நிலவே என்னிடம் நெருங்காதே-64

 


அத்தியாயம்-64

ன்று மதியம் இரண்டு மணி அளவில் தன் அலுவலக வேலையில் பிசியாக இருந்தான் அதிரதன்..

அவன் மனதில் இருந்த குழப்பங்களுக்கு இன்னுமே விடை கிடைக்கவில்லை என்ற பொழுதும் அலுவலகத்தின் உள்ளே நுழைந்ததுமே அதை எல்லாம் பின்னுக்கு தள்ளி தன் வேலையில் கவனத்தை செலுத்தினான்...

இதுவும் அவன் தாத்தா அந்த சாணக்கியர் கற்று கொடுத்த பாடம்தான்..

அதிரதன் அவன் தாத்தாவின் தொழிலில் நுழைய ஆரம்பித்த ஆரம்பத்தில் அவர் மேல் இருந்த வெறுப்பால் அதை கற்று கொள்ள மாட்டேன் அவர் சொல்வதை செய்ய மாட்டேன் என்று முறுக்கி கொண்டான்..

அப்பொழுது அவனை நேராக பார்த்து சொன்னது

“மனதில் எத்தனை குழப்பங்கள் வேதனைகள் இருந்தாலும் இந்த அலுவலகத்துக்குள் நுழையும்பொழுது அதை எல்லாம் வாயிலிலே செருப்பை கழட்டி விடுவதை போல விட்டு விட்டு வந்து விடவேண்டும்...

அதே போலத்தான் தொழிலில் இருக்கும் பிரச்சனைகளை வீட்டிற்கு வெளியில் விட்டுவிடவேண்டும்..

தொழிலை வீட்டிற்கும் வீட்டு பிரச்சனையை தொழிலுக்கும் இழுத்து வரக்கூடாது. இதுதான் ஒரு பிசினஸ் ல் சக்ஸஸ் ஆக தாரக மந்திரம் “ என்று அவன் கண்களை பார்த்து சொன்னது அப்படியே அவன் ஆழ்மனதில் பதிந்துவிட்டது....

அதை இன்று வரையும் பின்பற்றியும் வருகிறான்... அது மட்டுமா? இது போல எத்தனையோ போதனைகள்,  பாடங்கள் அவன் மனதில் பதியுமாறு போதித்திருக்கிறார்...

இதுவரை அவனை அதை செய் இதை செய் என்று அதட்டியதில்லை... சாந்தினியை அவர் முன்னே அழைத்து சென்று நிறுத்திய பொழுது கூட புன்னகை மாறாமல் வரவேற்றார்...

ஆனால் அவள் பொருத்தமானவள் இல்லை என்று தெரிந்தபொழுது உடனே அவனிடம் அதிகாரத்தை காட்டி அவனை மடக்க முயலாமல் குறுக்கு வழியில் இல்லை அவர் வழியில் சென்று என் மனதில் புகுத்த முயன்றிருக்கிறார்..

ஒருவேளை நான்தான் அவரை சரியாக புரிந்து கொள்ளவில்லையோ? என்று நல்லவிதமாக யோசிக்க ஆரம்பித்தவன் உடனே தலையை உலுக்கி கொண்டு தன் வேலையில் கவனத்தை செலுத்தினான்..

அதன்பின் மற்றதை எல்லாம் மறந்தே போனான்...

மணி இரண்டு அளவில் அபி வந்து அழைத்தபொழுதுதான் அவனுக்கு பசிக்கறதே தெரிந்தது.. உடனே தன் லேப்டாப் ஐ அனைத்துவிட்டு எழுந்து அபியுடன் நடந்தான்..

நண்பர்கள் மூவரும் எப்பொழுதும் தங்கள் அலுவலக கேன்டினிலயே சாப்பிடுவர்..சாப்பிடும்பொழுது தொழில் பற்றி ஏதாவது பேசி கொண்டே சாப்பிடுவர் என்பதால் முடிந்தவரை மூவரும் ஒன்றாகவே செல்வர்..

மூவரும் தங்கள் உணவை வாங்கி கொண்டு இருக்கையில் அமர்ந்து உண்ண ஆரம்பிக்க அப்பொழுதுதான் கவனித்தனர் எப்பொழுதும் வளவளத்து கொண்டிருக்கும் அஸ்வின் இன்று அமைதியாக இருந்தான்..

அவன் முகத்திலும் ஏதோ சிந்தனை ஓடி கொண்டிருப்பது தெரிந்தது.. அவன் அருகில் அமர்ந்து இருந்த அபி அவன் தோளை தட்டி

“டேய் மச்சான்... என்னாச்சுடா? இன்னைக்கு ரொம்ப வயலின் வாசிக்கற? ஏதாவது ப்ராப்ளமா? “ என்றான் அக்கறையாக..

“ப்ச்... வாழ்க்கையே ப்ராப்ளம்தான்..அதுல எந்த ப்ராப்ளத்தை சொல்ற? “ என்றான் சலித்தவாறு..

“ஹா ஹா ஹா.. என்னடா மச்சி...இப்படி சலிச்சுக்கற? அப்படி என்னடா ப்ராப்ளம் உனக்கு? “ என்றான் அதிரதனும் தன் நண்பன் தோளை தட்டி.

“ஹ்ம்ம்ம் எல்லாம் வயசு பையனுக்கு வர்ற வாலிப பிரச்சனைதான்... “ என்றான் முகத்தை பாவமாக வைத்து கொண்டு.

“டேய் மச்சான்... வயசு பையனா? நீயா ? அந்த கேட்டகரி எல்லாம் நாம எப்பவே தாண்டியாச்சு.. இப்ப ஏழு கழுதை வயசு ஆய்டுச்சு...உனக்கு உன் அம்மா பொண்ணு பார்க்க ஆரம்பிச்ச காலத்துக்கு இந்நேரம் நீ ரெண்டு புள்ளைக்கு அப்பா ஆகியிருப்ப... “ என்று சொல்லி சிரித்தான் அபி...

அவனை பார்த்து முறைத்த அஸ்வின்

“ஹ்ம்ம்ம் ஹலோ ப்ரதர்.. நீயும் அதே கேட்டகரிதான்.. உனக்கும் அதே நிலைதான்.. மைன்ட் இட்.. “ என்றான் முறைத்தவாறு..

“ஓ யெஸ்.. நான் மறுக்கலையே.. நான் எப்பவும் உண்மையை ஒத்துக்கறவன் டா.. உன்னை மாதிரி என்றும் பதினாறு இன்றும் வாலிபன் என்று வெட்டி வீராப்பு பேசலையே.. “  என்று வாரிய அபி ஏதோ நியாபகம் வந்தவனாக

“அத விடு மச்சி.. நேற்று நீ எழுத போன பரிட்சை என்னாச்சு? பாஸ் ஆச்சா? இல்ல எப்பவும் போல ஊத்திகிச்சா? “ என்றான் அபி நக்கலாக சிரித்தவாறு..

“பரிட்சையா? என்னடா பரிட்சை? சொல்லவே இல்லை? “ என்றான் அதிரதன் ஆர்வமாக..

“டேய் அதி.. அதெல்லாம் உனக்கு தேவை இல்லாதது.. உனக்குத்தான் எல்லாம் செட் ஆகிடுச்சே.. நீ எதுக்கு அதை ஆர்வமா கேட்கற? “ என்று முறைத்தான் அபி..

“ஒரு க்யூரியாசிட்டிதான்... ஆமா அது என்ன எனக்கு எல்லாம் செட் ஆகிடுச்சு அஸ் க்கு ஆகல? “ என்றான் யோசனையாக..

“ஹ்ம்ம் எல்லாம் அவன் கல்யாணம் விஷயம் தான் டா..இந்த வருசத்துக்குள்ள மச்சானுக்கு கால் கட்டு போட்டு விடணும்னு அவங்க வீட்ல ரொம்ப தீவிரமா இருக்காங்க.. அதுக்குத்தான் பொண்ணு பார்க்கும் படலத்தை நடத்திகிட்டிருக்கான்..

இப்ப எல்லாம் வாரம் இரண்டு தரம் பொந்ணு பார்க்க போறேனு கிளம்பிடறான் மச்சான்... நேற்று ஈவ்னிங் கூட அதுக்குத்தான் போய்ருந்தான்... அதான் ரிசல்ட் என்னாச்சுனு கேட்டுகிட்டிருக்கேன்.. “ என்று விளக்கினான் அபி.

ஏனோ அஸ்வினுக்கு திருமணம் என்றதும் அதிரதனுக்கு உள்ளுக்குள் நிம்மதியாக இருந்தது அவனை அறியாமலயே..உள்ளுக்குள் ஒரு நிம்மதி மூச்சு விட அவன் முகத்திலும் அந்த பளிச் பிரகாசித்தது.. அதை கண்டு கொண்ட அபி

“டேய் அதி மச்சான்... அவனுக்கு கல்யாணம் னா உன் முகத்துல எதுக்குடா 1000 வாட்ஸ் பல்ப் எரியுது? “ என்றான் நக்கலாக சிரித்தவாறு...

“ஹீ ஹீ ஹீ சீக்கிரம் கல்யாண சாப்பாடு சாப்பிடலாம் இல்ல.. அதுக்குத்தான்.. “ என்று அசட்டு சிரிப்பை சிரித்து சமாளித்தான் அதிரதன்..

“ஹ்ம்ம் கல்யாண சாப்பாட்டுக்கு அலையறவன் நீ இல்லையே... எங்கயோ இடிக்குதே.. “ என்று அபி குறுகுறுவென்று பார்க்க அதிரதனோ தன் நண்பனை நேராக பார்க்காமல் அஸ்வினை பார்த்தவன்

டேய் மச்சி...அபி சொல்றதை பார்த்தால் ஏற்கனவே நிறைய பொண்ணுங்களை பார்த்திருப்ப போல... இன்னுமா ஒன்னு கூட செட் ஆகலை..

நீ இருக்கிற ஹேன்ட்ஸம் க்கு நிறைய பொண்ணுங்க வந்து விழுவாங்களேடா? அதுல ஒன்னு கூடவா உன் மனசுக்கு பிடிக்கல? “ என்றான் அதிரதன் ஆச்சர்யமாக...

அஸ்வினும் அதிரதன் அளவுக்கு இல்லை என்றாலும் கம்பீரமானவன்.. பெண்களை வசீகரிப்பவன்தான்..

நண்பர்கள் மூவரும் வெளியில் செல்லும்பொழுது பெண்களின் பார்வை முதலில் அதிரதனிடம் தான் தாவும்.. ஆனால் அவன் அழுத்தக்காரன் யாரிடமும் இரண்டு அடி தள்ளி நிற்பவன்.. அதிகமாக பேச மாட்டான்...

யாராவது பெண்கள் அவனை நெருங்கினாலே ஒரு முறை முறைத்து விட்டு தள்ளி நின்று கொள்வான்..

ஆனால் அஸ்வின் அப்படி இல்லை... அவனாகவே சென்று அந்த பெண்களிடம் கடலை போடுவான்.. அவர்களும் சிறிது நேரத்திலயே அவனுடன் க்ளோஸ் ஆகி விடுவார்கள்..

க்யூமராக பேசுவதிலும் அடுத்தவர்களுக்கு பிடித்த மாதிரி விஷயங்களை பேசுவதிலும் அஸ்வின் தலை சிறந்தவன்.. அதனாலயே நிறைய பெண்கள் வட்டாரம் அவனை சுற்றி வரும்..

அப்படி இருப்பவன் இன்னும் ஒருத்தியை கூட தன் வாழ்க்கை துணையாக தேர்ந்தெடுத்திராதது அதிரதனுக்கு ஆச்சர்யத்தை கொடுத்தது...அதனாலயே தன் நண்பனை ஆச்சர்யமாக விசாரித்தான்..

“ஹ்ம்ம்ம் நான் எனக்கு மட்டும் மனசுக்கு பிடித்த பொண்ணா தேடி இருந்தால் எப்பவே கண்டு பிடிச்சிருப்பேன் டா. ஆனால் நான் என் குடும்பத்துக்கு ஏத்த பொண்ணாகவும் தேடி கொண்டிருக்கிறேன்..

உனக்கே தெரியும். எனக்கு ஒரு அக்கா ஒரு தங்கை..நான் தான் தலைமகனாக எங்க குடும்பத்தை தாங்க வேண்டும்.. அக்காவுக்கு லேட் மேரேஜ்.. இப்பதான் கன்சீவ் ஆகி இருக்கா...அவளுக்கு சீமந்தம், டெலிவரி அப்புறம் குழந்தை பிறந்தால் தாய் மாமனாக எடுத்து செய்ய நிறைய கடமைகள் இருக்குடா..

அடுத்து என் தங்கை.. அவள காலேஜ் சேர்க்கணும்.. அப்புறம் அவளுக்கு மேரேஜ் பண்ணனும்.. மேரேஜ்க்கு பிறகு அவளுக்கு செய்ய என்று இப்படி வரிசையாக பல கடமைகள் இருக்கின்றன..

எனக்கு வாழ்க்கை துணையாக வரப்போகிறவள் என்னை மட்டும் நேசிக்காமல் என் குடும்பத்தையும் நேசிக்க வேண்டும்.. நானும் கண்டிப்பா எனக்கு வரப்போகிறவள் குடும்பத்தையும் என் குடும்பமாய் பாவிப்பேன் தான்..

ஆனால் இப்ப இருக்கிற பொண்ணுங்க நிறைய பேருக்கு கணவன் மட்டும்தான் பிரதானமாய் தெரிகிறான்.. அவனை ஏற்று கொள்பவர்கள் அவன் குடும்பத்தை ஏற்று கொள்ள பிடிப்பதில்லை..

நிறைய பொண்ணுங்க போடற முதல் கண்டிசனே தனக்கு வரப்போகிறவன் ஒரே பையனா இருக்கணும்.. நாத்தனார் கொழுந்தனார் என்று எந்த பிக்கல் பிடுங்களும் இருக்க கூடாது...

அவ்வளவு ஏன் மாமியாரே இருக்க கூடாது என்று தேடுகிற பெண்கள் கூட இருக்காங்க.. அதனால்தான் நான் எதிர்பார்க்கிற மாதிரி எதுவும் அமைய மாட்டேங்குது மச்சான்..

ஆனால் இந்த அம்மாவுக்கு அது தெரியலை... என்னை கட்டாயபடுத்தி வாரம்  ஒரு பொண்ணா பார்க்க சொல்லி இழுத்துகிட்டு போய்டறாங்க..

ஊரில் இருந்தால் வேலை ஆகலைனு இப்ப சென்னைக்கே வந்து உட்கார்ந்து டேரா போட்டுட்டாங்க.. இந்த வருஷத்தில் எனக்கு கல்யாணம் பண்ணியே தீரணும் னு கங்கனம் கட்டிகிட்டு வந்திருக்காங்களாம்.. என்கிட்டயே நேரடியா சொல்லிட்டாங்க.

இப்ப சொல்லுங்கடா... என்ன பண்ணட்டும்? “ என்றான் பாவமாக

அதை கேட்டு மற்ற இருவரும் வாய் விட்டு சிரிக்க அதில் கடுப்பானவன்

“டேய். சிரிக்காதிங்கடா.. எனக்கு வயிறு எரியுது.. டேய் அபி.. உனக்கு என்னை மாதிரி நிலைமை வராம உன் மாமன் பொண்ணு மரிக்கொழுந்து காப்பாத்திட்டா.. உனக்கு ஆள் ஏற்கனவே ரெடியா இருக்கிற தைர்யத்திலதான் இப்படி சிரிக்கிற..!  

அதி... அவன பத்தி சொல்லவே வேண்டாம்... அவன் நிலா பொண்ணு எப்பவோ ரெடி.. ஹ்ம்ம்ம் எனக்குத்தான் ஒருத்தியும்  செட் ஆக மாட்டேங்கிறா.. “ என்று புலம்பியவன் ஏதோ நியாபகம் வர உடனே அவன் முகம் பிரகாசமானது...

தனக்கு எதிரில் அமர்ந்து இருந்த அதிரதனை பார்த்த அஸ்வின்

“டேய் மச்சான்.... அன்னைக்கு உன் வீட்டில் பார்த்தனே ஒரு பொண்ணு... க்யூட் ஏஞ்சல்... அந்த பொண்ணு எப்படிடா? எனக்கு செட் ஆகும் னு தோணுது. அவங்கள பற்றி கொஞ்சம் டீடெய்ல்ஸ் கொடேன்.. “ என்றான் கண்கள் பளபளக்க..

அதை கேட்ட அதிரதனோ அதிர்ந்து போக அவன் தொண்டையில் இறங்கி கொண்டிருந்த உணவு அப்படியே பாதியில் சிக்கி கொள்ள உணவுக்குழாய் அடைத்து கொண்டு புரை ஏறியது...

வேகமாக தலையை தட்டி சமாளித்தவன் அஸ்வினை பார்த்து ஒரு கார பார்வை பார்த்தான்..

அதை கண்டு திகைத்த அஸ்வின்

“டேய் மச்சான்.. சும்மா உன் வீட்டு வேலைக்கார பொண்ணை பத்தி விசாரிச்சதுக்கு நீ ஏன் டா இப்படி முறைக்கிற? “ என்றான் குழப்பமாக...

“ஷட் அப் அஸ்...அவ ஒன்னும் என் வீட்டு வேலைக்காரி இல்ல... என் வீட்டு எஜமானி... மை வைப்... “ என்றான் இன்னுமாய் கோபத்துடன்..

அஸ்வின் நிலாவை பற்றி பேசுவது அதுவும் கண்கள் பளபளக்க பேசுவது அவனுக்கு பிடிக்கவில்லை... அந்த ஆத்திரத்தில் இத்தனை நாட்களாக தன் நண்பர்களிடம் மறைத்து வைத்திருந்த ரகசியத்தை உடைத்து விட்டான்..

அதை கேட்ட அவன் நண்பர்களோ பலமாக அதிர்ந்து போய்

“வாட்? “ என்று ஒரு சேர கூச்சலிட்டனர்.....

அப்பொழுதுதான் அதிரதனுக்கு அவன் அவசரபட்டது புரிந்தது... ஆனாலும் இதுவும் ஒரு வகையில் நன்மைக்கே..

“இல்லை என்றால் இந்த அஸ்வின் அவளை இன்னுமே வேற மாதிரி பார்த்து வைப்பான்.. “ என்று மனதுக்குள் உறுதி பண்ணி கொண்டிருக்க அவன் நண்பர்களோ இன்னுமே அதிர்ந்து போய்

“என்னடா சொல்ற மச்சான் ? உன் வைப் ஆ? “ என்றனர் இப்பொழுது அதிர்ச்சி விலகி ஆச்சர்யமாக..

அதற்குமேல் மறைக்க முடியாது என உணர்ந்தவனும் தலையை குனிந்தவாறு

“ஆமாம்.. ஷி இஸ் மை வைப்.. “ என்றான் ஆழ்ந்த குரலில் அடி மனதில் ஆழத்தில் இருந்து...

“ஹே.. சும்மா விளையாடாத டா.. அந்த பொண்ணு உன் வைப் னா அப்ப சது? நேற்று கூட நீ சது கூட டின்னர்க்கு போனியே டா.. “ என்றான் அஸ்வின் குழப்பத்துடன்...

“ஹ்ம்ம் அது பெரிய கதை டா... “ என்றவன் ஒரு ஆழ்ந்த மூச்சை எடுத்து விட்டு கொண்டு நடந்த கதையை சுருக்கமாக தன் நண்பர்களிடம் சொன்னான் ரதன்...

அதை கேட்டவர்களோ இன்னும் அதிர்ந்து போய்

“அடப்பாவி... இவ்வளவு பெரிய மேட்டர் நடந்திருக்கு.. எங்க கிட்ட மூச்சு கூட விடலை.. நீயெல்லாம் நண்பன் னு சொல்லிக்காத..” என்றான் அபி கோபமாக..

“சாரி டா... நான்தான் சொன்னேனே.. அப்ப இந்த மேரேஜ் என் விருப்பம் இல்லாமல் நடந்தது.. அதனால் நிவியை விலக்கி விட்டு சதுவைத்தான் திருமணம் செய்து கொள்வதாக இருந்தது..

எப்படியும் என்னை விட்டு செல்ல போகிறவளை பற்றி உங்களிடம் சொல்ல வேண்டாம் என்றுதான் மறைத்து விட்டேன்..” என்றான் தயக்கத்துடன்...

“நீ என்ன லூசா டா ? உன் வைப், நிலா சிஸ்டர் உனக்கு எவ்வளவு பொருத்தமானவங்க தெரியுமா? உன் ஜமீனுக்கு அவங்கதான் பொருத்தமான மருமகள் டா..

அவங்க கிட்ட இருந்த ஒரு நிமிர்வும் ஆளுமையும் கம்பீரமும் கண்டு நானே அசந்து நின்றேன்.. அதனால் தான் அன்று அவங்களை கொஞ்சம் ஆர்வமாக பார்த்தேன்..

சாரி டா.. அவங்க உன் வைப் னு அப்ப தெரியாது.. நீயும் சொல்லலை.. என்னை தப்பா எடுத்துக்காத... “ என்றான் அஸ்வின் குற்ற உணர்வுடன்..

“இட்ஸ் ஓகே டா.. தப்பு என் மேலயும்தான்.. நான் நிவியை என் வைப் னு உனக்கு இன்ட்ரடுயூஸ் பண்ணி இருந்தால் நீயும் அப்படி நடந்திருக்க மாட்ட... எனிவே லீவ் இட்..  என்று தன் நண்பனை சமாதான படுத்தினான் ரதன்..

“டேய் அதி... இந்த விசயத்தை சது கிட்ட சொல்லிட்டியா?” என்றான் அபி குரலில் சிறு கண்டிப்புடன்..

“ப்ச்... இல்ல டா ... எனக்கு சதுவா , நிவியா னு குழப்பமா இருக்கு.. சதுக்கு நான் வாக்கு கொடுத்திருக்கிறேன் அவளை மணந்து கொள்வதாக.. நிவிக்கு நான் அக்னி சாட்சியாய் தாலியும் கட்டி கடைசி வரை அவளை காப்பேன் என்று சத்தியமும் செய்து விட்டேன்..

இப்ப எந்த பக்கம் போவது என்று ஒரே குழப்பமா இருக்கு.. “ என்றான் அதே குழப்ப மன நிலையுடன்..

“இடியட்.. இதுல குழம்பறதுக்கு என்னடா இருக்கு...நீ யாரை வேணா காதலிச்சிருக்கலாம்.. உன்னை எத்தனை பேர் வேணா காதலிச்சிருக்கலாம்.. ஆனால் மனைவி என்று ஒருத்தியின் கழுத்தில் தாலி கட்டிய பிறகு அவள்தான் உனக்கு எல்லாம்...

அவளோடுதான் இனி உன் வாழ்க்கை.. “ என்று படபடப்பாக பொரிந்தான் அஸ்வின்..

“ப்ச்.. அப்ப சது? அவ பாவம் இல்லையா? அவளை ஏமாற்றுவது போல இல்லையா? “ என்றான் முகத்தில் வேதனையுடன்..

“ஏமாற்றுவதா? நீ உண்மையாக அவளை காப்பாற்றி இருந்தால் அவளை விட்டு பிரிவது அவளை ஏமாற்றுவதாக இருக்கும்... ஆனால் நீதான் அவளை காதலிக்கவே இல்லையே..!

டேய் மச்சான்.. உன்னையும் சதுவையும்  பற்றி எனக்கு நல்லா   தெரியும் டா... உங்களுக்குள் இருப்பது ஒரு ஈர்ப்பு மட்டுமே... அது காதலே அல்ல.. ஆனால் இதை சொன்னால் நீ ஒத்து கொள்ள மாட்டாய்.. அதனால்தான் உன்னிடம் எதுவும் சொல்லவில்லை..

அதோடு சதுவை பற்றி நீயே சீக்கிரம் புரிந்து கொண்டு விலகி விடுவாய் என்று விட்டு பிடித்தோம்..

உன் கேரக்டர்க்கு சது பொருத்தமானவள் இல்லை டா... அவளுக்கு உன் மீது உண்மையான நேசம் இல்லை.. உன் பணத்துக்காகவும் ஜமீன் மாளிகைக்காகவும் ஜமீன் வீட்டு மருமகள் என்ற கௌரவத்துக்காகத்தான் உன்னை சுற்றி வருகிறாள்..

உன்னுடைய திறமைக்கு  இதை நீ முன்னரே கண்டு கொண்டிருப்பாய்.. ஆனால் உன் தாத்தாவின் மீது உனக்கு இருக்கும் கோபம் உன்னை நல்லதை கண்டுகொள்ள விடாமல் செய்து விட்டது...

டேய் அதி. உனக்கு ஒரு உண்மையை சொல்லட்டுமா? நம்மளுடைய இந்த கம்பெனியின் வளர்ச்சிக்கு பெரிதும் காரணமானவர் உன் தாத்தா டா...” என்றான் அஸ்வின் தன் நண்பன் முகத்தை ஆர்வமாக பார்த்தவாறு,,

“ஹ்ம்ம்ம் தெரியும்... எனக்காக அவரே முதலீடு செய்திருக்கிறார். கூடவே நிறைய ப்ராஜெக்ட்கள் அவர் மூலமாக நமக்கு கிடைத்திருக்கிறது.. “ என்றான் அதிரதன் வெற்று பார்வையுடன்..

“ஹ்ம்ம்ம் அது மட்டும் இல்லடா மச்சான்... எங்க இரண்டு பேர் முதலீட்டிலுமே பெரும் பங்கு உன் தாத்தா தான் கொடுத்தார்.. ஐ மீன் எங்க பங்குக்கு அவ்வளவு பணம் முதலீடு செய்ய எங்க கிட்டயும் வசதி இல்லை.. எங்கள் சேமிப்பு யானை பசிக்கு சோளப்பொறி போல...

நம்முடையை பணத்தேவையை புரிந்து கொண்டு தாத்தாவே உதவ முன் வந்தார்... இதை பற்றி உன்னிடம் சொல்ல வேண்டாம் என்று கேட்டு கொண்டார்...

நாங்களும் அதனால்தான் உன்னிடம் சொல்ல வில்லை... இப்ப நம்ம கம்பெனி வளர்ந்தபிறகு அதில் கிடைத்த எங்கள் பகுதியை நாங்கள் தாத்தாவிடம் திருப்பி கொடுத்தோம்.. ஆனால் அவர் மறுத்து விட்டு

“நீங்க இரண்டு பேரும்தான் என் பேரனை அந்த நிலையில் அணைத்து அரவணைத்தது.. இன்று வரைக்கும் அவன் தவறான வழியில் செல்லாமல் சரியான வழியில் செல்ல அவனுடன் துணை இருப்பது நீங்க ரெண்டு பேரும்தான்..

அதுக்காக இந்த தாத்தாவின் பரிசாக இதை நீங்களே வைத்து கொள்ளுங்கள்.. அப்படியும் இல்லை என்றால் நீங்கள் இருவரும் வாங்கிய வீட்டிற்கு பரிசாக இதை வைத்து கொள்ளுங்கள் .. “ என்று மறுத்துவிட்டார்..

இதில் இருந்தாலாவது தெரிகிறதா? உன் தாத்தா எவ்வளவு நல்லவர் என்று.. இப்பவும் இந்த கம்பனி முழுவதுமே உன் சேர்தான் அதிகம்... நாங்கள் இருவரும் வெறும் வொர்க்கிங் பார்ட்னர் மட்டுமே,,,

அப்படி உன் நலன் மீது அக்கறை கொண்ட தாத்தாவை பழி வாங்க உனக்கு பொருத்தமே இல்லாத அந்த சது கூட சுத்திகிட்டிருக்க... இப்பவும் சொல்றேன்..  

உன் குடும்பத்துக்கு,  உனக்கு எல்லா வகையிலும் பொருத்தமானவங்க உன் வைப் தான்..அதனால் எதையும் போட்டு குழப்பிக்காமல் சதுவிடம் நடந்ததை எல்லாம் சொல்லி அவளை விலக்கி விடு.. “ என்றான் அஸ்வின்..

ஆனால் ஏனோ சாந்தினியின் அந்த குழந்தை தனமான முகம் அதிரதன் கண் முன்னே வந்தது.. இவளா என்னிடம் நடிக்கிறாள்? என்று சந்தேகமாக இருந்தது... அதனால் எதுவும் சொல்லாமல் தன் உணவை முடித்திருந்தவன் எழுந்து கையை கழுவி கொண்டு தன் அறைக்கு சென்றான்..

அவன் நண்பர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து  கொண்டு பின் அவர்களும் எழுந்து தோளை குலுக்கியவாறு தங்கள் அறைக்கு திரும்பினர்...

மாலை ஆறு மணி அளவில் தன் வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தான் அதிரதன்..

வழக்கமாக செல்லும் வழி என்பதால் கார் தானாக அதன் பாதையில் சென்று கொண்டிருந்தது..

அவன் மனமோ அதுவரை தள்ளி வைத்திருந்த அவன் குழப்பங்களை எல்லாம் முன் நிறுத்தி அவனிடம் நியாயம் கேட்டது...

அவனோ மேலும் குழம்பி போக அந்த நொடி ஒலித்தது அவன் அலைபேசி... அதன் திரையை பார்த்தவன் அதில் ஒளிர்ந்த மூன் என்ற பெயரை பார்த்ததும் மனதில் ஒரு இதம் பரவ, அந்த அலைபேசியின் அழைப்பை ஏற்றான்...

“சொல்லு நிவி.. “ என்றான்

ஆனால் அவள் ஏதோ சொல்ல அவனுக்கு சரியாக கேட்கவில்லை.. உடனே காரை ஒரு ஓரமாக நிறுத்திவிட்டு காரின் சன்னலை கீழறக்கிவிட்டு மீண்டும் பேச அவளோ  குரலில் பதற்றத்துடன் பேசினாள்...

அதே நேரம் மறுமுனையில் அவன் குரலை கேட்டதும்

“தேங்க் காட்.... ரதன்...உங்களுக்கு ஒன்னும் இல்லையே..? ஆர் யூ சேப்? “ என்றாள் இன்னுமாய் பதற்றத்துடன்..

அதை கேட்டு குழம்பியவன்

“ஹே நிவி... என்னாச்சு? எனக்கு எதுக்கு எதுவும் ஆகணும்? என்ன உளறிகிட்டு இருக்க? “ என்றான் சிடுசிடுத்தவாறு...

“சாரி ரதன்... ஏனோ என் வலது கண் திடீரென்று அடித்து கொண்டது.. உங்களுக்கு எதுவோ ஆபத்து நேரப்போவதை போல ஒரு உள்ளுணர்வு..

அதான் உடனே போன் பண்ணினேன்... இப்பதான் நிம்மதியா இருக்கு... ஆமா இப்ப எங்க இருக்கிங்க.?  “ என்றாள் கொஞ்சம் பதட்டம் குறைந்து இலகுவான குரலில்...

அதிரதனும் அவன் இருந்த இடத்தை சொல்லி முடிக்க அதே நேரம் அதிரதன் பக்கம் இருந்து டமால் என்ற பெரிய சத்தம் கேட்டது நிலாவுக்கு.. அதை கேட்ட நிலா அதிர்ந்து போய்

“ரதன்.... என்னாச்சு? “ என்று பதற்றத்துடன் விசாரித்து கொண்டிருக்கையிலயே அவள் அழைப்பு  நின்று போனது... மீண்டும் அவனுக்கு முயற்சி செய்ய, அவன் மொபைல் ஸ்விட்ச் ஆப் என்று வந்தது..

அதை கண்டு இன்னும் திடுக்கிட்டு போனவள் பார்வை எதேச்சையாக டி.வி பக்கம் செல்ல அப்பொழுது ஒரு லோக்கல் சேனலில் ஓடி கொண்டிருந்தது அந்த காட்சி..

சற்று முன் நடந்த சாலை விபத்து என்று ப்ளாஸ் நியூஸ் ஓடி கொண்டிருக்க, அந்த இடத்தை,  இடத்தின் பெயரை உற்று பார்க்க அந்த இடம்தான் அதிரதன் சற்று முன் அவன் இருப்பதாக சொன்ன இடம்..

அப்படி என்றால்??? என்று ஏதேதோ யோசித்தவள் அடுத்த நொடி

“ர த ன்..............” என்று அலறியவாறு மயங்கி சரிந்தாள் அவன் மனையாள்...!

Comments

Popular Posts

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே

என் மடியில் பூத்த மலரே

அனைவருக்கும் வணக்கம்!!!

காதோடுதான் நான் பாடுவேன்

நிலவே என்னிடம் நெருங்காதே!!

வராமல் வந்த தேவதை

பூங்கதவே தாழ் திறவாய்

தவமின்றி கிடைத்த வரமே

தாழம்பூவே வாசம் வீசு!!!

அழகான ராட்சசியே!!!