Posts

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே-9

Image
அத்தியாயம்-9 ஆ தித்யாவின் ட்விட்டர் பக்கத்தை திறந்த பவித்ரா அப்படியே அதிர்ச்சியில் உறைந்து நின்றாள். அதில் அவன் அவர்களுடைய திருமண புகைப்படங்கள் சிலவற்றை போஸ்ட் செய்து இருந்தான்... அதிலும் அவன் தாலி அணிவிக்கும் பொழுது அவளின் முகத்தில் தோன்றிய கலவையான உணர்ச்சிகளால் நிறைந்திருந்தது அப்படியே பிரதிபலித்தது அந்த படங்களில்.. பின் அவள் மாலை அணிவிக்கும் பொழுது அவனை பார்த்து மயங்கி நின்ற புகைப்படம் மற்றும் சில ரிசப்ஷன் படங்களும் அதில் இருந்தன... அந்த புகைப்படங்களை பார்க்கும் பொழுது மனதினில் மழைச்சாரல் அவளுக்குள்ளே...இருவரும் விரும்பி மணந்த மாதிரியே அவ்வளவு அன்னியோன்யமாக இருந்தனர் இருவரும் அந்த படங்களில்... ஒரு வேளை என்னை விரும்பித்தான் மணந்தானோ?? இல்லையென்றால் அவன் ஏன் திருமண படங்களை பப்ளிக் ஆ போடனும்?? “ என்று மகிழ்ந்து போனாள் சில விநாடிகள்.. பிறகு தான் கவனித்தாள் அந்த படங்களுக்கு வந்த வாழ்த்துக்களை.. அத்தனை வாழ்த்துகள் அதில் குவிந்திருந்தன.... அப்பொழுதுதான் நினைவு வந்தது பேருக்காக, ஊருக்காக , பழி வாங்க உன்னை மணந்தேன் என்று அவன் கூறியது... “சே.. இதுவும் அவன் நாடகம்.. ஊருக்கெல்ல...

Detective Esac - Detective Story for Kids -By Deepak Charan

Image
Intro: Hi All, My name is Deepak Charan . I wrote this story when I was in 5th grade for kids who enjoy reading stories. This short story is about finding the stolen earrings. If you are interested to know how the investigation went and how the thief was caught, please read this story !!! Happy Reading!!! ***  Hey, guys! I am Kane Esac . I am working for CIA (Criminal Investigation Agency). Recently I got a call from the police because of a case. So I had to go. I wasn’t that enthusiastic because I had to miss my reading time. I used to go every day for 1 hour to study in the library which was near the park. The case’s house address was near by the library. When I went to that house, noticed that the library was closed. I asked the library security. “Why the library is closed”. He told that it will be closed for a week as the librarian went to Germany for a workshop. Then I headed to that place. It was an apartment which had around 10 floors. I had to go to the 8t...

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே-8

Image
அத்தியாயம்-8  ம றுநாள் காலை நீண்ட நேரம் கழித்தே கண் விழித்தாள் பவித்ரா... அவள் விழிக்கும் பொழுது ஆதி அங்கு இல்லை.. இவள் குளித்து விட்டு கீழே வரவும் தன் அம்மாவின் போன் வந்திருப்பதாக கூறினார் சமையல்கார பெண்மனி.. ஓடிப்போய் போனை எடுத்தவள் தன் அன்னையிடம் நன்றாக வாங்கி கட்டி கொண்டாள்.. “என்ன இது பவித்ரா.?? .. இவ்வளவு நேரமா தூங்குவ?? இங்க இருக்கும் பொழுது காலையில ஆறு மணிக்கு எல்லாம் எழுந்திடுவ.. அங்க போய் ரொம்ப சோம்பேறி ஆயிட்ட” என்று தாளித்தார் அவளை..... “இங்க ஒரு வேலையும் இல்லை மா..காலைலயே எழுந்து என்ன பண்ண?? அதில்லாமல் நைட் தூங்க ரொம்ப லேட் ஆகிடுச்சு அதான்... “ என்று இழுத்தாள்.. தூங்க நேரம் ஆனது என்று பவித்ரா சொன்னதை தப்பாக அர்த்தம் எடுத்து கொண்ட பார்வதி. “தன் மகள் மாப்பிள்ளையுடன் சந்தோஷமாகத் தான் இருக்கிறாள்.. நான் தான் வீணா பயந்துகிட்டு இருக்கேன்”.. என்று எண்ணி நிம்மதியுற்றார்.. “மாப்பிள்ளையும் உன்னோடு தூங்காமல் தான இருந்திருப்பார்.. அவர் நேரத்திற்கு எழுந்து கிளம்பி வேலையை பார்க்க போகலை... உனக்கும் மட்டும் என்ன பவித்ரா தூக்கம்... மாப்பிள்ளைக்கு முன்னாடியே எழுந்து அவருக்கு...

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே-7

Image
அத்தியாயம்-7  கா லையில் மெல்ல கண் விழித்த பவித்ராவுக்கு உடனே நேற்று இரவு சம்பவங்கள் முட்டி கொண்டு முன்னே வந்து நின்றன... கண்கள் தானாக ஆதித்யாவின் கட்டிலை அடைந்தது...ஆதி அங்கு இல்லை.. முன்பே எழுந்திருந்தான்... நேற்று இரவு நடந்தது யாருக்கும் தெரிய வேண்டாம் என்று எண்ணி கொண்டவள் எழுந்து குளித்து முடித்து கீழே சென்றாள்.. மரகதம் உணவறையில் காலை உணவை எடுத்து வைத்து கொண்டிருப்பதை கண்டு அங்கு சென்றாள்... அவளை கண்டதும் மரகதம் அவளை ஆராயும் பார்வை ஒன்றை செலுத்தி பின் திருப்தியுற்றவராக அவளை அணைத்து “உட்கார் பவித்ரா... எல்லாரும் சாப்பிடலாம் “ என்று அங்கு இருந்த இருக்கையில் அமர வைத்தார்... அப்பொழுது தான் அங்கு வந்த ஜனனியும் பவித்ராவுக்கு எதிர் இருக்கையில் அமர்ந்தாள்.. பவித்ரா குளித்து முடித்து அவளின் ஈரக் கூந்தலை விரித்து விட்டு இரண்டு பக்கமும் முடி எடுத்து நடுவில் க்ளிப் போட்டிருந்தாள்.. நெற்றியில் நடுவில் சிறிய பொட்டும் அதற்கு மேல் சிறிதாக திருநீறும் வைத்து எளிமையாக பளிச்சென்று அழகாக இருந்தாள்... அவளின் முகத்தை கண்ட மரகதம் பூஜை அறைக்கு சென்று குங்குமச்சிமிலை எடுத்து வந்து அவளின் நெற்...

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே-6

Image
அத்தியாயம்-6  ஆ தித்யாவின் அறைக்குள் நுழைந்தவள் மெல்ல அடி எடுத்து வைத்து உள்ளே சென்றாள் தலையை குனிந்த படி..அவன் இருப்பதற்கான அரவம் எதுவும் கேட்க வில்லை.. எங்க போய்ட்டான் என்று மெல்ல தலையை நிமிர்த்தினாள் பவ்த்ரா... அந்த விசாலமான அறை தான் தெரிந்தது.. அவர்களின் முழு வீடும் இந்த அறைக்குள் அடங்கி விடும் போல.. ஒருத்தனுக்கு இவ்வளவு பெரிய அறையா என்று எண்ணியவாறே கண்களால் துலாவினாள்.. சிறிது நேரம் அலைப்புறுதலுக்கு பிறகு அவளின் கண்கள் கண்டு கொண்டன அவனை... அந்த அறையின் நடுவில் இருந்த கட்டிலில் அமர்ந்திருந்தான் இவளையே இமைக்காமல் பார்த்த வண்ணம்... அவனின் பார்வையை மெல்ல எதிர் கொண்டவளுக்கு கன்னங்கள் சிவந்தன... பட்டாம்பூச்சிகள் பறக்க ஆரம்பித்தன அவளின் அடி வயிற்றில் !!!.. இருந்தாலும் வெளி காட்டி கொள்ளாமல், “சார் எழுந்திருச்சு வரமாட்டாரோ “ என்று திட்டி கொண்டே மெல்ல நடந்து அவனருகில் சென்றாள்.. போகும் வழியிலயே தன் அம்மா மற்றும் அவனின் பெரியம்மா சொன்ன அறிவுரைகள் ஞாபகம் வர, அவன் அருகில் சென்றவள் அருகில் இருந்த டீபாயின் மேல் பால் சொம்பை வைத்து விட்டு “இவன் காலில் எல்லாம் விழ வேண்டியி...

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே-5

Image
அத்தியாயம்-5   ப வித்ராவின் சம்மதத்தை கேட்டதும் இரு பெண்களின் முகமும் மலர்ந்தது... “ரொம்ப சந்தோசம் பவித்ரா.. என் வயித்தில பாலை வார்த்த.. சீக்கிரம் நல்ல முகூர்த்தம் பார்த்துடலாம்” என்று எழுந்து அவள் அருகில் வந்து அவர் கொண்டு வந்திருந்த மல்லிகை பூவை தலையில் வைத்தார் மரகதம்.. “ஐயோ!! என்ன இது?? .. சம்மதம்னு ஒரு வார்த்தை சொன்னதே முகூர்த்தம் வரைக்கும் போயிட்டாங்க.. இந்த அம்மாவும் பல்லை இளிச்சுட்டு அவங்க சொல்றதுக்கெல்லாம் தலை ஆட்டிகிட்டு இருக்கே... இப்ப என்ன பண்றது? ” என்று அவள் யோசிக்கும் பொழுது “அப்ப மாப்பிள்ளையும் ஒரு முறை வந்து பார்த்துட்டு போக சொல்லுங்க அண்ணி.. அப்பதான் எங்களுக்கு திருப்தியாக இருக்கும்.. “ என்றார் பார்வதி.. “அப்பாடா.. இப்பதான் இந்த அம்மா விவரமா பேசியிருக்காங்க.. அவன் வரட்டும் நேரடியாக அவனிடமே உன்னை பிடிக்கலைனு சொல்லிடலாம்” என்று தன் திட்டத்தை அவசரமாக தீட்டினாள் பவித்ரா.. இப்பொழுது நினைத்து பார்த்தால் அன்று மரகதம் மட்டும் வந்தது “தெரிஞ்சே செய்த திட்டமா? , இல்லை எதேச்சையாக அமைந்ததா ??? “என்று குழப்பமாக இருந்தது அடுத்து அவன் பார்க்க வருவதாக இருந்த ...

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே-4

Image
அத்தியாயம்-4  அ ந்த பிரம்மாண்டமான கேட்டை திறந்து கொண்டு உள்ளே நுழைந்தது மணமக்களின் கார்.... பவித்ரா இன்னும் தன் கணவனின் தோளில் சாய்ந்து சுகமாக உறங்கி கொண்டிருந்தாள் கார் நின்றது கூட தெரியாமல்.... அவளின் அந்த உறக்கத்தை கலைக்க மனமே இல்லாமல் அவளை அப்படியே விடவும் முடியாமல் மெல்ல அவளின் அருகில் குனிந்து “நம்ம வீடு வந்திருச்சு பேபி!! கெட் அப் “ என்று மெல்ல முனகினான் ம்ஹூம்.. அவள் அசைந்த பாடில்லை “என்ன?? இப்படி தூங்கறா..” என்று எண்ணியவாறே “பேபி.. கெட் அப் “ என்று மெல்ல அவளின் கன்னத்தை தட்டினான்.. அவனின் கை பட்டதும் மெல்ல இமைகளை பிரித்தவள் தான் எங்கிருக்கிறோம் என்று புரியாமல் மலங்க விழித்தாள்... மெல்ல தலையை நிமிர்த்தியவள் வெகு நெருக்கத்தில் ஆதியின் முகத்தையும் தான் அவனின் தோளில் சாய்ந்து இருப்பதையும் அப்பொழுதுதான் உணர்ந்தாள்.. மெல்ல அவளின் நிலை புரியவும் அவசரமாக அவனிடமிருந்து விலகினாள்... “என்ன பவித்ரா?? இப்படியா தூங்கறது?? அதுவும் அவன் மேல சாய்ஞ்சுகிட்டு.... போச்சு!! மானம் போச்சு!! என்று தன்னை தானே திட்டிகொண்டே மெல்ல இறங்கினாள்.. அதற்குள் மற்ற கார்களும...

Popular Posts

உன்னை விடமாட்டேன்...என்னுயிரே

என் மடியில் பூத்த மலரே

அனைவருக்கும் வணக்கம்!!!

காதோடுதான் நான் பாடுவேன்

நிலவே என்னிடம் நெருங்காதே!!

வராமல் வந்த தேவதை

பூங்கதவே தாழ் திறவாய்

தவமின்றி கிடைத்த வரமே

அழகான ராட்சசியே!!!

தாழம்பூவே வாசம் வீசு!!!