தவமின்றி கிடைத்த வரமே-46



அத்தியாயம்-46 

ன்று வசி வீட்டிற்கு தாமதமாகவே வர, மலர் அதற்குள் உறங்கி இருந்தாள்.. அறைக்கு உள்ளே வந்ததும் தான் நேற்றைய சம்பவம் நினைவு வந்தது..

தன் மனவியின் முகத்தை குற்ற உணர்ச்சியுடன் பார்க்க, குழந்தை போல அசந்து உறங்குபவளையே சில நொடிகள் நின்று ரசித்தவன் பின் குளித்து விட்டு இரவு உடைக்கு மாறியவன் கட்டிலில் வந்து மலர் பக்கம் பார்த்தவாறு மறுபக்கம் படுத்தவன் அவளையே இமைக்க மறந்து ரசித்தான்..

பின் தன் கையை எடுத்து அவள் இடையை சுற்றி வளைத்தவன்

“ஐம் சோ சாரி ஜில்லு.. உன்னை ரொம்ப கஷ்ட படுத்திட்டேன்..ஆத்திரத்தில் அறிவை இழந்து என்னென்னவோ பேசிட்டேன்.. ப்ளீஸ்... என்னை மன்னிச்சிடு.. “என்றவாறு அவள் கழுத்தில் மெல்ல முத்தமிட்டான்...

“இட்ஸ் ஓகே மெக்கானிக்.. “ என்று குரல் மட்டும் அவளிடம் இருந்து வர, அதில் திகைத்தவன் அவளை கூர்ந்து பார்க்க அவளும் தன் உதட்டை மடித்து தன் சிரிப்பை அடக்கி கொண்டு கண்களை இறுக்க மூடிக் கொண்டிருந்தாள்...

அவள் உறங்காமல் விழித்து கொண்டுதான் இருக்கிறாள் என புரிய, உடனே அவளை இழுத்து தன் மார்பின் மீது போட்டு கொண்டவன்

“ஹே...ப்ராட் பொண்டாட்டி .. இன்னும் தூங்கலையா? “ என்றவாறு அவள் மூக்கை பிடித்து செல்லமாக ஆட்டினான்..

“யார் சொன்னா? நான் தூங்கிட்டேனாக்கும்.. “ என்று இன்னும் கண்ணை திறக்காமல் வாய் மட்டும் அசைத்தாள் பனிமலர்..

“ஹா ஹா ஹா தூக்கத்தில நடக்கிற வியாதி மாதிரி தூக்கத்தில பேசற புது வியாதி என் பொண்டாட்டிக்கு வந்திருச்சே.. யார் கிட்ட வைத்தியம் பார்க்க.. “ என்று சிரித்தவன்

“ஹ்ம்ம் இதுவும் எனக்கு வசதிதான்... தூக்கத்திலயே பேசற என் பொண்டாட்டி இப்ப தூக்கத்திலயே ரொமான்ஸ் பண்ண போறா.. “ என்று குறும்பாக சிரித்தான் வசீகரன்..

அதை கேட்டவள்

ஆங்... தூக்கத்திலயே ரொமான்ஸ் ஆ? அது எப்படி ? “ என்று தன் கண்களை அகல விரித்து தன் கணவனை பார்க்க

“ஹா ஹா ஹா.. இப்படித்தான் .. “ என்று அவள் இமைகளில் தன் இதழ்களை பதித்தான் வசி...

அதில் கிறங்கியவள்

“ஒன்னும் வேண்டாம்.. நான் உங்க மேல கோபமா இருக்கேன்... “ என்று முறைத்தவள் கை மட்டும் அவன் மார்பில் கோலமிட்டு கொண்டிருந்தது..

அதை கேட்டதும்

“சாரி டா ஜில்லு... ரியலி சாரி..உன்னை புரிஞ்சுக்காம ஆத்திரத்தில், கோபத்தில் என்னென்னவோ பேசிட்டேன்.. ஒரு வாரமா உன்னை கஷ்ட படுத்திட்டேன்.. ஐம் சாரி.. என்னை மன்னிப்பாயா ? “ என்றான் வருத்தமாக..

அதை கண்டு மனம் வாடியவள் அவன் இமைகளை நீவி விட்டு

“என் புருசன் எப்பவும் யார் கிட்டயும் சாரி சொல்ல கூடாது...அது அவர் பொண்டாட்டிகிட்டயும் தான்.. “ என்று சிரித்தவள்

“ஆத்திரத்தில், கோபத்தில் வரும் வார்த்தைக்கு அர்த்தம் பார்க்க கூடாது.. அது மனதில் இருந்து வருபவை அல்ல.. வெறும் உதட்டில் இருந்து வருபவை.. அந்த நேரத்தில் என்ன பேசறோம்னு தெரியாமல் வார்த்தையை கொட்டுவது.. என்று எங்க வீட்டு ஜோ அடிக்கடி சொல்வாங்க வசி..

அதனால் அன்னைக்கு நீங்க என்னை கேவலமா பேசினது என்னை ஹர்ட் பண்ணுச்சுதான்... ஆனால் ஒரு நொடி உங்க நிலையில் இருந்து பார்த்தால் நீங்கள் செய்தது சரிதான் னு தோனிச்சு...

நான் தான் உங்களை, உங்க காதலை புரிஞ்சுக்கலை.. எங்கப்பாவுக்காகத்தான் என்னை கல்யாணம் பண்ணிகிட்டீங்கனு தப்பா புரிஞ்சுகிட்டேன்..

பாரதி சொல்லிதான் எனக்கு நீங்க என்னை காதலிக்கிறது தெரியும்.. “ என்றாள் மலர்..

“அடிப்பாவி.. என் கண்ணுல அவ்வளவு காதல் இருந்ததே .. அதுக்கூடவா உன் முட்ட கண்ணுக்கு தெரியலை.. காதல் இல்லாமல் எப்படி டீ உன்னை இப்படி கட்டிக்க முடியும் என் மக்கு பொண்டாட்டி.. “

“ம்ஹும். நீங்க மட்டும் என்னவாம்? என் கண்ணுல இருந்த காதலை உங்களால புரிஞ்சுக்க முடிஞ்சுதா? நான் மட்டும் உங்க மேல லவ் இல்லாம எப்படி உங்களை ஏத்துகிட்டிருப்பேனாம்.. ? “ என்று முகத்தை நொடித்தாள் மலர்...

“ஹே ஜில்லு.. ரியலி? நீ என்னை லவ் பண்ணினியா? அப்புறம் ஏன் வசுகிட்ட நீ யாரையும் லவ் பண்ணலைனு சொன்ன? அன்னைக்கு எனக்கு எப்படி இருந்தது தெரியுமா? நீ என் பெயரைத்தான் சொல்வேனு ஆர்வமா இருந்தா டக்குனு யாரும் இல்லைனு சொல்லிட்ட..

அப்ப என்னை நீ லவ் பண்ணாமதான் என் கூட வாழறனுதான் வெறுப்பா வந்திடுச்சு.. “

“ஹீ ஹீ ஹீ அதுக்குத்தான் எதையும் அரை குறையா கேட்க கூடாது மெக்கானிக்.. அன்னைக்கு முழுசா கேட்டிருந்தால் இவ்வளவு கஷ்டம் வந்திருக்காது..

வசு கேட்டதுக்கு நான் யாரும் இல்லைனு சொன்னாலும் அதுக்கு அடுத்து அவ விடாம

“அண்ணி... நீங்க என் அண்ணனை பார்த்ததும் லவ் பண்ணல? அப்பயும் இப்பயும் எங்க அண்ணனைத்தான் லவ் பண்றீங்க.. “ என்று அவளே சொன்ன பிறகுதன் எனக்கே உண்மை புரிந்தது..

அவள் நான் உங்களை பார்த்த பொழுது என்று பொதுவாக சொன்னாலும் நான் உங்களை பார்த்தது அந்த மருத்துவமனையில் ஷ்யாம் அண்ணா ரூம்ல தான்..

அன்று கதைவை திறந்ததும் உங்க பார்வையை எதிர் கொண்ட அந்த நொடியே நீங்க எனக்குள் வந்திட்டீங்க..அதனால் தான் நீங்க என் வயிற்றை தொட வரும் பொழுது படபடவென்று அடித்து கொண்டது...

உங்களிடம் வம்பிழுத்து கிண்டல் அடித்து விளையாட முடிந்தது.. ஆனால் அது காதல் னு அப்ப தெரியலை .. பட் உள்ளுக்குள் ஒரு ஃபீல் உங்களை பார்க்கிறப்ப எல்லாம்..

அப்புறம் என் கல்யாண நாள் நெருங்க நெருங்க அப்பதான் எனக்குள் இருந்த காதலும் அதோடு நான் வேற ஒருத்தனுக்கு நிச்சயிக்க பட்டவள் எனவும் புரிந்தது..

இந்த நிலையில் உங்களை காதலிக்கிறேனு சொல்றது அபத்தம்.. அதான் உள்ளேயே போட்டு பூட்டி கொண்டேன்.. ஆனாலும் உள்ளுக்குள் ஒரு மாதிரி டிஸ்டர்ப்ட் ஆ இருந்தது.

எனக்கு சொந்தமான எதையோ இழக்கிற மாதிரி ஒரு ஃபீல்.. அந்த கல்யாணத்துல கொஞ்சம் கூட இன்ட்ரெஸ்ட் ஏ இல்லை..

இந்த கல்யாணம் நின்று விடக் கூடாதா என்று ஒரு மூலையில் ஓடி கொண்டே இருந்தது...

அப்பதான் அப்பாக்கு ஹார்ட் அட்டாக் வரவும் கல்யாணம் நின்னு போச்சு னு சொல்ல உடனே பெரும் நிம்மதி வந்து சேர்ந்தது..

அதுவும் நீங்களே என்னை கல்யாணம் பண்ணிக்கறீங்கனு சொல்லவும் எதுவும் யோசிக்காமல் டக்குனு ஒகே சொல்லிட்டேன்.. அதெல்லாம் பின்னாடி யோசிச்சு பார்த்தால் தான் தெரிந்தது அது நான் உங்கள் மீது வைத்திருக்கும் காதலால் தான் என்று

ஆனால் அதை புரிஞ்சுக்காம நானா ஒரு கதையை இமேஜின் பண்ணிட்டு ரொம்ப கஷ்ட பட்டேன்.. பத்தாததற்கு மித்ரா வேற அப்பப்ப ஏதாவது சொல்லி கிட்டே இருப்பா ... ரொம்ப மோசமான நாட்கள் அவை..

எப்படியோ நம்ம வாழ்க்கையை ஆரம்பித்ததும் தான் எனக்கு நிம்மதியா இருந்தது.. இனி நீங்கள் எனக்கு மட்டும் தான் னு .. ஆனாலும் நாம் மனம் விட்டு பேசி இருக்கணும்.. அது இல்லாமதான் இத்தனை குழப்பம்.. “

“ஹ்ம்ம்ம் கரெக்ட் தான் ஜில்லு.. நானுமே உன் கிட்ட என்னுடைய காதலை வெளிப்படையாக சொல்லி இருக்கணும்..எனிவே ஐம் சோ ஹேப்பி ஜில்லு பேபி.. நீ என்னை லவ் பண்ணினதுக்கு.. “ என்று அவள் கையை எடுத்து தன் கைகளுக்குள் வைத்து கொண்டான்...

“ஹ்ம்ம் சரி நீங்க எப்ப இருந்து என்னை லவ் பண்ண ஆரம்பிச்சீங்க..? “

“ஹீ ஹீ ஹீ .. நானும் லவ் அட் பர்ஸ்ட் சைட் தான்.. உன்னை முதல் முதலில் பார்த்ததுமே அப்படியே உள்ள இறங்கி என் இதயத்துல சிம்மாசனம் இட்டு உட்கார்ந்து கிட்ட... “

“ரியலி.... அப்புறம் ஏன் என்கிட்ட சொல்லலை? “ என்றாள் மலர் சிணுங்கியவாறு

“எங்க.. நான் லவ் ஐ சொல்ல வர்றப்ப எல்லாம் நாக்கு மேல ஒட்டிக்கிது.. ஒரு மூனு வார்த்தை அதை சொல்லங்கேட்டியும் எனக்கு உயிர் போய் உயிர் வந்தது. கடைசியாக தைர்யமா சொல்ல வந்தால் நீ உன் கல்யாண பத்திரிக்கையை நீட்டற...

எப்படி இருந்திருக்கும்? என் உலகமே நின்று விட்டதை போல இருந்தது.. என் இதயத்தை, என் உயிரை வேற யாரிடமோ தாரை வார்த்து கொடுப்பதை போல இதயத்தில் அப்படி ஒரு வலி.. “

என்று கண் மூடி அந்த வலிகளை மீண்டும் அனுபவிக்க, அவன் வேதனையை கண்டவள் உடனே அவன் இமைகளை நீவி விட்டு அவன் கன்னத்தை மெல்ல மசாஜ் செய்தாள் அவனை இலகுவாக்க...

“இவ்வளவு கஷ்ட படறதுக்கு அப்பயே நேரா என் கிட்ட சொல்லி இருக்கலாம் இல்லை.. “ என்றாள் வருத்தத்துடன்..

“சொல்லி இருந்தால்? என் மாமனார் உடனே கல்யாணத்தை நிறுத்திட்டு உன்னை எனக்கு தூக்கி கொடுத்திருவாராக்கும்... ?


அவர் ஜாதகத்துல நம்பிக்கை உடையவர் னு தெரியும் ஜில்லு.. அவர் அப்படி எல்லாம் ம் கொடுத்த வாக்கை , பண்ணிய நிச்சயத்தை எல்லாம் மீறுபவர் அல்ல..

நீயும் உன் அப்பா பேச்சை தட்ட முடியாமல் தவித்து போய்ருப்ப.. அதான் என்னால எத்தன பேர்க்கு கஷ்டம் னு என் வேதனையை உள்ளேயே போட்டு பூட்டி கொண்டேன்..”

“ஓ.. அதான் தேவதாஸ் மாதிரி சுத்தினீங்களா?”

“ஹே இது யார் சொன்னா ? “ என்றான் ஆச்சர்யமாக

"ஹ்ம்ம் பாரதிதான்.. " என்று சிரித்தாள் மலர்

"பாரதி நம்ம கல்யாணத்தப்ப என்னை பார்த்த உடனேயே என் லவ் ஐ கண்டு புடிச்சிட்டா...இந்த மரமண்டைக்குத்தான் என்னோட காதல் புரியலை.. “ என்று அவள் தலையை பிடித்து செல்லமாக ஆட்டினான் வசி...

அதை கண்டு அவளும் செல்லமாக முறைக்க, அவளை பார்த்து குறும்பாக கண் சிமிட்டியவன்

“எப்படியோ.. அந்த ஈசன் எனக்கு நான் கேட்ட வரத்தை கொடுத்திட்டான்..

நீ எனக்கு தவமின்றி கிடைத்த வரமாக்கும்.... ஆனால் நான் தான் அந்த வரத்தை சரியாக பயன்படுத்தாமல் போய்ட்டேன்.. நல்ல வேளை சரியான நேரத்துல முழிச்சிகிட்டேன்...” என்றான் தழுதழுத்தவாறு..

“ஹ்ம்ம்ம் நீங்களும் தான் எனக்கு தவமின்றி கிடைத்த வரமாக்கும்.. எத்தனை பேர்க்கு கிடைக்கும் இப்படி ஒரு தங்கமான புருசன், பாசமான குடும்பம்.. ஐம் சோ லக்கி.. “ என்று அவனை கட்டி கொண்டாள்..

அவள் தலையை வருடியவன் மெல்ல பாட ஆரம்பித்தான்...

தவமின்றி கிடைத்த வரமே.. இனி வாழ்வில் எல்லாம் சுகமே…

தவமின்றி கிடைத்த வரமே.. இனி வாழ்வில் எல்லாம் சுகமே…



நீ சூரியன் நான் வெண்ணிலா உன் ஒளியால் தானே வாழ்கிறேன்

நீ சூரியன் நான் தாமரை நீ வந்தால் தானே மலர்கிறேன்

நீ சூரியன் நான் வான்முகில் நீ நடந்திடும் பாதை ஆகிறேன்

நீ சூரியன் நான் ஆழ்கடல் என் மடியில் உன்னை ஏந்தினேன்

தவமின்றி கிடைத்த வரமே இனி வாழ்வில் எல்லாம் சுகமே…



என்று அவனின் வசீகர குரலில் அவன் உருகி பாட, அதில் அப்படியே மயங்கி கரைந்து போனாள் அவன் மனையாள்..

அவன் மஞ்சத்தில் தஞ்சம் புகுந்திருந்தவள் மெல்ல விழிகளை உயர்த்தி அவனை பார்த்தவாறு அவன் பாடுவதையே ரசித்து கொண்டிருந்தாள்..

அவன் பாடி முடிக்கவும் அடுத்த நொடி எட்டி அவன் இதழ்களில் அழுந்த முத்தமிட்டாள் பனிமலர்...

அதை எதிர்பார்க்காதவன் ஒரு நொடி திக்கு முக்காடி போனான் வசீகரன்..

எப்பொழுதுமே அவன்தான் அவளை நாடி செல்வதும் கொஞ்சுவதும் எல்லாம்.. இன்று முதல் முறையாக தன் மனைவியிடம் இருந்து அதுவும் இப்படி ஒரு முத்தத்தை எதிர்பார்க்க வில்லை...

அப்படியே தன்னவளை இறுக்கி அணைத்து கொண்டான்..

அவளும் தன் காதலை எல்லாம் அந்த முத்தத்தில் வெளிபடுத்தியவள் மெல்ல அவனை விடுத்து “ஐ லவ் யூ மெக்கானிக்... ஐ லவ் யூ சோ மச்... “ என்று மீண்டும் அவன் கன்னத்தில் இதழ் பதித்தாள்...

அவனுமே அதில் கிறங்கியவன் “தேங்க்யூ சோ மச் ஜில்லு... ஐ லவ் யூ டூ... “ என்று அவள் கொடுத்த காதல் பரிசுக்கு திருப்பி பரிசு கொடுத்தான் அவன் காதலை எல்லாம் கொட்டி....

அதில் கன்னம் சிவந்தவள் மீண்டும் அவன் மார்பில் வாகாக சாய்ந்து கொள்ள

“ஹப்பாடா.. எப்படியோ இப்பயாவது உன் மனசுல இருக்கிற காதலை தெரிஞ்சு கிட்டேனே.. இப்பதான் நிம்மதியா இருக்கு.. இதுக்கெல்லாம் மிதுவுக்கு தான் நன்றி சொல்லணும்.. “என்றவன் அவசரமாக நிறுத்தி கொண்டு அவள் முகம் பார்த்தான்...

திருமணமான ஆண் தன் மனைவியின் முன்னால் அடுத்த பெண்ணை பற்றி பேசக் கூடாது.. அதுவும் இந்த மாதிரி இரவு நேரத்தின் தனிமையில் காதலில் கழித்து இருக்க, இந்த நேரத்தில் அடுத்த பெண்ணை பற்றி பேசுவது அபத்தம் என கேள்வி பட்டிருக்கிறான்..

அது தேவையில்லாத பிரச்சனையை கொண்டு வரும் என்பது அவன் பழகிய வட்டத்தில் சிலரின் உபதேசமாகும்...

அதனால் தான் மித்ராவை பற்றி பேச ஆரம்பித்ததுக்கு பனிமலர் எப்படி எடுத்து கொண்டாளோ என்று அவசரமாக அவள் முகம் பார்த்தவன் அவள் அதை கண்டு கொள்ளாமல் இயல்பாக இருக்க நிம்மதியானது..

“சாரி ஜில்லு... நான் மிது.... மித்ராவை பற்றி உன்கிட்ட இப்ப பேசி இருக்க கூடாது.. “ என்றான் வருத்தமாக...

“ஹா ஹா ஹா.. சோ வாட் வசி.. எனக்கு முன்னாடியே உங்களுக்கு தெரிந்தவள் மித்ரா... எப்படி ஒருத்தங்களுக்கு அம்மா, அப்பா, தம்பி, தங்கை என்ற உறவுகள் இருக்கோ அதே மாதிரிதான் நட்பு என்ற உறவும்..

அதுவும் இந்த ஆண் பெண் நட்பு இருக்கே அது மிகவும் சென்சிட்டிவ் ஆனது

திருமணம் ஆன பின் கணவன் மனைவி இருவரும் எப்படி தங்கள் துணையின் உறவுகளை தங்கள் உறவாக ஏற்று கொள்கிறார்களோ அதே போல நட்பையும் ஏற்று கொள்ள வேண்டும்..

என்னை பொறுத்த வரைக்கும் மித்ரா உங்களுக்கு நல்ல, உங்க மேல உயிரையே வைத்திருக்கும் பெஸ்ட் பிரண்ட்..நீங்களும் அவ மேல உயிரா இருப்பது தெரியும்...

அந்த நட்பு இடையில் வந்த என்னால் பாதிக்காது... உங்களுக்கு எப்படி அவள் நல்ல தோழியோ அதே போலத்தான் எனக்கும்.. உங்கள் அம்மா அப்பா தங்கை போல அவளும் எனக்கும் உறவுதான்..

அதனால் டோன்ட் ஹெஸிட்டேட்.. நீங்கள் எப்பவும் போலவே உங்க மிதுகிட்ட பழகுங்க.. நோ அப்ஜெக்சன்... “ என்று அவன் கன்னத்தை பிடித்து செல்லமாக கிள்ளி ஆட்டினாள்..

அதை கேட்டவன் இன்னும் உருகி போனான்...

“எப்படி அழகாக புரிந்து வைத்திருக்கிறாள் எங்கள் நட்பை பற்றி. இந்த மாதிரி எத்தனை பேருக்கும் அமையும் இப்படி ஒரு மனைவி.. “ என்று பூரித்தவன்

“ரொம்ப தேங்க்ஸ் டா ஜில்லு பேபி... “ என்று மீண்டும் அவளை இறுக்கி அணைத்து அவள் நெற்றியில் முத்தமிட்டவன் ஏதோ நினைவு வர,

“ஆனாலும் இந்த மிது இப்படி பண்ணி இருக்க கூடாது... எனக்கு குழந்தைங்கனா எவ்வளவு புடிக்கும் தெரியுமா? ஆதி, நிகில் உடைய இளவரசிகளை பார்க்கிறப்ப எனக்கும் அதே மாதிரி குட்டி இளவரசி வரணும்..

உன்னை கொஞ்சற மாதிரியே அவளையும் கொஞ்சணும்.. என்று எத்தனை ஆசை, கனவு தெரியுமா?... மிதுகிட்டயும் இதை பற்றி சொல்லி இருக்கேன்.. ஆனால் அதையே நமக்கு எதிரா திருப்புவானு நினைக்கலை.. “ என்றான் வேதனையாக..

“விடுங்க மெக்கானிக்... அவ தான் ஆத்திரத்துல என்ன செய்யறோம்னு தெரியாம செய்துட்டா... ஜஸ்ட் லீவ் இட்...

அப்புறம் இன்னொரு விசயம்.. அன்னைக்கு அந்த மாத்திரையை எடுத்து பார்த்திங்களே.. அதுல எத்தனை பிரித்து இருந்ததுனு பார்த்திங்களா? “ என்றாள் குறும்பாக சிரித்தவாறு...

“ஆங்..” என்று முழித்தவன் அவசரமாக அன்றைய நாளை நினைத்து பார்க்க, அவன் எடுத்த அந்த மாத்திரை அட்டையை நினைவு கூர்ந்து பார்க்க, அதில் இருந்த மாத்திரைகள் பிரிக்காமல் அப்படியே இருந்தன ஒன்றை மட்டும் தவிர...

“அப்படி என்றால் ......? “ என்றவன் கேள்வியுடன் மலரை பார்க்க,

“ஹ்ம்ம்ம் உங்க பிரண்ட் மாதிரியே நீங்களும் ஆத்திரத்தில் அறிவை இழந்துட்டீங்க மெக்கானிக்.. அந்த மாத்திரை அட்டையை பார்த்திங்களே.. அதுல எத்தனை பிரித்திருந்தது னு ஒரு செகண்ட் பார்த்துட்டு பின் என்கிட்டயே நேரடியா கேட்டிருக்கலாம்..

மித்ரா சொன்ன மாதிரி அந்த கருத்தடை மாத்திரைகளை வாங்கினேன் தான்.. அவள் சொன்ன மாதிரி ஒரு மாத்திரையை பிரித்து சாப்பிட போகும் பொழுது , நம்ம ரிசப்சன் அன்று நீங்க கார்த்தி மற்றும் நித்தி குட்டீஸ்களை இரண்டு கையிலும் தூக்கி கொண்டு எவ்வளவு ஆசையா அவர்களை பார்த்திங்க...

அந்த காட்சி என் கண் முன்னே வந்தது..உங்களுக்கு குழந்தைங்கனா ரொம்ப புடிக்கும் னு அதில் இருந்தே தெரிந்தது..

அதுவும் இல்லாமல் அதை சாப்பிடுவது , உங்களை மாதிரியே கொழு கொழு னு இருக்கிற ஒரு குட்டி பாப்பாவை நானே கழுத்தை பிடித்து நெறிப்பதை போல இருந்தது..

உடனே பிரித்த அந்த ஒரு மாத்திரையையும் டஸ்ட் பின் ல போட்டுட்டேன்....” என்றாள் நமட்டு சிரிப்புடன்...

அதை கேட்டவன் உள்ளம் மகிழ்ந்து போய்

“ஹே.... ஜில்லு .. நிஜமாகவா?? அப்படி என்றால்... “ என்றவன் அவசரமாக நாட்களை எண்ணினான்..

திருமணம் ஆகி தங்கள் வாழ்க்கையை தொடங்கிய நாளில் இருந்து இன்று வரை இரவில் அவனை விலக்கியதில்லை அவள்..எத்தனை நேரம் கழித்து வந்தாலும் அவளை அணைத்து விட்டுத்தான் உறங்க செல்வான்..

“அப்படி என்றால் ?? “ என்று அவசரமாக யோசித்தவனுக்கு ஏதோ புரிய

“ஹே..... ஜில்லு......... “ என்று மகிழ்ச்சியில் கூவியவன் அவள் முகத்தை ஆவலுடன் நோக்க, அவளோ கன்னம் சிவந்து அவன் கையை எடுத்து தன் வயிற்றில் வைத்தவள்

“ஹ்ம்ம்ம்ம்ம்ம் உங்க இளவரசிக்கு இப்பொழுது இரண்டு மாதம்... “ என்றாள் நாணத்துடன்..

அதை கேட்டவன் உள்ளுக்குள் துள்ளி குதித்தான்.. உடனே ஒரு குட்டி தேவதை ஓடி வந்து அவனை கட்டி கொள்வதை போல இருக்க, அதில் சிலிர்த்தவன் அப்படியே சந்தோஷத்தில் அவளை இன்னும் இறுக்கி கொண்டான்....

அவன் இதயம் வேகமாக அடித்து கொண்டது..

“நான் அப்பாவாக போகிறேன்...எனக்கு ஒரு மகள், இளவரசி, என் தேவதை வரப் போகிறாள்.. “ என்று சத்தமிட்டு கத்தி சொல்ல வேண்டும் போல இருந்தது வசிக்கு..

தன் மனைவியை அப்படியே இறுக்கி அணைத்தவன் அவள் முகம் எங்கும் முத்தம் மழை பொழித்தான்..

அதில் திக்கு முக்காடி போனாள் பெண்ணவள்...

“ஒரு குழந்தைக்காக இவ்வளவு ஏங்கி இருக்கிறானா? நல்ல வேளை அந்த மித்ரா சொன்னதை அப்படியே நம்பி விடவில்லை.. “ என்று உள்ளுக்குள் மகிழ்ந்தவள் தன் கணவனின் முத்த மழையில் நனைந்து சிலிர்த்தாள்...

தன் மகிழ்ச்சியை, சந்தோஷத்தை எல்லாம் அவளுக்கு முத்தமாக கொட்டி தீர்த்தவன்

“ஆமா ஜில்லு.. இவ்வளவு பெரிய நல்ல விசயத்தை என்கிட்ட ஏன் சொல்லலை..? “ என்றான் அவள் மூக்கை பிடித்து செல்லமாக ஆட்டியவாறு..

“ஹ்ம்ம்ம் நேற்றுதான் கன்பார்ம் ஆச்சு...உங்க கிட்ட ஆசையா சொல்ல வந்தால், என்னை எங்க பேச விட்டீங்க.. “ என்றவள் நேற்றைய சம்பவம் கண் முன்னே வர, மீண்டும் கன்னம் சிவந்தாள் மலர்..

வசிக்கும் அதே நினைவுதான்...

“ஓ.. இதனால் தான் நேற்று என்னை விலக்கி இருக்கிறாள்... அது புரியாமல் வெறி கொண்டவனாக நடந்து கொண்டேனே.. “என்று யோசித்தவனுக்கு திக் என்றது..

“ஐயோ.. சாரி ஜில்லு.. இது தெரியாமல் நேற்று நான் உன்னை ரொம்பவுமே காய படுத்திட்டேன்.. ஐம் சோ சாரி... இதனால என் பிரின்ஸஸ்க்கு......” என்று ஏதோ கேட்க வர, அதை கேட்க முடியாமல் தொண்டை அடைத்து கொண்டது..

“நோ.. டென்ஷன் மெக்கானிக்.. உங்க பிரின்ஸஸ் க்கு ஒன்னும் இல்ல..காலையிலயே சுசிலா அம்மாக்கு போன் பண்ணி கேட்டுட்டேன்... அதெல்லாம் ஒன்னும் ஆகாதுனு சொல்லிட்டாங்க... அவ நல்லா ஜம்முனுதான் இருக்கா... “ என்றாள் சிரித்தவாறு..

அதை கேட்டு மெல்ல வெட்கபட்டவன்

“ஐயோ.. சுசிலா அம்மா கிட்ட போய் இதையெல்லாம் சொன்னியா? என்னை நல்லா திட்டியிருப்பாங்க.. இப்படி காட்டு மிராண்டியா நடந்துகிட்டனே என்று.. “ என்றான் சிறு கவலையுடன்...

“ஹீ ஹீ ஹீ.. அவங்க என்னைத்தான் திட்டினாங்க...ஒன்னும் தெரியாத அப்பாவியா இருந்த என் பையனை இப்படி பொண்டாட்டி தாசனாக்கி வச்சிருக்கியே டி னு...

சரியான மயக்கு மோகிணி டீ நீ .. அப்படீனு..சிரிச்சுகிட்டே என்னைத்தான் திட்டினாங்க.. “ என்றாள் சிணுங்கியவாறு..

“ஹா ஹா ஹா.. அவங்க சரியாதான் சொல்லி இருக்காங்க பேபி... எப்படி நல்லவனா இருந்த என்னை இப்படி பேட் பாய், பொண்டாட்டிதாசனா மாத்திட்டியே டீ .. என் ஜில்லு.. “ என்றான் அவள் இதழை வருடியவாறு...

அதை கேட்டு பெருமையுடனும் கர்வத்துடனும் மலர்ந்து சிரித்தாள் பனிமலர்..

கணவன் தன் மனைவியிடம் மயங்கி உருகி நிற்பது அந்த பெண்ணிற்குத்தான் எத்தனை பெருமை.. இந்த உலகையே வென்று விட்டதை போலத்தான் இருந்தது மலருக்கு..

அவசரமாக அந்த ஈசனுக்கு நன்றி சொன்னாள் அந்த நிலையிலும்..

வசியுமே அதையே தான் நினைத்து கொண்டிருந்தான்..

தனக்கு எல்லாவற்றிலும் துணை இருந்து நல்லதே செய்து வரும் அந்த ஈசனுக்கு நன்றி சொன்னவன் பின் தன் மனைவியை தாபத்துடன் பார்த்து

“அப்ப என் பிரின்ஸஸ் பிறக்கிற வரைக்கும் உன் கிட்ட வர முடியாதா? எப்படி டீ உன்னை விட்டு தள்ளி இருப்பேன் ? “ என்றான் பாவமாக..

அதை கேட்டு சிரித்தவள்

“ஐயோ.. நீங்க எல்லாம் என்ன டாக்டரோ? .. இது கூடவா தெரியாது... இதையும் நான் சுசிலாம்மா கிட்டயே கேட்டுட்டேன்.. அதெல்லாம் ஒன்னும் பிரச்சனை இல்லையாம்...” என்றாள் கன்னம் சிவக்க..

அதை கேட்டவன் அடுத்த நொடி அவளை இழுத்து அணைத்தவன் மீண்டும் முத்த மழை பொழிய ஆரம்பித்தான் தாபத்துடன்...

ஈசனும் தன் திருவிளையாடல் கடைசியில் நல்ல படியாக முடிந்ததை எண்ணி சிரித்து கொண்டவன் தன் அடுத்த ஆட்டத்திற்கு ஆயத்தமானான்....

அந்த கணவன் மனைவி இருவரும் தங்கள் காதலை மறைத்து திருமண பந்தத்தில் இணைந்தாலும் தங்கள் சோதனைகளை கடந்து ஒன்றுக்குள் ஒன்றாக உருகி கலந்து இணைந்த அந்த இரு இதயங்களும் இன்று போல என்றும் காதலுடன் இணை பிரியாமல் இன்னும் பல ஜென்மங்கள் வாழ வாழ்த்தி விடைபெறுவோம்..... நன்றி!!!

******சுபம்******

Comments

  1. U didn't mention about the ring he got for Malar.

    ReplyDelete
    Replies
    1. super memory ungalukku :). I forgot about that ring..good catch friend!

      Delete

Post a Comment

Popular Posts

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே

என் மடியில் பூத்த மலரே

அனைவருக்கும் வணக்கம்!!!

காதோடுதான் நான் பாடுவேன்

நிலவே என்னிடம் நெருங்காதே!!

வராமல் வந்த தேவதை

பூங்கதவே தாழ் திறவாய்

தவமின்றி கிடைத்த வரமே

தாழம்பூவே வாசம் வீசு!!!

அழகான ராட்சசியே!!!