என் மடியில் பூத்த மலரே-4


அத்தியாயம்-4 

2 மாதங்களுக்கு முன்:

…….

தேவர்கள் சேனா பதியே போற்றி!
குறமகள் மனமகிழ் கோவே போற்றி!
திறமிகு திவ்விய தேகா போற்றி!
இடும்பா யுதனே இடும்பா போற்றி!

கடம்பா போற்றி கந்தா போற்றி!
வெட்சி புனையும் வேளே போற்றி!
உயர்கிரி கனக சபைக்கோ ரரசே!
மயில்நட மிடுவோய் மலரடி சரணம்!

சரணம் சரணம் சரவண பவஓம்
சரணம் சரணம் சண்முகா சரணம்!

சரணம் சரணம் சரவணபவஓம்
சரணம் சரணம் சண்முகா சரணம் ... “

என்று கந்த சஷ்டி கவசத்தை முடித்து

“முருகா.. என் மகனுக்கு சீக்கிரம் ஒரு நல்ல வழியை காட்டு “ என்று மனமுருகி வேண்டி கொண்டே கற்பூர தட்டில் இருந்த விபூதியை எடுத்து நெற்றியில் வைத்து கொண்டு அந்த தட்டை வெளியில் எடுத்து வந்தார் ஜானகி...

அதே நேரம் மாடியிலிருந்து அலுவலகம் செல்ல கிளம்பி கீழே இறங்கி வந்தான் ஜானகியின் ஒரே தவ புதல்வன் ஆதி என்கிற ஆதித்யா.... நம் கதையின் நாயகன்..

ஆதித்யா, முன்னேறி வரும் சிறந்த தொழிலதிபன். ஆறடி உயரம், அலை அலையாக அடர்ந்த கேசம், கறுத்து அடர்ந்த மீசை , கட்டான உடற்கற்றுடன் ஒரு ஆணின் இலக்கணமாக விளங்குபவன்.

கேசம் காற்றில் ஆட, இரண்டு இரண்டு படியாக தாவி இறங்கி வரும் தன் மகனின் அழகையே ரசித்து கொண்டிருந்தார் ஜானகி.

“என்னமா , அப்படி பார்க்கறீங்க? “ என்று புன்னகைத்தான். ஆதி

என் மகன் ராஜா மாதிரி எவ்ளோ அழகா இருக்கான்.. என் கண்ணே பட்டு விடும் போல இருக்கு.” என்று அவனை நெட்டி முறித்தார்..

பிறகு கற்பூர தட்டை எடுத்து காட்டி, “விபூதி எடுத்துக்கோ ஆதி “

அவனும் தட்டில் இருந்த திருநீற்றை எடுத்து கொஞ்சமாக நெற்றியில் வைத்துக்கொண்டே

“என்னமா விஷேசம் இன்று. பூஜை எல்லாம் பலமா இருக்கு.. நான் அப்பலை பன்ற இந்த பெரிய டீல் நல்ல படியா முடியனும் னு வேண்டிக்கிட்டீங்களா?..”

“என் மகன் தொழில் ல எப்பவுமே வெற்றி தான். அதை பற்றி நான் ஏன் கவலை பட பேறேன். நீ எப்படியும் சாதிச்சிருவ. என் கவலை எல்லாம் உன் சொந்த வாழ்க்கைய பற்றிதான்.. நீயும் மற்றவங்க மாதிரி மனைவி , குழந்தைனு சந்தோஷமா இருக்கனும் னு தான் என் கவலை.

இன்று சஷ்டி இல்லையா. அதான் அந்த முருகன் கிட்ட வேண்டி கிட்டிருக்கேன் சீக்கிரம் ஒரு நல்ல வாழ்க்கை அமையனும் உனக்கு என்று “ .

மனைவி என்றதும் அவன் உடல் ஒரு முறை விரைத்தது. அவன் முகம் இறுகியது..

“அம்மா, எத்தனை தரம் சொல்றது. என் கல்யாணத்தை பற்றி பேசாதீங்க என்று..

போதும் ஒரு தரம் பட்டது போதும். இனிமேல் மனைவி என்ற பேச்சுக்கே இடமில்லை.. இதோடு விடுங்க..இப்பவும் நான் நல்லா தான் இருக்கேன். இந்த வாழ்க்கையே போதும்.. இதை விட நல்ல வாழ்க்கை எதுவும் தேவை இல்லை..

சரி நீங்க கோயிலுக்கு போறதுன்னா நம்ம ட்ரைவர் கூட்டிட்டு போங்க..அப்படியே ஹாஸ்பிட்டலுக்கும் போயிட்டு வந்திடுங்க.. எனக்கு ஒரு முக்கியமான் மீட்டிங் இருக்கு. நான் கூட வர முடியாது.. பார்த்து போய்ட்டு வாங்க. நான் வர்ரேன் “ என தன் கோபத்தை வெளியில் காட்டாமல் வேகமாக வெளியேறினான்.

அதே வேகத்தில் காரை எடுத்து விரட்டினான்.. மனம் அமைதியடய மறுத்தது... எல்லாம் அவளால் வந்தது.. அவள் மட்டும் என் வாழ்வில் வராமல் இருந்திருக்கலாம்..

ஷ்வேதா .. என்று உதடுகள் முனுமுனுக்கவும் அவன் முகம் இன்னும் இறுகியது..

“ஹ்கூம் இது சரியில்லை.. இன்று முக்கியமான மீட்டிங் இருக்கு. இந்த டீல் ல எப்படியாவது ஜெயிக்கனும்..இந்த டீல் என்னோட கனவு மட்டும் அல்ல.. அந்த ஷ்வேதவை ஜெயிக்க, அவள் முகத்தில் கரிய பூச நல்ல ஒரு வாய்ப்பு.. அப்ப தான் என் மனம் ஆறும் ”.. என்று அவன் மனதுக்குள்ளே சொல்லி கொண்டு காரில் இருந்த மெல்லிசையை ஒலிக்க செய்தான்.

கொஞ்சம் கொஞ்சமாக தன்னை கட்டுபடுத்தி கொள்ள முயன்று வெற்றியும் கண்டான்.. இதே வலி தான் கடந்த மூன்று வருடங்களாக தொடர்கிறது அவனுக்கு.. எவ்வளவோ முயன்றாலும் அவளால் அவன் குடும்பத்துக்கு ஏற்பட்ட இழப்பை மறக்க முடிய வில்லை. அவள் தந்த அந்த வலியும் குறையாமல் அப்படியே தான் நெருப்பாய் கனன்று கொண்டு இருக்கிறது அவன் உள்ளே.......

ஜானகியோ

ஐயோ!! , நான் காலையிலயே புலம்பி ஆதி சாப்பிடாமல் சென்றுவிட்டானே!! எனக்கு அரிவே இல்லை.. இப்படியா காலையிலயே அவனுக்கு பிடிக்காத விஷயத்தை பேசறது??

எப்பதான் அவனுக்கு ஒரு விடிவு காலம் வருமோ? என்று புலம்பி கொண்டே தன் வேலைகளை முடித்து அருகில் உள்ள முருகன் கோயிலுக்கு கிளம்பினார்..

ஒவ்வொரு சஷ்டி அன்றும் தவறாமல் அந்த முருகனை தரிசித்து விடுவார்... அப்படியே அருகில் உள்ள மருத்துவ மனைக்கு மாதப் பரிசோதனைக்காக சென்று வருவார்..

ஆதி வீட்டில் இருந்தால் அவனே அழைத்து செல்வான்.. அவன் இல்லை என்றால் தானே கிளம்பி விடுவார்..

அவன் அப்பா இறந்த பிறகு கட்டாயம் மாதம் ஒரு முறை அவரை வற்புறுத்தி அனுப்பி விடுவான்.

ஜானகியும் பரிசோதனைக்காக இல்லை என்றாலும் இன்னொரு காரணத்துக்காக தவறாமல் அந்த மருத்துவ மனைக்கு சென்று வருவார்..

அன்றும் வழக்கம் போல கோயிலுக்கு சென்று தன் கோரிக்கையை அந்த வேலனிடம் வைத்து விட்டு மருத்துவ மனையை அடைந்தார்..

வரவேற்பில் இருந்த பெண் ஜானகியை கண்டதும் புன்னகைத்து டாக்டரை சந்திக்க அனுப்பி வைத்தாள்..

டாக்டரின் அறையை அடைந்ததும் வெளியில் இருந்த பெயர் பலகையில்,

Dr சுசிலா M.B.B.S Gynecologist என்ற பெயர் பலகையை பார்த்ததும் மெல்லிய பெருமிதம் மற்றும் சந்தோஷமாக இருந்தது ஜானகிக்கு.. அதே புன்னகையுடன்

“May I come in Doctor”

“Yes. Come in “ என்ற கம்பீர குரலை தொடர்ந்து உள்ளே சென்றார் ஜானகி .

“வணக்கம் டாக்டர் “ என்றவளை முறைத்தார் டாக்டர் சுசிலா..

“மற்றவங்களுக்கு தான் நான் டாக்டர். உனக்குமா?? ”

“ஹி ஹி ஹி .. நான் ஒரு நோயாளியா உன்னை பார்க்க வந்திருக்கேன்.. அப்ப டாக்டர் னு தானே கூப்பிடனும் ?”

“அம்மா.. தாயே உன்கிட்ட பேசி ஜெயிக்க முடியாது.. நீ எப்படி வேனா கூப்பிட்டுக்கோ.. எனக்கு எப்பவும் நீ என் ஜானுதான் என்று எழுந்து வந்து கட்டிகொண்டார் Dr சுசிலா ..

எத்தனை வயது ஆனாலும் இந்த நட்பு மட்டும் அன்று பூத்த மலர் போலவே இருந்தது இருவரிடத்திலும் !!! ..

ஜானகியும் சுசிலாவும் பள்ளி பருவத்திலயே நெருங்கிய சிநேகிதிகள். இருவரும் சென்னையில் தான் ஆரம்ப கல்வி முதல் 10 ஆம் வகுப்பு வரை ஒன்றாக படித்தார்கள்.

பிறகு ஒரு கார் விபத்தில் சுசிலாவின் பெற்றோர்கள் இறந்துவிட, அவளின் பாட்டி வீட்டிற்கு இடம் பெயர்ந்தாள் சுசிலா. அதற்கு பிறகு தோழிகள் இருவரும் தொடர்பு இன்றி இருந்தனர்..


இதற்கு இடையில், ஜானகி +2 முடித்தவுடன் ராம்குமாரை மணம் முடித்தார்.. நீண்ட நாட்கள் குழந்தை இல்லாமல் இருந்து கருவுற்று இருந்த சமயம்..

பரிசோதனைக்காக இந்த மருத்துவமனந்க்கு வந்த பொழுதுதான் சுசிலாவை மறுபடியும் சந்தித்தார் ஜானகி. அதுவும் தனக்கு மருத்துவம் பார்க்கும் மருத்துவராக...

ஜானகிக்கு சுசிலாவை ஒரு மருத்துவராக பார்க்கவும் மிகவும் மகிழ்ந்து போனார்..

அதுவும் தான் நீண்ட நாட்களுக்கு பிறகு கருவுற்றிருந்ததால் அவருக்குள் எப்பவும் ஒரு பயம் இருந்து கொண்டே இருக்கும். சுசிலாவை அங்கே கண்டதும் தான் தைரியம் வந்தது.. சுசிலாவும் தன் ஆருயிர் தோழிக்கு தானே பிரசவம் பார்க்கிறேனே என்று பெருமையாகவும் சந்தோஷமாகவும் இருந்தது.. ஜானகியை பார்த்து பார்த்து கவனித்தார்..

தன்னை இவ்வளவு கவனிக்கும் தோழியின் வாழ்க்கை மட்டும் மலராமல் தனி மரமாக இருக்கிறாளே என்று வருத்தம் ஜானகிக்கு.. சுசிலாவை திருமணம் செய்து கொள்ள சொல்லி வற்புறுத்தினாள்.. ஆனால் சுசிலாவோ தனக்கு திருமணத்தில் விருப்பம் இல்லை.. தனக்கு இந்த மருத்துவம் தான் வாழ்க்கை. தனக்கு என்று ஒரு தனி வாழ்க்கை இல்லை என்று மறுத்துவிட்டார்..

ஒரு வேலை அவள் பெற்றோர் இருந்து இருந்தால், வற்புறுத்தி திருமணம் செய்து வைத்து இருப்பார்களோ? அவள் மருத்துவம் முடிக்கவும் பாட்டியும் இறந்துவிட, தனக்கு என்று யாரும் இல்லாமல், அவருக்கு பிடித்த மருத்துவத்தை மட்டுமே ஆதரவாக கொண்டு இந்த மருத்துவமனையில் சேர்ந்தார்..

இன்று வரை இதே மருத்துவமனையை தான் உலகம் என்று வாழ்ந்து வருகிறார்...

ராம்குமாரும் சுசிலாவை தன் தங்கையாக பாவித்தார்.. அவர் சொல்லியும் சுசிலா மறுத்துவிட அதற்கு மேல் வற்புறுத்த முடியாமல் விட்டு விட்டார் ஜானகி...

ஜானகியின் பிரசவம் கொஞ்சம் சிக்கலாகி நிறய இரத்தம் வெளியேறியதால், அவர் பிரசவத்திற்கு பிறகு இரண்டு மாதம் பெட் ரெஸ்ட் எடுக்க வேண்டியதாயிற்று..

சுசிலா தான் அந்த இரண்டு மாதமும் விடுப்பு எடுத்து கொண்டு ஜானகியையும் அவள் குழந்தை ஆதியையும் பார்த்து கொண்டார்..

அதுவும் முதல் முதலில் ஆதியை கையில் ஏந்தியபொழுது , முதல் முதல்லாக தாய்மை உணர்வை அடைந்தார் சுசிலா.. எத்தனயோ பிரசவங்களை வெற்றிகரமாக முடித்து எத்தனை குழந்தைகளை இதே கையில் ஏந்தி இருப்பார்..

அப்பொழுது எல்லாம் ஏற்படாத உணர்வு ஆதியை கைகளில் ஏந்திய பொழுது அவருக்கு ஏர்பட்டது.. தன் தோழி ஜானகியின் குழந்தை என்பதாலோ அல்லது இயற்கயாகவே ஆதி மேல் வந்த பாசமோ, அவரை அவனிடத்தில் கட்டி போட்டது...

முதல் இரண்டுமாதம் சுசிலாவே தாயாக இருந்து ஆதியையும் நல்ல சகோதிரியாக ஜானகியையும் பார்த்து கொண்டார்..

அதனாலோ என்னவொ ஆதியும் சுசிலா மேல் பாசமாக இருப்பான்..

ஜானகி ஒரளவு நன்றாக தேறி ஆதியை பார்த்து கொள்ளவும் சுசிலா தன் பணிக்கு திரும்பினார். ஆனாலும் வாரம் ஒருமுறை சென்று ஆதியை பார்த்து விடுவார். அவனுடன் அந்த ஒரு நாள் செலவிடுவார்..

ஆதி இருவரையுமே அம்மா என்று கூப்பிட ஆரம்பித்திருந்தான்..

அதுவும் அவன் அம்மா என்று அழைத்ததும் அந்த இரண்டு தாய்களின் உள்ளமும் குளிர்ந்து தான் போனது...

ஆதிக்கு மூன்று வயதிருக்கும் பொழுது ஒரு நாள் எல்லாரும் அமர்ந்து பேசி கொண்டிருந்தனர்.. வெளியில் விளையாடி கொண்டிருந்த ஆதி உள்ளே வந்து அம்மா என்று அழத்தான்.. அவன் யாரை கூப்பிடுகிறான் என்று தெரியாமல் இருவரும் திரும்பி பார்க்க அவன் குலுக்கி சிரித்தான்..

நான் சுசிலா அம்மா வைதான் கூப்பிட்டேன். நீங்க ஏன் மா பார்த்தீங்க என்றான் ஜானகியை பார்த்து.. இதே சுசிலா திரும்பி பார்த்தால், நான் ஜானகி அம்மா வைதான் கூப்பிட்டேன் என்று மாற்றுவான்.. இதே விளையாட்டை விளையாடியவன் இரண்டு பேரும் கோபித்து கொள்ளவும்,

அம்மா னா இரண்டு பேருமே வர்ரீங்க.. இதுக்கு என்ன பண்ணலாம்..என்று ஆட்காட்டி விரலை முகத்தில் வைத்து தலையை சாய்த்து பலமாக யோசிப்பவன் போல நின்றான்.. பிறகு

ஒரு ஐடியா.. இனிமேல் நீங்க சுசிலாம்மா, நீங்க ஜானகிம்மா.. இனிமேல் குழப்பம் வராது“ என்று முடித்தான்..

இதை கேட்டதும் ராம்குமார்,

பார்த்தீங்களா, ஆதி எப்படி ஒரு முடிவு கண்டுபிடிச்சிட்டான்.. நல்ல ஒரு பிசினஸ் மேனா வருவான்.. பின்னாடி என் தொழிலை பார்த்துக்க வாரிசு ரெடி ஆயிருச்சு” என்று சிரித்தார்..

அதை கேட்டதும்,

“போங்கண்ணா. ஆதி டாக்டர்க்கு தான் படிக்க போறான்.. படித்ததும் எனக்கு துணையாக மருத்துவம் தான் பார்க்க போறான் அவன் என் தொழிலுக்கு தான் வாரிசாக்கும்” என்று சிரித்தார் சுசிலா..

இதே மாதிரி கொஞ்சம் நேரம் வம்பிலுத்த பின், ராம் ஒரு முடிவுக்கு வந்தவராக,

“சரி சரி.. சுசி.

ஒரு முடிவு சொல்றேன்..

ஆதி என் தொழில பார்க்கட்டும்.. உனக்கு வாரிசாக உன் தோழிக்கிட்ட சொல்லி இன்னொரு குட்டி ஜானகியை ரெடி பண்ண சொல்லு ..

அவ ஆதி வந்தபிறகு என்னை கண்டுக்கறதே இல்லை “என்று ஜானகியை பார்த்து கண்ணடித்தார்..

இதை கேட்டதும் ஜானகியின் முகம் சிவந்தது..

“என்ன பேச்சு இது “ என்று ராமை முறைத்தாள்..

ஜானு , நான் வேனா ஆதியை பார்த்துக்கறேன். நீ என் அண்ணனை கவனி. பாரு, ரொம்ப இளைச்சு போய்ட்டார் “ என்று நக்கலாக சிரித்தார் சுசிலா..

“கவனிக்கறது தானே.. நல்லாவே அண்ணன், தங்கை இரண்டு பேரையும் கவனிச்சிடலாம்” என்று சுசிலாவின் காதை திருகினார் ஜானகி..

இதே மாதிரி தான் எப்பவும் சிரிப்பும் சந்தோஷமாக இருக்கும் கடந்த மூன்று வருடம் வரை.. அந்த ஷ்வேதா வரும் வரை...

இருவரின் நினைவுகளும் கடந்த காலத்தை தழுவி மீண்டு வந்தது..

அந்த சிரிப்பு, சந்தோஷம் எல்லாம் போய்விட்டது என்று பெருமுச்சு விட்டனர் இருவரும்..

சுசிலா இப்பொழுது ரொம்ப பிஷியாக இருப்பதால் முன்பு மாதிரி அடிக்கடி ஜானகி வீட்டிற்கு செல்ல முடிவதில்லை. தினமும் அல்லது நேரம் கிடைக்கும் பொழுது எல்லாம் போனில் பேசுவதோடு சரி... ஆதி தினமும் அழைத்து பேசிவிடுவான்..

ஜானகி மாதம் ஒரு முறை தவறாமல் இங்கு வருவது சுசிலாவை பார்க்க.. அவரிடம் பேசினாலெ இழந்த சக்தி எல்லாம் திரும்ப வந்து விடும் ஜானகிக்கு.. கவலை எல்லாம் தற்காலிகமாக மறைந்துவிடும்..

அதற்காகவே ஒவ்வொரு சஷ்டி அன்றும் கடைசி அப்பாய்ன்ட்மெண்ட் வாங்கி வைத்து விடுவார் ஜானகி... சுசிலாவும் கொஞ்ச நேரம் தொழிலை ஒதுக்கி, தோழியுடன் அரட்டை அடிப்பது மனதுக்கு மகிழ்ச்சியாக இருக்கும்.. அவரும் ஜானகியை ஒவ்வொரு மாதமும் எதிர்பார்ப்பார்..

ஐம்பது வயதை கடந்து இருந்தாலும் அதே சுறுசுறுப்போடும், முகத்தில் எப்பவும் புன்னகையோடும் இருக்கும் தன் தோழியையே பார்த்து இருந்தார் ஜானகி..

“என்ன ஜானு அப்படி பார்க்கிற? “

“நீ எப்படி சுசீ எப்பவும் புல் எனெர்ஜியோட, அதே மாறாத புன்னகையுடனே இருக்க??? .”

அதை கேட்டதும் மெதுவாக சிரித்துகொண்டே,

“எல்லாம் நம் கையில் தான் இருக்கிறது ஜானு.. எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல், இருக்கிற வாழ்க்கையை அப்படியே வாழ பழகினாலே போதும்...

“என்னை விடு. நீ எப்படி இருக்க. ஆதி எப்படி இருக்கான்.. “

“எனக்கு என்ன , எப்பவும் போலவே தான் இருக்கேன்.. “

“ஏன்டி இப்படி சளிச்சுக்கிற? ஆதி ஏதாவது சொன்னானா?”

“ஆமாம்.. அவன் சொல்லிட்டாலும்? ..உனக்கே தெரியும் இல்ல சுசி. அவனுக்கு நான் போறதுக்குள்ள எதாவது நல்லது பண்ணி பாத்துடனும்னு எவ்வளவோ முயற்சி செய்யறேன்.. எதுக்குமே ஒத்து வரமாட்டேங்குறான்.. “

“விடு ஜானு .. அந்த ஷ்வேதாவால அவன் ரொம்ப காயப்பட்டிருக்கான்.. அவன் காயம் ஆற வரைக்கும் கொஞ்சம் பொறுமையா இரு “

“இன்னும் எத்தனை வருசத்துக்கு பொறுமையா இருக்கறது சுசி.. நானும் இவன் மாறுவான் மாறுவானு மூனு வருஷமா காத்திட்டுருக்கேன்.. ஒரு முன்னேற்றமும் இல்லை.. இன்னும் அதே பழைய கோபத்தோட வே தான் இருக்கான்..

இவன் காயம் ஆற நான் பொறுத்திருக்கலாம்.. ஆனால் காலம் பொறுத்திருக்குமா? இப்பவே முப்பது வயது முடிய போகுது.. வயசு ஆயிடுச்சுனா அப்புறம் யார் இவனை கல்யாணம் பண்ணிப்பா சொல்லு? “

“அதுக்காக அவனை கட்டாய படுத்த முடியாது ஜானு.. அவன் ஒன்னும் சின்ன குழந்தை இல்ல.. மூழ்க இருந்த ராம் அண்ணா பிசினஸ் ஐ மீட்டு எடுக்க எவ்வளவு கஷ்ட பட்டிருக்கான். இவ்வளவு பெரிய பிசினஸ் ஐ மேனேஜ் பண்றவனுக்கு தெரியாதா??

பொருத்து இருந்து பார்க்கலாம். அவன் மனமும் மாறும். காலையிலயே அவனை ஏன் தொந்தரவு செய்யற?? பாவம் புள்ள.. அவன் பிசினஷை பார்ப்பானா. உன்னை சமாளிப்பானா?”

“ஓ.. அதுக்குள்ள உனக்கு அப்டேட் பண்ணிட்டானா? அப்புறம் எதுக்கு அவன் எப்படி இருக்கானு என்கிட்ட கேட்கிற.. அதான் இரண்டு பேரும் போன்லயே செல்லம் கொஞ்சுறீங்களே” என்று முறைத்தார் ஜானகி...

“ஹி ஹி.. உனக்கு ஏன்டி பொறாமை...நான் வளர்த்த ஆதி.. நாங்க எப்ப வேணும்னாலும் பேசுவோம்...”

“உன்கிட்ட கோபமா பேசிட்டானாம். நீ வந்தா உன்னை சமாதான படுத்தி, நல்லா செக்கப் பண்ணி அனுப்ப சொன்னான்...அடிக்கடி கவலை படுறியாம். சரியா சாப்பிடறது இல்லை என்று உன் மேல புகார்.. “ என்று புன்னகைத்தார் ..

என்னதான் கோபமாக போனாலும் , தன் மேல் எவ்வளவு அக்கறையாக இருக்கான் என்று மனம் கனிந்தது ஜானகிக்கு..

“இப்படி பட்ட நல்ல பையனுக்கு ஏன் தான் இவ்வளவு கஷ்டமோ “ என்று மனதினில் புலம்பினார்...

“கவலையை விடு ஜானு. நம்ம புள்ளைக்கு சீக்கிடம் நல்லது நடககும். ராம் அண்ணாவே ஒரு நல்ல வழி காட்டுவார்”

“நானும் அதே நம்பிக்கையில் தான் நடமாடிட்டு இருக்கேன் சுசி. பார்க்கலாம் ... “

என்று இவர்கள் பேசி கொண்டிருக்கையில் ஒரு நர்ஸ் உள்ளே வந்து

“டாக்டர், ஒரு பேசன்ட் அவசரமா உங்களை பார்க்கணும் ங்கறாங்க. நீங்க பிரியா இல்லை. கொஞ்சம் வெய்ட் பண்ணுங்க என்றாலும் கேட்க மாட்டேங்கறாங்க. இப்பவே உங்களை பார்க்கனும்னு சொல்லி அடம் பிடிக்கிறாங்க “ என்று கையை பிசைந்தாள்.

“பரவாலமா. அவங்களை அனுப்பு. நான் ஜானகியை அப்புறம் டெஸ்ட் பண்றேன்..

“தேங்க் யூ டாக்டர் “ என்று வெளியே சென்று அந்த பெண்ணை அனுப்பி வைத்தாள்.

பதட்டமாக உள்ளே வந்த பெண்ணை பார்த்ததும் ஜானகியின் முகம் மாறியது....

Comments

Post a Comment

Popular Posts

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே

என் மடியில் பூத்த மலரே

அனைவருக்கும் வணக்கம்!!!

காதோடுதான் நான் பாடுவேன்

நிலவே என்னிடம் நெருங்காதே!!

வராமல் வந்த தேவதை

பூங்கதவே தாழ் திறவாய்

தவமின்றி கிடைத்த வரமே

தாழம்பூவே வாசம் வீசு!!!

அழகான ராட்சசியே!!!