நிலவே என்னிடம் நெருங்காதே!!-12

 


அத்தியாயம்-12

திரதன் கல்லூரி படிப்பை முடித்ததும் தேவநாதன் அவனிடம் முழுப்பொறுப்பையும் கொடுத்துவிட்டார்.. ஆனால் அதிரதன் மனம் என்னவோ அதில் மகிழ்ச்சி அடையவில்லை... பெரிதாக திருப்தியடையவில்லை..

அவனுடைய கனவு தன்னுடைய தாத்தாவின் உதவி இல்லாமல் தன் சொந்த உழைப்பில்,  முயற்சியில் ஒரு மென்பொருள் நிறுவனத்தை ஆரம்பிப்பது தான்..

அதனால் தாத்தாவுக்காக , அந்த தொழிலை நம்பி இருக்கும் குடும்பங்களுக்காக டெக்ஸ்டைல் பிசினஸ் ஐ கவனித்துக் கொண்டாலும் அவனின் கனவு லட்சியம் எல்லாம் அப்படியேதான் இருந்தது...

அதை நிறைவேற்ற திட்டமிட்டான்.. அப்பொழுது மேல் படிப்புக்காக பகுதி நேர படிப்பாக அதே கல்லூரியிலேயே எம்.பி.ஏ  சேர்ந்தான்..

அப்பொழுது அவனுடன் பள்ளியில் படித்த நெருங்கிய நண்பர்கள் இருவரும் மேல்படிப்புக்காக அந்த கல்லூரியில் சேர்ந்து இருக்க அதிரதன் அவர்களுடன் தன் நட்பை விரிவாக்க, ஒரு நல்ல நண்பர்கள் வட்டம்  உருவானது..

அவர்களும் தனியாக தொழில் தொடங்க வேண்டும் என்று திட்டமிட்டு இருந்தனர்..

அதனால் எம்.பி.ஏ படிக்கும்பொழுதே ஒத்த அலைவரிசை உடைய நண்பர்கள் ஒன்றாக சேர்ந்து சென்னையில் மென்பொருள் நிறுவனத்தை ஆரம்பிக்க திட்டமிட ஆரம்பித்தனர்..  

அதிரதன் அவன் திட்டத்தை தாத்தாவிடம் சொல்லவில்லை.. அப்படி சொன்னால்  கண்டிப்பாக மறுத்துவிடுவார் என்று தாத்தாவிடம் சொல்லாமல் மறைத்து விட்டான்..

வழக்கம்போல அவருடைய தொழிலை பார்த்துக் கொண்டும் எம் பி ஏ படிப்பிலும் கவனம் செலுத்தி வந்தாலும்  கூடவே புதிதாக தொழில் தொடங்க வேண்டிய ஏற்பாடுகளையும் கவனித்துக்கொண்டான்..  

இந்த நிலையில் அவன் தாத்தாவை மேலும் வெறுக்கும் அளவில் மற்றொரு நிகழ்ச்சி நடந்தது.. அதுதான் அவனை உடனடியாக சென்னையில் தன்னுடைய சொந்த தொழிலை ஆரம்பிக்கவும் அதை தொடர்ந்து அவன் நிலா பொண்ணை சந்திக்கவும் வித்திட்டது..

அது.... அவன் தங்கை  அமுதினியின் காதல் கதை..

றுநாள் கண்விழித்த தேவநாதன் உற்சாகமாக அந்த நாளை தொடங்கினார்..  

நேற்று அவர் ஏற்பாடு செய்திருந்த வரவேற்பு விழா வெற்றிகரமாக அமைந்ததில் பெரும் மகிழ்ச்சி அவருக்கு...

அந்த விழாவிற்கு வந்தவர்கள் எல்லாரும் மணமக்களை பொருத்தமான ஜோடி,  மேட் ஃபார் ஈச் அதர் என்று புகழ்ந்துவிட்டு செல்ல அதைகண்ட தேவநாதனுக்கு இன்னுமே மகிழ்ச்சியாகி போனது..

எப்படியோ தன் திட்டம் முதல் படியில் வெற்றி பெற்றுவிட்டது என்று தன் காலரை தூக்கி விட்டுக் கொண்டார்..

அடுத்தபடியாக அவர் பேரனை இந்த திருமணத்தை ஏற்றுக் கொள்ள வைக்க வேண்டும்.. அடுத்து என்ன செய்யலாம்?  என்று யோசித்தவாறே நேற்று இரவு படுக்கையில் படுத்து நிம்மதியாக கண்ணயர்ந்தார்..

மறுநாள் கண் விழித்ததும் உற்சாகத்துடன் காலை நடையை ஆரம்பித்து சில  உடற்பயிற்சிகளையும் செய்துவிட்டு பின் வெளியில் வேலை இருப்பதாக சொல்லி கிளம்பி  சென்றார்.

அந்த ஜமீனின் புது மருமகள் நிலவினி வழக்கம் போல காலையில் எழுந்து குளித்து விட்டு கீழே வர,  அதுவரை வரவேற்பறையில் அமர்ந்து சிரித்து  பேசிக் கொண்டிருந்த பெண்கள் கூட்டம் அவளை கண்டதும் கப்பென்று அடக்கிக் கொண்டனர்..

கூடவே அவளை  பார்த்து முறைக்கவும் செய்தனர்.. ஆனால் நிலவினி அதை கண்டு கொள்ளாமல் அவர்களை  பார்த்து நட்புடன் புன்னகைத்தாள்.. அவர்கள் அருகில் சென்று பேச்சு  கொடுத்து

“நானும் உங்களுடன் சேர்ந்து கொள்ளலாமா? “ என்று சிரிக்க, உடனே அந்த நான்கு பெண்களும் முகத்தை நொடித்து  கொண்டு இருக்கையில் இருந்து எழுந்து வேகமாக அருகில் இருந்த அறைக்குள் சென்றுவிட்டனர்..

கடைசியாக அறைக்குள் சென்ற யாழினி மட்டும் ஒரு காலை எடுத்து அறைக்குள் வைத்திருந்தவள்  தன் நடையை நிறுத்தி திரும்பி தன் அண்ணியை பார்க்க அவர்கள் சென்ற இசையையே பார்த்துக் கொண்டு நின்றிருந்த நிலா,  யாழினி தன்னை திரும்பி பார்ப்பது தெரிந்ததும் மீண்டும் அவளை பார்த்து புன்னகைத்தாள்..

அதற்குள் சமாளித்துக் கொண்ட யாழினி தன் கழுத்தை தோள் பட்டையில் இடித்து நொடித்தவள்  தன் உதட்டை இருகோட்டுக்கும் இழுத்து அவளுக்கு பழிப்பு காட்டி விட்டு அந்த அறைக்குள் ஓடி விட்டாள்..

அதை கண்டதும் கோபம் கொள்ளாமல் சிரிப்புதான் வந்தது நிலாவுக்கு.. அந்த சின்ன குட்டியின்  செய்கையை ரசித்து சிரித்த படி சமையலறை  பக்கம் சென்றாள்..

அங்கு மனோகரியும்  பாரிஜாதமும் நின்றுகொண்டு காலை உணவையும் மதிய உணவுக்கான மெனுவையும் சமையல்காரரிடம் சொல்லிக் கொண்டிருந்தனர்..  

பேருக்குத்தான் மனோகரி அங்கு இருந்தார்...ஆனால் கட்டளையிட்டது எல்லாம் அவள் அன்னை பாரிஜாதம் தான்.. நிலா அங்கு செல்ல அவளைக் கண்டதும் பெரியவர்களும் வாயை மூடிக் கொண்டனர் சில நொடிகள்..

அதன் பிறகு இவளுக்காக நான் ஏன் பயப்பட வேண்டும் என்று தலையை சிலுப்பி  கொண்ட பாரிஜாதம் வழக்கம் போல ஜாடை சொல்லி நிலவினியை குத்திக்காட்டி பேச ஆரம்பித்தார்..

அவளும் எதுவும் கண்டுகொள்ளாமல் தன் அத்தையை பார்த்தவள்  

“குட்மார்னிங் அத்தை....  ஏதாவது உதவி செய்யட்டுமா? “  என்றாள் புன்னகையுடன்..

மனோகரி ஏதோ சொல்ல வரும் முன்னே பாரிஜாதம் முந்திக்கொண்டு

“அதெல்லாம் ஒன்னும் செய்ய தேவையில்லை..  எங்க வீட்டில் வேலை செய்வதற்கென்று இத்தனை வேலைக்காரர்கள் இருக்கிறார்கள்.. இது என்ன உன் வீடு மாதிரி ஒரு ஓட்ட குடிசையா?

இங்க எல்லாத்துக்கும் ஆளுங்க இருக்காங்க..  நீ ஆசைப்பட்ட மாதிரியே மகாராணி யாட்டம் மூணு வேலைக்கும் மூக்கை பிடிக்க கொட்டிகிட்டு தூங்கு..  மத்தபடி இந்த ஜமீன் நடவடிக்கைகள் எதுலயும் நீ மூக்கை நுழைக்க வேண்டாம்... “  என்று முகத்தை திருப்பினார்...

அதைக் கேட்டவள்  எதுவும் பேசாமல் தன் தோளை குலுக்கிக் கொண்டு சமையல் அறைக்கு உள்ளே சென்றவள்  சமையல்கார  பெண்மணி பொன்னி சமையல் செய்து கொண்டிருக்க

“அக்கா... எனக்கு ஒரு காபி கிடைக்குமா? “  என்று  கூலாக கேட்டாள்..  

அதைக் கண்டு பாரிஜாதம் திடுக்கிட்டார்.. அவர் திட்டியதற்கு வேற ஒருத்தியாக இருந்தாள் முகத்தை திருப்பிக்கொண்டு இந்நேரம் விடுவிடுவென்று தனது அறைக்கு சென்று இருப்பாள்..

இல்லை என்றால் திருப்பி ஏதாவது பேசி இருக்க வேண்டும்...ஆனால் இவள் எதுவும் கண்டு கொள்ளாமல் கூலாக நெஞ்சை நிமிர்த்தி கொண்டு காபி கேட்க அதை கண்ட பாரிஜாதத்திற்கு இன்னும் கொதித்தது...

அவள் ஏதாவது திருப்பி சொன்னால் அதை வைத்து ஊதி அதை பெருசாக்கி பெரும் சண்டையாக்கி விட வேண்டும் என்று திட்டமிட்டிருந்த பாரிஜாதத்திற்கு அவள் எதுவும் பேசாமல் அமைதியாக போனது சப்பென்றானது..

ஆனாலும் உள்ளே கொதிக்க, தன் மகளிடம் திரும்பியவர்

“பார் மனோ...நான் சொன்னதை எதுவுமே காதில் வாங்கிக் கொள்ளாமல் எவ்வளவு திமிரா மிடுக்காக போகிறாளே ! எல்லாம் அந்தக் கிழவன் கொடுக்கும் இடம்.. அவரை போலவே இவளுக்கும் உடம்பு  முழுக்க திமிர் போல..

ஒருவேளை என்னை  பற்றி முன்னாடியே சொல்லி இவளை தயார் படுத்தி  விட்டாரோ அந்த கிழம்.. அதனால்தான் நான் எவ்வளவு திட்டினாலும் கண்டுகொள்ளாமல் போகிறாள்..  

இருக்கட்டும் எவ்வளவு நாளைக்கு அப்படியே இருப்பாள் என்று பார்க்கிறேன்.. “  என்று உள்ளுக்குள் கொதித்தவர்  மதிய உணவிற்கான மெனுவை சொல்லிவிட்டு கையில் முந்திரி வறுவல் தட்டு, மாதுளம் ஜூஸ் ஒன்றையும் வாங்கிக்கொண்டு தன் அறையை நோக்கி நடந்தார்..  

நிலவினி தன் காபியை வாங்கிக்கொண்டு வீட்டை ஒட்டி இருந்த தோட்டத்திற்கு சென்றாள்..  

அந்த ஜமீன் வீடு கிட்டத்தட்ட இரண்டு ஏக்கரில் இருந்தது.. வீடு மட்டுமே ஒரு ஏக்கர் இடத்தை பிடித்திருக்கும்... மற்ற இடங்கள் தோட்டமாக ஆக்கியிருந்தனர்..  

அந்த ஜமீனை சுற்றி உயர்ந்த மதில் எழுப்பி வெளியிலிருந்து பார்ப்பதற்கு பெரும் கோட்டை போல இருந்தது..

வெளியில் இருந்து உள்ளே யாரும் அவ்வளவு எளிதாக வந்துவிட முடியாதவாறு பாதுகாப்புடன் கம்பீரத்துடன் நின்றிருந்தது அந்த ஜமீன்..

அங்கு இருந்த தோட்டத்தில் பல வகையான மலர்கள் பூத்துக் குலுங்கின.. அழகுச் செடிகள், குல்மொஹர் மலர்கள்,  கண்ணைப் பறிக்கும் பலவண்ண ரோஜாக்கள்  எல்லாம் அவளைப் பார்த்து அழகாக சிரித்தன...  

தன் கையிலிருந்த காபியை பருகிக்கொண்டே அந்தத் தோட்டத்தில் காலாற நடந்தாள்..  

அதிகாலை தென்றல் ஓடிவந்து அவள் மேனியை தழுவ அதில் சிலிர்த்தவள்  அங்கு இருந்த ஒரு மேடை போன்ற இடத்தில் ஏறி அமர்ந்துகொண்டு தன் இரண்டு கால்களையும் தொங்க விட்டு ஆட்டிக் கொண்டே அந்த காபியை ருசித்து பருகினாள்..

அவள் கண்கள் அந்த இடத்தைச் சுற்றி இருந்த அழகை அள்ளி பருகினாலும் அவள் மனம் என்னவோ அவளுடைய வாழ்க்கையை பற்றி எண்ணிக் கொண்டிருந்தது..

அதுவும் குறிப்பாக இனி வரப் போகும் நாட்கள்,  எதிர்கால வாழ்வை பற்றி எண்ணிக் கொண்டிருந்தது..

ஏதோ விதிவசத்தால் அந்த ஜமீனின் மருமகளான தன் நிலையை எண்ணி அழுவதா இல்லை சந்தோஷப் படுவதா என்று இன்னும் அவளுக்கு புரியவில்லை...

வெளியில் இருப்பவர்கள் எல்லாம் அவளுக்கு நல்ல வாழ்வு அமைந்து விட்டது.. ஜமீனுக்கே மருமகள் ஆகிவிட்டாள்.. இனி மகாராணி போல வாழலாம் கொடுத்து வைத்தவள்..  அதிர்ஷ்டக்காரி..  என்று என்னென்னவோ சொல்லிக் கொண்டிருந்தனர்..

ஆனால் இந்த ஜமீன் உள்ளே  இருப்பவர்களுக்கு அவள்  வருகை  வேண்டாத ஒன்றாக தெரிந்தது..

அந்த வீட்டில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை யாருக்கும் தன்னை பிடிக்கவில்லை என்று அவள் இங்கு வந்த இந்த  இரண்டு நாட்களிலயே  புரிந்து கொண்டாள்..  

மற்றவர்கள் எப்படியோ !  அவளுக்கு மூன்று முடிச்சிட்டு அக்னி சாட்சியாக அவளை மனைவியாக கரம் பிடித்தவனுக்கும்  அவளை கொஞ்சம் கூட பிடிக்கவில்லை என்பது தான் அவளுக்கு வருத்தத்தை கொடுத்தது...

தேவநாதன் தாத்தா முன்பே எல்லாம் சொல்லி இருந்தார் தான்... ஆனால் அப்பொழுது அசால்ட்டாக துணிச்சலாக அவர் வேண்டியதை ஏற்றுக் கொண்டாலும் அதில் இருக்கும் சவால்களை நேரில் காணும் பொழுதும் மற்றவர்களின் முக திருப்பலை அனுபவிக்கும் பொழுதும் தன் கணவனின் கோபத்தை நேரில் பார்க்கும் பொழுதும் மனதை பிசைந்தது..

அதுவும் அவன் வேற ஒரு பெண்ணை விரும்புகிறான்  என்று தெரிந்தும் தாத்தாவின் வேண்டுதலுக்காக இந்த காரியத்தை செய்ய துணிந்தது மடத்தனமோ என்று இப்பொழுது அவள் அறிவு எடுத்துக் கூறியது..  

அவள்  எடுத்த முடிவு சரிதானா என்று மீண்டும் ஆராய்ந்து கொண்டிருந்தாள்...

தன் எதிர்காலம் எப்படி இருக்கும்? யாருக்கும் வேண்டாதவளாக இந்த வீட்டில் எத்தனை நாளைக்கு தாக்கு பிடிக்க முடியும்? அதுவும் அவனை தன் கணவனை கண்டாலே  கை கால்கள் உதறல் எடுக்க ஆரம்பிக்கிறது..

“இவனை எதிர்த்து இவனை சமாளித்து தாத்தா சொன்ன அந்த காரியத்தை எப்படி நிறைவேற்றுவது? ரொம்பவும் கஷ்டம்தான்.. பேசாமல் இந்த வேசத்தை எல்லாம் கலைத்துவிட்டு எங்கேயாவது சென்றுவிடலாமா? “  என்று ஒரு நொடி யோசித்தாள்

“ஆனால் எங்கே போவது? இருந்தது ஒரே ஒரு ஒன்டி குடிசை.. அதுவும் இல்லை இப்பொழுது...” என்று பெருமூச்சு விட்டாள்..

“ஆனாலும் இந்த உலகத்தில் கோடான கோடி மக்களில் நான் ஒரு ஜீவன் வாழ வழி இல்லாமலா போய்விடும்...எப்படியாவது சமாளித்து கொள்ளலாம் தான்...

ஆனால் அவள் தாத்தா? அவருக்கு கொடுத்த வாக்கு? அவர் கண் மூடும் பொழுது அவளிடம் பெற்று கொண்ட வாக்குறுதி...?  அதை காப்பாற்றி ஆக வேண்டுமே.. இல்லை என்றால் அவர் ஆத்மா சாந்தி அடையாது...

கூடவே தேவநாதன் தாத்தாவும் என் மீது பெரும் நம்பிக்கை வைத்திருக்கிறார்.. அவருடைய நம்பிக்கையையும் பொய்யாக்க கூடாது...”

எப்பவும் பிரச்சனையை  கண்டு ஓடி ஒளியக்கூடாது.. தைர்யமாக எதிர்த்து நிக்க வேண்டும்.. என்று தேவநாதன் தாத்தா சொன்னதாக அவள் தாத்தா அடிக்கடி அவளிடம் சொல்லி வந்திருந்தார்...

அது அவள் மனதில் அப்படியே பதிந்துவிட,

“ஹ்ம்ம்ம்ம்ம் நடக்கறது நடக்கட்டும்...ஆட்டத்தில் களம் இறங்கியாச்சு.. இனி ஜெயித்தாலும் தோற்றாலும் ஆடித்தான் பார்க்கவேண்டும்.. ஆடாமலயே நாம் தோத்துவிடுவோம் என்று  பின் வாங்குவது கோழைத்தனம்.. “ என தனக்குத்தானே அறிவுறுத்தி கொண்டவள் ஒரு பெருமூச்சை இழுத்து விட்டு அமர்ந்து இருந்த அந்த  மேடையில் இருந்து லாவகமாக கீழ குதித்து அந்த தோட்டத்தை சுற்றி பார்க்க ஆரம்பித்தாள் நிலவினி....

ன்று மதியம் அனைவரும் உணவு மேஜையில் கூடி இருக்க, வெளியில் சென்றிருந்த தேவநாதனும் வீட்டிற்கு வந்திருந்தார்..

வீட்டிற்கு வந்தவர் கை கால் அலம்பிவிட்டு உணவு மேஜைக்கு சென்று அவருடையை இருக்கையில்  அமர, அவரை அடுத்து இருந்த அதிரதன் அமரும் இருக்கை காலியாக இருந்தது.. அதற்கு அடுத்த இருக்கையில் நிலவினி அமர்ந்து இருந்தாள்..

யாரும் அவளை சாப்பிட அழைக்கவில்லை என்றாலும் தாத்தா வந்தால் தன்னை தேடுவார் என்று அவளாகவே வந்து அமர்ந்து இருந்தாள்...

அனைவரையும் ஒரு முறை பார்த்தவர்

“நிலா.. இங்க வந்து உட்கார் மா.. “ என்று அருகில் காலியாக இருந்த இருக்கையை காட்டினார் தேவநாதன்..

“இல்ல தாத்தா.. அவர் திடீர்னு வந்தா  நான் அவர் இருக்கையில் அமர்ந்து இருப்பதை கண்டு அவருக்கு கஷ்டமா இருக்கும்.. அதுவும் இல்லாமல் இது எப்பவும் உங்க பேரன் இருக்கையாகவே இருக்கட்டும்.. நான் அதற்கு அடுத்த இந்த இருக்கையிலயே அமர்ந்து கொள்கிறேன்... “ என்று  நாசுக்காக மறுத்தாள்..

உள்ளுக்குள் அவள்  தாத்தாவின் அருகில் அமர்வது அவனுக்கு பிடிக்கவில்லை.. தேவை இல்லாமல் அவனை டென்சன் படுத்துவானேன்.. என்று எண்ணியே அவன் இருக்கையில் அமராமல் தவிர்த்தாள்..

அவள் எண்ணத்தை புரிந்து கொண்ட தேவநாதனும் உள்ளுக்குள் அவளை மெச்சி கொண்டார்..

பணியாள் உணவை பரிமாற, அப்பொழுதுதான் நினைவு வந்தவராக

“ஆமா நிலா.. உன் புருஷன் எங்க போனான்? “ என்றார் நிலவினியை பார்த்து..

ஒரு வாய் உணவை எடுத்து வாயில் வைத்தவளுக்கு புரை ஏறியது...

அவனை நேற்று ரிசப்ஷன் முடிந்து வீட்டுக்கு வந்த பொழுது பார்த்தது.. அதற்கு பிறகு அவள் அறைக்கு சென்று உடை மாற்றி அசதியாக இருக்க தன் படுக்கையை விரித்து படுத்து விட்டாள்...

அவன் எப்பொழுது அறைக்கு வந்தான் என்று தெரியவில்லை.. அதே போல காலையில் அவள் கண் விழித்த பொழுதும் அவன் அங்கு இல்லை..அதற்கு பிறகு அவனை பார்க்கவே இல்லை...

திடீரென்று தாத்தா கேட்கவும் என்ன சொல்வது என்று புரியாமல் திருதிருவென்று முழித்தாள்..

“என்னமா உன் புருஷன் உன்கிட்ட எதுவும் சொல்லலையா? இனிமேல் அவன் எங்க போறான் எங்க வர்றான் னு எல்லா தெரிஞ்சு வச்சுக்கணும்.. என்ன புரிஞ்சுதா? “  என்று லேசாக அதட்டியவர் தன் மகன் பக்கம் திரும்பி

“என்ன மாறா.. ரதன் அதுக்குள்ள ஆபிஸ்க்கு போய்ட்டானா? நான்தான் இன்னும் ஒரு வாரத்துக்கு ஆபிஸ் பக்கம் வரவேணாம்னு  சொல்லி இருந்தேனே.. அப்புறம் எதுக்கு போனான்? “ என்று அதட்டினார்...

“இல்லப்பா அவன் ஆபிஸ்க்கு போகலை.. “ என்றார் தயக்கத்துடன் நெடுமாறன்...

“ஹ்ம்ம்ம் ஆபிஸ்க்கும் போகாமல் எங்க போனான் இந்த தடிப்பயல்? “ என்று யோசித்தவாறு தன் பேத்திகளின் பக்கமாக திரும்பினார்...

அதே நேரம் யாழினி ஏதோ சொல்ல வர, அவள்  அக்கா அமுதினி  கண்ணால் ஜாடை காட்டி எதையோ சொல்லி மிரட்டி  கொண்டிருந்தாள்..

நொடிப்பொழுதில்  பேத்திகளின் பார்வை பரிமாற்றத்தை புரிந்து கொண்ட தேவநாதன் யாழினியை  நேராக கூர்ந்து பார்த்து

“நீ சொல்லுடா  யாழி குட்டி... உன் அண்ணன் எங்க போனான் ? “  என்றார் சிரித்தவாறு

அவள் பார்வை  மீண்டும் தன் அக்காவிடம் சென்றது... அப்பொழுதும் அமுதினி ஜாடை சொல்லி சொல்ல வேண்டாம் இன்று கண்களால் மிரட்டினாள்..

தன் சின்ன பேத்தியின் தயக்கத்தையும் அவள் பார்வை சென்ற இடத்தையும் கண்டு கொண்ட அந்த  பெரியவர் தன் பெரிய பேத்தியை நேராக பார்த்து

“அம்மு குட்டி... உனக்கு தெரியும் தானே.. எங்க நீ சொல்லு பாக்கலாம்.. உன் அண்ணன் எங்க போனான்? “  என்று தன் பெரிய பேத்தியை பார்த்து கேட்டார்..

தன் தாத்தாவின் பார்வையை எதிர்கொண்டவளுக்கு நடுங்க  ஆரம்பித்தது.. அவள்  உதடுகள் தந்தி  அடிக்க ஆரம்பித்தன..

தன் தங்கையிடம் எளிதாக தன் அண்ணனை பற்றி  சொல்லவேண்டாம் என்று மிரட்டியவள்  தன் தாத்தாவிடம் அதை செயல்படுத்த முடியாமல் திணறினாள்..

தன் தாத்தாவின் நேர் பார்வைக்கு அடிபணிந்து

“அது வந்து தாத்தா...அண்ணன் காலையில் எழுந்ததும் சென்னைக்கு போய் விட்டான்..”  என்று உண்மையை மறைக்காமல் அப்படியே உளறி விட்டாள்..

அதை கண்ட யாழினி தன் அக்காவை பார்த்து முறைத்து பின் வாயில் கைவைத்து நமட்டு சிரிப்பு சிரித்தாள்..

பேத்தியிடம் உண்மையை வரவழைத்த தன் திறமையை மெச்சி கொண்டவர் தன் மீசையை தடவிக் கொண்டே குறுநகை புரிந்தவர்  தன் சின்ன பேத்தி யாழினியை பார்த்து கண்சிமிட்டி சிரித்தவர்  அடுத்த நொடி முகத்தை இறுக்கி  கொண்டார்...

“யாரை கேட்டு இந்த பய சென்னைக்கு போனான்..? கல்யாணம் கட்டினவளை இங்கே விட்டுவிட்டு அவனுக்கு அங்க என்ன வேலை? “  என்று தன் மருமகள் மனோகரியை  கோபமாக பார்க்க,  அவரும் லேசாக நடுங்கியவாறு

“எனக்கு ஒன்னும் தெரியாது மாமா.. அதி என்கிட்டயும் எதுவும் சொல்லிக்கல..  நான் தூங்கிக்கிட்டு இருக்கப்பவே கிளம்பிட்டானாம்..  இவங்க ரெண்டு பேரும் வெளியில் வந்ததால் இவர்களிடம் சொல்லிவிட்டு சென்றிருக்கிறான்.. “  என்று தயக்கத்துடன் இழுத்தார்..

“ஒருத்தன் வீட்ல எப்ப எழுந்திருச்சு எப்ப வெளில போறானு அவனை  பெத்தவளுக்கும் தெரியல அவனை கட்டினவளுக்கும் தெரியல..

அப்புறம் ஏன் இந்த தடிப்பய இப்படி வீட்டுக்கு அடங்காமல் சுத்த போக மாட்டான்.. “ என்று மனோகரியையும் நிலவினியையும் பொதுவாக பார்த்து முறைத்து  சொன்னவர்

“இருக்கட்டும்... அவனை நான் கவனிச்சுக்கறேன்..” என்று மீசையை நீவி விட்டவாறு தட்டை பார்த்து சாப்பிட ஆரம்பித்தார்...

நிலா சாப்ட்வேர் அன்ட் சொலுயூசன்ஸ்.. “ என்று பெயரிட்டிருந்த அந்த அலுவலகத்தின் எம்.டி அறையில் அமர்ந்திருந்தான் அதிரதன்...

அவன் முன்னால் அவன் கையெழுத்து இடவேண்டிய பைல்கள் மலைபோல அடுக்கி வைக்கபட்டிருந்தன..

கடந்த நான்கு நாட்களாகத்தான் அவன் அலுவலகத்துக்கு வந்திருக்கவில்லை.. ஆனாலும் அதற்குள் அவன் கையெழுத்துக்காக காத்திருந்த பைல்கள் தேங்கி விட்டன...

ஏற்கனவே அந்த பைல்களின் விவரங்கள் அவனுக்கு மின் அஞ்சலில்  வந்திருக்க கோயம்புத்தூரில் இருந்து சென்னை விமானத்தில் வரும்பொழுது அதையெல்லாம் பார்வையிட்டு விட்டான்..

நான்கு நாட்கள் அவனுடைய தாத்தாவின் உருட்டல் மிரட்டலுக்கு பணிந்து அந்த ஜமீனில் தங்கி இருந்தவனுக்கு அதற்கு மேல் அங்கு தங்க முடியவில்லை.. முடியவில்லை என்பதைவிட பிடிக்கவில்லை என்றுதான் அவன்  மனம் உரைத்தது...

அந்த ஜமீனில் இருக்கும் ஒவ்வொரு நொடியும் அவனுக்கு மூச்சு முட்டுவது போல இருந்தது..

அதனாலேயே காலையில் எழுந்ததும் குளித்து முடித்து கிளம்பியவன் யாரிடமும் சொல்லாமல் நேராக  கோயம்புத்தூர் வந்து அங்கிருந்து விமானத்தில் சென்னைக்கு ஓடி வந்து விட்டான்..  

அதிரதன் சென்னை அவசரமாக  வந்ததற்கு இரண்டு முக்கிய காரணங்கள்..

ஒன்று அலுவலக வேலை.. அவன்  கையெழுத்திட வேண்டிய பைல்கள் இருந்தாலும் அதைவிட முக்கியமாக இன்று வரும் க்ளைன்ட் விசிட்..

அந்த நிறுவனத்திற்கு புது ப்ராஜெக்ட் கிடைக்க போகிறது... அதிரதன் தான் ஆரம்பத்தில் இருந்து அந்த க்ளைன்ட் இடம் பேச்சு வார்த்தை நடத்தி வந்தான்..

அவர்களுக்கு வேண்டிய தகவல்களை அளித்தும் அவன் நிறுவனத்தின் சேவைகளை பற்றி விளக்கிக் கூறியும் இருந்ததால் அவனுடைய ஆளுமையான குரலும் நுனிநாக்கு ஆங்கிலமும் அந்த க்ளைன்ட் ஐ  தலையாட்ட வைத்தது..

அதிரதன் ஒப்பந்தம் தயார் பண்ணி அனுப்பி இருந்தான்.. இன்று அந்த க்ளைன்ட் அவனுடைய அலுவலகத்தை நேரில் பார்த்து ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதாக இருந்தது..

அதனாலயே அவன் நண்பர்கள் முடிந்தால் அவனை வரசொல்ல, அதை சாக்காக வைத்து கொண்டு கிளம்பி விட்டான்...

இன்னொரு காரணம் அவனுடைய நிலா பொண்ணு...

அவளை பார்த்து இன்றோடு நான்கு நாட்கள் ஆகி விட்டன..இனிமேல் அவளை பார்க்காமல் இருக்க முடியாது என தோன்ற உடனே கிளம்பி விட்டான்.. 

அவளை பார்ப்பதும் கூடவே அவனுடைய தாத்தாவின் சதி வேலையான தன்னுடைய அவசர திருமணத்தை பற்றி எடுத்து சொல்லி அவளை கவலை இல்லாமல் இருக்க சொல்ல வேண்டும்..

தன் தாத்தாவின் சதியை முறியடிக்க அவன் திட்டமிட்டிருந்த அவனுடைய திட்டத்தை அவளிடம் விளக்கி கூறிவிட வேண்டும் என்ற தவிப்பும் இருந்ததால் எதுவும் யோசிக்காமல் காலையில் கிளம்பி வந்து விட்டான்..

அவனுடைய நண்பன் அபினவ் விமான நிலையத்திலயே வந்து அவனை பிக்கப் பண்ணி கொள்ள, நேராக அலுவலகத்துக்கு வந்து அங்கேயே குளித்து முடித்து காலை உணவையும் அலுவலக கேண்டினிலில்  சாப்பிட்டுவிட்டு தன் வேலையை பார்க்க ஆரம்பித்தான்...

மாலைதான் அவன் நிலா பொண்ணை சென்று பார்க்கவேண்டும்.. அவளிடம் இன்று மாலை வருவதாக சொல்லி இருந்தான்..

அதனால் தேங்கி இருந்த வேலைகளை முடிக்கவும் மதியம் வர இருக்கும் க்ளைன்ட் ஐ ரிசிவ் பண்ண தயாராக வேண்டும் என்று திட்டமிட்டு பம்பரமாக சுழன்று கொண்டிருந்தான்....

அவன் திட்டமிட்டபடியே எல்லாம் போய் கொண்டிருந்தது..

மதியம் வந்த க்ளைன்ட் அதிரதனை சந்தித்து பேசி விட்டு அலுவலகத்தை சுற்றி பார்த்து விட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்துவிட்டு திருப்தியுடன் கிளம்பி சென்றனர்..

அதற்கு பிறகு சில மீட்டிங்.. மற்ற சில பைல்கள் என நேரம் றெக்கை கட்டி பறந்தது..

மாலை ஆறு மணி அளவில் எல்லா வேலையும் முடிந்திருக்க கை விரலை நீட்டி நெட்டி முறித்து கழுத்தை இருபக்கமும் ஆட்டி சொடக்கு போட்டான்...

அதே நேரம் அந்த அறைகதவை திறந்து கொண்டு உள்ளே வந்தான் அவன் நண்பன் மற்றும் அந்த நிறுவனத்தின் மற்றொரு உரிமையாளன் அபினவ்...

“டேய்.. அதி... உன் மொபைல் ஐ இன்னும் நீ ஆன் பண்ணலையா? சது  உன் மொபைலுக்கு ட்ரை பண்ணிகிட்டிருக்கா டா.. நீ ஆப் பண்ணி வச்சிருக்கவும் என் மொபைலுக்கு அடிச்சா... நீ உன் மொபைலை ஆன் பண்ணி அவ கிட்ட பேசு... " என்று சிரித்தவாறு அறைகதவை சாத்திவிட்டு சென்றான்..

அப்பொழுதுதான் அவன் நிலா பொண்ணு ஞாபகமே வந்தது அவனுக்கு.. அவசரமாக கையை திருப்பி மணியை பார்க்க மணி ஆறு என காட்டியது..

“ஓ மை காட்.. ஆறு மணிக்கு அவளை பார்க்க வர்றேனு சொல்லி இருந்தேனே... மறந்தே போய்ட்டேன்.. “ ..என்று தலையில் தட்டி கொண்டவன் அவசரமாக தன் பெர்சனல் அலைபேசியை உயிர்பித்தான்...

உடனேயே பல மிஸ்ட் கால்கள் வந்து குவிந்தன.. அவன் வீட்டில் இருந்தும் பல அழைப்புகள்.. அவசரமாக அதை பார்வை இட்டவன் அவன் தாத்தாவிடமும்  இருந்து அழைப்பு வந்திருக்க அதை பார்த்து ஒரு குரூர புன்னகை அவன் இதழ்களில்...

அவரை ஜெயித்துவிட்ட ஒரு திருப்தி... பார்வை வேகமாக தாவி நிலா பெயரை பார்த்ததும் உதட்டில் தானாக புன்னகை வந்து ஒட்டி கொண்டது..

கிட்டதட்ட 100 மிஸ்ட் கால்கள் வந்திருந்தன அவளிடமிருந்து..

அவள் அழைத்தும் அவன் எடுக்கவில்லை என்று தெரிந்து,  திரும்ப திரும்ப அழைத்திருக்கிறாள்...

அவனை காணாமல் அவளுக்கு அவ்வளவு தவிப்பு என்று புரிய பெருமையாகவும் கர்வமாகவும் இருந்தது அவனுக்கு..

உடனே கைகள் தானாக அவள் எண்ணை அழைக்க முயல அதே நேரம் அதே எண்ணில் இருந்தே அழைப்பு வந்தது அவனுக்கு...ஒரு முறை அடித்ததிலையே அந்த அழைப்பை ஏற்று காதில் வைத்த உடனேயே

“ஹாய் பேபி.... ஹௌவ் ஆர் யூ ? “ என்ற கொஞ்சலுடன் ஒலித்தது அவளின் குரல்....

“ஹாய் ஹனி... ஐம் நாட் பைன் வித்தவுட் யூ.. “ என்றான் குறும்பாக சிரித்தவாறு...

“2020 க்ரேட் லை இதுதான் பேபி... என் ஞாபகமே இல்லை உங்களுக்கு.... காலையில் வந்ததும் என்னை வந்து பார்க்காமல் உங்களுக்கு ஆபிஸ் தானே முக்கியமா போய்டுச்சு... இப்ப மட்டும் இப்படி ஒரு டயலாக்.. “ என்று சிணுங்கினாள் முறைத்தவாறு...

“ஹா ஹா ஹா....வாட் டு டூ டார்லிங்... பெரிய பிசினஸ் மேன் ஆகணும்னா கொஞ்சம் தியாகமும் பண்ணித்தான் ஆகணும்... “ என்று அவளை சமாதான படுத்த  முயன்றான் அதிரதன்...

“ஹ்ம்ம்ம்ம்ம் நல்லா பேசுங்க... சரி.. எப்படி இருக்கா உங்க பொண்டாட்டி? “ என்றாள் சிரித்தவாறு...

அதை கேட்டு திடுக்கிட்டான் அதிரதன்...

அப்பொழுதுதான் அவனுடைய திருமணம் விசயம் மண்டையில் உறைத்தது.. கூடவே அவள் பொண்டாட்டி என்கவும் தானாக நிலவினியின் முகம் கண் முன்னே வந்தது.. அதில் இன்னும் திடுக்கிட்டவன்

“இவளுக்கு எப்படி தெரிந்தது என் கல்யாண விசயம்? “  என அவசரமாக யோசித்தான்..

“அபிக்கு கூட தெரியாதே...மேலும் இங்கு சென்னையில் இருக்கும் என்னுடைய நண்பர்கள்  யாரிடமும் நான் சொல்லவில்லையே.. அப்புறம் எப்படி? “  என்று அவசரமாக ஆராய்ந்தான்..

"என்ன பேபி..சைலன்ட் ஆகிட்ட.... வர வர அடிக்கடி இப்படி சைலன்ட் ஆகிடற.. திஸ் இஸ் நாட் ஃபேர்... " என்று சிணுங்கினாள்..

“நிலா.... நீ என்ன கேட்ட? " என்றான் தவிப்புடன்...

"ஹா ஹா ஹா அதுக்குள்ள மறந்து போச்சா... உங்க பொண்டாட்டி எப்படி இருக்கானு கேட்டேன்.. அவளுக்கு உங்களை என்கிட்ட அனுப்ப மனம் வந்துச்சா.. இல்லை இன்னும் புடிச்சு வச்சுகிட்டாளா? “ என்றாள் சிரித்தவாறு..

அதை கேட்டு இன்னும் அதிர்ந்து போனவன்

“நீ என்ன சொல்ற ஹனி? “ என்றான் உள்ளுக்குள் சிறு உதறலுடன்..

“ஐயோ... என் மக்கு பேபி.. நான் உங்க ஆபிஸ் பொண்டாட்டியை சொன்னேன்.. நீங்கதான அடிக்கடி சொல்வீங்களே.. ஆபிஸ்தான் உங்க பர்ஸ்ட் ஒய்ப் னு.. அதே மாதிரி காலையில் சென்னை வந்ததும் அவளை பார்க்கத்தானே ஓடோடி போனிங்க..

அதான் கேட்டேன்...இப்பயாவது இந்த சின்னவீடு  என் ஞாபகம் வந்ததா?  “ என்று கிளுக்கி சிரித்தாள்..

அதை கேட்டு “ஊப்.. “ என்று நிம்மதி மூச்சு விட்டவன்

“ஹா ஹா ஹா.. இப்பவும் என்னை விடாமல் பிடித்து வைத்திருக்கிறாள் தான் ஹனி.. ஆனால் இதற்கு மேல் என்னால் என் நிலா பொண்ணை பார்க்காமல் இருக்க முடியாதுனு ஸ்ட்ரிக்ட் ஆ சொல்லிட்டேன்.. அதனால் போனால் போகட்டும் னு விட்டுட்டா...

நான் இப்ப கிளம்பிகிட்டிருக்கேன் டார்லிங்... இன்னும் ஒரு மணி நேரத்தில் உன் ப்ளாட்டுக்கு வந்திடறேன்... நீ வீட்லதான இருக்க... “ என்று ஒரு முறை கன்பார்ம் பண்ணி  கொண்டவன் அழைப்பை அணைத்தான்..

பின் அந்த அறையிலயே ஒட்டி இருந்த குளியல் அறைக்குள் சென்று அவசரமாக குளித்துவிட்டு வேற ஒரு இலகுவான உடைக்கு மாறியவன் அவசரமாக வெளிவந்து தன் காரை எடுத்து விரட்டினான் அவன் நிலா பொண்ணை காண...

வள் இருந்த அந்த வி.ஐ.பிக்களின் அடுக்குமாடி குடியிருப்பு பகுதிக்கு காரை விட்டவன் காரை  பார்க்கிங் ல் நிறுத்திவிட்டு லிப்டுக்கு கூட காத்திருக்காமல் படிகளில் தாவி ஏறினான் உற்சாகத்துடன்..

மனம் எல்லாம் அவன் நிலா பொண்ணை காணும் ஆவல்... இதுவரை அழுத்தி வந்த பாரம் எல்லாம் இறங்கி இருக்க அவளை காணும் ஆவலில் துள்ளலுடன் வேகமாக படியேறி சென்றான்...

அவள் வீட்டை அடைந்ததும் அழைப்பு மணியை அழுத்திவிட்டு காத்திருக்க அடுத்த நொடி கதவு திறக்க, மெலுகு சிலை போல நின்றிருந்தாள் அவன் நிலா....

மெல்லிய டிசைனர் புடவையில் கையில்லாத முன்புறம் நன்றாகவே இறங்கி இருந்த ஜாக்கெட் அணிந்து இருந்தாள்.. புடவையை தாண்டியும்  அவள் வெந்நிற வயிற்று பகுதி தெரிய, பார்ப்பவர்களை கவர்ந்து இழுப்பதாக கவர்ச்சியாக இருந்தது..

அதையும் தாண்டி அவளின் மெல்லிய வலுவலுப்பான  இடை நன்றாக தெரியுமாறு முடிந்த அளவு தாராளமாகவே அந்த புடவையை இறக்கி கட்டி இருந்தாள்..

அவளின் குட்டையான தலை முடியை இரு பக்கமும் விரித்து விட்டு முகத்துக்கு ஒப்பனை செய்து அவள் உதட்டுக்கு எடுப்பாக இருக்குமாறு லிப்ஸ்டிக் ஐ போட்டு இருந்தாள்..

கிட்டதட்ட இரண்டு மணி நேரம் செலவு செய்து அவள் ஒப்பனை செய்து கொண்டது அவளுக்கு மட்டுமே தெரியும்.. 

அவளின் வலுவலுப்பான இடையும் வாக்சின் செய்து பளபளப்பாக்கி வைத்திருந்த கைகளையும் முகத்தில் தெரிந்த அவனை காணாத ஏக்கத்தையும், அவனை கண்டதும் இமைகளை படபடவென்று கொட்டி அவனையே மையலுடன் பார்த்த அந்த மான் விழிகளையும் கண்டதும் இமைக்க மறந்து வெளியிலயே நின்று விட்டான் அதிரதன்..

தன்னை கண்டு மெய் மறந்து போதை ஏறியவனை போல நின்றவனை காண அவளுக்குள் பெருமையும் கர்வமும் தலை தூக்கியது..

“இரண்டு மணி நேரம் மெனக்கெட்டு போட்ட மேக்கப் புக்கு நல்ல பலன்தான்.. “ 

என்று உள்ளுக்குள் தனக்குத்தானே ஹை-பை கொடுத்து கொண்டவள் அவன் பார்வையில் கன்னங்கள் சிவக்க அவளும் அவனை பார்த்து மையலுடன் சிரித்து அவன் கை பிடித்து உள்ளே இழுத்தவள் கதவை  சாத்தி தாழிட்டு அடுத்த நொடி அவனை இறுக்கி கட்டி அணைத்திருந்தாள்...

நான்கு நாட்களாக அவனை காணாத ஏக்கம் தவிப்பு எல்லாம் அவளின் அந்த இறுகிய அணைப்பில் தெரிந்தது...

அவளின் இறுகிய அணைப்பில் அப்படியே கரைந்து நின்றான் அதிரதன்.. அவளின் அணைப்புக்கு ஈடும் கொடுக்கும் வகையில் அவனும் அவளை இறுக்கி அணைத்து கொண்டான்...

இதுவரை அவன் உள்ளே அழுத்தி வந்த பாரம் எல்லாம் விலகியதை போல இருந்தது... மனதுக்குள் அப்படி ஒரு நிம்மதி வந்து சேர்ந்தது..

காடு மேடெல்லாம் அலைந்து திரிந்து கடைசியில் உரிய இடத்திற்கு வந்து சேர்ந்த ஒரு நிம்மதி நிறைவு அவன் உள்ளே.. அவளை தன்னுள் புதைத்து கொள்ள வேண்டும் போல தவிக்க, இன்னும் அவளை இறுக்கி அணைத்தான்...

அந்த இறுகிய அணைப்பில் சிறிது நேரம் இருவருமே ஒருவருக்குள் ஒருவர் கரைந்து கொண்டிருக்க, பின் விழி உயர்த்தி தன் மார்பின் மீது சாய்ந்திருந்தவளை காண, அவளின் அந்த மெல்லிய ஆடையும் அவளிடம் இருந்து வந்த பெர்ப்யூமின் மணமும் அவனுள் கிளர்ச்சியை தூண்டி விட அவளை இன்னும் இறுக்கி அணைத்தவாறே அவளின் செவ்விதழை நோக்கி குனிந்தான் தாபத்துடன்...

நூல் அளவு இடைவெளிதான்.... அவன் இதழ்கள் அதன் இலக்கை அடையும் ஒரு நானோ செகண்டில் அவன் பாக்கெட்டில் வைத்திருந்த அலைபேசி அபாய சங்கை ஊதி அலறியது....

அதில் திடுக்கிட்டவன் அதை தவிர்க்க, அதுவோ விடாமல் திரும்ப திரும்ப ஒலித்தது.. அதற்கு மேல் பொறுக்க முடியாமல் எரிச்சலுடன் தன் அலைபேசியை எடுத்து அதை அணைக்க போக எதேச்சையாக திரையில் ஒளிர்ந்த பெயரை கண்டதும் திடுக்கிடான்..

அவன் தந்தை அழைத்திருந்தார்... எதுவும் முக்கியமான விசயம் இல்லை என்றால் அவனை அழைக்க மாட்டார் நெடுமாறன் ... ஏதோ முக்கியமான விசயம் என்று  உள்ளுக்குள் பதற, அவளை ஒரு கையால் அணைத்தவாறே மறு கையால்   அவசரமாக அந்த அழைப்பை ஏற்று காதில் வைத்தவன்

“ஹாங் சொல்லுங்கப்பா... “ என்றான் பதட்டமாக..

அதை தொடர்ந்து அவர் சொல்லிய செய்தியை கேட்டதும் அவனுக்கு தரை நழுவியதை போல இருந்தது...

ஒரு நொடியில் சுதாரித்தவன் தன்னுடன் அட்டையாக ஒட்டி கொண்டிருந்தவளை பிரித்து எடுத்து தள்ளி நிறுத்தியவன்

“நிலா... நான் அவசரமா கோயம்புத்தூர் போகணும்.. “ என்றான் பதட்டத்துடன்..

“ஓ.. என்னாச்சு அத்தூ.... “ என்றாள் அவளும் பதட்டத்துடனும் கொஞ்சம் ஏமாற்றத்துடனும்...

“ஹ்ம்ம்ம்ம் தாத்தாவுக்கு ஹார்ட் அட்டாக் ஆம்... ஹாஸ்பிட்டல் ல சேர்த்திருக்காங்களாம்... அப்பாதான் போன் பண்ணினார்.. நான் இப்பவே கிளம்பனும்.. சாரி டியர்.... “ என்று அவள் கன்னத்தில் மென்மையாக முத்தமிட்டு பின் மின்னலென படிகளில் தாவி இறங்கி தன் காரை அடைந்தவன் புயலென அதை கிளப்பி பாய்ந்து சென்றான் விமான நிலையத்தை நோக்கி..... 

Comments

Popular Posts

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே

என் மடியில் பூத்த மலரே

அனைவருக்கும் வணக்கம்!!!

காதோடுதான் நான் பாடுவேன்

நிலவே என்னிடம் நெருங்காதே!!

வராமல் வந்த தேவதை

பூங்கதவே தாழ் திறவாய்

தவமின்றி கிடைத்த வரமே

தாழம்பூவே வாசம் வீசு!!!

அழகான ராட்சசியே!!!