Posts

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே-42

Image
  அத்தியாயம்-42 கா லையில் கண் விழித்த பவித்ரா வழக்கம்போல ஆதி  அங்கு இல்லாமல் போக , எழுந்து குளியல் அறைக்குள் சென்றாள்.. நேற்று இரவே மரகதத்திடம் கேட்டு வாங்கி வைத்திருந்த கஸ்தூரி மஞ்சளை முகத்துக்கும் காலுக்கும் தேய்த்து குளித்து முடித்து , அவளுக்கு பிடித்தமான புடவையை நேர்த்தியாக கட்டி , ஈரம் சொட்டிய தலைக்கு ஒரு டவலை கட்டிகொண்டு  கீழ இறங்கி வந்தாள்... அவள் கீழ இறங்கி வரும் அழகை கண்டதும் மரகதம் அதிசயித்து நின்றார்...  “அப்படியே என்  தங்கை வாணி மாதிரி இருக்கே பவி மா..காலங்காத்தாலயே மஞ்சள் தேய்ச்சு குளிச்சிட்டு அப்படியே அந்த மகாலட்சுமியே நேர்ல வந்த மாதிரி இருக்க.. சரி  வா.. சாமிக்கு விளக்கேற்றி வைத்து இன்னைக்கு உன் கையால பூஜை பண்ணு என்று அவளை பூஜை அறைக்கு அழைத்து சென்றார்.. பவித்ராவும் சிரித்து கொண்டே அவர் பின்னால் செ ன்று அவர் சொன்ன மாதிரி விளக்கேற்றி வைத்து அங்கு இருந்த தன் மாமனார் மாமியார் மற்றும் ஆதியின் தாத்தாவை வணங்கினாள்...பின் மரகதம் அவள்   தலையை துவட்டி  இரண்டு பக்கமும் முடி எடுத்து நடுவில் முடிச்சிட்டு அவளுக்கு திருஷ்டி சுத்தினார்... “...

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே-41

Image
  அத்தியாயம்-41 “ நா ன் என் அம்மா அப்பா வை மிஸ் பண்றேனா னு கேட்டா....   இல்லை னு தான் சொல்வேன்... ஏனா அவங்க எப்பவும் என் கூடவே தான் இறுக்கிற பீல்... அவங்க என்னை விட்டு எங்கயும் போகலை...ஏதோ  ஒரு தூரத்து ஊர்ல இருக்கிற மாதிரிதான் தோணும்...  நீ சொன்ன மாதிரி ஒரு ஹாப்பி பேமிலிதான்  எங்களோடது அப்போ... ஒவ்வொரு முறை இங்க வரும்பொழுதும் அவ்வளவு ஜாலியா இருக்கும்.. அதுவும் இரண்டு தாத்தா கூடயும் சேர்ந்து ஆட்டம் போடுவேன்.. எங்க கிணறு ஒன்னு இருக்கு...நான் நீச்சல் கத்துகிட்டது அங்கதான்..  என் இரண்டு தாத்தாவுமே அவ்வளவு ப்ரெண்ட்லியா பழகுவாங்க.. நீ பார்த்தியே அந்த தோப்பு.. அதெல்லாம் நான் ,   மை டாட் , மாம் , அப்புறம் இரண்டு தாத்தா , பெரியம்மா பேமிலி என எல்லாருமே சேர்ந்துதான் இந்த மர கன்றுகளை நட்டது.. அதுவும் நானும் ஜனனியும் ஓடிப்போய் ஒவ்வொரு கன்னா எடுத்து வந்து கொடுப்போம்.. என் கைய பிடிச்சுதான் என் தாத்தா இந்த தோப்புல முதல் மரக் கன்னை நட்டார்... அப்ப அவர் சொன்னது இன்னும் நினைவு இருக்கு.. “நிஷாந்த்.. எந்த காரணத்தை கொண்டும் இந்த தோப்பை அழிய விடக்கூடாது... நீதான் இது...

Popular Posts

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே

என் மடியில் பூத்த மலரே

அனைவருக்கும் வணக்கம்!!!

காதோடுதான் நான் பாடுவேன்

நிலவே என்னிடம் நெருங்காதே!!

வராமல் வந்த தேவதை

பூங்கதவே தாழ் திறவாய்

தவமின்றி கிடைத்த வரமே

அழகான ராட்சசியே!!!

தாழம்பூவே வாசம் வீசு!!!