என்னுயிர் கருவாச்சி-49

 


அத்தியாயம்-49

 

ன்று மாலை தன் வீட்டைச் சுற்றி பயிரிட்டு வைத்திருந்த கீரைத் தோட்டத்தில் நின்றிருந்தாள் பூங்கொடி.

தூதுவளை இலை அரைச்சு

தொண்டையில தான் நனைச்சு

மாமங்கிட்ட பேசப்போறேன் மணிக்கணக்கா

 

தூண்டா மணிவிளக்க தூண்டி விட்டு எறிய வச்சு

உம்முகத்தை பாக்கப் போறேன் நாள் கணக்கா

 

அந்த இந்திரஞ் சந்திரனும் மாமன் வந்தா எந்திரிச்சு நிக்கணும்

அந்த ரம்பையும் ஊர்வசியும் மாமனுக்கு தொண்டுகள் செஞ்சிடனும்

நான் காத்தாகி ஊத்தாகி மாமனைத் தழுவி கட்டிக்கணும்

 

என்று வெட்கத்தோடு பாடி சிரித்துக்கொண்டே தோட்டத்தில் இருந்த கீரைகளை பறித்து கட்டுகட்டாக கட்டிக்கொண்டிருந்தாள்  பூங்கொடி.  

கொத்தமல்லி, பொதினா,  சிறுகீரை,  பாலக் கீரை வெந்தயக்கீரை என்று அனைத்து வகையான கீரைகளையும் பாத்தி பாத்திகளாக பயிரிட்டு இருந்தாள்.  

செயற்கை உரத்தை  பயன்படுத்தாமல், நம்மாழ்வாரின்  ஆலோசனை புத்தகங்களை படித்து இயற்கை முறையில் உரத்தை தயாரித்து கீரைகளுக்கு பயன்படுத்தி இருந்தாள்.

கீரைகளுக்கு மட்டும் அல்லாமல், அவர்களின் வயலுக்கும்,  மற்றும் அவள் தந்தையின் வயல்களுக்கும் அதையே பயன்படுத்தி  வருகிறாள்.  

அந்த இயற்கை உரத்தால் செழித்து வளர்ந்திருந்தது கீரைகள்.  

மாலையில்  கல்லூரியை விட்டு வந்ததும், ரெப்ரெஸ்ஸாகி விட்டு, நன்றாக வளர்ந்து  அறுவடையில் இருக்கும் கீரைகளை பறித்து  கத்தை கத்தையாக கட்டி வைப்பாள்.

மறுநாள் கல்லூரிக்கு செல்லும் பொழுது,  பெரிய கோணியில் போட்டு வைத்து,  பேருந்தில் வைத்து அவள் உடனேயே எடுத்துச் செல்வாள்.

கடைக்காரர்  பேருந்து நிலையத்திற்கே  வந்து கீரைகளை எடுத்து சென்று விடுவார்.

அதில் நல்ல லாபம் கிடைக்க,  இன்னும் முழு மூச்சுடன் கீரை விவசாயத்தில் இறங்கினாள் பூங்கொடி.

வீட்டை சுற்றி காலியாக , முள்ளு  முளைத்து கிடந்த புதர்களை கூட,  ராசய்யாவுடன் இணைந்து அதை எரிந்து விட்டு, அந்த நிலத்தை உழுது பதப்படுத்தி அங்கேயும் கீரைத் தோட்டம் போட்டாள்.

அவளை பார்த்து அந்த கிராமத்தில் மற்றவர்களும் முதன்முதலாக பணப்பயிர்களை குறைத்து,  இந்த மாதிரி குறும்பயிர்களையும் பயிரிட ஆரம்பித்திருந்தனர்.

தனக்குத் தெரிந்த டெக்னிக்கை எல்லாம் எல்லாருக்கும்  சொல்லிக் கொடுத்தாள் பூங்கொடி.

காமாட்சி பட்டியில் எங்கெல்லாம் தரிசு நிலம்  இருந்தாலும் அதையும் நல்ல முறையில் விவசாயத்திற்கு பயன்படுத்த ஆரம்பித்து இருந்தனர் அந்த ஊர் மக்கள்.

******

பூங்கொடி, தான் வளர்த்த கீரைகளை பார்த்து ரசித்தவாறு அதை பறித்து கத்தையாக கட்டிக் கொண்டிருக்க,  திடீரென்று வானம் இருட்டிக் கொண்டு வந்தது.  

அதுவரை பளிச்சென்று இருந்த வானம் திடீரென்று கருமேகங்கள் சூழ,  மழை பெய்யும் அறிகுறி தெரிந்தது.  

அப்பொழுதுதான் திரும்பி வயல் பக்கம்  பார்த்தாள்.

அங்கே அடுத்த போகம் நெல்லை பயிரிட, தயாராக இருந்த நெல்வயலுக்கு  தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்தான் ராசய்யா.

வீட்டை விட்டு சற்று தொலைவு இருந்தது அவள் வயல். மழை வருவதைப்போல இருக்க, அவனை வீட்டிற்கு  அழைக்க எண்ணி, 

“மாமா... “ என்று கத்தி  அழைக்க,  அவள் சத்தம் அவன் காதில் விழவில்லை.

அதற்குள் சடச்சட வென்று மழை பெய்ய ஆரம்பித்தது.  

அவசரமாக கீரையை அப்படியே போட்டு மூடியவள், வீட்டிற்குள் ஓடி  ஒரு குடையை எடுத்துக் கொண்டு வயல் பக்கம் ஓடினாள்.  

ராசய்யாவும் மழை வேகமாக பெய்ய ஆரம்பிக்கவும்,  வீட்டை நோக்கி வேகமாக ஓடி வந்தான்.  

அதற்குள் அவனை அடைந்து இருந்தவள்,  குடையை அவன் தலைக்கு மேல பிடித்துக் கொண்டு  மூச்சு வாங்க நின்றாள்.

தனக்காக அவள் வேகமாக ஓடிவந்ததை கண்டு அவன் மனம் கனிந்தது.

“ஏன் டி லூசு...  நான் என்ன மழையில் நனைஞ்சு கரைஞ்சு போயிடுவேனா? எதுக்கு இம்புட்டு   வேகம் ஓடிவர? வரப்பில்  வழுக்கி விழுந்திருந்தா என்னாவது? “  என்று செல்லமாக கண்டித்தான்.  

“ம்க்கும்... எனக்கு இருக்கிறது கருவேப்பில கொத்து மாதிரி ஒரே ஒரு புருஷன்.  அவனும் மழையில கரைஞ்சு  போயிட்டா என்ன  செய்யறதாம்? அதான் ஓடி  வந்தேன்...”  என்று சிரிக்க,  அவளின் காதை பிடித்து செல்லமாக திருகியவன்

“வாயாடி...உன்கிட்ட பேசி ஜெயிக்க முடியுமா?  சரி சரி..  வா போலாம்...  நான் ஏற்கனவே நனைந்து விட்டேன். எனக்கு குடை வேண்டாம். நீயே  குடையில போ... நான் பின்னால  வருகிறேன்...” என்று  அவளை முன்னால் நடக்க சொன்னான்.

“இல்ல  மாமா. இது  ஆலங்கட்டி மழை போல இருக்குது. இப்ப பாரு  பெருசு பெருசா கட்டி கட்டியா வுழுது.  இது உங்க மேல விழுந்தா அவ்வளவுதான்.  குடை பெருசாதான் இருக்கு. அதனால ரெண்டு பேருமே  போகலாம்...”  என்று அவனை கட்டாயப்படுத்தி குடைக்குள் அழைத்தபடி நடந்தாள்.

அந்த சிறிய வரப்பில் இருவரும் பக்கவாட்டில் ஒட்டி உரசியபடி நடக்க,  இருவரின் உடலும் ஒன்றோடொன்று உரசிக் கொண்டது.

ஏற்கனவே மழையில் நனைந்திருந்ததால் அவன் அணிந்திருந்த  முன்டாசு பனியன்,  உடலோடு ஒட்டிக்கொள்ள, அவனின் திண்ணிய மார்பு இன்னுமாய் விரிந்து விறைத்து நின்றது.

கல் போல இறுகி இருந்தவனின் மஞ்சத்தில் அவள் முகம் அவ்வபொழுது உரச, இருவருக்கும் புது வெள்ளம்  பாய்வதை போல இருந்தது.

அவனின் வலிமையான திடகாத்திரமான கையோடு அவளின் மெல்லிய கை தொட்டு தொட்டு மீள, இருவருக்கும் அந்த குளிர் மழையிலும் உடல் சூடானது.

அவளின் அந்த நெருக்கத்தில் அவன் ஆண்மை விழித்துக்கொள்ள, உணர்வுகள் கிளர்ந்து எழுந்தன.

உடனே சுதாரித்துக்கொண்டவன்

“ம்ம்ஹூம்... இது சரிவராது. நீ  முன்னாடி போடி... நான் பின்னால  வரேன்...”  என்று அவனுடன் ஒட்டி நடந்தவளை முன்னால் இழுத்து விட்டு குடைக்குள்ளேயே பின்னால் நடந்தான் ராசய்யா.

அவன் தேகத்தின் சூடு அவள் மேனியிலும் உணர, அவனின் தடுமாற்றத்தை கண்டு கொண்டவளின் கண்கள் பளிச்சிட்டு மின்னின.

ஆஹான்... கருவாயா...  இன்னைக்கு இருக்குடா உனக்கு. . உன் கற்பை எப்படி காப்பாத்தறனு  இன்னைக்கு பாக்கறேன்... இந்த பூங்கொடிகிட்டயே வா? “என்று உள்ளுக்குள் சிரித்துக் கொண்டாள்.  

அவனுக்கு முன்னால் நடந்து கொண்டிருந்தவள்,  திடீரென்று அப்படியே நிற்க,  அதை எதிர்பார்த்திராதவன்  அவள் மீது மோதி, கால் இடறி அப்படியே சேத்து வயலில் விழுந்தான்.

விழும் பொழுது அனிச்சையாக அவளின் கையை பற்ற, அவளும் அவனோடு சேர்ந்து சேத்துக்குள் சரிந்தாள்.  

இன்னும் இரண்டு நாளில் நாத்து நடுவதற்காக பதப்படுத்தி வைக்கப்பட்டிருந்த நெல்வயல் என்பதால், அரை அடிக்கு சேறு,   குலமாகியிருக்க, அதில்  விழுந்தவன் மீது பெண்ணவளும் சரிந்தாள்.  

தன் மீது பூமாலையாய் விழுந்தவளை இறுக்கி கட்டி கொண்டவன்,  

“உனக்கு அடி ஏதும் படலை இல்லடி...”  என்று அவசரமாக அவளின் மேனியை தடவிப் பார்த்தான்.  

அவன் கண்களில் தெரிந்த பதற்றம்..  அதிலிருந்த அவள் மீதான அக்கறை கண்டு இன்னுமாய் காதல் பொங்கியது பெண்ணவளுக்கு.  

அடுத்த கணம் எதுவும்  யோசிக்காமல்,  அவர்கள் கிடப்பது சேறு என்றும் பார்க்காமல்,  அவன் மீது ஊர்ந்து எக்கி அவனின் அழுத்தமான இதழ்களை சிறை பிடித்து இருந்தாள் அவன் மனையாள்.

மழை சோ வென்று கொட்டிக் கொண்டிருக்க, அதை பொருட்படுத்தாமல், அவளோ தாபத்துடன் அவன் இதழை அழுத்தமாக கவ்விக்கொண்டு சுவைக்க ஆரம்பித்தாள்.  

அதில் தடுமாறியவன் சித்தம்  கலங்கித்தான் போனான். 

கொடி போன்ற  மெல்லியவளான அவளின்  அந்த அதிரடியான முத்தம் அவனை மொத்தமாக கவிழ்த்துப் போட்டது.  

அவளோ எங்கே விலகினால் தன்னை விட்டு பிரிந்து விடுவானோ...  தன்னை பிரித்து விலக்கி விடுவானோ என்ற தவிப்பில்,  அவன் இதழுடன் இதழ் சேர்த்து இன்னும் அழுத்தமாய் முத்தம் இட்டாள்.

அப்படியே கிறங்கி கிடந்தான் அந்த காளையவன்.

சற்று நேரத்தில் அவள் மூச்சுக்காற்றுக்கு தடுமாற,  அதை உணர்ந்தவன்  மெல்ல அவளை தன்னிடமிருந்து விலக்க முயல,  அவன் உதட்டில் இருந்து தன் இதழை விடுவித்தவள்,  ஒரு கணம் தன்னை ஆசுவாச படுத்திக்கொண்டு பின் மீண்டும் அவன் கழுத்தை கட்டிக்கொண்டு முகமெங்கும் முத்த மழை பொழிந்தாள்.

தன்னவளின் அந்த அதிரடி  முத்தத்தில், மொத்தமாக தன்னிலை இழந்தவன்,  அந்த ஆவேச முத்தத்தில் அவன் உள்ளே உறங்கிக் கிடந்த ஆண்மை வீறு கொண்டு எழ, உணர்வுகள் கிளர்ந்து எழ,  அப்படியே அந்த சேற்றில் தன்னை மறந்து கிறங்கி கிடந்தான்.  

அவன் கை மட்டும் தன்னவளை இறுக்கி அணைத்துக் கொண்டது

அவளோ தன் சக்தி எல்லாம் வடியும் வரை அவன் முகத்தை தன் இதழ்களால் ஊர்வலம் வந்தவள்,  தொய்ந்து சரிய,  அவனின் இதழ்களோ இன்னும் கொஞ்சம் வேண்டும் என்று தவித்தது

இதுவரை அவனிடமிருந்து எந்த ஒரு ரியாக்சனும் வராமல் போக, ஏக்கமும், தாபமுமாய் தன்னவனை பார்த்தாள் பெண்ணவள்.

அவளின் இதழ்களோ  என்னை கொஞ்சம் கவனி என்று இறைஞ்ச,  அவள் கண்களில் இருந்த ஆசையையும், அவனுக்கான அழைப்பையும்,  தாபத்தையும் கண்டவன் அதற்கு மேல் தன்னை கட்டுபடுத்த  முடியாமல் அவன் போட்டு வைத்திருந்த விலங்கை உடைத்தெறிந்தான்.

தன் மீது கொடி போல படர்ந்திருந்தவளை  அப்படியே பக்க வாட்டில் சரித்து தாபத்துடன் அவள்  மீது படர்ந்தான்.  

அடுத்த கணம் அவனுக்காக இத்தனை நாட்கள் தவித்துக்கொண்டிருந்த அவளின் இதழின் தவிப்பை, தன்  அழுத்தமான இதழ் கொண்டு இணை சேர்த்து  அடக்கினான்.  

அதற்காகவே ஏங்கி கிடந்தவள், அவனின் அழுத்தமான இதழ் தீண்டலில் ,  அப்படியே மெலுகாய் கரைந்தவள், இன்ப அவஸ்தையை தாளாமல் உணர்வுகள் கிளர்ந்து எழ, அவனின்  தோளில் தன் நகக்கண்களை அழுந்த பதித்தாள்.   

உணர்ச்சிகளின் பிடியில் உடலை வளைத்து கிடந்தவளின் மோகத்தை கண்டவன்,   இன்னுமாய் போதை கொண்டு, தாபத்தோடு அழுத்தமாய் ஆழமாய் வன்மையாய் அவளின் இதழில் முத்தமிட்டான்.  

அதே நேரம் அன்று அவன் அழுந்த முத்தமிட்டதில், அவளின் இதழோரம் கிழிந்து ரத்தம் கசிந்தது நியாபகம் வர, திடுக்கிட்டு அவளை இந்த முறையும் காயபடுத்தி விடக்கூடாது என்று அவளை விட்டு  விலக முயன்றான்.  

ஆனால் அவளோ எட்டி அவன் கழுத்தை வளைத்து கொண்டவள், தானாகவே அவனை இழுத்து அவன் இதழை தன் இதழில்  வைத்து அழுத்திக் கொள்ள,  அதற்குமேல் எந்த தடையும் இல்லாமல் கொஞ்சம் கொஞ்சமாக தன்னவளை ஆட்கொள்ள ஆரம்பித்தான்.  

முத்தத்தில் ஆரம்பித்தவன், தாபத்தோடு அவளின் ஆடையை கழைந்தவன், அவளின் வெற்று மேனியை  தன் கரங்களால் ஊர்வலம் வந்து,  மோகத்துடன் தீண்டியவன்,  படிப்படியாக முன்னேறி தாம்பத்தியத்தில் இறங்க ஆரம்பித்தான்.  

ஒவ்வொரு அடியிலும் அவளுக்கு வலித்து விடுமோ என்று  அவளின்  முகம் பார்த்து,   முன்னேறினான்.

அந்த நிலையிலும் முரட்டுதனமாக அவளை ஆட்கொள்ளாமல்,   முழு மொத்த அக்கறையுடன் அவளை கையால, அவனின் தயக்கத்தில் இருந்தே தன்னவனின்  மனநிலை புரிந்தது பெண்ணவளுக்கும்.  

என்னதான் தன்னவன் உடன் இணைய  வேண்டும் என்ற ஆசை, வேட்கை இருந்தாலும்,    முதல் கூடல் பொதுவாக பெண்ணுக்கு  வலியையும் வேதனையையும் கொடுக்கும் என்று கேள்வி ஞானமாக அறிந்து வைத்திருந்தாள்.

அவளின் தோழிகள் வெட்கம் விட்டு அவர்கள் பட்ட அவஸ்தை எல்லாம்  அவளிடம் கொட்டி இருந்தனர்.  

உயிர் போகும் வலி இருக்கும்...  வாய்விட்டு அழக்கூட முடியாத நிலை வரும்.  எத்தனையோ பெண்கள் வலியை பொறுத்துக் கொண்டு தாம்பத்தியத்தில் ஈடுபட வேண்டிய  கட்டாயத்திற்கு தள்ளப்படுவார்கள்.

வலிக்கிறது...விடுங்க என்று கெஞ்சினால் கூட மோகத்தில் பல ஆண்கள், தன் இணையின் உணர்வுகளை கண்டு கொள்ளாமல் தங்கள்  இச்சையை தீர்த்துக் கொள்ளதான் முனைவார்கள்.

வலிக்க வலிக்கத்தான் அரங்கேறும் முதல் கூடல்  என்று புலம்பியது எல்லாம் பூங்கொடிக்கு நினைவு வர, ஆசை மறைந்து மெல்ல பயம் எட்டி பார்த்தது.

அதுவும் தன் கணவனின் திடகாத்திரமான தேகம்..முரட்டுதனமான குணம்...எல்லாம் கண் முன்னே வர, ரொம்ப வலித்து விடுமோ என்று தன்   கண்ணை இறுக்க மூடிக்கொண்டு பற்களை அழுந்த கடித்துக்கொண்டாள்.

அவள் கையோ அவன் தலைமுடியை கொத்தாக பற்றிக்கொண்டது.

அவனோ ஒவ்வொரு அடியிலும் தன்னவளின் முகம் பார்த்து முன்னேறியவன், இப்பொழுது அவள் முகத்தில் வந்திருந்த இறுக்கத்தையும், அவள் உடலில் தெரிந்த விரைப்பையும் கண்டு அவள் மனதை அறிந்து கொண்டான்.  

இதுவரை அவன் தீண்டலில் கிறங்கி கிடந்தவள் ,  இப்பொழுது இறுக்க கண்ணை மூடிக் கொள்ளவும், அவள் பயப்படுகிறாள் என்று புரிந்து போனது.  

உடனே தன் உணர்வுகளை கட்டுப்படுத்திக்கொண்டு அவளை விட்டு விலக முயல, தன்னவனிடம் எந்த அசைவும் இல்லாமல் போக, மெல்ல கண்ணை திறந்து பார்த்தவள்

“என்னாச்சு ? “  என்று கேள்வியாக அவனை பார்க்க,  

“உனக்கு வலிக்கும் டீ.... வேண்டாம்...” என்று வெளிவராத குரலில் கிசுகிசுக்க, அதைக் கேட்டவளோ மொத்தமாய் உருகிப்போனாள்

தன் முகத்திலிருந்து அகத்தை படித்துவிட்ட தன்  கணவனை நினைத்து பெருமையாக இருந்தது.

அதோடு  இதுவரை அவளை தீண்டிய  அவனின் வேகத்திலிருந்து, அவனுக்கும் அவள் மீது கொள்ளை ஆசை என்று கண்டு கொண்டவள்,  இப்பொழுது தன் மோக உணர்வுகளை கஷ்டப்பட்டு அடக்கிக்கொண்டு அவளுக்காக விட்டுக்கொடுக்க முன்வரும் தன் கணவனை நினைத்து கர்வமாக இருந்தது

எத்தனை பேருக்கு வாய்க்கும் இப்படி ஒரு கணவன் என்று அவள் நெஞ்சம் விம்ம,  கண்ணில் ஆனந்த கண்ணீர் வழிந்தது.  

கொட்டும் மழையிலும் அவள் கண்களில் வழிந்த கண்ணீரை கண்டு கொண்டவன்,  பதறி,  

“என்னாச்சுடி?  ரொம்ப வலிக்குதா? இதுக்குத்தான் நான் வேண்டாம்னு சொன்னேன்... “  என்று பதட்டத்துடன் விசாரிக்க, அவளோ இல்லை  என்று சேற்றில் கிடந்தவாறு தலையை மட்டும் ஆட்டினாள்.  

அந்த சேற்றில் ஒருவேளை  பூச்சி ஏதேனும் கடிச்சிருச்சா என்று மீண்டும் அவள் மேனியை அக்கறையோடு தடவி பார்க்க, அதில் இன்னுமாய்  பாகாய்  உறுகிப் போனாள் மங்கையவள்.  

அடுத்த கணம், அவனை இழுத்து தன் மேலே போட்டுக் கொண்டவள், இறுக்கி கட்டிக்கொண்டு,

ஐ லவ் யூ டா மாமா... நீ எனக்கு வேணும்...  இப்பவே வேணும்...  இந்த நொடியே உன்னோட நான் கலக்கணும்.  நான்  உன் உயிரோடு உயிர் ஆகணும்.

இருவரும் ஓர் உடல் ஓர் உயிர் ஆகணும்...  இப்பவே...இப்பவே நீ எனக்கு முழுசா வேண்டும்... “  என்று ஆக்ரோஷமாக சொல்ல,  அவனோ தயங்கினான்.

“வேண்டாம் டி...  நான் கொஞ்சம் முரட்டுத்தனமா நடந்திடுவேன். எனக்கு என்னை கட்டுபடுத்த முடியாது. உனக்கு வலிக்கும்... “ என்று   தயங்க,  

“அதெல்லாம் இல்லை... என்னால் சமாளிக்க முடியும். நீ எனக்காக பாக்காத.  இப்பவே எனக்கு நீ வேணும் டா மாமா... என் செல்ல புருஷா...  என்னுயிர் கருவாயா...”  

என்று கண் சிமிட்டி மையலுடன்  சிரித்தவள்,  செல்லமாக அவன் கன்னத்தை கடிக்க, அவனும் அவள் பிடிவாதத்தை பற்றி தெரிந்ததால்,  மீண்டும் தன் ஆட்டத்தை தொடர்ந்தான்.

இந்த முறை வெகு கவனமாக , அவளை பூவிலும் மென்மையாய் தீண்டினான். ஏனோ  இந்த முறை அவளுக்கு வலிக்கும் என்ற பயமே இல்லை.  

தன் கணவனின் அக்கறையில் மனம் பூரித்து இருக்க,  மனம் நிறைய ஆசைகள் சூழ, அவனுடனான கூடலை ஆர்வமாகவே எதிர்கொண்டாள்.  

அவனோ அவள் முகத்தைப் பார்த்து கொஞ்சம் அச்சமும் கொஞ்சம் தாபமும் ஒன்றாக கலந்தவனாய் தன்னவளை ஆட்கொண்டான். .

அவளின் தோழிகள் புலம்பியதை போல இல்லாமல் , அந்த கூடலில் வலிக்கு பதிலாக சொர்க்கத்தை கண்டாள்  பெண்ணவள்.  

அவனின் உயிரணு அவளுள் கலக்கும்  அந்த இன்பமான அவஸ்தையை வெட்கப் புன்னகையோடு தாங்கிக் கொண்டாள்.  

இத்தனை நாள் காத்து வந்த கற்பை தொலைத்து இருவரும் ஒன்றர கலந்தனர்.

எங்கே அவனுக்கு தன்னை பிடிக்கவில்லையோ? அவள் கட்டாயபடுத்தியதால் தான் அவள் கழுத்தில் தாலி கட்டிவிட்டானோ? அதனால்தான் தன்னை ஏற்றுக் கொள்ளாமல் தள்ளி நிற்கிறானோ  என்ற இருந்த கலக்கம் இப்பொழுது முழுவதுமாக நீங்கி இருந்தது பூங்கொடிக்கு.

முழுமொத்தமாய் அவனை தன்னவனாய் அவளும், அவளையே தன் உயிராய் அவனும் அந்த கூடலில் உணர்ந்து கொண்டனர்.

*****

வேட்கையோடு தன்னவளை ஆட்கொண்டு முடித்தவன்,  கலைத்து அவளின் பக்கவாட்டில்   சரிந்து விட, அடுத்த கணம்  அவனின்  மார்பின் மீது ஏறி படுத்துக் கொண்டாள் அவன் மனையாள்.

இருவரின் உடலிலும் ஆடை இல்லாமல், வெறும்  சேறு அப்பிக் கொண்டு இருக்க,  அந்த மங்கிய மாலை நேரத்தில், மழை சாட்சியாக, அரங்கேறிய அவர்களின்  கூடலை எண்ணி இருவருக்குமே வெட்கத்துடன் சிரிப்பு வந்தது.  

அவன் மார்பில் வெட்கத்தோடு முகம் புதைத்து கொண்டவள், அடர்ந்த முடிகள் நிறைந்த அவன் மஞ்சத்தில் முத்தமிட்டவள், மெல்ல  தலைநிமிர்ந்து அவன் முகத்தைப் பார்த்து

“ரொம்ப தேங்க்ஸ் மாமு...” என்று வெட்கப்பட்டு சிரித்து வைத்தாள்.

அவளின் தலையை ஆதுரமாக வருடியவன், மெல்ல வெட்கத்துடன் புன்னகைத்து  

“கடைசியில் நீ நினைச்சதை சாதிச்சிட்ட டி...ரௌடி...”  என்று அவளின் நெற்றியில் முத்தமிட,  

“பின்ன...ராசய்யா பொண்டாட்டினா கொக்கா? “ என்று வெற்று உடலாக இருந்த பொழுதும், இல்லாத தன் காலரை தூக்கி விட்டுக் கொள்ள,  அதில் மலர்ந்து  புன்னகைத்தான் அவளவன்.

மீண்டும் அவன் உள்ளே மோகம் தலை தூக்க, தன் மஞ்சத்தில் திடந்தவளை அப்படியே கீழ சரித்து, அவள் மீது படந்து மீண்டும் தன் இரண்டாம் இன்னிங்சை ஆரம்பித்தான்.

அந்த முரட்டு காளையவனின் ஆட்டம் இரண்டோடு நிக்காமல், மூன்று , நான்கு என்று நீண்டு கொண்டே சென்றது.

இதுவரை தன் கணவனின் கை விரல் தீண்டலுக்காக ஏங்கி தவித்தவளுக்கோ திகட்ட திகட்ட தாம்பத்திய சுகத்தை வாரி வழங்கினான் அவனும் அனுபவித்தவாறு.

ஒரு மணி நேரம் ஓயாமல் கொட்டி தீர்த்த மழை, இப்பொழுது சோர்ந்து போய் தன் ஆட்டத்தை நிறுத்திக் கொள்ள, மாலை மங்கிய இருளில் இன்னுமே அவன் மோகம் தீராமல் தன் ஆட்டத்தை தொடர்ந்தான் அந்த முரட்டுக்காளை..!  

Comments

Popular Posts

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே

என் மடியில் பூத்த மலரே

அனைவருக்கும் வணக்கம்!!!

காதோடுதான் நான் பாடுவேன்

நிலவே என்னிடம் நெருங்காதே!!

வராமல் வந்த தேவதை

பூங்கதவே தாழ் திறவாய்

தவமின்றி கிடைத்த வரமே

தாழம்பூவே வாசம் வீசு!!!

அழகான ராட்சசியே!!!