பூங்கதவே தாழ் திறவாய்-20



இதழ்-20

ன்னவளை பிரிய முடியாமல் அவளை தன் கைகளில்  அள்ளி கொண்டு அவன் அறைக்குள் சென்று  கதவை மூடினான் அபிநந்தன்....

இதை எதிர்பார்த்திராத தீக்சா

“நந்தன்.. என்னது இது?? இது தப்பு.... என்னை விடுங்க...  நான் என் ரூம்க்கு போகணும்... “ என்றாள் மெல்லிய குரலில்.....

“ஹா ஹா ஹா.. இதுவும் உன் ரூம்தான் ரதி பேபி... இனிமேல்  உன்னுது என்னுது என்று எதுவும் இல்லை.. இந்த நொடியில் இருந்து உன்னுல் நான்..  என்னில் நீ..

நமக்குத்தான் கல்யாணம் ஆகிடுச்சு இல்ல.... இன்னைக்கு நம்ம பர்ஸ்ட் நைட்...அதை சிறப்பா கொண்டாட வேண்டாமா??  “ என்றவன் அடுத்த நொடி  காதலோடு அவளை இறுக்கி கட்டி அணைத்தான்..

காட்டாறு போன்ற அவன் வேகத்துக்கு அந்த பூவையளும் மயங்கி தன் நிலை மறந்து தன்னையும் இழந்தாள் அவளுடைய திடீர்  கணவனிடம்...

றுநாள் காலை கண் விழித்தவள் தன்னை யாரோ இறுக்கி அணைத்திருப்பதை உணர்ந்து திடுக்கிட்டு விழித்தாள் தீக்சா..

வேகமாக எழ முயல , அந்த வலிய கரங்கள் இன்னும் இறுக்கி கொண்டன அவளை...

திரும்பி அருகில் இருந்தவன்  முகம் பார்க்க அப்பொழுதுதான் நேற்றைய சம்பவங்கள் நினைவு வந்தன....

அவன் தனக்கு தாலி கட்டியதும் அதன் பின் நிகழ்வுகள் பின் ஹோட்டல் அறையில்  வெளியில் அவளை கையில் அள்ளி கொண்டு வந்ததும் அதற்கு பிறகு அவன் அறங்கேற்றிய தாம்பத்ய நாடகமும் நினைவு வர கன்னம் சிவந்தது தானாக...

மெல்ல நன்றாக திரும்பி பார்த்து அவனையே ரசித்து இருந்தாள் தீக்சா...  குழந்தையை போல உறங்குபவனையே மையலுடன் நோக்கினாள்...  

“ஹப்பா... என்ன பிடிவாதம்??...  முதல் நாள் பார்த்து அன்றே காதலை சொல்லி அடுத்த நாள்  தாலி கட்டி மனைவியாக்கி கொண்டு அதை நிரூபித்தும்  விட்டானே... பயங்கர பாஸ்ட்  தான்... “என்று சிரித்து கொண்டாள்...

“அப்படி என்ன சிரிப்பு ரதி பேபி... என்கிட்ட சொல்லிட்டு சிரிக்கலாம் இல்ல.. “ என்றவன் கொஞ்சம் விலகி இருந்தவளை இன்னும் தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டான்...

அவளும் அவன் மார்பில் படுத்து கொண்டு

“ஒன்னும் இல்லையே... என்றாள் குறும்பாக சிரித்தவாறு...

“ஹா ஹா ஹா நீ ஒன்னும் இல்லையே என்கிறதுலயே ஏதோ விசயம் இருக்கு...என்னனு சொல்... " என்றான் அவள் காது மடலை தன் மூக்கால் உரசியபடி..

"வந்து... நீங்க ரொம்ப பாஸ்டா  இருக்கீங்கனு நினைச்சேன்.. பார்த்து காதலித்து அடுத்த நாளே கல்யாணம் பண்ணி.. " என்று அடுத்து ஏதோ சொல்ல வந்தவள் கன்னம் சிவந்து நிறுத்தி கொண்டாள்...

அவளின் அந்த வெக்க சிவப்பை கண்டவன் இன்னும் கிறங்கி போய்

"ஹ்ம்ம்ம் மீதியையும் கன்டின்யூ  பண்ணு பேபி.. " என்றான் குறும்பாக சிரித்தவாறு.....

“மீதியா?? அவ்வளவு தான்.. " என்றாள் செல்லமாக முறைத்தவாறு..

“இல்லையே நீ சொல்ல வந்ததை வைத்து இன்னும் சென்டென்ஸ்  பில் ஆகலையே.. நான் வேணா பில் பண்ண வா...

கல்யாணமும் முடிஞ்சு பர்ஸ்ட் நைட் ம் முடிச்சிட்டான்....அவ்வளவு பாஸ்ட்...   இதான சொல்ல வந்த ??  என்றான் குறும்பாக சிரித்தவாறு..

"சீ... போங்க நந்தன்.. நீங்க ரொம்ப மோசம்.... வெளில எல்லாம் உங்களை பற்றி எவ்வளவு பெருமையா சொல்றாங்க....நீங்க இப்படி மோசமா இருக்கீங்க.." என்றாள் அவன் மீசையை பிடித்து இழுத்தவாறு...

“ஹா ஹா ஹா நான் முன்ன  சொன்னது தான் இப்பவும் ரதி பேபி.. வெளில நல்லவன்.. என் பொண்டாட்டிகிட்ட மட்டும்  நான் கேடி.. மோசமானவன்.. நாட்டி பாய்...." என்றான் அதே குறும்பு சிரிப்புடன்...

"ஐய ரொம்பத்தான்... " என்று உதட்டை பிதுக்கினாள் தீக்சா...

அதில் கிறங்கியவன், அந்த பட்டு இதழ்களை தன் கைகளால் வருடி அடுத்த நொடி தன் இதழ் கொண்டு ஜோடி சேர்த்தான்....

அதில் கரைந்தவள் இன்னும் தன் கணவனுடன் ஒன்டி கொண்டாள்....சில நிமிடங்கள் கழித்து இதழை விட்டவன்  

"இப்ப புரிஞ்சுதா?? என் கிட்ட இனிமேல் உதட்டை சுழித்தால் இந்த மோசமானவன் இந்த தண்டனைதான் கொடுப்பான்.... " என்று சிரித்தான்....

மீண்டும் ஐய என்று சொல்ல வந்தவள் அவசரமாக நிறுத்தி கொள்ள அதை கண்டு குலுங்கி சிரித்தான் அபி...

அதை  கண்டு கடுப்பானவள் அவனை கையால் அடிக்க அவள் கையை  இழுத்து  அவளை தன்னோடு சேர்த்து அணைத்து கொண்டான்....

அவன் மார்பிலயே கொஞ்ச நேரம் கிறங்கி கிடந்தவள் மெல்ல தலையை உயர்த்தி

"நந்தன்.. நாம் செய்யறது சரியா?? இப்படி யாருக்கும் தெரியாம கல்யாணம் பண்ணிகிட்டு இப்படி ஒன்னா இருப்பது சரியா?? " என்றாள் அவள் மனதில் உறுத்தி  கொண்டிருந்ததை சொன்னாள்....

"ஹ்ம்ம்ம்ம் உனக்கு என் மேல நம்பிக்கை இருக்கு இல்ல ரதி... நான் உன்னை ஏமாத்த மாட்டேனு நம்பற இல்ல... " என்றான் இடுங்கிய கண்களுடன்....

"ஐயோ.. அதெல்லாம் இருக்கு.. இல்லனா இவ்வளவு தூரம் நான் வந்திருப்பேனா?? ஏனோ தெரியல.. நாம தப்பு பண்ற மாதிரி இருக்கு..

பெரியவங்களா பார்த்து நமக்கு திருமணம் செய்து வைத்து முறையா இதெல்லாம் நடந்திருக்கலாமோனு இருக்கு....

என்னதான் அவங்க சம்மதம் கிடைத்து விடும் என்றாலும் அதுக்கு முன்னாடியே அவசர பட்டுட்டோமோனு இருக்கு.. "என்றாள் தயங்கியவாறு...அவள் கண்ணை கரித்து கொண்டு வந்தது...

அவள் கண்ணில் ஓரத்தில் இருந்த ஈரத்தை  கண்டதும் பதறியவன், அவளை தன் கையால் அணைத்தவாறு மறு கையை நீட்டி அருகில் இருந்த அலைபேசியை எடுத்தான்...

அதில் ஏதோ ஒரு எண்ணை அவசரமாக அழுத்தியவன்  மறுமுனையில் அழைப்பை ஏற்றதும்

“ஹாய் மா....குட் மார்னிங்...  “ என்றான்

அதை கேட்டு திடுக்கிட்டவள் தலைய நிமிர்த்தி  அவனை பார்க்க அவனோ  அவள் தலை முடியை  மறு கையால் வருடியவாறு அந்த அலைபேசியை ஸ்பீக்கரில் போட்டு  பேச்சை தொடர்ந்தான்..

“ஹாய் டா அபி கண்ணா.... என்ன இப்பதான் உனக்கு அம்மா ஞாபகம் வந்ததா? “ என்றார் செல்லமாக கோவித்தவாறு..

“ஹ்ம்ம்ம் என்ன பண்றது மா.. நேற்று முழுவதும் என் பொண்டாட்டியோட பிசியா இருந்தேன்... அதான் உங்களுக்கு போன் பண்ண முடியல... “என்றான் சிரித்தவாறு..

அதை கேட்டு அவன் மார்பில் சாய்ந்திருந்தவள் திடுக்கிட்டு அவனை பார்க்க அவனோ  குறும்பாக கண் சிமிட்டினான்....

தன் மகனின் குரலில் இருந்தே விசயத்தை கிரகித்து கொண்டவர்

“ஹா ஹா ஹா.. பொண்டாட்டி வந்த உடனே இந்த அம்மாவை மறந்துட்டியே கண்ணா.... எங்க புடிச்ச என் மறுமகளை...” என்றார் சிரித்தவாறு..

அதை கேட்டு இன்னும் அதிர்ந்து போனாள் தீக்சா..

அவன் சொல்லியதை வைத்து ஏதாவது அவனை திட்டுவார்  என்று எதிர்பார்க்க அவர்  கூலாக எடுத்து கொள்ளவும் ஆச்சர்யமாக விழி விரித்தாள் தீக்சா....

அதில் விழுந்தவன் ரசனையோடு தன் கையால் அவள் இமைகளை  நீவி விட்டவன்

“ஹ்ம்ம்ம் சென்னையில பிறந்து வளர்ந்து எனக்காக காத்து கிட்டிருந்தவள டெல்லியில் வச்சுதான் கண்டுபிடிக்க முடிந்தது மா... “ என்று சிரித்தான்...

“எப்படியோ...  இப்பயாவது கண்டு புடிச்சிட்டியே... எங்கடா என் பையன் கல்யாணம் ஆகாமல் சாமியாராவே இருந்துடுவானோ னு கொஞ்சம் பயமா இருந்தது....

இனிமேல் நிம்மதியா இருக்கலாம்...  சரி போன என் மறுமக கிட்ட கொடு.. “ என்றார்...

அதை கேட்டு இன்னும் அதிர்ந்து  போனாள் தீக்சா... நான் இங்கு இருப்பது எப்படி தெரியும் என்று....அதையே அபியும் தன் தாயிடம்  கேட்டான்..

“எப்படி மா கண்டு புடிச்சிங்க அவ இங்கதான் இருக்கிறானு?? “ என்றான் ஆச்சர்யமாக

ஹா ஹா ஹா நான் உன்னை பெத்தவ டா... உன்னை பத்தி எனக்கு தெரியாதா?? உன்னுடைய ஒவ்வொரு மூவ் ம் எனக்கு தெரியுமாக்கும்.. “என்று சிரித்தார்..

“சோ ஸ்மார்ட் மா... சரி இருங்க அவகிட்ட கொடுக்கறேன்..அவ பேர் தீக்சா  “  என்றவாறு போனை அவள் காதில் வைத்தான்...

அவளோ பயத்துடன் எழ முயல அவளை இழுத்து  தன் மேல் போட்டு கொண்டு இங்கிருந்தே பேசு என்றான் கண்ணால் ஜாடை செய்து...

அவளும் தயங்கியவாறு “ஹலோ.. “ என்க

“எப்படி இருக்க தீக்சா மா?? ... எப்படி என் பையன் கிட்ட மாட்டின?? “ என்று சிரித்தார்...

அவரின் இயல்பான பேச்சில் கொஞ்சம் தைர்யம் வர

“நான் நல்லா இருக்கேன் மா.. நீங்க எப்படி இருக்கீங்க? “என்றாள் தயங்கியவாறு

“எங்களுக்கு என்னமா.. சீக்கிரம் ஒரு மறுமகளை  பார்த்துட்டா போதும் னு வேண்டி கிட்டிருக்கோம்.. அப்புறம் என்னை அத்தைனு கூப்பிடு..

என் பையன் ரொம்ப நல்லவன். தீக்சா மா... நீ எதுக்கும் பயந்துக்காத.. நாங்க இருக்கோம்...” என்றார் சிரித்தவாறு..

“ரொம்ப தேங்க்ஷ் அத்தை.....சாரி.. உங்ககிட்ட கேட்காம.. “ என்று  ஏதோ சொல்ல வர,

“இருக்கட்டும் மா... என் பையன் எது செஞ்சாலும் நல்லா யோசிச்சுதான் முடிவு எடுப்பான்...

தொழில் ல ஒரு முடிவு எடுப்பதற்கே அப்படி யோசிப்பவன் எங்க மறுமகள தேர்ந்தெடுப்பதிலும் அவன் சரியாதான் செஞ்சிருப்பான்...

அவன் மேல எங்களுக்கு அவ்வளவு நம்பிக்கை... என்ன கொஞ்சம் வேகமா இருப்பான்...

எல்லாத்துலயும் அவசரம் அவனுக்கு...தான் நினைத்ததை உடனே நிறைவேற்றணும் னு துடிப்பான்...அப்படிதான் உன்னையும் கல்யாணம் பண்ணியிருப்பான் னு நினைக்கிறேன்....

அதனால் நாங்க எதுவும் தப்பா நினைக்கலை டா... நீங்க சென்னை வந்த பிறகு கிராண்ட் ஆ ரிசப்சன் வச்சுக்கலாம்....   நீயும் எதுவும் மனசுல போட்டு குழப்பிக்காத.. ஜாலியா உன் மேரேஜ் லைப் ஐ என்ஜாய் பண்ணு..” என்று சிரித்தார்...

“ஹ்ம்ம்ம் தேங்க்யூ சோ மச் அத்தை.... “ என்றாள் தெளிந்த முகத்துடன்...

“சரி டா.. எனக்கு உன்னை பார்க்கணும் போல இருக்கே.. வீடியோ கால் பண்ணவா?? “ என்றார்..

அதை கேட்டு திக் என்றது அவளுக்கு... அவள் இருந்த கோலம் கண்டு அவன் நமட்டு சிரிப்பு சிரிக்க, அவனை  செல்லமாக முறைத்து அவன் கன்னத்தை  கிள்ளினாள்...

அவனோ ஆ வென்று  அலர அதற்குள் அவன் வாயை மூடினாள் தன் கைகளால்...

மூடிய அவள் கைகளை மெல்ல முத்த மிட்டவன் அலைபேசியை வாங்கி

“மா.. அவ மேக்கப் இன்னும் சரியா போடலையாம்.. மாமியாரை முதல் முதலா பார்க்க நல்லா  மேக்கப் போட்டுத்தான் பார்ப்பாளாம்...

அதனால அவள் ரெடியானதுக்கு பிறகு  போன் பண்றேன்.. டாட் கிட்டயும் சொல்லிடுங்க..பை மா..  “ என்றான் தன் சிரிப்பை அடக்கி கொண்டு...

அவரும் புரிந்து கொண்டு

“ஹ்ம்ம் சரி டா கண்ணா... என்ஜாய் யுவர் டே..பை..  பை தீக்சா மா.. “ என்றவாறு அழைப்பை அனைத்தார்....

அவனும் போனை அனைத்து டீபாய் மேல் வைத்து விட்டு

“என்ன பொண்டாட்டி?? .. இப்ப ஹாப்பியா... உன் மாமியாரே சொல்லிட்டாங்க இந்த நாளை எஞ்சாய் பண்ண சொல்லி...அப்புறம்  உன் புருசனை நல்லா கவனிக்க சொல்லியும் தான்... “  என்றான் குறும்பாக பார்த்தவாறு...

“சீ...  போங்க நந்தன்.. இப்படியா திடீர்னு போன் பண்ணி கொடுப்பீங்க.. நல்ல வேலை அவங்க வீடியோ கால் ல  வரலை..” என்றாள் அவனை முறைத்தவாறு...

“ஹா ஹா ஹா வீடியோ கால் ல  வந்திருந்தா என்ன ஆயிருக்கும்?? “ என்றான் குறும்பாக சிரித்தவாறு...

அதில் சிவந்தவள்

“சீ... பேட் பாய்... நாட்டி பாய்... “ என்று அவனை செல்லமாக அடிக்க

“ஹா ஹா ஹா இப்ப இந்த நாட்டி பாய்  என்ண பண்றானு பார்க்கலாமா?? " என்றவன் அவள் எதிர்பாரா நேரம் அவளை இழுத்து இறுக்கி அணைத்தவன் அவள் கழுத்தில் அழுந்த முத்தமிட்டான்....

அதில் அவள் கிறங்கி போக அவனோ அவள் கிறக்கத்தில் போதை ஏறி போக   மேலும் மேலும் முத்தமிட்ட படியே முன்னேறினான் கணவனாக....

அவன் மனைவியும் இரவில் இருந்த சிறு தயக்கமும் போய் பெரியோர்கள் ஆசி கிடைத்த சந்தோசத்தில் தன் திடீர் கணவனின் முத்த மழையில்  குழைந்து உருகி அவனுக்கு வளைந்து கொடுக்க, தங்கள் தாம்பத்தியத்தின் மீதி இருந்த நாடகத்தையும் அரங்கேற்றினான் அபிநந்தன்...! 

Comments

Popular Posts

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே

என் மடியில் பூத்த மலரே

அனைவருக்கும் வணக்கம்!!!

காதோடுதான் நான் பாடுவேன்

நிலவே என்னிடம் நெருங்காதே!!

வராமல் வந்த தேவதை

பூங்கதவே தாழ் திறவாய்

தவமின்றி கிடைத்த வரமே

தாழம்பூவே வாசம் வீசு!!!

அழகான ராட்சசியே!!!