என்னுயிர் கருவாச்சி-33

 


அத்தியாயம்-33

திகாலை இளம்வெய்யில் சுள்ளென்று முகத்தில் பட, அதில் எரிச்சலடைந்தவன், தன் கண்களை சுருக்கி எரிச்சலுடன் கண் விழித்தான் ராசய்யா.

விழித்ததும் அவன் படுத்து இருப்பது, வழக்கமாக அவன் உறங்கும் கோவில் திண்ணையைப்போல அல்லாமல், மெத்தென்று இருக்க, எப்பொழுதும் போர்வை என்ற ஒன்றை பயன்படுத்தியிராதவன் மீது குளிருக்கு இதமாக போர்வையும் போர்த்தியிருக்க கண்டு ஆச்சர்யமானான்.

“அட...யாருடா இது ...நமக்கு கூட போத்தி விட்டிருக்காங்க...” என்று உள்ளுக்குள் ஆச்சர்யத்தோடு,  சுற்றிலும் பார்வையை சுழல விட, அப்பொழுதுதான் மங்கியிருந்த மூளைக்கு தெளிவு வந்தது.

அவன் படுத்திருப்பது அவன் மாமனார் வீடு என்பதும், அதைத்தொடர்ந்து நேற்றைய சம்பவமும் நினைவு வர, உடனே வேகமாக கட்டிலில் இருந்து எழுந்தான்.

அவன் எழுந்த வேகத்துக்கு, லேசாக அவன் இடுப்பில் ஒட்டிக்கொண்டிருந்த வேஷ்டி அவிழ்ந்து கீழ விழ, அந்த நேரம் அவனை எழுப்புவதற்காக வந்த மலர்க்கொடி அவன் அன்ட்ராயருடன் நிற்பதைக்கண்டு களுக்கென்று கிளுக்கி சிரித்தபடி வெளியில் ஓடிவிட்டாள்.

அவளின் சிரிப்பு சத்தம் கேட்டு வாயில் பக்கம் பார்த்தவன், மலர்க்கொடி அவனை பார்த்து கேலியாக சிரித்துவிட்டு ஓடுவதைக் கண்டு யோசித்தவாறு கீழ குனிய, அப்பொழுதுதான் அவன் வேஷ்டி அவன் காலடியில் கிடப்பதைக் கண்டான்.

தனக்குத்தானே ஒரு அசட்டு சிரிப்பை சிரித்துக்கொண்டவன், காலில்  இடறிய வேஷ்டியை  எடுத்து கட்டிக்கொண்டு அறையை விட்டு வெளியில் வந்தான்.

எப்பொழுதும் காலையில் எழுந்ததும், தன் நீண்ட கரங்களை  கழுத்துக்கு பின்னால் ஒன்றோடு ஒன்று கோர்த்து பிடித்து இழுத்து நெட்டி முறிப்பது அவன் வழக்கம்.

அதன்படி அறைவாயிலில் நின்றபடி நெட்டி முறிக்க,  அந்த நேரம் அங்கே ஓடி வந்த அன்பரசனும், மலர்க்கொடியும் அவனைப் பார்த்து வாயில் கை வைத்து பொத்திக்கொண்டு சிரித்தனர்.

அவர்கள் சிரிப்பதைக் கண்டவன்,

“ஹோய் வெள்ளச்சி...இப்பத்தான் வேட்டியை ஸ்ட்ராங்கா கட்டி இருக்கேனே..இப்ப எதுக்குடி சிரிக்கிற? “ என்று செல்லமாக முறைக்க, அவளோ இன்னுமாய் சத்தமாக சிரித்து வைத்தாள்.

அவளுடன் இணைந்து அன்பரசனும் விழுந்து விழுந்து சிரித்தான்.

“டே மச்சான்... எதுக்குடா நீயும் , உன் அக்கா சொக்காவும் இப்படி கெக்க பெக்கனு சிரிக்கிறிங்க. சொல்லிட்டு சிரிங்கடா...” என்று செல்லமாக அதட்ட, அதற்கும் இருவரும் மீண்டும் கலகலவென்று நகைத்தனர்...

பின் அன்புதான் முதலில் தன் சிரிப்பை அடக்கி கொண்டு,  

“ஏன் மாமா...ரூமை விட்டு வெளியில வர்றப்ப,  கண்ணாடிய பாத்துட்டு வர மாட்டீங்களா?” என்று மீண்டும் அவனை பார்த்து நக்கலாக சிரிக்க,

“கண்ணாடியா? அது எதுக்குடா பார்க்கணும். நம்ம மூஞ்சிதான் கண்ணாடிய பார்க்காமலயே தெரியுமே... அத வேற கண்ணாடிய பார்த்து தெரிஞ்சுக்கிடனுமாக்கும்? “ என்று கிண்டலாக சொல்ல,

“ஹ்ம்ம்ம்ம் கரெக்டுதான் மாமு. ஆனாலும் கண்ணாடிய பாத்துட்டு வந்திருந்தா இப்படி அசிங்க பட வேண்டாமில்ல...” என்று மீண்டும் சிரிக்க,

“அசிங்கமா? என்னடா அசிங்கம்? கொஞ்சம் புரியறமாதிரி சொல்லு...” என்று அதட்ட, அதற்குள் மலர்க்கொடி  சிரித்தபடி ஓடிச்சென்று பூங்கொடி வைத்திருக்கும் அந்த சிறிய முகம் பார்க்கும் கண்ணாடியை எடுத்துக் கொண்டு வந்து ராசய்யாவின் முகத்திற்கு முன்னால் நீட்டினாள் மலர்க்கொடி.

“பாருங்க மாமா...இதுக்குத்தான் இந்த சொம்பு உங்கள கிண்டல் அடிக்கிறான்...” என்று நீட்ட,  அவள் நீட்டிய  கண்ணாடியை வாங்கி  அதில் தெரிந்த அவன் பிம்பத்தை கண்டவன் தூக்கி வாரிப்போட, அப்படியே அதிர்ந்து போனான்.

அந்த கண்ணாடியில் தெரிந்த பிம்பத்தை மீண்டும் ஒரு முறை ஆழ்ந்து பார்க்க,  அவன் உதட்டில் இருந்த குங்குமத்தின் சிவப்பும்,  கன்னத்தில் லேசாக ஒட்டியிருந்த குங்குமத்தையும், சட்டையின் காலரிலும், பாக்கெட்டிலும்  ஒட்டிக்கொந்டு இருந்த மல்லிகை பூவையும்  கண்டு திடுக்கிட்டுப் போனான்.

அதெல்லாம் ஏதோ ஒன்றை அவனுக்கு உணர்த்த,

“இது எப்படி? “ என்று  அவசரமாக யோசிக்க,  அவனுக்கு எதுவுமே புரியவில்லை

அதே நேரம் கொல்லைப்பக்கமிருந்த குளியலறையில் தலைக்கு குளித்துவிட்டு, தலையில் ஒரு டவலை கட்டிக்கொண்டு,  உள்பாவாடையை நெஞ்சுக்கு மேலே வரைக்கும் தூக்கி கட்டிக்கொண்டு,  சேலையை கட்டாமல், அவள் தோளில் அள்ளி போட்டவாறு உள்ளே வந்தாள் பூங்கொடி.  

ராசய்யா அனிச்சையாய் நிமிர்ந்து அவளைப் பார்க்க,  அவளோ வெட்கப்பட்டு, கன்னம் சிவக்க, தன் உதட்டை கடித்துக்கொண்டு,  அவனை பார்த்து குறும்பாக கண் சிமிட்டி விட்டு வேகமாக அறைக்குள் ஓடி விட்டாள்.

அதைக் கண்டவனுக்கு மீண்டும் திக்கென்றது.

“இந்த கருவாச்சி எதுக்கு என்னை பார்த்து இப்படி வெட்கப்பட்டுகிட்டு ஓடறா? “என்று யோசிக்கையிலயே அவன் உதட்டில் இருந்த சிவப்பும், கன்னத்து குங்குமமும் நினைவு வர, அவனுக்கு இன்னுமாய்  குழப்பமானது.  

நேற்று இரவு என்ன நடந்தது என்று மீண்டும் ஒரு முறை நினைவு படுத்தி பார்த்தான்.

*****

நேற்று இரவு, அறையில் அவள் அவனை அறைந்ததும், அவளுடன் வாக்குவாதம் செய்ததும்   நினைவு வந்தது.  

“அதற்குப் பிறகு அவள்தான் கீழே பாயை விரித்து படுத்து விட்டாளே..!   அப்புறம் எப்படி?

எப்படி அவள் வைத்திருந்த  குங்குமம் என் மேல வந்தது.? இந்த பூ வேற? எப்படி வந்திருக்கும்? “ என்று தீவிரமாக யோசிக்க,

பிள்ளைகளின் சிரிப்பு சத்தம் கேட்டு சமையல் அறையில் இருந்து வெளி வந்த சிலம்பாய் ம் தன் மருமகன் முகத்தில் தெரிந்த கோலத்தை கண்டு வெட்கபட்டு, நாணி கோணியவாறு நமட்டு சிரிப்பை சிரித்துவிட்டு உள்ளே ஓடி விட்டார்.

அவர் ஏன் அப்படி தன்னை பார்த்து அப்படி நெளிந்தார் என்று முதலில் குழம்பினாலும், பின் தன் கையில் இருந்த கண்ணாடியை பார்த்ததும் அதற்கான காரணம் புரிந்துவிட,

“சை...இன்னும் எத்தனை பேர் என்னை பார்த்து இப்படி நக்கலாக சிரிக்க போறாங்களோ? அதுக்குள்ள போய் இத துடச்சுட்டு வந்திடலாம்...” என்று வேகமாக எழுந்தவன், கொல்லைப்பக்கம் சென்று முகத்தை நன்றாக கழுவிக்கொண்டான்.

இன்னும் வேற எங்கயாவது ஏதாவது ஒட்டி இருக்கிறதா என்று சுற்றிலும் நன்றாக தேடி பார்த்துக்கொண்டான். அதோடு சட்டையை தட்டிவிட, அதில் இருந்து இன்னும் சில காய்ந்த மல்லிகை பூக்கள் கீழ விழ, அதைக் கண்டவனுக்கு மீண்டும் திக்கென்றது.

“இது எப்படி சாத்தியம்? “ என்று யோசித்தவாறு , கொல்லைப் பக்கத்தில் இருந்த வேப்ப மரத்தில் இருந்த  வேப்பங்குச்சியை ஒடித்து பல் துலக்கியவாறு பலவாறு யோசித்து பார்த்தான்.

எப்படி யோசித்தாலும் அப்படி ஒரு சம்பவம் நடந்ததை போலவே இல்லை.

“மாமோய்...நைட் அடி பலமா? “ என்று குசுகுசுவென்று ரகசியமாய் கேட்டு  சிரித்தபடி அங்கு வந்து நின்றான்  அன்பரசன்.

தன் குட்டி மச்சானை பார்த்து முறைத்தான் ராசய்யா...

“என்னை எதுக்கு மாமு முறைக்கிற? அதான் அக்கா அடிச்ச  சத்தம் நம்ம ஊரு... இல்ல இல்ல எட்டு ஊருக்கும் கேட்டுச்சே...வெளில கேட்ட அறை சத்தத்திலயே அடி  பலமாதான் இருக்கும் னு  புரியுது...

நான் வேணா எங்க எங்க வீங்கி இருக்குனு பாத்து சொல்லவா?”   என்று வாயை பொத்திக்கொண்டு சிரித்தான் அன்பரசன்.

“சை...எல்லாம் என் நேரம். நண்டு சிண்டெல்லாம் என்னை பார்த்து நக்கல் அடிக்கிற அளவுக்கு ஆகிப்போச்சு...எல்லாம் இந்த கருவாச்சியால வந்தது.

முன்னெல்லாம் வாயாலயும், கண்ணாலயும் மிரட்டிக்கிட்டிருந்தவ...இப்ப பொசுக்கு பொசுக்குனு கை ஓங்கறா? பாவம் பொட்ட புள்ள...எதுவும் சொல்லக்கூடாதுனு தணிஞ்சு போனா ரொம்பத்தான் பண்றா?

என்று உள்ளுக்குள் புலம்பி கொண்டாலும், அந்த சின்ன பையன் முன்னால் தன் கெத்தை விட்டு கொடுக்க கூடாது என்று தன் மீசையை நீவி விட்டு கொண்டவன்,     

“ஆமான் டா... என் பொண்டாட்டி தானே அடிச்சா...இப்ப அதுக்கு என்னான்ற?  அடிக்கிற கைதான் அணைக்கும் டா மச்சான். அவளுக்கு இல்லாத உரிமையா? “  என்று தன் மச்சானின் வாயை அடைக்க, சொல்ல,

“ஹீ ஹீ ஹீ.. ஓஹோ... அப்ப அடிச்ச கையே அணைச்சுகிச்சுனு சொல்லு... நீ என்ன சொல்றது. அதான் செத்த நேரம் முன்னால, உன் மூஞ்சியே காட்டி கொடுத்துடுச்சே..

ஆனாலும் சும்ம சொல்லக்கூடாது மாமு... நீ பெரிய ஆள்தான்.

நேத்தெல்லாம் எரிமலையா பொங்கிகிட்டிருந்த என் அக்காவை,  ஒரே நைட் ல கூலாக்கிட்டியே..நீ பெரிய ஆள்தான்...” என்று கிண்டல் அடிக்க,

“டேய் சின்னவா? என்னடா இது வயசுக்கு மீறின பேச்சு பேசிகிட்டு? யார்கிட்ட இதெல்லாம் கத்துக்கிற? மாமன காப்பி தண்ணி கூட கொடுக்காம, இப்படித்தான் வம்பு இழுத்துகிட்டு இருப்பியா?” என்று தன் மகனை அதட்டியவர், ராசய்யாவை பார்த்து தன் சிரிப்பை அடக்கிக்கொண்டு,   

“அவன் கிடக்கிறான் மாப்ள... ஏதோ உளர்றான்...நீங்க சட்டுனு பல்ல வெலக்கிட்டு விரசா வாங்க. உன் அத்தை காப்பி தண்ணிய போட்டு வச்சுகிட்டு உங்கள பாத்துகிட்டு இருக்கா...”

என்று அழைத்து தன் மருமகனை அந்த வாண்டிடம் இருந்து தற்காலிகமாக காப்பாற்றினார் தணிகாசலம்..

அதே நேரம்,

“டேய் அன்பு..உன் மாமாவை உள்ள வரச்சொல்...”  என்று குரல் கொடுத்தாள் பூங்கொடி.

“மாமா... அக்கா உன்னை வரச் சொல்றா... போ.. போ...  நைட்டு விட்ட ஆட்டத்தை இப்ப ஆடறதுக்கா இருக்கும்.  பாத்து மாமா...  வெளியில் சத்தம் எதுவும் கேட்கக்கூடாது...” குசுகுசுவென்று சொல்லி சிரிக்க,

“டேய் மச்சான்...மாமா சொல்ற மாதிரி நீ வயசுக்கு மீறின பேச்சுதான்டா பேசற... கொஞ்சம் அடக்கி வாசி...இல்லைனா உன்னை நான் கவனிக்க வேண்டி இருக்கும்..” முறைத்தான் தன் மச்சானை.

“அட போ மாமா...  நானும் வளர்ந்துட்டேன் இல்ல.  அப்புறம் உன்னை கலாய்க்கிறது யாராம்? “ என்று  கிளுக்கி சிரித்தான் இளையவன்.

“என்னடா அன்பு...  இன்னும் உன் மாமா வரலையா? “  மீண்டும் பூங்கொடி அதட்டலுடன் குரல் கொடுக்க,

இதோ வந்துட்டார் க்கா... அவர் பல்லை புடுங்கோ புடுங்குனு புடுங்கிகிட்டு இருக்கார்.. “ என்று திருப்பி குரல் கொடுத்தவன்

“மாமோய்..பல்லை புடுங்கினது போதும். மீதிய நாளைக்கு புடுங்கிக்கலாம்... இப்ப முதல்ல உள்ள  போ  மாமா.  முதல்ல போய் உங்க பொண்டாட்டியைக் கவனிங்க. அப்புறம் உங்க பல்லை கவனிக்கலாம்...   அதுக்கு பொறவு  என்னை கவனிக்கலாம்... “  என்று சிரித்தான்.

அதைக்கேட்ட மற்றவர்களும் சிரித்து வைக்க,  ராசய்யாவும் சங்கடத்துடன் நெளிந்தான்.  

பின் அசட்டு சிரிப்பு சிரித்தபடி, கிணற்றில் இருந்து நீரை இரைத்து, அதில் தன் முகத்தை கழுவிக் கொண்டு, மீண்டும் அதே வேஷ்டியில் தன் முகத்தை துடைத்தபடி அறைக்கு உள்ளே சென்றான்.

உள்ளே சென்றதும் அவன் கண்ட காட்சியில் அப்படியே  உறைந்து நின்றான்.

*****

ப்பொழுது தான் குளித்து விட்டு வந்திருந்தவள், தன் தோள்மீது போட்டுக் கொண்டு வந்திருந்த காட்டன் புடவையை எடுத்து கட்ட ஆரம்பித்து இருப்பாள் போல.

அதை கட்டி முடிக்காமல், இடுப்பில் ஒரு சுற்று மட்டும் சுற்றி இருக்க, முந்தானையை ஒத்தையாய் மேல போட்டவாறு கொசுவம் மடித்துக் கொண்டிருந்தாள். 

தோளில் போட்டிருந்த முந்தானையோ , அவள் தோளில் நிக்காமல் நழுவி, மறைக்க வேண்டிய அவளின்  முன்னழகை மறைக்காமல் வெளிச்சம் போட்டு காட்டிக் கொண்டிருந்தது.

பாவாடைக்கும், ஜாக்கெட்டுக்கும் இடையிலிருந்த வெற்றிடை வேறு உள்ளே வந்தவனுக்கு பளிச்சென்று காட்சியளித்தது. .

அவளை அப்படி அரையும் குறையுமாக பார்த்து வைத்தவனுக்கு ஒரு நொடி மூச்சை அடைத்தது.

இதுவரை இந்த மாதிரி கோலத்தில் எந்த பெண்ணையும் பார்த்ததில்லை  அவன்.

அப்பொழுதெல்லாம் வீட்டில் குளியலறை என்று தனியாக இல்லாததால், பொதுவாக எல்லா பெண்களுமே ,  வாய்க்காலில்  ஓடும் நீரில், பாவாடையை நெஞ்சு வரைக்கும் தூக்கி கட்டிக்கொண்டு குளிப்பது வழக்கம்தான்.

அப்படி  பெண்கள் குளிக்கும் பொழுது,  விடலைப் பையன்கள்  அங்கே சென்று, ஆண்கள் பகுதியில் நின்று கொண்டு குளிக்கிறேன் பேர்வழி என்று போக்கு காட்டிக் கொண்டு, ஓரக்கண்ணால்  அந்த பெண்களை பார்த்து சைட் அடிப்பதை போல ஒரு நாளும் அவன் செய்ததில்லை...

எங்கேயாவது பெண்களின் சிரிப்பு சத்தம் கேட்டது என்றாலே அந்தப் பக்கம் போகாமல் ஒதுங்கிச் சென்று விடுவான் ராசய்யா.

மற்ற எல்லாவற்றிலும் வீராதி வீரன், சூராதி சூரனாக இருந்தாலும், பெண்கள் விசயத்திக் ரொம்பவும் ஒதுக்கமாக இருந்து கொள்வான்.

அப்படி பெண்கள் வாடையே இல்லாமல்,  ஆஞ்சநேயர் பக்தனாக வலம் வந்தவன் இப்படி  அரைகுறை போஸில் தன்னவளை காண, அவன் உள்ளே ஜிவ்வென்று போதை ஏறியது.

அவளின் கோலம் அவன் ஆண்மையை தட்டி எழுப்பி ஒருவித  மயக்கத்தை கொடுத்தது.

ஆனால் நொடியில் தன் தலையை உழுக்கிக்கொண்டு தன்னை சமனபடுத்திக்கொண்டவன்,  அவசரமாக தன் பார்வையை மாற்றிக் கொண்டான்.

கட்டிலுக்கு சென்ற அவன் பார்வை , அங்கே கட்டிலிலயும், கீழயும் இறைந்து  கிடந்த காய்ந்த மல்லிகைப் பூக்களை காண, அவனுக்கு குப் என்று வியர்த்தது.

“இது எப்படி சாத்தியம்? “ என்று முன்பு விட்ட தன் ஆராய்ச்சியை மீண்டும் தொடர்ந்தான்.

“என்ன மாமா? அங்கயே நின்னுகிட்டிங்க...உள்ள வாங்க... வர்றப்ப கதவை சாத்தி தாப்பா போட்டுட்டு வாங்க...”  என்று குறும்பாக கண் சிமிட்டி வெட்கத்துடன் சிரித்து வைத்தாள் பூங்கொடி.

அவளின் மாமா என்ற அழைப்பும், அந்த அழைப்பில்...குரலில் இருந்த ஒரு வித கொஞ்சலும்,  உரிமையும் அவனுக்குள் அபாய மணியை ஒலிக்க விட்டது.

நேற்றுவரை, டேய் என்றும், யோவ் என்றும், சில நேரம் கருவாயன் என்றும் அழைத்து வைத்தவள் திடீர்னு மாமா என்ற கொஞ்சலுடன் அழைக்க, அதில் கொஞ்சம் தடுமாறித்தான் போனான் ஆணவன்.

அதற்குள் தன்னை முழுவதுமாக சமாளித்துக் கொண்டவன்,

“என்னடி இது? இப்படி  அரைகுறையா நின்னுகிட்டு என்னை எதுக்கு உள்ள கூப்பிட்ட? “ என்று முறைத்தான் ராசய்யா.

“என்னது?  அரையும் குறையுமாகவா?  யோவ் மாமா... முழுசா நனைஞ்ச பொறவு  முக்காடு எதுக்கு? அதான் நமக்குள்ள எல்லாம் நடந்து முடிஞ்சிடுச்சே. இனிமேல் உன்கிட்ட மறைக்க  என்ன இருக்கு? “ என்று கன்னம் சிவக்க, வெட்கத்துடன் அவன்  பக்கத்தில் வந்தவள்,  

“ப்பா... என்னா வேகம் மாமா... காய்ஞ்ச மாடு கம்புல புகுந்த மாதிரி...சும்மா புரட்டி எடுத்துட்ட... உடம்பெல்லாம் என்னா வலி...ஆனாலும் நீ மொரட்டு ஆள்தான்...”

என்று குறும்பாக கண் சிமிட்டி ஆசையாக சிரித்தவள்,    அவனின் மோவாயை பிடித்து செல்லமாக இடிக்க, அதைக்கேட்டு  இன்னுமாய்  அதிர்ந்து போனான் புதுமாப்பிள்ளை.

“என்னடி சொல்ற? “  என்று அதிர்ச்சியோடு அவளை பார்க்க,

“ஆமா சொல்றேன்... சுரக்காய்க்கு உப்பு  இல்லைனு...பண்றதையும் பண்ணிட்டு, இப்ப ஒன்னும் தெரியாதவன் மாதிரி இந்த முழி முழிக்கிற மாமா...  

ஆனாலும் சும்மா சொல்லக்கூடாது யா...  பாக்குறதுக்குதான்  ஆள் பயில்வான் மாதிரி இருக்கனு பார்த்தா, உண்மையிலயே நீ பயில்வான் தான்...என்னா கணம்? உன்  வெயிட்டை  சமாளிக்கறதுக்குள்ள எனக்குத்தான் நாக்கு தள்ளிடுச்சி...”  என்று வெட்கப்பட்டு சிரிக்க,  ராசய்யாவுக்கு தலையே சுத்தியது.

மீண்டும் தன் சிறுமூளை பெருமூளை நடுமூளை என்று எல்லா மூளையையும் தட்டி எழுப்பி, நேற்று என்ன நடந்தது என்று  எப்படி யோசித்தாலும் பூங்கொடி சொன்ன அந்த சம்பவம் மட்டும் நடந்த மாதிரியே தெரியவில்லை அவனுக்கு.  

“சும்மா விளையாடாத பூவு... நமக்குள்ள அதெல்லாம் ஒன்னும் நடக்கலை.  உன்கிட்ட நான் அப்படி எல்லாம் நடந்திருக்க மாட்டேன்...”  என்று உறுதியாக சொல்ல, அதைக்கேட்டு ஒரு கணம்  சிலிர்த்து போனாள் பூங்கொடி.

அடுத்த கணம் தன் தலையை உலுக்கி கொண்டு,  

“ஆமாமா இப்படி சொல்ற ஆளுங்ககிட்டதான் விஷயமே இருக்குமாம்  மாமா.. ஒன்னும் தெரியாத பாப்பா...போட்டாளாம் தாப்பா...ன்ற மாதிரி தள்ளி நிக்கற மாதிரி ஆக்ட் கொடுத்துட்டு, அப்புறம் பூந்து விளையாடிட்ட இல்ல....” என்று  கழுத்தை நொடித்தாள் நக்கலாக சிரித்தவாறு. 

“ம்கூம் நீ என்னதான் சொல்லு. நான் நம்ப மாட்டேன்... அப்படி எதுவும் நடந்திருக்காது. சரி இப்ப எதுக்கு என்னை வரச்சொன்ன? அதைச் சொல்லு முதல்ல... “ என்றான் அவளைப் பார்க்காமல் எங்கோ வெறித்தபடி.  

“அது...அது... வந்து....ஆங்  என் ஊக்கு கட்டிலுக்கு  ஆடியில விழுந்திருச்சு...” என்று அவசரமாக ஒரு காரணத்தை சொன்னாள் பெண்.

“அதுக்கு?”  என்று அவன் இழுக்க,

“வந்து...நீ கொஞ்சம் அத தேடி எடுத்து கொடேன்....” என்றான் கொஞ்சலாக.

“என்னடி விளையாடறியா? இந்த ஊக்கை தேடவா என்னை கூப்பிட்ட? நீயா அதை தேடி  எடுக்க மாட்டியா? “  என்று முறைத்தான் ராசய்யா.

“ஹீ ஹீ ஹீ  தேடிப் பார்த்துட்டு காணான்றதால தான் உங்களை கூப்பிட்டேன் மாமா...” தன் சிரிப்பை அடக்கிக்கொண்டு சொன்னாள் அவன் மனையாள்.

“ஹ்ம்ம்ம் எல்லாம் என் நேரம் டி... “ என்று பல்லைக் கடித்தபடி, கட்டிலுக்கு அடியில்  குனிந்து தேட, எப்படியோ முன்பு அவள்  தவறவிட்டிருந்த ஊக்கை  கண்டுபிடிச்சு எடுத்து அவளிடம் கொடுக்க,

“அப்படியே அத,  இந்த முந்தானை மடிப்புல  போட்டு விட்டுட்டு போ மாமா...” என்றவள்,  தன் மேலே கிடந்த ஒற்றை மடிப்பு சேலையையும் விலக்கி விட்டு, வெகு இயல்பாக முந்தானைக்கு மடிப்பு  எடுக்க, ராசய்யாவுக்குத்தான் சத்திய சோதனை ஆகிப்போனது.

அவளை வெகு நெருக்கத்தில், அந்த கோலத்தில்   கண்டதும் அவனின் நரம்புகள் முறுக்கேறின.

அவளை இழுத்து தன்னோடு சேர்த்து இறுக்கி அணைத்துக் கொள்ள தவித்தன அவன் கரங்கள்.

ஆனாலும் நொடியில் தன்னை சமாளித்துக்கொண்டவன், உடனே மறுபக்கம் திரும்பி நின்று கொண்டு,

“எனக்கு இதெல்லாம் தெரியாது டி... நீயே போட்டுக்க,,. “  என்று முனகினான் வெளிவராத குரலில்.

அவனின் குரலில் இருந்தே அவன் உள்ளே வந்திருந்த தடுமாற்றத்தை கண்டு கொண்டவள் , உள்ளுக்குள் சிரித்தபடி, அவனை மேலும் சீண்டினாள்.  

“எனக்கு போட வரல மாமா...முந்தி நழுவிகிட்டே போகுது...”  என்று சிணுங்க,

“ஆங்... இத்தனை நாள் எப்படி இந்த சேலையை சுத்திகிட்டியாம்? “ என்றான் முறைத்தபடி. மறந்தும் அவள் பக்கம் பார்க்கவில்லை.

“நான் எங்க இந்த எட்டுமுழ சீலையை கட்டி இருக்கேன்... ஓரிரு முறை, அம்மாதான்  கட்டி விடுவாங்க...”  என்றாள்  இழுத்தவாறு.  

“அப்ப அத்தையவே கூப்பிட்டு கட்டிக்கடி...” என்று நழுவ பார்க்க,

என் அத்தையா? அவங்கதான் எப்பயோ மேல போயிட்டாங்களே.. அவங்ககிட்ட எப்ப கட்டிக்கிறதாம்? “ என்றாள் சிரித்தபடி.

“உன் அத்தை இல்லடி. என் அத்தை.. அதான் உன் அம்மா... “ என்று முடிக்கும் முன்னே அதுவரை சீண்டி கொண்டிருந்தவளின் முகம் சிவந்து போனது கோபத்தில்.

“எனக்கு  இனிமேல் அப்பா, ஆத்தா யாரும் இல்லை. நீங்க மட்டும் தான்...”  என்று சிடுசிடுத்தாள்

அதைக்கேட்ட ராசய்யாவுக்கு அவள் மீதான கடுப்பு மறைந்து வேதனை வந்து சேர்ந்து இருந்தது.

நேற்றைய திருமண சம்பவத்தில் அவள் பெரிதும் அடிபட்டு இருக்கிறாள்  என்பது அவள் வார்த்தையில் இருந்தே தெரிய,  ஒரு கணம் அவளின் பக்கமாக யோசித்து பார்த்தான்.

அவள் பெற்றோர்கள் மீதான அவளின் கோபம் நியாயமானதுதான். ஆனால் அதற்காக ஒரேயடியாக பெற்றோர்களே இல்லை என்று அறுத்துவிட முடியுமா?

இவளின் பாரா முகமும், கோப பார்வையும் கண்டு பெரியவர்கள் இருவரும் குற்ற உணர்வில் தவித்துக்கொண்டு இருப்பது ராசய்யாவுக்கும் புரிகிறதுதான்.

அதோடு அவன் மாமனார் சொன்ன அவளின் கோபத்தை எப்படியாவது தணிச்சிடுங்க மாப்ளை என்றது நினைவு வர,

“கண்டிப்பா உனக்காக  நான் இருப்பேன் பூவு...  ஆனால் மாமா, அத்தையும்  பாவம் இல்லையா... அவங்க செஞ்சது தப்புதான்... ஆனால் அதுக்காக நீ இவ்வளவு பெரிய தண்டனையை கொடுக்க கூடாது.

நீ பேசாமல் இருப்பதால் எவ்வளவு வேதனை படறாங்க... அதனால்.... “ என்று சொல்லி முடிக்கும் முன்பே, தன் இடது கையை அவன் முன்னே நீட்டி,  

“போதும் நிறுத்து..  அவங்கள பத்தி என்கிட்ட எதுவும் பேசாத? எனக்கு யாரை பத்தியும் கேட்க புடிக்கல...இப்ப உன்னால இந்த ஊக்க  போட்டுவிட முடியுமா? முடியாதா?

என்று  படபடவென்று பொரிந்து அவனை முறைக்க, அதற்குமேல் அவளிடம் எதுவும்  சமாதானம் சொல்ல  முடியாமல், அவள் கையில் இருந்த ஊக்கை வாங்கினான்.

“இங்க போடு...” என்று முந்தானை மடிப்பை ஜாக்கெட்டோடு சேர்த்து பிடித்துக்கொண்டு ஊக்கை குத்தவேண்டிய இடத்தை காண்பிக்க,  அவனோ அதை எப்படி போடுவது என்று தெரியாமல் திருதிருத்தான்.

மீண்டும் தெரியவில்லை என்று சொல்லி அவகிட்ட வாங்கி கட்ட வேண்டி இருக்குமே என்று அஞ்சி, கையை அவளின் தோளின் அருகில் கொண்டு சென்றான்.

அவள் கை வைத்த இடத்தில் கொண்டு சென்றவனுக்கு கை நடுங்கியது.

இரண்டு நாட்கள் முன்பு, சாப்பிடும்பொழுது அவள் கையை  கொஞ்சம் அழுத்தி பிடித்ததற்கே அவள் கையில் ரத்தம் வந்துவிட்டது.

இப்பொழுதும் எங்கயாவது ஏடாகூடமாக ஊக்கு பட்டு அவளை குத்திவிட்டால் என்ன செய்ய என்று மிரண்டவன்  கை இன்னுமே  நடுங்க ஆரம்பித்தது.

ஓரக்கண்ணால் அதைக்கண்டவளின் கோபம் மறைந்து கொல்லென்று சிரித்தாள் பூங்கொடி.  

“யோவ்...  ஊர்ல எல்லாம் நீ பெரிய ரவுடி னு சொல்லிகிட்டு திரியற.  இந்த ஊக்க குத்தறதுக்கு ஏன்  இப்படி உன்  கை நடுங்குது? ...” என்று நக்கலாக சிரித்தாள் பெண்.   

“ஏன் டி சொல்ல மாட்டா... முன்ன பின்ன செத்திருந்தா  சுடுகாடு தெரியும்?  இதெல்லாம் போட்டுவிட்டு பழகியிருக்க எனக்கு என்ன அக்கா, தங்கச்சினு யார் இருக்கா...”

“ஐய...இந்த தம்மாத்துண்டு ஊக்க குத்த, முன்னாடியே ப்ராக்டிஸ் பண்ணி இருக்கணுமாக்கும்...” கழுத்தை நொடித்தாள் பெண்.

“ஆமான் டி... எவ்வளவு பெரிய கண்டெய்னர் லாரியில் இருந்து, ஆடி கார் வரைக்கும் என் கையில பொட்டி பாம்பா அடங்கி போகும். அசால்ட்டா ஓட்டி இருக்கேன்.

ஆனால் இந்த தம்மாதுண்டு ஊக்கு என் பேச்சை கேட்க மாட்டேங்குதே...” என்று புலம்பியபடி மீண்டும் முயற்சி செய்ய, இந்த முறை இன்னுமே அதிகமாக கிடுகிடுவென நடுங்கியது அவன் கரம்.

அதைக்கண்டு மீண்டும் கலகலவென்று வாய் விட்டு சிரித்தாள் அவன் மனையாள்...

அதில் கடுப்பானவன்

“இதெல்லாம் வேலைக்கு ஆகாது...பேசாமல் நீ எப்பவும் மாட்டிகிட்டு சுத்துவியே...  அந்த பாவாடை சட்டையவே  போட்டுக்க.  எனக்கு இதெல்லாம் செட்டாகாது...இந்தா உன் ஊக்கு...” என்று  அவள் கையில் திணித்து விட்டு,  விடுவிடுவென்று வெளியேறி சென்று விட்டான் ராசய்யா.

அதைக்கண்டு விழுந்து விழுந்து  சிரித்தாள் பெண்ணவள்.

அறையை விட்டு வேகமாக வெளியேறி செல்லும் தன் கணவனையே சிரிப்போடு பார்த்திருந்தாள்   அவன்  மனையாள்..! .

வெளித்தோற்றத்தில் பெரிய ரௌடியாக இருந்தாலும், அவள் சொன்ன கதையை  அப்படியே நம்பிவிட்ட  அவனின் வெள்ளந்தி மனதை கண்டு ஆச்சர்யமாக இருந்தது.

அவளின் மனம் இன்று அதிகாலையில் நடந்த சம்பவத்தை நினைத்து பார்த்தது.

ன்று காலை கண்விழித்த பூங்கொடி,   தன் அருகில் கட்டிலில் மல்லாந்து படுத்திருந்த தன் கணவனை கண்டதும் சிரிப்பு பொங்கி வந்தது.  

அவன்  கட்டியிருந்த பட்டு வேஷ்டி விலகி, அதன் உள்ளே  போட்டிருந்த பட்டாபட்டி அன்ட்ராயர்  வெளியில் தெரிய, அசந்து உறங்கி கொண்டிருந்தான்.

அவனின் ஆறடிக்கும் மேலான உயரத்துக்கு,  அந்தக் கட்டில் அவன் கால் முட்டி அளவுக்கு மட்டும்தான் இருந்தது.

பூங்கொடி வீட்டில் எல்லாருமே சராசரி உயரம்தான். அதனால் அவர்களின் உயரத்திற்கு தகுந்த மாதிரிதான் கட்டில் செய்து இருந்தனர்.

திருமணம் ஆகி செல்லும் பெண்ணுக்கு சீதனமாக கட்டில், தலையணை எல்லாம் வாங்கி கொடுப்பது பெண் வீட்டினர் வழக்கம்தான்.

பூங்கொடியின் திருமணம் திடீரென்று  முடிவாகி இருந்ததாலும், கூடவே ராஜேந்திரன்  சீர் செனத்தி எதுவும் வேண்டாம் என்று சொல்லிவிட்டதாலும் புதிதாக எதுவும் வாங்கி இருக்கவில்லை.

இந்த கட்டில் கூட அவள் அன்னை சிலம்பாய்க்கு சீதனமாக கொடுத்ததுதான். அவ்வளவு பழைய கட்டில் என்றாலும் இன்னுமே உறுதியாக இருக்கத்தான் செய்தது.

அதில்தான்  தணிகாசலமும், சிலம்பாய்ம்  குடும்பம் நடத்தி, நாலு புள்ளைகளை பெற்றெடுத்த பெருமையை பெற்ற கட்டில் என்பதால், தன் மகளுக்கான முதல் இரவுக்கு,

இந்த பாரம்பரிய கட்டிலைத்தான் பயன்படுத்தவேண்டும் என்று எண்ணி, முன்பு அங்கு போட்டிருந்த ஒருவர் மட்டும் உறங்கும் சிறிய கட்டிலை எடுத்துவிட்டு,  இந்த கட்டிலை  உள்ள கொண்டு வந்து போட்டு வைத்திருந்தார் தணிகாசலம்.

அவர் தனக்காகத்தான்  கட்டிலை மாற்றுகிறார் என்று தெரிந்தும், முகத்தை திருப்பிக்கொண்டு முறைத்து கொண்டு சென்றுவிட்டாள் பெண்.

அந்த கட்டிலில் பனைமரத்தை போன்ற வளர்ந்து நின்றவன் , பாதி கால் கட்டிலுக்கு வெளியில் இருக்க,  உறங்கி கொண்டிருப்பதை கண்டு இன்னுமாய் சிரிப்பு பொங்கி வந்தது.

அதோடு அவன் உறங்கும் பொழுதும் கூட தன் கை முஷ்டியை இறுக்கியபடி,  பிடிவாதம் பிடித்தபடி உறங்கும் குழந்தை போல உறங்கி கொண்டிருந்தவனை ஒரு நொடி நின்று ஆழ்ந்து  பார்த்தாள் அவன் மனையாள்.

நேற்றைய சம்பங்கள் மீண்டும் ஒருமுறை கண் முன்னே வந்து சென்றது.

ஒரு பெருமூச்சை எடுத்து விட்டவள், ஏதோ நியாபகம் வந்தவளாய், உதட்டில் சிறு புன்னகையுடன், விரிந்திருந்த தன் கூந்தலை அள்ளி முடிந்து கொண்டையை போட்டுக் கொண்டாள்.

அவள் அணிந்திருந்த சேலையை கொஞ்சம் கசக்கி விட்டுக் கொண்டாள்.  

நெற்றியில் வைத்திருந்த குங்குமத்தையும் கொஞ்சம்,  கோணலாக இழுத்துவிட்டுக்  கொண்டு, படுக்கையில் இருந்து எழுந்தவள், தன் படுக்கையை சுருட்டி வைத்துவிட்டு மீண்டும் அவன் கட்டிலின் அருகில் வந்தாள்.

மீண்டும் ஏதோ நினைவு வந்தவளாக, தன் நெற்றியில் இருந்த குங்குமத்தை எடுத்து அவன் கன்னத்திலும்,  உதட்டிலும்  மெதுவாக இழுத்து விட்டாள்.

தலையில் சூடியிருந்த வாடிய மல்லிகைப்பூவை பிய்த்து, அவன் மீது போட்டுவிட்டு, மெல்ல சிரித்தபடி, அவன் மீது  இருந்த போர்வையை இழுத்து அவனுக்கு போர்த்திவிட்டு கதவைத் திறந்து கொண்டு வெளியில் சென்றாள்.  

*****

வளுக்கு முன்னதாகவே எழுந்திருந்த சிலம்பா , சமையலறையில் காபி போட்டுக் கொண்டு இருக்க,  அறைக் கதவை திறந்து கொண்டு வெளியில் வந்த தன் மகளை ஆர்வமாக பார்த்தார்.

உடனே வேகமாக அவள் அருகில் வந்தவர்,  அவள் முகத்தை ஆராய்ச்சியோடு ஏறிட்டுப் பார்த்தார்.

புதிதாக திருமணம் ஆகி, முதல் இரவு அறையை விட்டு வெளிவரும் தன் மகளை, எல்லாம் நல்ல படியாக நடந்திருக்குமா? இந்த பெண் தன் கணவனை அனுசரித்து , மனம் கோணாமல் நடந்திருப்பாளா  என்ற  தாய்க்கே உரித்தான தவிப்பும் அக்கறையும் கொட்டி கிடந்தது அந்த பார்வையில்,  

“பாப்பா...  எல்லாம் நல்லபடியா நடந்ததா? “ என்று தயக்கத்துடன்  விசாரிக்க,  அவர் எதைப்பற்றி  கேட்கிறார் என்று புரிந்து கொண்டவள்,  தன் அன்னையை பார்த்து முறைத்துவிட்டு

“ஹ்ம்ம்ம் ஹ்ம்ம்ம்ம் “ என்று முனகியவாறு கொல்லைப்பக்கம் சென்றுவிட்டாள் பூங்கொடி.

தன்னிடம் முகம் கொடுத்து பேசாவிட்டாலும்,  அவளின் முகத்தில் தெரிந்த மாற்றமும், அவள் வெளிவந்த  கோலமும்,  அவர்கள் வாழ்க்கையை ஆரம்பித்து விட்டதை எடுத்துக்காட்டுவதாக இருக்க,  பெரும் நிம்மதி வந்து சேர்ந்தது.  

நேற்று இரவு அறையில் கேட்ட அறை சத்தத்தில்,  தணிகாசலம் மற்றும் சிலம்பாயி இருவரும் கொஞ்சம் பயந்துதான் போனார்கள்.

தன் மகள்தான் மாப்பிள்ளையை அறைந்து இருப்பாள் என்று தெரிந்து இருந்ததுதான்.

அவர்களுக்குள் என்ன வாக்குவாதமோ?  அதனால் காலையில் என்ன  குண்டை தூக்கிப் போடப் போகிறாளோ என்று பயத்துடனே இருந்த சிலம்பாயி, தன் மகளின் நலுங்கிய சேலையும், கலைந்து கலைத்திருந்த கோலமும் கண்டதும் தான் நிம்மதியாக இருந்தது.

அவர் எதிர்பார்த்த மாதிரி,  அவர்களுக்குள் பெரிதாக ஒன்றும் பிரச்சனையில்லை என்ற திருப்தியைக் கொடுத்தது.  

இனிமேல்  அவர்கள் வாழ்க்கையை அவர்கள் பார்த்துக் கொள்வார்கள் என்ற நிம்மதியுடன் பாதியில் விட்டு வந்த  சமையலை கவனிக்க சென்றார்.  

கொல்லைப்பக்கம் சென்ற பூங்கொடிக்கோ சிரிப்பு பொங்கி வந்தது.

அவள் அறையை விட்டு வெளியில் வந்ததும்,  அவள் அன்னை அவள் முகத்தையே ஆராய்ச்சியோடு பார்த்தது எரிச்சலை தந்தாலும், இது காலங்காலமாக எல்லா தாய்களும் எதிர்பார்க்கும் ஒரு விஷயம்தான் என்று புரிந்து இருந்ததால் தன் எரிச்சலை அடக்கி கொண்டாள்.

தன் பெற்றோர்களிடம் இன்னும் முகம் கொடுத்து பேசாவிட்டாலும் ஏனோ அவள் அன்னையின் மனதை மேலும் புண்படுத்த விரும்பவில்லை.

அதனால்தான் அவர்கள் மனதுக்கு திருப்தியை கொடுப்பதற்காகவும், மற்றொரு காரணத்துக்காகவும்  அப்படி ஒரு குட்டி ட்ராமாவை திட்டமிட்டிருந்தாள்.

ஹ்ம்ம்ம் நான்  எண்ணியது சரியாத்தான் இருக்கு. என்னை இப்படி பார்த்ததும்தான் அம்மாவுக்கு திருப்தி ஆகியிருக்கு.

ஹ்ம்ம்ம்  எத்தனை சினிமா படத்துல பார்த்திருக்கேன்... எங்கிட்டயே வா? “  

என்று அதுவரை அவளை அழுத்தி வந்த பாரத்தை எல்லாம் மறந்து தனக்குள்ளே சிரித்துக் கொண்டவள் கொல்லைப்பக்கம் சென்று பல் துலக்க ஆரம்பித்தாள்.  

அதன் பிறகு ராசய்யா எழுந்து வந்ததும், அவன் முகத்தில் அவள் செய்து வைத்திருந்த கோலத்தை கண்டதும் அவள் தம்பியும் தங்கையும் அவனை ஓட்டியதும், அதைகண்டு அவன் திருதிருவென்று விழித்ததும் நினைவு வர, அவள் இதழ்கள் தானாக புன்னகைத்தன.

அதோடு சற்றுமுன் அவள் வேறு அவனை அழைத்து அவனிடம் வம்பு பண்ணி வைக்க, அதில் அரண்டவன் அங்கிருந்து அடித்து பிடித்து ஓடியதைக்காண இன்னுமாய் சிரிப்பு பொங்கி வந்தது.

அதுவரை அவள் மனதை அழுத்தி வந்த பாரம்...வேதனைகசப்பு...வெறுப்பு....ஏமாற்றம் எல்லாம் மறந்து கலகலவென்று வாய்விட்டு நகைத்தாள் பெண்ணவள்..! 

Comments

Popular Posts

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே

என் மடியில் பூத்த மலரே

அனைவருக்கும் வணக்கம்!!!

காதோடுதான் நான் பாடுவேன்

நிலவே என்னிடம் நெருங்காதே!!

வராமல் வந்த தேவதை

பூங்கதவே தாழ் திறவாய்

தவமின்றி கிடைத்த வரமே

தாழம்பூவே வாசம் வீசு!!!

அழகான ராட்சசியே!!!