நக்கலாக...

“ஆமா... நீ சாப்பிட்டியானு நேரடியா கேட்க வேண்டியது தானா.. அது என்ன அவன் இளவரசி சாப்பிட்டாளா னு சுத்தி வர்ரது??” என்று முனகியவள்

"ஹ்ம்ம்ம் நான் சாப்பிட்டேன்... அத்தை நல்லா இருக்காங்களா?? .. இந்த நேரத்துல போன் பண்ணி இருக்கீங்க" என்றாள் கொஞ்சம் பயந்தவாறு

அப்பொழுதுதான் தான் இதுதான் முதல் முறை அவளை அழைப்பது என்று புரிந்தது அவனுக்கு ... அவள் பயம் புரிய

“ஹ்ம்ம் அம்மா நல்லா இருக்காங்க...நீ பயந்துக்காத..

"சுசிலாம்மா என்ன சொன்னாங்க.. இனிமேல் என் பிரின்ஸஸ் நான் சொல்றதை எல்லாம் கேட்பாளாம்... இனிமேல் தினமும் நான் போன் பண்ணி அவகிட்ட பேசுவேன்.. என்ன புரிஞ்சுதா?? " என்று அதட்டினான்.

“சரி.. இப்ப போன ஸ்பீக்கரில் போட்டு என் பிரின்ஸஸ் கிட்ட வை. இல்லை கொஞ்ச தூரம் தள்ளியே வை.. அவளுக்கு ரேடியேசன் எதுவும் ஆகும்” என்றான் சிரித்தவாறு... அதை கேட்ட பாரதி

“இவன் அலப்பறை தாங்கல டா சாமி.. “ என்று திட்டி கொண்டே போனை ஸ்பீக்கரில் போட்டு அவள் வயிற்றின் அருகில் கொஞ்சம் தள்ளி வைத்தாள்..

“ஹ்ம்ம்ம் வச்சுட்டேன்.. நீங்க உங்க இளவரசி கிட்ட பேசுங்க .. “என்று முறைத்தாள்

“ஹாய் பிரின்ஸஸ்.. நான் உன் டாட் பேசறேன்.. கேட்குதா?? “ என்றான் குரலில் ஒருவித உற்சாகம் மற்றும் பெருமையுடன்..

அதை கேட்டதும் அவனின் இளவரசி குதிக்க ஆரம்பித்தாள்.. இதுவரை எந்த மூவ்மென்ட் ம் இல்லாமல் இருந்து பின் திடீரென்ரு வயிற்றுக்குள் அசையவும் ஆ வென்று அலறினாள் பாரதி..

“ஏய் என்னாசுசு.??? “ என்று பதறினான் ஆதி மறுமுனையில்..

“ஹ்ம்ம்ம் உங்க குரலை கேட்டதும் துள்ளி குதிக்கிறா உங்க பொண்ணு... இதுவரை எந்த சத்தமும் இல்லாமல் அமைதியா இருந்தா... நான் கூட டாக்டர் க்கு போன் பண்ணனும்னு நினைச்சிருந்தேன்... உங்க குரலை கேட்டதும் எழுந்து ஆட ஆரம்பிச்சிட்டா போல ” என்று சிரித்தாள்

“ரியலீ!!! “ என்று அவன் துள்ளி குதித்தான் உற்சாகத்தில்

அதுக்கப்புறம் அவன் இளவரசியை கொஞ்ச ஆரம்பித்தான்... முதலில் பாரதிக்கு கேட்கும் பொழுது கடுப்பாக இருந்தாலும் பின் அவளும் அவன் கொஞ்சலை எல்லாம் கேட்டு ரசிக்க ஆரம்பித்தாள்...

அன்று அலுவலகத்தில் நடந்ததை எல்லாம் விவரித்தான் அவன் மகளுக்கு.....ஏனொ அவளும் அதை எல்லாம் கேட்பதாகவே தோன்றியது அவனுக்கு...சிறிது நேரம் நேராக அமர்ந்து இருந்தவள் அவன் பேச்சை முடிக்கிற மாதிரி தெரியாததால் பின்னால் நகர்ந்து முதுகின் பின்னால் ஒரு தலையனையை வைத்துக்ஒண்டு கட்டிலில் நன்றாக சாய்ந்துகொண்டு அவன் சொல்லும் கதைகளை ரசித்துக் கொண்டிருந்தாள்...

அவளுக்கு என்னவோ அவன் அருகில் அமர்ந்து அவன் மார்பில் சாய்ந்துகொண்டு அவன் கூறும் கதைகளை கேட்பதை போலவே சுகமாக இருந்தது...

தினமும் இதுவே தொடர்ந்தது.. இரவு படுக்கைக்கு வருபவன் ஒரு மணி நேரம் தன் பிரின்ஸஸை கொஞ்சி விட்டு அன்றைய கதைகளை கூறிய பிறகே தான் தூங்க செல்வான்...

பாரதியும் இந்த நிமிடத்தை ஆவலுடன் எதிர்பார்க்க ஆரம்பித்தாள்...

ஆறாவது மாதம்.

அன்று இரவு வழக்கம்போல அவன் பிரின்ஸஸ் உடன் பேசி முடித்து தூங்க சென்றவனுக்கு தீடீரென்று ஏதோ கெட்ட கனவு வந்தது... திடுக்கிட்டு எழுந்து அமர்ந்தான்.. அவன் உடல் வேர்த்து கொட்டியது.. உள்ளுணர்வு உறுத்தியது.ஏதோ தப்பா இருப்பதை போல இருந்தது...

வேகமாக கீழ இறங்கி வந்தவன் ஜானகியின் அறைக்கு சென்று அவரை பார்த்தான்.. அவர் நன்றாக உறங்கி கொண்டிருக்கவும் சுசிலாவுக்கு ஏதோ என்று அவருக்கு போன் பண்ணினான்..

அவன் போனை எடுத்தவர் நன்றாக பேசவும் நிம்மதியுடன் போனை வைத்தான்.. திடீரென்று அவன் குழந்தையின் ஞாபகம் வந்தது.. உடனே பாரதிக்கு போன் பண்ணினான்.. அது ஸ்விட்ச் ஆப் ஆகி இருந்தது..

மாரிக்கு போன் பண்ண அவளும் அதை எடுக்கவில்லை.. முத்து மற்றும் செக்யூரிட்டிக்கு போன் பண்ண, எல்லாமே கொஞ்ச நேரம் அடித்தும் சிலரின் எண் ஆப் ஆகியும் இருந்தது...

“சே!! என்ன யாருமே பொறுப்பா இருக்க மாட்டேங்கிறாங்க?? எல்லார் போனும் சொல்லி வைத்தார் போல இருக்கு... என்ன செய்வது..” என்று குழம்பியவன் அடுத்த நொடி தன் காரை எடுத்து கெஸ்ட் ஹவுஸ்க்கு விரட்டினான்....

அரை மணி நேரத்தில் அதை அடைந்தவன் வேகமாக உள்ளே சென்று கதவை திறந்து மாடி படிக்கு அருகில் வரவும் பாரதி அப்பொழுது தான் தூக்க கலக்கத்தில் கண்ணை மூடிக் கொண்டே மாடிப்படியின் அருகில் வருவது தெரிந்தது...

“ஏய்... “என்று கத்திக்கொண்டே இரண்டு இரண்டு படிகளாக தாவி மேலெ செல்லவும் அவள் கால் இடறி கீழ சரியவும் சரியாக இருந்தது.. அப்படியே அவளை பிடித்துக் கொண்டான் கீழ விழாமல்...

பாரதிக்கு தெளிவு வந்ததும் திக் என்றது... அவனை கெட்டியாக பிடித்துக் கொண்டாள்....

மெல்ல சுதாரித்து அவளை மேலெ நன்றாக நிற்க வைத்ததும் ஓங்கி அவள் கன்னத்தில் அறைந்தான் ஆதி...

“என்ன நினைச்சிகிட்டு இருக்க?? ... நீ பாட்டுக்கு இந்நேரத்துல கீழ இறங்கற. அதுவும் தூங்கி கிட்டே” என்று உருமினான்...

அவன் அடித்த அடியில் தூக்கம் போன இடம் தெரியவில்லை அவளுக்கு...

“ஆங்க். என்று கன்னத்தில் கை வைத்து நின்றாள்..

பின் அவளை பிடித்து இழுத்துக்கொண்டு அவள் அறைக்கு சென்றவன்

“சொல்லு... எதுக்கு இப்ப வெளில வந்த?” என்று கத்தினான் அதே கோபத்தில்

“அது.... வந்து... தண்ணி இல்ல.. அதான் கிச்சனுக்கு வந்தேன்... “ என்று முனகினாள்

“ஆமா மாரி எங்க??.. உன் கூடத்தான இருக்க சொன்னேன்?? “

“அது .. வந்து... அவங்க பேரனுக்கு உடம்பு சரி இல்லைனு அனுப்பி வச்சுட்டேன்”.. என்று அவள் முடிக்கு முன்னே

அவளை அடிக்க மீண்டும் கை ஒங்கவும் அவள் கண்ணை இறுக்கி மூடிக்கொண்டாள்...

ஓங்கிய கை தானாக இறங்கியது அவளின் அந்த பயந்த முகத்தை கண்டு..

“அறிவு இருக்கா?? .நீ இப்படி இருக்கும்பொழுது உனக்கு துணையாக இருக்கத்தான அவங்க இருக்காங்க.. அவங்கள போய் நீ அனுப்பிட்டு...இப்ப ஏதாவது ஆகியிருந்தால்??.. “

என்றவனின் உடல் விரைத்தது.. கை முஷ்டிகள் இறுகின..

“ம்ம்ம்... நீ அடங்க மாட்ட.... இதுக்கு ஒரு முடிவு கட்டறேன் .. நீ இப்ப படு .. நான் போய் தண்ணி எடுத்துட்டு வர்றேன்” என்று அவளை படுக்கையில் விட்டு கீழ சென்றான்.




பாரதிக்கும் இன்னும் உடல் நடுங்கியது.. அவன் சொன்ன மாதிரி தவறி விழுந்து இருந்தால் என்னாகியிருக்கும்?? ... எனக்கு ஒன்னுன்னா பரவாயில்லை.. ஆனால் இந்த குட்டி... “ என்று தன் வயிற்றில் கை வைத்து பார்த்துக் கொண்டாள்....

கீழ சென்றவன் தண்ணி எடுத்துக்கொண்டு மீண்டும் அதே வேகத்தில் தாவி வந்தான்... அவளிடம் கொடுத்து குடிக்க வைத்தான்..

“இன்னும் ஏதாவது வேணுமா?? “ என்றான்

வேண்டாம் என்று தலை ஆட்டவும் அவள் கன்னத்தை பார்த்தான்.. அது சிவந்து வீங்கி இருந்தது...

உள்ளுக்குள் சாரி சொன்னவன்

“பேபிக்கு ஒன்னும் இல்லையே... மூவ்மென்ட் தெரியுதா ?? “ என்றான் பயந்தவாறு..

“இப்ப எல்லாம் குதிக்க மாட்டா.. தூங்கிட்டு இருப்பா... வேணும்னா நீங்க கிட்ட வந்து பேசுங்க செக் பண்ணலாம்.. “ என்று முனகினாள்..

அவளின் அருகில் வந்தவன் அவளின் வயிற்றின் அருகில் குனிந்து

“ஹாய் பிரின்ஸஸ்... “ என்றான் குரலில் வரவழைத்த உற்சாகத்துடன்

அவ்வளவுதான்.. அவன் குரலை கேட்டதும் குதித்து எழுந்தாள் அந்த குட்டி பிரின்ஸஸ்...

“ஆ .. “என்றாள் பாரதி...

“என்னாச்சு??.. “

“ஹ்ம்ம்ம்ம் உங்க பொண்ணு டான்ஸ் ஆட ஆரம்பிச்சுட்டா உங்க குரலை கேட்டதும்” என்று சிரித்தாள்....

அவனுக்கு சந்தோஷமாக இருந்தது...அவனுக்கும் அந்த குட்டி தேவதையை தொட்டு பார்க்க ஆசை வந்தது...அவளையே ஏக்கமாக பார்த்தவன் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு

“If you don’t mind, shall I touch my baby?? “ என்றான் ஏக்கத்தோடு..

அவனின் பார்வையில் இருந்த ஏக்கத்தை +ஆர்வத்தை, ஆசையை கண்டவள்

“இதுக்குத்தான் அப்பப்ப அப்படி ஒரு லுக் விட்டானா?? என்கிட்ட கேட்க வேண்டியதுதானா?? “என்று உள்ளுக்குள் சிரித்துக் கொண்டவள் ..

“ஹ்ம்ம்ம்ம் தொட்டு பாருங்க... “என்று தன் புடவையை விலக்கி தன் வயிற்றை காண்பித்தாள்....

தாய்மையின் அழகில் அவள் வயிறு பளபளத்தது... அவள் வயிற்றை தொட அவன் கைகள் தயங்கின... அவனின் தயக்கத்தை புரிந்து கொண்டவள்

“ஒன்னும் ஆகாது.. சும்மா தொட்டு பாருங்க... “என்று அவன் கையை எடுத்து தன் அடி வயிற்றில் வைத்தாள்...

அவனின் கை தொட்டதும் அவளுக்குள் சில்லிட்டது... முதன் முதலில் ஒரு ஆணின் ஸ்பரிஷம் அவளுக்கு புதிய இனம்புரியாத உணர்வாக இருந்தது....

அவனுக்கும் அதே நிலைதான்.. ஏதொ ஒன்று உள்ளுக்குள் பொங்கி சிலிர்த்தது அவன் உள்ளேயும்...

இருவரும் குழந்தைக்காக என்று ஆரம்பித்து அதை மறந்து மோன நிலையில் இருந்தனர் சில விநாடிகள்...

தன் தந்தையின் ஸ்பரிஷம் முதன் முதலில் உணர்ந்த அந்த குட்டி இளவரசி உடனே வேகமாக துள்ளி குதிக்க ஆரம்பித்தாள்... உடனே தன் நிலைக்கு வந்த பாரதி அந்த குழந்தை உருளும் சிலிர்ப்பில் அது உருளும் இடத்தில் ஆதியின் கையை வைத்து காட்டினாள்...

ஆதியும் தன் நிலைக்கு வந்திருந்தான்.. அவன் தேவதையை முதன்முறையாக தொடவும் அவன் கைகள் குறுகுறுத்தன... வயிற்றுக்குள் இங்கும் அங்கும் ஒடியது அவன் கைகளுக்கு தெரிந்தது.. உடல் சிலிர்த்தது அவனுக்கு..

அப்படியே மெய் மறந்து அமர்ந்து இருந்தான்...கண் மூடி அந்த சுகத்தை அனுபவித்தான்...

பாரதிக்கும் அவனை அவ்வளவு பக்கத்தில் அதுவும் இளகிய நிலையில் காண உள்ளுக்குள் உருகி போனாள்..

சிறிது நேரம் பாரதியின் வயிற்றில் கை வைத்து இருந்தவன் அவன் இளவரசி மீண்டும் உறங்க ஆரம்பித்ததும் மெல்ல கையை விளக்கினான்..அவளும் புடவையை இழுத்து விட்டு கொண்டாள்...

“ரொம்ப தேங்க்ஷ்...சூப்பரா இருக்கு என் பேபியை தொட்டு பார்க்கும் பொழுது “என்றான் குரலில் துள்ளலுடன்...

“சரி நீ தூங்கு.. நான் பக்கத்து ரூம்ல இருக்கேன்.. எதுனாலும் என்ன கூப்பிடு..நீ பாட்டுக்கு கீழ இறங்காத... உன் போனுக்கு முதல்ல சார்ஜ் போடு..” என்று அவனே அவள் போனை தேடி எடுத்து அதற்கு ஜார்ஜ் போட்டு பின் அவளை படுக்கை வைத்து பெட்ஷீட்டை எடுத்து மூடி விட்டு விளக்கை அனைத்து விட்டு சென்றான்....

காலையில் திரும்பி வந்த மாரி நன்றாக வாங்கி கட்டிக் கொண்டாள் ஆதியிடம்..

பாரதி மாரிக்காக ஏதோ சொல்ல வர,

“ஷட் அப் ... “ என்று ஒரே அதட்டலில் அவளை அடக்கினான்... பின் வேகமாக கிளம்பி காரை எடுத்துக் கொண்டு தன் வீட்டிற்கு வந்தான்...புயலென உள்ளே வந்தவன் நேராக ஜானகியிடம் சென்று

“மா... நாம அவளை நம்ம வீட்டுக்கே கூட்டிட்டு வந்திடலாம் “என்று ஆரம்பித்தான்..

“யார?? நீ எங்க போயிருந்த ?? என்னாச்சு கண்ணா? ” என்று புரியாமல் அவனை பார்த்தார் ஜானகி

“அதான் உன் அருமை மறுமகளை... அவள நம்பி... இனிமேல் அவளை தனியா விட முடியாது மா... அவ கொஞ்சம் கூட பொறுப்பே இல்லாமல் இருக்கா..இன்னும் விளையாட்டு பிள்ளையாவே இருக்கா. ஒரு குழந்தையை சுமக்கறோம் என்கிற பொறுப்பே அவளுக்கு இல்ல...” என்று நிறுத்தாமல் திட்டினான்...

ஜானகிக்கு இன்னும் ஒன்றும் புரியாமல் முழித்தார்...

“நீ இந்த அளவுக்கு கோபப்படற அளவுக்கு என்னாச்சு கண்ணா... பாரதி என்ன தப்பு பண்ணா?? “

“ஹ்ம்ம்ம்ம் என்ன பண்ணாலா?? “ என்று இரவில் நடந்ததை கூறினான்

அதை கேட்டு ஜானகியின் உடலும் நடுங்கியது...

“நான் எத்தனை தரம் சொல்லி இருக்கேன் மாரியை எங்கயும் அனுப்ப கூடாதுனு.. மாரி வேண்டாம் என்றாலும் அவ பேரனுக்கு உடம்பு சரியில்லை னா உடனே இந்த மேடம் அப்படியே உருகி அனுப்பி வச்சுட்டாளாம்... நான் மட்டும் சரியான நேரத்துக்கு போயிருக்காமல் இருந்தா என்னாகியிருக்கும்?? என்று நினைக்கையிலயே அவன் உடல் மீண்டும் நடுங்கியது....

“அதான் சொல்றேன்... இனிமேல் அவ நம்ம கூடயே இருக்கட்டும்.. “ என்றான்..

அதை கேட்டு சிறிது யோசித்தவர்

“ஹ்ம்ம்ம் அது சரி வராது கண்ணா... இங்க கூட்டி வந்தால் அவளை யாருனு சொல்ல??... “ என்று மறுத்தார் ஜானகி

“அப்பனா நான் இனிமேல் அங்கயே தங்கிடறேன்... “

“ம்ஹும்ம்.. அதுவும் சரி வராது கண்ணா... பாரதி இன்னும் கல்யாணம் ஆகாத பொண்ணு... நீயும் கூட இருந்தால் அது நாளைக்கு பிரச்சனை ஆகும்... ஏதோ ஒரு நாள் இரண்டு நாள் பரவாயில்லை.. நீயும் அங்கயே தங்கிட்டா அது தப்பா போகும்... அது அவள் வாழ்க்கையை பாதிக்கும்...நாளைக்கு அவளுக்கு திருமணத்தில் எதும் பிரச்சனை ஆகும்..அதனால அது சரி வராது “ என்றார்

அதை கேட்டு உள்ளுக்குள் அதிர்ந்தான் அவனை அறியாமல்

“என்னமா சொல்றீங்க??.. அவளுக்கு கல்யாணமா ?? “என்று புரியாமல் முழித்தான்..

“ஆமா கண்ணா... குழந்தை பிறந்ததுக்கப்புறம் ஒரு வருடம் கழித்து அவளுக்கு ஒரு நல்ல இடத்துல கல்யாணம் பண்ணி வைக்கிறது என் பொறுப்பு...அவள் இப்பொழுது வெறும் வாடகைத் தாய் மட்டும் தான்... நீயே சொல்லி இருக்கியே குழந்தை பிறந்ததும்அவளை அனுப்பி வச்சிடனும்னு.. ” என்று நிறுத்தினார் அவனை ஓரக் கண்ணால் பார்த்துக் கொண்டே

“எப்படி?? இப்படி கல்யாணத்துக்கு முன்னாடியே குழந்தையை பெற்றவளை எப்படி ஏத்துக்குவாங்களாம்?? “ என்றான்.. அவன் உள்ளுக்குள் ஏதோ உடைவதை போல இருந்தது..

மனம் ஏதோ பாரமாக இருந்தது அவனுக்கு..ஏதோ தன்னுடைய பொருளை யாருக்கோ கொடுக்கறப்போ ஒரு வலி இருக்கும்.. அதே வலி அவனை சூழ்ந்தது... அது அப்படியே முகத்தில் தெரிய அதை கண்ட ஜானகி உள்ளுக்குள் துள்ளி குதித்தார்...

“இப்பதான் பையன் நம்ம வழிக்கு வர்ரான்... “ என்று சிரித்துக் கொண்டார்... ஆனாலும் வெளியில் காட்டிக்கொள்ளாமல்

“ஹ்ம்ம்ம் இப்ப நிறைய பேர் பரந்த மனப்பான்மையோடு இருக்காங்க கண்ணா... அதோடு பாரதி குணத்துக்கு நிறைய பேர் அவளை கல்யாணம் பண்ணிக்க ரெடியா இருக்காங்க.. “என்று உள்ளுக்குள் சிரித்துக் கொண்டார் அவனுடைய முகமாற்றத்தை ஓரக்கண்ணால் பார்த்துக்கொண்டே..

ஆதிக்கோ அப்பொழுதுதான் அவள் யாருடனோ கொஞ்சி பேசியதும் ஐ லவ் யூ னு சொன்னதும் நினைவு வந்தது.. அவன் அவள் அறையை கடக்கும் காலை நேரங்களில் நிறைய தடவை அவள் மெதுவாக யாரிடமோ பேசுவதை கேட்டிருக்கிறான்.. அப்பொழுது அவன் அதை கண்டு கொள்ளவில்லை... இப்பொழு புரிந்தது அது அவள் காதலனாக இருக்கும் என்று... அதை உணர்ந்ததும் அவன் உடல் இறுகியது..

“சே.. இவளும் அந்த ஷ்வேதா மாதிரி தான் போல்..இரட்டை வேசம் போடறா.. “என்று மனம் கசந்தது... அதற்குள் தன்னை சமாளித்துக் கொண்டவன் ஜானகியை பார்த்து

“ஹ்ம்ம்ம் சரி மா .. அவ எப்படியோ போகட்டும் மா...எனக்கு என்ன வந்தது?? .. எனக்கு என் பேபி முக்கியம்.. நான் என் பிரின்ஸஸ் கூடவே இருக்கனும்.. இனிமேல் அவளை நம்பி தனியா விட முடியாது... “ என்றான்..

இதுவரை ஒரு வித இளகிய நிலையில் இருந்தவன் முகம் மேலும் கடுப்பேறுவதை கண்ட ஜானகி,

“சே... வேதாளம் மறுபடியும் முருங்க மரம் ஏறிட்டானா?? நான் கூட ஏதோ என் வழிக்கு வர்ரானு நினைச்சா இப்படி கவுத்திட்டியே முருகா.. “ என்று புலம்பி கொண்டே

“நாம ஒன்னும் பண்ண முடியாது பா...வேணா மாரியை இனிமேல் எங்கும் போகக்கூடாதுனு ஸ்ட்ரிக்டா சொல்லிடலாம்” என்றார் முன்பு இருந்த உற்சாகம் வடிந்தவராய்...

“மா...அந்த மாரியை இனிமேல் நம்ப முடியாது... நான் என் பிரின்ஸஸ் கூடவே இருக்கனும்... வேற ஏதாவது வழி இருந்தால் சொல்லுங்க “என்றான்..

அதை கேட்டு அனைந்த பல்ப் மீண்டும் எரிய ஆரம்பித்தது ஜானகிக்கு...

“இத இத இதத்தான் எதிர்பார்த்தேன்.. “ என்று குத்தாட்டம் போட்டவர் பின் சிறிது யோசித்தவர்.. இல்ல யோசிக்கிற மாதிரி நடித்தவர்

“முருகா... அடுத்து நான் எடுத்து வைக்கிற இந்த அடியிலாவது எனக்கு துணை நில்.. இதை விட்டா இந்த பயன என் வழிக்கு கொண்டு வரவே முடியாது... “ என்று வேண்டிக் கொண்டவர்

“சரி.. எனக்கு தெரிஞ்சு ஒரு வழி இருக்கு.... ஆனால் அதை கேட்டு நீ கோபப்படுவ ?? “ என்று பீடிகை போட்டார்

“இல்ல.. கோபப்பட மாட்டேன்... சொல்லுங்க மா... எதுனாலும் நான் ரெடி .. “ என்றான் தனக்கு வெட்டிய குழியை அறியாமல்

“ப்ராமிஸ்... ?? ‘ என்று அவன் முன்னே கையை நீட்டினார் ஜானகி

“ஐயோ.. உங்க கூட இது ஒரு தொல்லை.. ஹ்ம்ம்ம் ப்ராமிஸ் ... சொல்லுங்க என்ன வழி னு... “ என்றான் ஆர்வத்துடன்

“வந்து... நீ பாரதிய கல்யாணம் பண்ணிக்கனும்ம்ம் ... “ என்று செக் வைத்தார் அவனுக்கு..

இல்லை .. இல்லை.. செக் வைக்க வைத்தான் அந்த வேலன்...

அதை கேட்டு ஆதியின் முகம் போன போக்கை கண்டு குத்தாட்டம் போட்டன் அந்த சிங்கார வேலன்..

“வாட்?? ... என்னமா உள... சொல்றீங்க.. “ என்று முறைத்தான்..

“ஆமா கண்ணா... முறைப்படி அவள் உனக்கு மனைவி ஆகிட்டா அப்ப நீ உரிமையோடு இங்க கூட்டிகிட்டு வந்து வச்சுக்கலாம்... நீ எப்பவும் கூடவே இருக்கலாம்.. ஏன் உன் இளவரசியை எப்பவும் கொஞ்சிகிட்டேஇருக்கலாம்... அதுக்குத்தான் கண்ணா.. “ என்று அவனை மடக்கினார்...

திருமணம் என்பதை கேட்டதும் அவன் உடல் விரைத்தது... அந்த ஷ்வேதா வந்து சிரித்தாள் கோரமாக ... பாரதியின் மருந்தால் ஓரளவுக்கு அவளை தவிர்க்க பழகியவன் கட்டுபாட்டையும் மீறி அந்த ஷ்வேதாவின் ஆட்டமும் தன் தந்தையின் மறைவும் கண் முன்னே வந்தது...

அவன் உடல் விறைக்க, கண்கள் சிவப்பேற

“ம்ஹும் அது முடியாது மா... என்னை கல்யாணம் மட்டும் பண்ணிக்க சொல்லாதிங்க.. நான் அப்ப சொன்னது தான் இப்பவும்.. நான் ஒரு தரம் பட்டது போதும்...இனிமேலும் அந்த விஷ பரிட்சை வேண்டாம் “ என்று மறுத்தான் அவசரமாக

“டேய்.. நீ இன்னும் பழசையே நினைச்சுகிட்டு இருந்தால் எப்படி?? ... இவ்வளவு நாள் பாரதி கிட்ட பழகி இருக்க இல்ல.. அவள் நல்லவளா கெட்டவளானு தெரியல.. அந்த ஷ்வேதா தப்பாயிட்டா எல்லாரும் அப்படியே இருப்பாங்களா என்ன??

அதோடு குழந்தை பிறந்ததுக்கப்புறம் அதை பார்த்துக்க ஆள் வேணும்.. அதுக்கு சரியான ஆள் கிடைக்கணும். அப்படியே வந்தாலும் அவ நம்ம குழந்தைய கொடுமை பண்ணினா?? இப்பதான் எத்தனையோ செய்தி வருதே குழந்தையை கொடுமை பண்ற மாதிரி

நீ பாரதிய கல்யாண்ம் பண்ணிகிட்ட அவளே நம்ம குழந்தையை பார்த்துக்குவா.. நமக்கும் எந்த கவலையும் இருக்காது “என்று கெஞ்சலாக முடித்தார்...

“மா... இதையே நான் முன்ன சொன்னப்போ என்னவோ நானே பார்த்துக்குவேனு சொன்னீங்க... இப்ப என்ன புதுக் கதையை சொல்றீங்க... “ என்றான் கண்கள் இடுங்க..

“சே... இந்த பய ஆறு மாசம் முன்னாடி ஏதோ அவனை சம்மதிக்க வைக்கனு சொன்னதை எல்லாம் கரெக்டா ஞாபகம் வச்சிரிருக்கானே... இப்படி எல்லாம் என்னை மடக்கினா நான் என்ன சொல்றதாம்...

முருகா... உன் ஆட்டத்தை என்னால சமாளிக்க முடியாது.. நீயே அவன் மண்டைல நல்லா உறைக்கிற மாதிரி ஏதாவது செய்.. என்னை ஆள விடு... “என்று உள்ளுக்குள் புலம்பிக் கொண்டே

“ஹீ ஹீ ஹீ... இப்பவும் முதல் ஒரு வருடம் நானே பார்த்துக்குவேன் கண்ணா... ஆனால் உன் இளவரசி எழுந்து நடக்க ஆரம்பித்தால்?? ம்ஹும்ம் எனக்கு என்னவோ அவள் நடக்கலாம் மாட்டாள்.. நேரா ஓடத்தான் போறா னு தோணுது..

அப்ப அவ ஓட்டத்துக்கு என்னால ஓட முடியுமா??... இப்பவே என்னால காலை எட்டி வைக்க முடியல.. நீதான் அப்ப அவ கூடவே இருந்து பார்த்துக்கணும்... “ என்றார் அடுத்து அவன் என்ன சொல்லப் போறானோ என்று பயந்தவாறு

“நீங்க என்னதான் சொல்லுங்க.. எனக்கு மனசு வரல....இப்ப அவ நல்லவளாதான் இருக்கா... ஆனால் கல்யாணத்துக்கு பிறகு அந்த ஷ்வேதா பிசாசு மாதிரி மாறிட்டா?? இவள நம்பி திரும்பவும் ஒரு தரம் ஏமாற முடியாது மா ... “ என்றான் அடிபட்ட வலியுடன்

அவன் வேதனை புரியவும்

“ஹ்ம்ம்ம் புரியுது கண்ணா... ஆனால் பாரதி அப்படி பட்ட பொண்ணு இல்லையே... உனக்கு மனசு ஒப்பலைனா , வேணும்னா இப்ப கல்யாணம் பண்ணிக்கோ.. உனக்கு பிடிக்கலைனா அப்புறம் டைவர்ஸ் பண்ணிக்கலாம் ... “என்று சொல்லையிலயே அவருக்கு உதடு நடுங்கியது..

“முருகா... என்னை மன்னிச்சிடு.. என் வாயாலயே இப்படி பேச வைக்கிறியே.... அப்படி எல்லாம் எதுவும் ஆகிடக்கூடாது.... என் மகனும் பாரதியும் எப்பவும் ஒன்னா சந்தோஷமா இருக்கனும்” என்று அவசரமாக வேண்டிக்கொண்டார்...

“ஹ்ம்ம்ம்ம் இத விட்டா வேற வழி இல்லையா?? “என்றான் கொஞ்சம் இறங்கி வந்து..

“ம்ஹும்ம் வேற வழி எதுவும் இல்லை...அதோடு கண்ணா உன் இளவரசியை எந்த குறையும் இல்லாமல் வளர்க்கணும் இல்லையா... என்னதான் நீ பார்த்து பார்த்து செய்தாலும் அவளுக்கு தன் அம்மா யாருனு கேட்டா என்ன சொல்வ??... அவள் வளர்ந்து அவளுடன் படிக்கும் குழந்தைங்களோட அம்மாவை எல்லாம் பார்க்கும் பொழுது அவளுக்கு அம்மா இல்லையே என்ற ஏக்கம் வரும் இல்லையா...

நீ எப்படி என்னிடம் கொஞ்சற மாதிரி அவளுக்கும் பின்னாடி ஆசை வரும் இல்லையா??? அந்த குறையை உன் இளவரசிக்கு வைக்கலாமா??? இதுவே பாரதி கூடவே இருந்தா அம்மா வா அந்த குழந்தைய நல்லா பார்த்துக்குவா... எப்படி பார்த்தாலும் நீ பாரதிய கல்யாணம் பண்ணிக்கிறது தான் நல்லது னு தோணுது... அதுக்கப்புறம் உன் முடிவு “ என்று ஆட்டத்தின் அடுத்த மூவை அவனிடம் வைத்தார் உள்ளுக்குள் அந்த வேலனை வேண்டிக்கொண்டே...

அவர் சொன்னதை எல்லாம் திரும்ப யோசித்து பார்த்தான் ஆதி .. பின் ஒரு முடிவுக்கு வந்தவனாக

“சரி மா .. அப்படீனா ஒரு இரண்டு வருடம் மட்டும் அவ பேபி கூட இருக்கிற மாதிரி அக்ரிமென்ட் போட்டுக்கலாம்... பிரின்ஸஸ் பெருசானதும் அவள் போய்டனும்..அதோடு நடுவுல ஏதாவது சீட் பண்ணினா அப்பயே கிளம்பிடனும்.. என்ன சரியா?? “ என்றான்

அதை கேட்டு தலையில் அடித்துக்கொண்டார் ஜானகி மானசீகமாக... இவன் திருந்தவே மாட்டானா?? என்று திட்டியவர்

“டேய்.. உன்னை எப்படி இப்ப வழிக்கு கொண்டு வந்தேன்.. நீயாவது பாரதியை இரண்டு வருடம் கழித்து அனுப்பறதாவது... உன் வழிக்கே போய் உன்னை மடக்கறேன் பார்... “ என்று மனதுக்குள் சிரித்துக்கொண்டே

“ஹ்ம்ம்ம் சரிடா கண்ணா.. ஆனால் பாரதிக்கிட்ட இந்த இரண்டு வருட அக்ரிமென்ட் பத்தி எதுவும் சொல்ல வேண்டாம்.. முதலில் அவள் இந்த திருமணத்துக்கு சம்மதிக்கனும்.. அப்பதான் எல்லாம் நல்ல படியா நடக்கும்.. நான் அவகிட்ட பேசி பார்க்கறேன்... “என்றார்...

“ஹ்ம்ம்ம் உங்க இஷ்டம் ..” என்று தோளை குலுக்கியவன் தன் அறைக்கு சென்று பின் ரெடியாகி அலுவலகம் கிளம்பி சென்றான்

மாலை வழக்கத்திற்கு மாறாக சீக்கிரமே வீடு திரும்பினான் ஆதி .. மேலெ சென்று ரெப்ரெஸ் ஆகி கீழ வந்தவனுக்கு ஜானகி சிற்றுண்டியை எடுத்து வைத்தார்.. அதை சாப்பிட்டுக்கொண்டே தன் அன்னையின் முகம் பார்த்தான்.. அவர் எதையும் வெளியில் காட்டிக் கொள்ளாமல் அமைதியாக அவனுக்கு பரிமாறினார்...

அவரா எதாவது சொல்லுவார் என்று எதிர்பார்த்தவனுக்கு அவர் எதுவும் பேசாமல் அமைதியாக இருக்க கண்டு அதற்கு மேல் தாங்க முடியாமல்

“என்ன மா...உங்க மருமகள் கிட்ட பேசுனிங்களா?? . என்ன சொன்னா?? “ என்றான் தன் ஆர்வத்தை உள்ளுக்குள் மறைத்துக் கொண்டு.. அதை கேட்டு சிறிது நேரம் கழித்தே பேசினார் ஜானகி

“ஹ்ம்ம்ம் அவள் இந்த திருமணத்தில் தனக்கு சம்மதம் இல்லைனு சொல்லிட்டா கண்ணா.. நமக்கு கொடுத்து வைத்தது அவ்வளவுதான் “என்றார் அதுவரை கட்டுபடுத்தி வந்த வேதனை முகத்தில் தெரிய

அவள் தன்னை நிராகரித்தாள் என கேட்கவும் உள்ளுக்குள் நொறுங்கி போனான் ஆதி... கோபம் தலைக்கேறியது அவனுக்கு

“ஏனாம்?? “ என்றான் கண்கள் சிவப்பேற

“ஹ்ம்ம்ம் காரணம் எதுவும் சொல்ல மாட்டேங்குறா... என்ன கட்டாயப்டுத்தாதிங்கனு சொல்லிட்டா... இதுக்கு மேல என்ன பேச ... “ என்றவரின் கண்கள் கலங்கியது...

தன் அன்னையின் கண்ணீரை கண்டவன் இன்னும் கோபம் கூட

“அவளுக்கு திமிர் மா. வேற என்ன?? நல்லா சுகமா இருந்து பழகிட்டா இல்லை.. அதான் எடுத்து எரிஞ்சு பேசறா... அவளை என்ன செய்யறேன் பார்” என்று வேகமாக எழுந்து பாதியிலயே கை கழுவி விட்டு வெளியில் விரைந்தவன் தன் காரை எடுத்து விரட்டினான் தன் கெஸ்ட் ஹவுஸை நோக்கி...

“டேய் கண்ணா.. பார்த்து போய்ட்டு வா.. பாரதியை எதுவும் மிரட்டாத “ என்ற அவரின் வார்த்தைகள் வெறும் காற்றோடு போயின.. அதற்குள் அவன் பறந்து இருந்தான்....



பாரதி ஏன் திருமணத்தை மறுத்தாள்?? நம்ம வேல்ஸ் வைத்த செக் ஐ பாரதி உடைத்து விட்டாளா?? அப்பனா வேல்ஸ்ன் அடுத்த மூவ் என்ன?? தன் ஆட்டத்தை மாற்றி ஆடப் போகிறானா?? பல கேள்விகள்..விடையை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்..

Comments

  1. நல்லா இருக்கு ஆப்பு

    ReplyDelete

Post a Comment

Popular Posts

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே

என் மடியில் பூத்த மலரே

அனைவருக்கும் வணக்கம்!!!

காதோடுதான் நான் பாடுவேன்

நிலவே என்னிடம் நெருங்காதே!!

வராமல் வந்த தேவதை

பூங்கதவே தாழ் திறவாய்

தவமின்றி கிடைத்த வரமே

தாழம்பூவே வாசம் வீசு!!!

அழகான ராட்சசியே!!!