Posts

Showing posts from February, 2021

காந்தமடி நான் உனக்கு!!-8

Image
  அத்தியாயம்-8   ச த்யாவைப் பற்றி தெரிந்து இருந்ததால் ,  அவள் அன்னை வளர்மதியும் சத்யா புதிதாக ஒரு ஆளை வீட்டிற்கு அழைத்து வந்ததை கண்டு மிரண்டு போகவில்லை. மாறாக அமுதன் முகத்தை பார்த்ததும் அவருக்குமே பாவமாக இருக்க ,  பல நாட்கள் சாப்பிடாத களைப்பு அவன் முகத்தில் தெரிய , ஒரு அன்னையாய் அவர் மனம் உருகி விட்டது. முழு மொத்த கரிசனத்துடன் அவனை வரவேற்று உள்ளே அழைத்து வந்து அமர வைத்தவனை கண்டதும் இன்னுமே உருகிப் போனார். இது மாதிரி வாரம் தோறும் ஏதாவது ஒரு நாய்க்குட்டி அவர் வீட்டிற்கு அடைக்கலம் வந்துவிடும். எங்கேயாவது ஒரு நாயோ பூனையோ போக இடம் தெரியாமல் முழித்துக் கொண்டு நின்றால் உடனே அதை தூக்கிக் கொண்டு வந்து விடுவாள் சத்யா. இத்தனை நாட்களாக நாய்க் குட்டியை , பூனைக்குட்டியை  அழைத்து வந்தவள் இன்று முதன் முதலாய் ஒரு ஆண் மகனை அழைத்து வந்திருக்க அவர் முகத்திலும் யோசனை படர்ந்தது. ஆனாலும் அதை பின்னுக்குத் தள்ளி தன் மகளை பார்த்தவர் “என்னாச்சு சத்யா ?  யார் இவர் ? “  என்று விசாரிக்க , சத்யாவும் நடந்ததை சொன்னாள். உடனே அவரின் தாயுள்ளம் இன்னுமாய் விழித்துக் கொள்ள ,   “கண்டிப்பா இது பசி மயக்கமா தான் இருக்கு

என் உயிரானவள்...!

Image
அன்பான வாசகர் தோழமைகளே , எ ன்னுடைய என் உயிரானவள் என்ற புதிய நாவல் Amazon ல் சமீபத்தில் வெளியாகியுள்ளது...   எனது முந்தைய கதையான இதழில் கதை எழுதும் நேரமிது கதையின் முடிவை கொஞ்சம் மாற்றி யோசித்த கதைதான் என் உயிரானவள். தன் இணையை எந்த மாதிரியான சூழ்நிலையிலும் எந்த விதமான மனிதரிடமும் கண்டு கொள்ளுமாம் இந்த காதல்... தங்களுக்குள்ளே ஒளிந்து கொண்டிருக்கும் காதலை உணராத இரண்டு வேறுபட்ட மனங்களின் மோதல்களும் ஊடல்களும் தான் இந்த கதை... இறுதியில் யார் வென்றார்கள் என்று தெரிந்து கொள்ள இந்த கதையை படித்து பாருங்கள்... Happy Reading!!! அன்புடன் பத்மினி செல்வராஜ் Amazon link: https://www.amazon.in/dp/B08W27QHYQ

காந்தமடி நான் உனக்கு-7

Image
  அத்தியாயம்-7 ஒ ரு வருடத்திற்கு முன்னால்...   ஒரு நாள் மாலை அந்த கார்மென்ட் பேக்டரியின் வேலை நேரம் முடிந்ததன் அறிகுறியாக சைரன் ஒலிக்க ,  உடனே அங்கு வேலை செய்த அனைவரும் துள்ளலுடன் தங்கள் உடைமைகளை எடுத்துக்கொண்டு பேக்டரியிலிருந்து வெளியேற ஆரம்பித்தனர். தான் செய்து கொண்டிருந்த வேலையை பாதியில் விட மனம் வராமல் அதை முடித்து விட்டே செல்ல வேண்டும் என்று மும்முரமாக தன் வேலையில் கவனமாக இருந்தாள் சத்யா. ஒடு வழியாக அதை முடித்ததும் தன் கை விரல்களை நீட்டி சொடக்கு எடுத்தவள் கழுத்தையும் இரு பக்கமும் ஆட்டி நெட்டி முறித்தவள் தன் உடலில் இருந்த சோம்பலை அடுத்த நொடி விரட்டி அடித்தாள். அதே நேரம் அவளுடைய தோழி சுகன்யா அவளருகில் வந்து இடுப்பில் கை வைத்து முறைத்துக் கொண்டிருந்தாள். “ஏன் டி... எரும...எல்லோரும் எப்படா மணி அடிப்பாங்க... வீட்டுக்கு போலாம்னு காத்துகிட்டு இருந்த ஸ்கூல் பசங்க மாதிரி பெல் அடிச்சதும் பைய தூக்கிட்டு உடனே கிளம்பி போயிட்டாங்க. நீ மட்டும் என்ன இன்னும் மாங்கு மாங்குனு வேலை பார்த்துகிட்டு இருக்க. எல்லாம் வாங்கின காசுக்கு செஞ்ச வரைக்கும் போதும். வாடி போகலாம்...”  என்று முறைத்தாள் சுகன்யா. அதை

Popular Posts

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே

என் மடியில் பூத்த மலரே

அனைவருக்கும் வணக்கம்!!!

காதோடுதான் நான் பாடுவேன்

நிலவே என்னிடம் நெருங்காதே!!

பூங்கதவே தாழ் திறவாய்

வராமல் வந்த தேவதை

தவமின்றி கிடைத்த வரமே

தாழம்பூவே வாசம் வீசு!!!

அழகான ராட்சசியே!!!