நிலவே என்னிடம் நெருங்காதே!!-20

 


அத்தியாயம்-20

ந்த வார இறுதிநாள் வெள்ளிக்கிழமை அன்று..

மென்பொருள் நிறுவனங்களில் வேலை செய்யும் பல பேர் ஆவலுடன் எதிர்பார்க்கும் நாள் வெள்ளிக்கிழமை..

அந்த வாரம் முழுவதும் மண்டை காய்ந்து தங்களுடைய டாஸ்க் ஐ முடிக்கவும் க்ளைன்ட் இடம் உரிய நேரத்துக்கு டெலிவரி பண்ண முடியாமல் ஏதோ ஒரு காரணத்தை தேடி கண்டுபிடித்து விளக்க அதில் அவன் கேட்கும் பல குறுக்கு விசாரணைக்கு அசராமல் பதில் அளித்து என்று ஓடி கொண்டிருந்தவர்கள் கொஞ்சம் நின்று மூச்சு வாங்கி கொள்ளவென கடவுளாக பார்த்து உருவாக்கியதுதான் இந்த வார விடுமுறையோ என தோன்றும்..

அதுவும் வெள்ளிக்கிழமை மாலை என்றால் அனைவரிடமுமே ஒரு  உற்சாகம் ஓடி வந்து ஒட்டி கொள்ளும்.. அன்று மாலைதான் பல ஹேப்பி ஹவர்ஸ் பார்ட்டிகள், பார்கள், திரையரங்குகள் , உணவகங்கள் என நிரம்பி வழியும்..

அப்படி எல்லாருக்கும் பிடித்த அந்த வெள்ளிக்கிழமை இரவு ஒரு பார்ட்டிக்கு அதிரதனை அழைத்தனர் அவன் நண்பர்கள்.. அவர்கள் முன்பு வேலை செய்த நிறுவனத்தில் தெரிந்த நண்பன் ஒருவனின் திருமணத்திற்கான பேச்சுலர் பார்ட்டி அது..

ஒரு பப் ல் அதை ஏற்பாடு செய்திருந்தான் அந்த நண்பன்... அபினவ் அஸ்வின் இருவரையும் அழைத்திருக்க, அவர்கள் அதிரதனையும் உடன் வரச்சொல்லி அழைத்தனர்..

அதிரதன் முதலில் மறுக்க

“டேய் அதி.. இந்த இரண்டு வருடமா எந்த ஒரு என்டெர்டெய்ன்மென்ட்ம் இல்லாமல் மாடு மாதிரி உழைத்திருக்க.. கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகிக்க டா... கூடவே இந்த மாதிரி பார்ட்டிகளுக்கு சென்று வருவது நம் தொழிலுக்கும் நல்லது..

நிறைய பேர் உடைய தொடர்பு கிடைக்கும்.. அதை வைத்து இன்னும் பெரிய அளவில் வரலாம்.. “ என்று கட்டாயபடுத்தி அவனை அழைத்து சென்றனர்..

அதிரதன் இந்த மாதிரி பார்ட்டிகளுக்கு அதிகம் சென்றதில்லை..

தொழிலில் ஒவ்வொரு வெற்றியையும் கொண்டாடும் விதத்தில் அவன் தாத்தா ஜமீன் வழக்கபடி அனைவருக்கும் விருந்து கொடுப்பார் தான்… அவர் வீட்டிலயும். சில சமயம் நட்சத்திர ஹோட்டலில் கூட விருந்து இருக்கும்..

ஆனால்  அதில் மது கட்டாயம் இருக்க கூடாது என்று தடுத்து விடுவார்  தேவநாதன்..

எல்லாரும் உல்லாசமாக இருக்கும் பார்ட்டி என்றாலும்  கூட அதை தொடக்கூடாது என்று ஸ்ட்ரிக்ட் ஆக சொல்லி விடுவார்.. அதனால் இந்த மாதிரி அவன் சென்றதில்லை..

கோயம்புத்தூரில் கல்லூரியில்  படிக்கும் பொழுது  நண்பன் ஒருவனின்  வறுபுறுத்தலால் ஒரு முறை இந்த மாதிரி பப் க்கு சென்று இருக்கிறான்..ஆனால் அதுக்கு பிறகு அவனுக்குமே அது மாதிரி இடங்களுக்கு செல்வது பிடிக்காமல் போய்விட்டது..

அதனாலயே அன்றும் அவன் நண்பர்கள் அழைத்ததற்கு முதலில் மறுத்தான்.. பிறகு நண்பர்களின் வற்புறுத்தலால் அவர்களுடன் சென்றிருந்தான்..  

முதலில் தயக்கத்துடன் உள்ளே செல்ல, அங்கு சென்ற பிறகுதான் தெரிந்தது இப்படியும் ஒரு உலகம் இருக்கிறது என்று... இப்படியும் மக்கள் என்ஜாய் பண்ணுகிறார்கள் என்று.. 

ஆர்வமாக அனைத்தையும் சுத்தி பார்த்து கொண்டிருக்க, அவன் நண்பர்கள் இருவரும் மது கோப்பைகளை கையில் எடுத்து குடிக்க ஆரம்பிக்க அதிரதனோ அதை தொடாமல் வெறும் பழச்சாற்றை பருகி கொண்டிருந்தான்..

ஆனால் கண்கள் மட்டும் அந்த இடத்தை ஆராய்ந்து கொண்டிருந்தது.. அப்பொழுது தான் அது நிகழ்ந்தது..

திடீரென்று விளக்குகள் அணைந்து விட, அந்த நேரம் அந்த பப் ன் கதவை திறந்து கொண்டு உள்ளே வந்தாள் அவள்..

அந்த இருட்டிலும் அவள் முகம் பௌர்ணமி நிலவாய் தகதகத்தது.. பளிச்சிடும் ஒரு புன்னகையோடு தன் கையில் இருந்த அலைபேசியில் இருந்த வெளிச்சத்தின் உதவியால் யாரையோ கண்களை சுழற்றி தேடி பின் கண்டு கொண்டு யாருக்கோ கை அசைத்தவாறு பளீர் புன்னகையுடன் உள்ளே வந்தாள் அவள்..

அதே நேரம் விளக்குகள் எல்லாம் உயிர் பெற்றுவிட, சற்றுமுன் வரை பளிச்சென்று இருந்த இடம் இப்பொழுது மங்களானதை போல இருந்தது..

அந்த அளவுக்கு வெள்ளை வெளேரென்று  வழவழப்பான தேகமும் தொட்டால் வலுக்கிவிடுமோ என்ற அளவில் மெலுகு சிலை போல நின்று  கொண்டிருந்தாள் அவள்..

புடவையை இப்படி கூட கட்ட முடியுமா என்று ஆச்சர்யபடும் அளவுக்கு நளினமாக கட்டி இருந்தாள்.. ஆபாசமாக இல்லாமலும் அதே நேரம் அவள் உடலின் செழிப்பான பகுதிகளை எடுத்து காட்டும் விதமாகவும் நளினமாக அணிந்திருந்தாள்..

அந்த அறையில் இருந்தவர்க்ள் எல்லார் பார்வையும் சில நொடிகள் அவளையே மொய்த்தன... எல்லாருமே ஒரு பெருமூச்சு விடுவது அதிரதனுக்கு புரிந்தது...

அந்த மெலுகு சிலையோ மற்றவர்களின் ஏக்க பெருமூச்சையும் அவளை அள்ளி பருக துடிக்கும் பார்வைகளையும் கண்டு கொள்ளாமல் யாருடனோ சிரித்து பேசி கொண்டே ஒரு கையால் தன் கூந்தலை நளினமாக ஒதுக்கி விட்டு கொண்டிருந்தாள்..

ஒவ்வொரு முறையும் அவள் கையை தூக்கும் பொழுதும் தெரிந்த வழவழப்பான இடை அதிரதனையும்  கிறங்க அடித்தது...

இந்த மாதிரி ஒரு பெண்ணை அவன் இதுவரை பார்த்ததில்லை...அவன் தாத்தா தொழிலை பொறுப்பேற்று நடத்தும் பொழுது தொழில் சம்பந்தமாக எத்தனையோ பெண்களை பார்த்து இருக்கிறான் பழகியும் இருக்கிறான்.. எத்தனையோ பெண்கள் அவனை சுத்தி வந்திருக்கிறார்கள்..

ஆனால் யாரையும் இதுவரை அவன் திரும்பி பார்த்ததில்லை.. ரசித்தும் பார்த்ததில்லை.. ஆனால் இவள்??

அவனை திரும்ப பார்க்க வைத்துவிட்டாள்...!

பார்த்ததோடு நிறுத்தி கொள்ளாமல் அவளை ரசிக்கவும் வைத்துவிட்டாளே என்று ஆச்சர்யமாக இருந்தது அவனுக்கு..

அப்பொழுது ஒரு செர்வர் கொண்டு வந்த மது கோப்பைகளில் இருந்து ஒரு கோப்பையை அவள் அனாயசமாக எடுத்து கொண்டு உதட்டில் வைத்து அதை லாவகமாக உள் இழுக்க, அதில் குவிந்த அவள் இதழ்களை கண்டதும் அவன் உள்ளே எகிறி குதிக்க ஆரம்பித்தது..

இதுவரை இப்படி ஒரு கிளர்ச்சி அவன் உள்ளே எழுந்ததில்லை.. அதுக்கு நேரம் இல்லாமல் ஓடி கொண்டிருக்க, ஒரு ஆண்மகனுக்கான அந்த உணர்வு இதுவரை அவன் உள்ளே எழுந்ததில்லை...

எப்பொழுதும் தன் தாத்தாவை முறைத்து கொண்டும் அவரை எப்படி வீழ்த்துவது என்று யோசித்து கொண்டும் பிடிக்காமலயே முன்பு அவர் டெக்ஸ்டைல் தொழிலை பார்த்து கொண்டதும் பின் சொந்தமாக தனக்கென்று ஒரு தொழிலை ஆரம்பித்து அதில் வெற்றி பெற ஓடி கொண்டிருக்க என்று இப்படி எப்பொழுதும் பிசியாக இருந்து விட, இந்த மாதிரி நின்று நிதானமாக ஒரு பெண்ணை ரசித்து பார்க்க நேரம் இருந்ததில்லை..

அப்படி தோன்றியதும் இல்லை..

ஆனால் இவளை பார்த்ததும் அந்த நொடி முழு ஆண்மகனாக எழுந்து நின்றான் அதிரதன்.. ஆணிற்கான அத்தனை குணங்களும் தலை தூக்க, இமைக்க மறந்து அந்த மெலுகு சிலையையே தாபத்துடன் ரசித்து கொண்டிருந்தான்..

இது தப்பு.. உரிமை இல்லாத ஒரு பெண்ணை இப்படி ரசித்து பார்க்க கூடாது என்று அவன் அறிவு எடுத்து கூறினாலும் அவன் ஆண் மனம் அடங்க மறுத்தது...

பச்சை பசேல் என்ற புல்வெளியை பார்த்ததும் துள்ளி குதிக்கும்  கட்டவிழ்ந்த காளையாக  பெண் வாசம் இல்லாமல் இருந்த அந்த ஆண் காளைக்கு பசும் புல்லாய் மது நிறைந்த மலராய் அவனை சுண்டி இழுக்க, மது உண்ண துடிக்கும்  வண்டாய் அவன் மனம் தவித்தது...

முயன்று  தன்னை கட்டுபடுத்தி கொண்டவன் வேற பாக்கம் பார்வையை மாற்றி கொள்ள அவன் கண்களோ அவனுக்கு அடங்காமல் அவள் பக்கமே சென்று நின்றது...

அதில் இன்னும் கிறுகிறுத்தவன் அருகில் வந்த செர்வரிடம் இருந்த மது கோப்பையில் ஒன்றை எடுத்து கொண்டு சுவைக்க ஆரம்பித்தான்..

அப்பொழுது தான் அதன் சுவையும் பிடித்து விட அவனுக்கு சொர்க்கத்திற்கே சென்ற மாதிரி ஆகிப் போனது..

சிறிது நேரம் அவளையே ஓரக்கண்ணால் ரசித்து கொண்டிருக்க, திடீரென்று அந்த மெலுகு சிலை, தேன் சுமந்த மலர் வண்டை நாடி வந்ததை போல அவன் நின்றிருந்த பக்கம் வந்தாள் அந்த  தேவதை...

அதை கண்டு இன்னும் எகிறியது அவன் மனம்...

அவன் அருகில் வந்ததும்

“ஹாய் அபி.. ஹாய் அஸ். ஹௌ ஆர் யூ கைஸ்? “ என்று அவன் அருகில் நின்றிருந்த அவன் நண்பர்களிடம் கை குலுக்கி சிரித்தான்..

அதை கண்ட அதிரதனோ இன்ப அதிர்ச்சியில் உறைந்து போய் நின்றான்..

“இந்த மெழுகு சிலை என் நண்பர்களுக்கு தெரிந்தவளா? “ என்று ஆச்சர்யமாக ஓரப்பார்வை பார்த்து கொண்டு ஸ்டைலாக அவன் கையில் இருந்த மதுவை அருந்தி கொண்டிருந்தான்..

அவளும் ஓரக் கண்ணால் அதிரதனை பார்த்தவாறே மற்ற இருவருடன் பேசி கொண்டிருக்க, அவள் தன்னிடம் பேச மாட்டாளா? தன்னிட கை குலுக்க மாட்டாளா என்று ஏக்கத்துடன் அவளையே பார்த்து கொண்டிருந்தான் அதிரதன்..

ஏனோ  தானாக சென்று  அவளிடம் வழிந்து நிக்க பிடிக்கவில்லை.. அதனால் அவளை பார்த்தும் பார்க்காதவாறு ஓரகண்ணால் பார்த்து கொண்டிருந்தான்..

அவன் நண்பர்கள் இருவரும் அவளிடம் சிரித்து பேசிய பிறகு அவள் எதேச்சையாக அதிரதனை பார்த்து புருவத்தை சுளிக்க, அதிரதனும் அவளையேதான் நேர் பார்வை பார்த்து கொண்டிருந்தான்..

அப்பொழுதுதான் நினைவு வந்தவர்களாக

“ஹே சது... இது எங்களுடைய ப்ரெண்ட்.. பேர் அதிரதன்... கோயம்புத்தூர் பக்கம் பெரிய ஜமீன் இவனுடையது... “ என்க அதை கேட்டு அவள் கண்கள் பெரிதாக விரிந்தன.

அந்த விரிந்த கண்களில் இன்னும் கவிழ்ந்து போனான் அதிரதன்..

அவன் நண்பர்கள் அடுத்து அவளை அதிரதனுக்கு  அறிமுக படுத்தினர்..

“அதி..இவ சது.... சாந்தினி... நாங்க முன்பு வேலை செய்த ஆபிஸ் ல் எங்க டீம் ல வொர்க் பண்ணினா.. இன்னும் எங்க பழைய ஆபிஸ்ல தான் இருக்கா.... “ என்று அறிமுகபடுத்த

“சா ந் தி னி... “ என்று  அவள் பெயரை ஒவ்வொரு எழுத்தாக மனதுக்குள் சொல்லி பார்த்தவன் மனம் முழுக்க இனித்ததை போல இருந்தது. அவசரமாக அதன் அர்த்தத்தை ஆராய்ந்து பார்க்க அவன் முகம் பளீர் என்று மலர்ந்தது..

“யெஸ்.. சாந்தினி என்றால் நிலா என்று  தானே அர்த்தம்.. எனக்கு பிடித்த்த அதே பெயர்... நி லா... .சிறுவயதில் இருந்த நான் காதல் கொண்டு இருந்த அதே பெயர் இவளதும்..

அப்படி என்றால் இவள்தான் என்னவளா? “  என்று  அவசரமாக யோசிக்க அடுத்த நொடி அவன் தாத்தாவிடம் சபதம் செய்து விட்டு வந்தது நினைவு வந்தது..  

எந்த காதல் உங்களுக்கு பிடிக்காதோ அதே காதலைத்தான் நான் பண்ணப்போறேன்.. உங்கள் கௌரவத்துக்கு பங்கம் வர்ற மாதிரி ஒருத்தியைத்தான் லவ் பண்ணப்போறேன்... உங்களுக்கு பிடிக்காத ஒருத்தியை இந்த ஜமீனுக்கு மருமகளாக்கி காட்டறேன்..”

என்று சபதம் இட்டு வந்தது நினைவு வந்தது..

என்னதான் அவரிடம் கோபத்தில் சபதம் இட்டு வந்திருந்தாலும் அதுக்காக உடனே காதலிக்க வேண்டும் என்று பொண்ணை தேடி அலையவில்லை அதிரதன். முதலில் தனக்கென்று  ஒரு தொழிலை அமைத்து கொள்ளவே பாடுபட்டான்.. அதனால் அந்த சபதம் இதுவரை அவன் ஆழ்மனதில் அப்படியே இருந்தது..

இன்று  அவளை அந்த மெலுகு சிலையை  பார்த்ததும் ஏனோ மனம் அந்த நாளுக்கு சென்று வந்தது.. அவரிடம் சபதம் இட்ட மாதிரி அவரை ஜெயிக்க ஒரு வாய்ப்பு வந்துவிட்டதாக உறைத்தது..

மீண்டும் ஓரக் கண்ணால் அவளை அளவெடுத்தான் அதிரதன்..

அல்ட்ரா மாடர்னாக கையில் மது கோப்பையுடன் மெலுகு  சிலை போல புடவை முந்தானையை ஒத்த மடிப்பில் விட்டிருக்க, அது அடிக்கடி  நழுவி விழுந்து அவளின் அழகை அனைவருக்கும் பறைசாற்றும் விதமாக நின்றிருந்தவளை கண்டதும் அவன் மனம் துள்ளி குதித்தது..

“கூடவே இவளை மருமகளாக அந்த கிழவர் முன்னால் நிறுத்தினால் எப்படி இருக்கும் ? அப்படியே அவர் முகம் கோபத்தில் ஜொலி ஜொலிக்கும்... அருவருப்பில் சுருங்கும்...

யெஸ்.. இது இது இதுதான் வேண்டும்.. இதுதான் நான் அவரை வீழ்த்த எனக்கு கிடைத்த ஆயுதம்.. யெஸ் இவள்தான் என் காதலி... நான் இவளை காதலிக்க போகிறேன்.. என் மனைவியாக அவர் முன்னால் கொண்டு சென்று  நிறுத்த  போகிறேன்... “ என்று துள்ளி குதித்தான்...

அவன் தன்னையே மேலிருந்து கீழாக ஆசையுடன் பார்த்து கொண்டிருக்க அதை கண்ட சாந்தினிக்கு பெருமையாகவும் கர்வமாகவும் இருந்தது..

அவன் முன்னே சொடக்கு போட்டவள்

“ஹலோ மிஸ்டர்.. இன்னும் இந்த உலகில்தான் இருக்கிறீர்களா? இல்லை வேற எங்கயாவது போய்விட்டீர்களா? “ என்று தலை சரித்து மையலுடன் சிரித்தாள்..

அதை கண்டு இன்னும் தலை குப்புற விழுந்தான் அதிரதன்..

உடனே ஒரு அசட்டு சிரிப்பை சிரித்தவன்

“இது மாதிரி ஒரு அழகான தேவதை  அருகில் இருக்கவும் எனக்கு சொர்க்கலோகத்துக்குத்தான் வந்து விட்டனோ என்று நினைத்துவிட்டேன். அப்படியே கொஞ்ச நேரம் அங்கயே தங்கி விட்டேன்... “ என்று கண் சிமிட்டி மந்தகாசமாக புன்னகைத்தான் அதிரதன்..

அவனின் கம்பீரமான தோற்றமும் அவளை கண்டதும் நெளிந்து வழியாமல் நேர் பார்வையில் அவளை பார்த்து பேசியதும் கம்பீரமாக சிரிக்கும் பொழுது பளிச்சென்று வரிசையாக நேர்கோட்டில் அடுக்கி வைத்ததை  போல இருந்த அவன் வெண் பற்களையும் அது அவன் கம்பீரத்துக்கும் இன்னும் ஒரு  தேஜஸ் ஐ கொடுக்க, அவனை  கண்டு ஒரு நொடி அசந்து நின்றாள் சாந்தினி.

அவனையே இமைக்க மறந்து பார்த்தவள்

“வாவ்.. யு ஆர் லுக்கிங் சோ ஹேன்ட்சம்.....புல் மேன்லினெஸ் “ என்று கண் சிமிட்டி மையலுடன் சிரிக்க, அப்பொழுது அவன் நண்பர்கள் மற்றொருவரிடம் பேசுவதற்காக நகர்ந்து சென்றிருக்க இவர்கள் இருவர் மட்டுமே அவ்விடத்தில்...

அவளின் பாராட்டை கேட்டதும்  

“தேங்க்யூ பார் யுவர் காம்ப்லிமென்ட்.. ஐம் ஹானர்ட் ... “ என்று  இடைவரை குனிந்து ஆங்கிலேயர் பாணியில் அவள் புகழ்ச்சியை ஏற்று கொள்ள அதில் தலை சுற்றி போனாள் சாந்தினி...

“பை தி வே.. நைஸ் மீட்டிங் யூ நிலா... யு ஆர் லுக்கிங் கார்ஜியஸ் அன்ட் சோ செக்ஸி...” என்று அதிரதன் அவளை நோக்கி கை நீட்ட, அவளும் புன்னகைத்து  திகைத்தவாறு

“நிலா?? “ என்று புருவத்தை உயர்த்தி  கேள்வியாக கேட்டவாறு அவன் கை பிடித்து குலுக்கினாள்..

அவளின் ஸ்பரிசம் பட்டதும்  அவனுள் மின்சாரம் தாக்கியதை போல இருந்தது... உடல் எல்லாம் புது ரத்தம் பாய்வதை போல ஒரு பரவசம்..

அவள் கையை விடாமல் பற்றி கொண்டு

“யெஸ்.. உன் பெயரின் அர்த்தம் அதுதான்.. எனக்கு பிடித்த பெயர் நிலா...அதனால்தான் அப்படி அழைத்தேன்...  அப்படி கூப்பிடலாம் இல்ல? “ என்று அவனும் ஒற்றை புருவத்தை உயர்த்தி  கண்களால் சிரித்தான்...

“ஓ யெஸ்... தாராளாமா கூப்பிடுங்க அதி... “ என்று மலர்ந்து சிரிக்க, அதற்கு பிறகு என்ன பேசினார்கள் என்று இருவருக்குமே தெரியாது..

அங்கு மற்றவர்கள் இருப்பதையே மறந்து போயினர் இருவரும்..

ஏதேதோ பேசி கொண்டிருந்தனர்.. அப்பொழுது நடனம் ஆடுவதற்கு ஏதுவாக படல் ஒலிக்க, ஒவ்வொருவரும் ஜோடி ஜோடியாக நடனம் ஆட ஆரம்பிக்க அவர்கள் இருவரும் ஓரமாக நின்று அதை ரசித்து கொண்டிருந்தனர்...

ஒரு ஆண் வந்து நிலாவை ஆட அழைக்க அதிரதனுக்கு திக் என்றது.. எங்கே அவள் அவனுடன் சென்று விடுவாளோ என்று அவன் மனம் வேகமாக துடிக்க ஆரம்பித்தது..

ஆனால் அவள் நாசுக்காக அதை மறுத்துவிட பெரும் நிம்மதி வந்து சேர்ந்தது அவனுள்..

ஆனால் அவள் மற்றவர்கள் ஆடுவதை ஆவலுடன் பார்த்து கொண்டிருக்க அவளும் ஆடவேண்டும் என்ற ஆசை அவள் கண்ணில் தெரிய, அவள் கண்ணில் இருந்த பளபளப்பை கண்டவன் அவள் ஆசையை பூர்த்தி செய்யும் விதமாக அவனே எதிர்பார்க்காமல்

“ஷல் வி போத் டான்ஸ் நிலா? “ என்று கண் சிமிட்டி கேட்க அவளும் ஆச்சர்யத்துடன் சம்மதம் சொல்ல, அவள் கை பிடித்து ஆங்கிலேயர் பாணியில் அழைத்து சென்றவன் அந்த மேற்கத்திய இசைக்கு தகுந்த மாதிரி நடனம் ஆட ஆரம்பித்தான்...

இதுவரை இந்த மாதிரி  அவன் ஆடியதில்லை.. அதற்கு பயின்றதும் இல்லை.. ஆனாலும் முன்பே அதில் அந்த நடனத்திக் கை தேர்ந்தவன் போல அந்த மெலுகு சிலையின் இடையை  பிடித்து லாவகமாக அந்த மேற்கத்திய இசைக்கு நடனம் ஆடினான் அதிரதன்...

முதலில் தயக்கத்துடன் பட்டும் படாமலும் அவள் இடை பிடித்திருந்த அவன் கரங்கள் விரைவில் அந்த பதுமையின்  இடையில் தாராளமாக ஊர்வலம் வர, அவளும் அதை மறுக்காமல் அனுமதிக்க, அதில் இன்னும் போதை ஏறி போனவன் இன்னும் கொஞ்சம் நெருக்கமாக அவளுடன் இழைந்து ஆட   ஆரம்பித்தான்...

சிறிது நேரத்தில் அவர்கள் நடனம் சிறப்பாக இருக்க, மற்றவர்கள் தங்கள் நடனத்தை நிறுத்திவிட்டு அந்த இருவரின் நடனத்தையும் ரசித்து பார்க்க அதில் இன்னும் ஆர்வமானவன் இன்னும் லயித்து ஆட ஆரம்பித்தான்..

அவனின் கம்பீரமான தோற்றத்துக்கு கொடி போல இருந்தவளை பற்றி ஆட, அவளுமே அவனின் கம்பீரத்திலும் ஆளுமையிலும் அவளை வளைத்து ஆடும் நளினத்திலும் தலை சுற்றி போனாள்...

அவனை மையலுடன் பார்த்தவாறு அவன் இழுத்த இழுப்புக்கு வளைந்து கொடுக்க, அதில் இன்னும் கிறங்கியவன் இன்னுமே தாராளமாக நெருக்கம் காண்பித்து ஆடினான்.. அடுத்து வந்த நிமிடங்கள் இருவருக்குமே சொர்க்கமாக இருந்தது..

தங்களை மறந்து சுற்றி இருப்பவர்களை மறந்து இருவரும் உருகி நடனம் ஆட, சிறிது நேரத்தில் அந்த இசை நின்று இருந்தது...

அனைவரும் பலத்த கரகோஷத்தை எழுப்பி ஆரவரித்து அவர்களை வாழ்த்த அவர்களோ இசை நின்றும் ஒருவரை ஒருவர்  பிரிய மனம் இல்லாமல் கட்டி அணைத்தவாறே ஒருவரை ஒருவர் கண்ணோடு கண் பார்த்தவாறு உருகி நின்றிருந்தனர்...

அவர்கள் நடனத்தை ரசித்து கொண்டிருந்த அவன் நண்பர்கள் அவன் அருகில் வந்து

“அதி..... “ என்று மெதுவாக அழைத்து அவன் தோளை தொட, அதில் விழித்து கொண்டவன் அவசரமாக அவளை விட்டு விலகினான்..

சிறு வெட்க புன்னகையுடன் அவள் முகம் நோக்க முடியாமல் தலையை குனிந்தவாறு

“சாரி...நி லா....  “ என்றான் குற்ற உணர்வுடன்....

“நோ... நோ....நோ...  இட்ஸ் வொன்டர்புல் அதி... யுவர் டான்ஸ் இஸ் அமேசிங்.. இது மாதிரி யாரும் என்னுடன் இதுவரைக்கும் ஆடியதில்லை... ஐ என்ஜாய்ட் டோட்டலி... தேங்க்யூ பார் தோஸ் ப்யூட்டிபுல் மொமென்ட்ஸ்.... “ என்று கண் சிமிட்டி சிரித்தவள் அவன் அதிர்பாராத விதமாக அவனை மெல்ல கட்டி அணைத்து அவன்  கன்னத்தில் முத்தமிட்டாள்...

அதை கண்டு தலை சுத்தி போனான் அதிரதன்.. அவளின் அந்த மென்மையான முத்தம் அவன் உடலில் மின்சாரத்தை பாய்ச்சியதை போல இருந்தது.. உடல் எல்லாம் ஒரு பரவசம்... அவனும் அவளை பார்த்து கம்பீரமாக சிரித்து பின் விடை பெற்றான்...

மறக்காமல் அவளுடைய கான்டாக்ட் எண்ணை வாங்கி கொண்டான்..

பார்ட்டியில் இருந்து திரும்பும் பொழுது அவன் நண்பர்கள் அவனை ஓட்டி எடுத்து விட்டனர்.. அதிலிருந்து அவர்கள் இருவரையும் சேர்த்து வச்சு கிண்டல் அடித்து கலாய்க்க வேறு செய்தனர்...

அதிரனும் சிறு வெட்க புன்னகையுடன் அவர்கள் கிண்டலையும் கேலியையும் ரசிக்கத்தான் செய்தான்... 

Comments

Popular Posts

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே

என் மடியில் பூத்த மலரே

அனைவருக்கும் வணக்கம்!!!

காதோடுதான் நான் பாடுவேன்

நிலவே என்னிடம் நெருங்காதே!!

வராமல் வந்த தேவதை

பூங்கதவே தாழ் திறவாய்

தவமின்றி கிடைத்த வரமே

தாழம்பூவே வாசம் வீசு!!!

அழகான ராட்சசியே!!!