நிலவே என்னிடம் நெருங்காதே-59

 


அத்தியாயம்-59

றுநாள் காலை கண் விழித்தவனுக்கு

“குட் மார்னிங் ஜமீன்தாரே.. “என்று சிரித்த முகமாக காபியை எடுத்து வந்தவள் முகம்தான் கண்ணில் வந்தது...

அதிகாலையிலயே குளித்து விட்டு தலையில் ஒரு டவலை சுற்றிக் கொண்டு புத்தம் புது மலராய் நின்றிருந்தாள் நிலவினி..

அப்பொழுதுதான் பூஜை முடித்த அடையாளமாய் அந்த சாம்பிராணியின் வாசம் கூடவே அவளின் வாசமும் கலந்து வந்து அவன் நாசியை தீண்டி அவன் உள்ளே நுழைந்து ஒரு இதமான பரவசமான நிலையை கொடுத்தது..

கூடவே இன்று நெற்றி வகிட்டில் புதிதாக அவள் வைத்திருந்த அந்த சிறு குங்குமத்தை கண்டதும் நேற்று இரவு அவன் கடிந்து கொண்டது நினைவு வர அவன் சொல்லியதற்காக அதை வைத்திருக்கிறாள் என புரிய அவன் உள்ளே சிறு கர்வமும் கொஞ்சமாய் பெருமையும் சேர்ந்து கொள்ள உதட்டில் குறுநகை தவழ புன்னகைத்தவாறு படுக்கையில் இருந்து எழுந்தான்..

காலையில் ஆரம்பித்த அந்த புன்னகை அவன் காலை ஓட்டத்தை முடித்து வந்த பொழுதும் உடற்பயிற்சிகளை செய்யும் பொழுதும் குளித்து அலுவலகம் கிளம்பி வந்தபொழுதும் அப்படியே உறைந்து இருந்தது...

அனைவரிடமும் விடைபெற்று அலுவலகம் கிளம்ப எத்தனிக்க, யாழி வந்து அவனை கட்டி கொண்டு

“அண்ணா.... இன்னைக்கு ஒரு நாள் லீவ் போட்டுட்டு எங்க கூடவே இரேன்.. “ என்றான் கொஞ்சலாக..

“இல்லடா குட்டி..இப்ப நான் கொஞ்சம் பிசி.. இன்னைக்கு கொஞ்சம் ஆபிஸ் ல வேலை இருக்கு... இந்த வீக் என்ட் உங்க கூட இருக்கேன்.. “ என்றான் அவள் தலையை தடவியவாறு..

“போ ணா... இந்த வாரத்துல எல்லாமே சுத்தி பார்த்துகிட்டாதான்.... “ என்று உதட்டை பிதுக்கினாள்...

“ஏன் டா. குட்டி.. ஸ்கூல் லீவ் தான.. அடுத்த வாரமும் இங்கயே தங்கி எல்லாம் சுத்தி பாருங்க.. அதான் உங்களுக்குனு தனி கார் ம் ட்ரைவர் தாத்தாவும் இருக்கார் இல்ல... ஜாலியா எல்லா இடமும் சுத்தி பாருங்க.. “ என்றான் சிரித்தவாறு...

“ப்ச்.. அடுத்த வாரம் இங்க இருக்க முடியாதே.. எனக்கு காலேஜ் ஸ்டார்ட் ஆகிடுமே.. “ என்றாள் தலை சரித்து கொஞ்சலாக..

அதை கேட்டு திகைத்தவன்

“என்னது காலேஜ் ஆ? நீ எப்படா குட்டி காலேஜ் சேர்ந்த? “ என்றான் ஆச்சர்யத்துடன்..

“ப்ச்... போ ணா.. நீ ரொம்ப மோசம்.. உனக்கு உன் ஆபிஸை தவிர வேற ஒன்னும் தெரிய மாட்டேங்குது.. உன் தங்கச்சி என்ன படிக்கிறானு கூட உனக்கு தெரியலை..

எனக்கு ப்ளஸ் டூ முடித்து ரிசல்ட் வந்தப்ப உன்கிட்டதான முதல்ல போன் பண்ணி சொன்னேன்.. நீயும் எனக்கு கன்கிராட்ஸ் சொல்லிட்டு அப்படியே விட்டுட்ட.

ஆனால் அண்ணி அப்படி இல்ல.. நான் அடுத்து என்ன படிக்கணும் னு கேட்டாங்க.. எனக்கு குழப்பமா இருந்தது.. எது எடுத்து படிக்கிறது னு.. அப்பதான் என்னை கோயம்புத்தூர் ல இருக்கிற கேரியர் கவுன்சிலிங் சென்டருக்கு கூட்டிட்டு போனாங்க..

ப்ளஸ் டூ க்கு பிறகு எந்த மாதிரி படிப்பெல்லாம் இருக்கு.. ஒவ்வொன்னுக்கும் எப்படி ப்யூச்சர் இருக்கும் என்று விளக்கி சொன்னாங்க.. கூடவே என்கிட்ட சில கேள்வி கேட்டு குட்டியா ஒரு டெஸ்ட் வச்சாங்க.. அதை எல்லாம் பார்த்துட்டு சில கோர்ஸ் சஜஸ்ட் பண்ணினாங்க...

அதுல எனக்கு ஹோட்டல் மேனேஜ்மென்ட் ரொம்ப பிடித்தது...

அண்ணியும் சொன்னாங்க..அது எனக்கு நல்லா செட் ஆகும்னு..  எனக்கு நல்லா சாப்பிடறதுல இன்ட்ரெஸ்ட் இருக்கறதனால   தினமும் விதவிதமா செஞ்சு சப்பிடலாம்னு உடனே தலையை ஆட்டிட்டேன்..

கூடவே தாத்தா டெக்ஸ்டைல் பிசினஸ் பண்றார்.. நீ ஐ.டி ல இருக்க... உங்களை மாதிரி நானும் ஹோட்டல் பிசினஸ் ஆரம்பிச்சு அதுல பெரிய ஆளா வரணும்..

நம்ம குடும்பத்துல ஹோட்டல் பிசினஸ் ஐயும் கொண்டு வரணும்.. இது கூட அண்ணியோட சஜஷன்தான்.. எப்பூடி? நானும் உன்னை மாதிரி தாத்தா மாதிரி பெரிய பிசினஸ் வுமன் ஆ வரணும் ணா.. வருவேனா.. ? “ என்றாள் கண்கள் பளபளக்க கனவு மின்ன..

அதை கேட்டு திடுக்கிட்டு திகைத்து அதிர்ந்து போனான் அதிரதன்...

“என் பிர்ச்சனையில் உழன்று கொண்டிருந்தவன் என் தங்கை என்ன படிக்கிறாள் அடுத்து என்ன செய்ய போகிறாள் என்று கூட கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டனே..”  என்று அவன் மனம் சுட்டது..

அதே நேரம் நிலா அவன் இடத்தில் இருந்து பொறுப்பாக அவளை அழைத்து சென்று அவளுக்கு பிடித்த கோர்சில் சேர்த்துவிட்டது கண்டு அவன் பார்வை தானாக நிலாவிடம் சென்றது..

அவளும் இவனையே பார்த்து கொண்டிருக்க, கண்களால் அவளுக்கு நன்றி சொன்னான்.. அவளுமே ஒற்றை கண் சிமிட்டி புன்னகைத்தாள்..

தன் தங்கையை மெல்ல அணைத்து கொண்டவன்

“சாரிடா யாழிகுட்டி.. அண்ணா இருந்த பிசியில் உன்னை கவனிக்காம விட்டுட்டேன்.. அதான் உன் அண்ணி பார்த்துகிட்டா இல்ல..

சரி.. இன்னைக்கு ஷாப்பிங் போய்ட்டு உனக்கு பிடிச்சதை எல்லாம் வாங்கிக்க.. இந்தா என்னொட கிரெடிட் கார்ட் ஐ வச்சுக்க.. “  என்று தன் வாலட் ஐ எடுக்க

“அதெல்லாம் நேற்றே முடிச்சாச்சு ணா.. நான், அண்ணி, அம்மா மூனு பேரும் ஷாப்பிங் போய்ட்டு காலேஜ் போறதுக்கு நிறைய ட்ரெஸ் வாங்கினோம்..

அம்மாவுக்கு ஒன்னுமே செலக்ட் பண்ணவே தெரியலை.. அண்ணிதான் சூப்பரா செலக்ட் பண்ணினாங்க.. அதுவும் இப்ப இருக்கிற ட்ரென்ட் எல்லாம் அண்ணிக்கு நல்லாவே தெரிஞ்சிருக்கு.. அவங்கதான் எல்லாமே செலக்ட் பண்ணினாங்க.. அண்ணி சோ ஸ்வீட்.. “ என்று தன் அண்ணி புராணம் பாடினாள்..

அதை கேட்டு வழக்கம் போல கடுப்பாகாமல் ஏனோ மனதில் ஒரு ஓரத்தில் கொஞ்சமாய் இனிக்க செய்தது அவனுக்கு... சிறு கர்வம் பெருமை யும் கூட கொஞ்சமாய் சேர்ந்து கொண்டது..

மீண்டும் ஒரு மெச்சுதல் பார்வை அவளை நோக்கி..  

இந்த முறையும் அதை தன் இமை தாழ்த்தி இயல்பாக ஏற்று கொண்டாள் பெண்ணவள்..

தன் ஷாப்பிங் கதையை அளந்தவள்

“அண்ணா... இன்னைக்கு பீச்சுக்கு போகபோறோம்.. நீயும் வாயேன்.. ஜாலியா தண்ணில விளையாடலாம்.. “ என்றாள் கொஞ்சலாக..

பீச் என்றதும் அதிரதன் பார்வை மீண்டும் அனிச்சையாக தன்னவளிடம் சென்றது..

அன்று கோவளம் பீச்சில் அவர்கள் இருவரும் தண்ணீரில் விளையாண்டதும் அவள் அலையில் மூழ்கியதும் அவளை காணாமல் தவித்து பின் காப்பாற்றியவனை அவள் இறுக்க கட்டி அணைத்ததும் கண் முன்னே வர, அவன் உள்ளே ஒரு சிலிர்ப்பு...

கண்கள் அவள் மீது படர, அவளும் அப்பொழுது அதைத்தான் நினைத்து கொண்டாள் போல..

அதுவரை இயல்பாக நின்றிருந்தவள்   முகம் இப்பொழுது செவ்வானமாய் சிவந்து போனது...

அவன் கண்கள் அவனையும் மீறி சிவந்து நின்றிருந்தவளை அள்ளி பருக துடித்தது.. கரங்கள் அள்ளி அணைக்க தவித்தன..

அதே நேரம் அன்று இரவு அவன் அவளை நாடியதும் அவள் அவனை விலக்கி நிறுத்தியதும் மனதில் ஆட கூடவே தாத்தாவின் ஹனிமூன் நாடகம் நினைவு உடனே தன் உடலை இறுக்கி கொண்டான்..

ஒரு நொடி அவன் முகத்தில் வந்து போன இறுக்கத்தை நிலாவும் கண்டு கொண்டாள்.. அவன் அன்று இரவு நடந்ததை நினைத்துத்தான் இறுகி போகிறான் என்று அவளுக்கும் புரிந்தது..

உடனே முகம் வாடிவிட, வருத்தம் வந்து சூழ்ந்து கொள்ள, தலையை குனிந்து கொண்டாள்.. அவனும் தன் தங்கையிடம் சிறிது நேரம் வளவளத்துவிட்டு பின் விடைபெற்று கிளம்பி சென்றான்..

ன்று மாலை யாழி பார்க்க வேண்டும் என்று  ஆசைபட்ட இடங்களை எல்லாம் குடும்பத்துடன் சென்று பார்த்தனர்..

எல்லாருக்குமே அது ரிலாக்ஸ்டாக இருந்தது. எல்லா இடங்களையும் சுற்றி பார்த்து களைத்திருந்தவர்கள் மாலை ஆறு மணி அளவில் ஒரு ஐஸ்க்ரீம் கடையில் அமர்ந்து இருந்தனர்...

ஒவ்வொருத்தருக்கும் பிடித்த ஐஸ்க்ரீமை வாங்கி கொடுத்த நிலா அப்பொழுது அவள் அலைபேசிக்கு அழைப்பு வந்திருக்க, உள்ளே சிக்னல் சரியாக கிடைக்காததால் அந்த கடையை விட்டு வெளியில் வந்தாள்..

அதன் நுழைவாயிலின் ஓரமாக நின்று கொண்டு பேசி கொண்டிருக்க, அந்த கடையில் அருகில் இருந்த நட்சத்திர ஹோட்டல் முன்னால் வழுக்கி கொண்டு வந்து நின்றது அந்த ஆடி கார்..

அந்த காரை பார்த்ததும் அவள் கண்களில் மின்னல் வெட்டியது..

உடனே அதையே ஆர்வமாக பார்த்து கொண்டிருக்க, அந்த காரில் இருந்து இறங்கிய நெடியவன் மறுபுறமாக சுற்றி வந்து கதவை திறக்க அதில் இருந்து இறங்கினாள் ஒரு மாடர்ன் யுவதி..

செய்து வைத்த மெலுகு சிலை போல வெள்ளை வெளேரென்று இருந்தவளை அந்த கார்க்காரன் கரம் பிடித்து அழைக்க, அவளும் இன்னுமாய் அவன் உடன் ஒட்டி கொண்டு அவன் இடுப்பை கட்டி கொண்டாள்..

அவன் கரங்களும் அவளை மெல்ல அணைத்து கொள்ள இருவரும் ஏதோ பேசி சிரித்தபடி அந்த நட்சத்திர ஹோட்டலை நோக்கி சென்றனர்.. .

அதை கண்ட நிலாவோ அதிர்ச்சியில் உறைந்து நின்றாள்..

தன் பார்வையை மாற்றி கொள்ள முயன்றாலும் அவள் கண்கள் அவளுக்கு அடங்காமல் மீண்டும் அங்கயே சென்று  நின்றது..

இப்பொழுது இருவரும் உடலோடு உடல் உரச இன்னுமாய் கட்டி அணைத்தவாறு அந்த ஹோட்டலுக்குள் நுழைய,  அந்த கார்க்காரன் , தன் கணவன் முதுகையே வெறித்து பார்த்தபடி சிலையாக நின்றிருந்தாள் நிலவினி..! 

Comments

Popular Posts

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே

என் மடியில் பூத்த மலரே

அனைவருக்கும் வணக்கம்!!!

காதோடுதான் நான் பாடுவேன்

நிலவே என்னிடம் நெருங்காதே!!

வராமல் வந்த தேவதை

பூங்கதவே தாழ் திறவாய்

தவமின்றி கிடைத்த வரமே

தாழம்பூவே வாசம் வீசு!!!

அழகான ராட்சசியே!!!