Posts

Showing posts from August, 2020

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே-20

Image
அத்தியாயம்-20   டி ன்னர் ஆரம்பமாகியது.. பப்பே முறையில் இருந்ததால், ஆதித்யா தன் உணவை எடுத்து கொண்டு ஒரு முக்கியமான நபருடன் பேசிகொண்டிருந்தான்.. அவர் விலகியதும் இதுவரை தனியாக மாட்டாமல் நழுவி வந்தவன் கிடைக்கவும் அவனை சுற்றிலும் பெண்கள் கூட்டம் அவனை சூழ்ந்தனர்..அனைவரும் அவனுடன் வழிந்து கொண்டிருந்தனர்.. என்றும் இல்லாமல் ஆதித்யாவும் இன்று அனைவருடனும் சிரித்து பேசிக் கொண்டிருந்தான் பவித்ராவை ஓரக்கண்ணால் பார்த்துக்கொண்டே... பவித்ரா மட்டும் தனித்து இருந்தாள்..அவனை கண்டு கொள்ளாமல் தானும் தன் உணவை எடுத்துக் கொண்டு சென்று தனியாக சாப்பிட்டு கொண்டிருந்தாள்.. “ஹாய் சிஸ்டர்.. ஹவ் ஆர் யூ ??? “ என்று புன்னகைத்தவாறு ப்ரேம் அவளின் அருகில் வந்தான்.. “ஹாய்... வாங்க ப்ரதர்.. ஐம் பைன் அன்ட் யூ?? “ என்று அவளும் புன்னகைத்தாள்... “ஹ்ம்ம்ம் பைன் சிஸ்டர்... “ என்று சிரித்தான் “என்ன ப்ரதர்?? .. கரெக்டா உங்க டைம்க்கு வந்திருக்கீங்க.. “ என்றாள் குறும்பாக முதலில் முழித்தாலும் பின் அவள் தான் சாப்பாட்டு நேரத்துக்கு வந்ததை சொல்கிறாள் என்று புரிந்து கொண்டவன் “ஹீ ஹீ ஹீ.. இந்த மாதிரி பார்ட்

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே-19

Image
அத்தியாயம்-19  ஆ தியின் கார் அந்த பெரிய பங்களாவை அடைந்ததும் இருவரும் இறங்கி விழா நடக்கும் இடத்திற்கு சென்றனர்... அழகிய வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப் பட்டிருந்தது அந்த வீட்டு தோட்டம்... தோட்டத்திலயே விழாவையும் டின்னரையும் ஏற்பாடு செய்திருந்தனர்... பார்ட்டி என்கவும் திரைப்படங்களில் காண்பிப்பதை போல பெரிய ஹோட்டலும் அதில் நவீனமாக உடை அணிந்து கையில் மதுக் கோப்பையுடனும் அப்புறம் எல்லாம் டான்ஸ் ஆடற மாதிரியும் நினைத்து வந்தவளுக்கு அது ஒரு எளிமையான பார்ட்டி எனவும் நிம்மதியாக இருந்தது... “அடச் சே !! இதுக்குத்தான் இவ்வளவு பில்ட் அப் கொடுத்தானா ?? என்று நினைத்தவள் அவன் எதுவும் இந்த பார்ட்டியை பற்றி சொல்ல வில்லையே என்பது நினைவு வந்தது.. “நானா தான் பில்ட் அப் கொடுத்து கற்பனை பண்ணிகிட்டேன் போல .. “ என்று தலையை கொட்டிகொண்டாள் மானசீகமாக.. விழா நடக்கும் இடத்தை அடைந்தனர் இருவரும்.. சின்னதாக ஒரு மேடை.. அதன் மேல டேபில் போட்டு அதன் மேல ஒரு பெரிய கேக் வைக்கப்பட்டிருந்தது...அதன் மேல் “Happy 30th Wedding Anniversary !! “ என்று எழுதப்பட்டிருந்தது.. அதன் அருகில் ஒரு தம்பதியினர் நின்று

Popular Posts

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே

என் மடியில் பூத்த மலரே

அனைவருக்கும் வணக்கம்!!!

காதோடுதான் நான் பாடுவேன்

நிலவே என்னிடம் நெருங்காதே!!

பூங்கதவே தாழ் திறவாய்

வராமல் வந்த தேவதை

தவமின்றி கிடைத்த வரமே

தாழம்பூவே வாசம் வீசு!!!

அழகான ராட்சசியே!!!