தேடும் கண் பார்வை தவிக்க-48
அத்தியாயம்-48 அ ந்த பழைய நினைவுகளில் இருந்து வெளிவந்தவன் ஓரப்பார்வையில் அருகில் இருந்தவளை பார்க்க , அவளோ விவேக் ன் தோளில் சாய்ந்து நன்றாக உறங்கி கொண்டிருந்தாள்.. அவளை அவ்வளவு நெருக்கத்தில் பார்க்க , ஏனோ உள்ளுக்குள் புரண்டது..அவளை பார்த்த நாள் முதலே அவனுக்குள் அவ்வபொழுது பனிச்சாரல் அடிக்கும்.. ஆனால் அடுத்த நொடி அந்த சது கண் முன்னே வந்து நிற்பான் அவனை மிரட்டியவாறு.. அதனாலயே அவனை மனதிற்குள் கருவி கொண்டே தன் உணர்வுகளுக்கு அணை போட்டு தடுத்து வந்தான்.. ஆனால் அவள் தவறானவனை காதலித்து இருக்க , அதற்காக அவன் வருத்தபட்டாலும் அவளை காப்பாற்றி அந்த பாதிப்பில் இருந்து வெளிகொண்டு வர துடித்தது அவன் உள்ளே.. அந்த நொடியில்தான் காதலை பற்றி புரியாமல் இருந்ததும் புரிந்ததை போல இருந்தது.. இது மாதிரி தானே அந்த நெட்டை ரிஷி தவித்திருப்பான்.. துடித்திருப்பான்..தன் மனதுக்கு நெருக்கமானவர்களுக்கு ஒரு துன்பம் என்றால் துடிப்பதும் உயிர் போகும் வலி பரவுவதும் காதலின் அடையாளங்கள் என தெளிவாக புரிந்து கொண்டான்.. “அப்படி என்றால் நான் இந்த ரெட் ரோஸ் ஐ காதலிக்கிறேனா ?” என தனக்குள் ...